ஜிதக்ரோதன் | Sri APN Swami’s Shishya Writes

Note: Sri APN Swami has been delivering Sankalpa Suryodayam Upanyasams every thu & fri at 3.30PM on FreeConferenceCall meeting id SriAPNSwami. The upanyasam is also available in his YouTube Channel for Members. JOIN as a member of Sri APN Swami’s YouTube Channel and enjoy *Member only videos.* and catch up on the missed episodes of Sankalpa Suryodayam. Sankalpa Suryodayam Playlist – https://www.youtube.com/playlist?list=PLqY3vCkKAmZbvFBJ63S9kbRKpXeBi0ENk

ஒருவர் காமத்தை வென்றிட முடியும் ஆனால் க்ரோத்தை வெல்ல முடியுமா? முடியாது என்றே தோன்றுகிறது. ஏன் என்று பார்க்கலாம்.

மிக விவேகத்துடன் புலனடக்கம் பெற்ற மகான்கூட தனக்கு எற்படும் ஒரு சிறிய அவமதிப்பை தாங்கமுடியாமல், பொறுமையை இழந்து பிறறை தூஷணம் செய்வது நாம் அனைவரும் அறிந்ததே.

ஸ்வாமி வேதாந்த தேசிகன் அருளிய ஸங்கல்ப ஸூர்யோதயம் நாடகத்தில் 4 ஆவது அங்கத்தில், காமனை கூட வென்றவன் கோப வசப்படுவதை அழகாக விளக்குகிறார்.

ஓருவன் அனைத்து இந்திரியங்களை தன் கட்டுப்பாட்டுடன் வைத்து இருந்தாலும், தனக்கு ஏற்பட்ட அவமானம், குற்றச்சாட்டைப் பொறுத்துக்கொள்ளாமல், கோபம் கொள்வான். காமம், க்ரோதம் (அ) கோபம் என இரண்டும் பிணைந்திடுப்பவை. அதில் காமனை வென்றவன் கோபப்பட்டால் மறுபடியும் காமவசம் ஆகிவிடுவான் என்பது கருத்து.

காமத்தால் ஒருவன் பாபச்செயல் செய்தால் அதிலிருந்து அவன் மீள முடியும். கோபத்தால் ஒருவன் பாகவதாபசாரம் செய்ய வாய்ப்பு இருப்பத்னால், அந்த பாபத்திலிருந்து மீள இயலாது. அது அவனுடைய வாழ்க்கையின் சீர்மைக்குத் தடையாகும். ஆனால் கோபத்தை எப்படி அடக்குவது?

இராமாயணத்தில் மஹரிஷி வால்மீகி; பகவான் நாரதரிடம் கோபத்தை வென்றவனைப் பற்றி கூறுங்கள். “ஜிதக்ரோத: க:” என்கிறார். அதற்கு நாரதர் “இராமன்” என்று பதில் சொல்கிறார். இருப்பினும் பின்பொரு சமயம் இராமன் கோபவசப்பட்டு இராவணனைக் கொன்றான் என்கிறார். இது முன்பின்  முரணாக உள்ளதே?  என்றால் தேவையானபோது கோபம் வேண்டும். அதையே தேவையற்ற போது அடக்கத் தெரியவும் வேண்டும்.

மஹாபாரத்தில் கண்ணன் பாண்டவர் தூதுவனாக சென்றபோது, தனக்கு எற்பட்ட அவமானத்தை பொருட்படுத்தாமல், சிரித்தமுகமாக தொடர்ந்து பல அவமானங்களை சகித்துக்கொண்டு தூது சென்றான். பின்னர் பெரும் வெற்றியும் பெற்றான்.

ப்ருகு முனிவர்; கோபவசத்தால் பெருமாள் திருமார்பில் உதைத்தார். நாராயணனோ அதை பொருட்படுத்தாமல் மிகவும் சாந்தமாக ப்ருகு முனிவரின் தேவைகளை கேட்டு அவரை ஆராதித்தான்.

இதை ஸ்வாமி வேதாந்த தேசிகன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் அபராதபரிஹாராதிகாரத்தில் விளக்குகிறார்.

“ஹே பக்தனே! உன்னை நிந்திக்கும் பாகவதரிடம் கோபம் கொள்ளாதே. என்னை உதைத்த ப்ருகுவை நான் பொறுதது போன்று நீயும் அதை பொறுத்துக்கொள்” எங்கிறான் பகவான்.

மற்றுமொறு ஐதிஹ்யத்தையும் காணலாம். ஸ்வாமி கூரத்தாழ்வானின் சீடர் பிள்ளை பிள்ளை ஆழ்வான் மிகவும் க்ரோதக்கார். ஒரு சமயம் க்ரஹண புண்ய காலத்தில் தானம் செய்வது உத்தமம் என்றதால், கூரத்தாழ்வான் தனது சீடரிடம் அவரது கோபத்தை தானமாக யாசித்தார். அதாவது “இனி எப்போதும், யாரிடமும் கோபப்படமாட்டேன்” என்று சத்தியம் வாங்கிக்கொண்டார்.

ஆசார்யர் நியமன்ம்படி, பிள்ளை பிள்ளை ஆழ்வான் தனது கோபத்தை தானமாக கொடுத்து, “இனி கோபம் கொள்ளுவதில்லை” என்று கூறினார். அனைவரும் மிக வியந்தனர். குருவுக்கு வாக்கு அளித்தபடி பிள்ளை பிள்ளை ஆழ்வான் மிக சாந்தமாக மாறிவிட்டார்.

ஒரு நாள், பிள்ளை பிள்ளை ஆழ்வான் காலக்ஷேபத்திருக்கு வரவில்லை. கவலை அடைந்த கூரத்தாழ்வான், பிள்ளை பிள்ளை ஆழ்வானை தேடி வந்தார். பிள்ளை பிள்ளை ஆழ்வானோ மிகவும் துயரத்துடன், கண்ணீர்மல்க தனது குருவிடம் அவரை க்ஷமிக்கும்படி விண்ணப்பித்தார். காரணம் கேட்டபொழுது, அவர் தனது கோபத்தை கட்டுபடுத்த முடியாமல் ஒரு ஸ்ரீவைஷ்ணவரை ஏசிவிட்டார். குருவின் வார்த்தையை மீறியதால் என்ன செய்வது எனத்தெரியாமல் காலக்ஷேபத்திருக்கு வருவதை நிறுத்திவிட்டார்.

தனது சீடரின் தெளிவை கண்டு ப்ரியத்தில், கூரத்தாழ்வான் அவரை ஆறுதல்படுத்தி, பிள்ளை பிள்ளை ஆழ்வானை மீண்டும் காலக்ஷேபத்தை தொடரும்படி நியமித்தார்.

ஆகவே எவன் ஒருவன் கோபத்தை ஜயித்து செயல்புரிகிறானோ, அவனே ஜிதக்ரோதன். இதற்கு கோபத்தை அடியோட விடவேண்டும் என்று பொருளில்லை ஆனால் இராமனைபோலே தேவையான சமயத்தில் வெளிப்படுத்த வேண்டும். தேவையற்றபோது அடக்கவேண்டும். பாகவதர் திறத்தில் (அ) பாகவதர்களிடத்தில் அடியோடு கோபப்படக்கூடாது.

இந்த விஷயம் 9 நவம்பர் 2023 அன்று ஸ்ரீ  APN ஸ்வாமி ஸங்கல்ப ஸூர்யோதயம் உபந்யாஸத்தில் அடியேன் அனுபவித்தது.

அடியேன்

முகுந்தகிரி ஸ்ரீ APN ஸ்வாமி காலக்ஷேப சிஷ்யன் & சரன் சேவக்

கிருஷ்ண வராஹன்

Geneva, Switzerland, 11-11-2023

வேண்டிய வரம் தரும் வேங்கடநாதபுரம் | Sri APN Swami writes | Thedi Thozhutha Thiruththalangal 03

Note : Scroll down to read the English translation of the article

ஸ்ரீ:

தென்பாண்டிய நாட்டின் ஜீவநதி தாமிரபர்ணி. தென்பாண்டி மட்டுமின்றி தமிழகத்திற்கே இந்நதி ஜீவன் என்றால் மிகையில்லை. தமிழகத்திலேயே உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் சங்கமிக்கும் நதி இதுவே. இதன் இருகரைகளிலும் அடர்ந்த சோலைகளும், அழகிய குன்றுகளும், அத்புதமான ஆலயங்களும் அமைந்துள்ளன.

வைணவத் திருத்தலங்களும், சைவத் திருத்தலங்களும், புண்ணியமான பல படித்துறைகளும் இந்நதியின் பெருமைக்கு மேலும் மெருகு சேர்க்கின்றன. நம்மாழ்வார் அவதரித்த திருத்தலமாகிய ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட நவ திருப்பதிகளும் தாமிரபரணியின் கரையில்தான் உள்ளன. 

தென்பாண்டிச் சீமையின் முக்ய நகரமான திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிற்றூர் திருவேங்கடநாதபுரம். இது திருநெல்வேலிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.

ஆற்றோரம் அமைந்துள்ள இந்த அழகிய கிராமத்தில் ஒரு ஆலயமும், அதன் நாற்புறமும் அந்தணர்கள் வசிக்கும் அக்ரகாரமும் மிக ரம்மியமான சூழ்நிலையினால் நம் உள்ளத்தில் ஆனந்த அதிர்வுகளை உண்டாக்குகிறது. ஒரு சிறு பாறை குன்றின் மீது திருவேங்கடமுடையானின் சன்னிதி அமைந்துள்ளது. ச்வேத மலை அதாவது வெண் மலை என்று இக்குன்றிற்குப் பெயர்.

கலியில் கண்கண்ட தெய்வம் ஸ்ரீநிவாசன் எனும் திருமலையப்பன். ஏழுமலைகளின் மீதேறிச் சென்றால், அவனது தெய்வீக தரிசனம் பெறலாம். அவனது மலையின் பெயர் அஞ்சனகிரி. அதாவது கருமை நிறம் கொண்ட மலை. அது வடவேங்கடம். அதே பெருமாள், இங்கு தமிழகத்தின் தென்கோடியில் ஒரு சிறிய மலையின் மீது சேவை சாதிக்கிறார் என்றால் எப்பெருமானின் கருணையை என்னவென்பது! அழகிய இவ்வாலயத்திற்குள் நுழைந்து,  பெருமாளை சேவித்து, திவ்யமான தல வரலாற்றினையும் அறியலாம்.

வேதவ்யாசர் 

மகாபாரதம் தொகுத்த முனிவர் வேதவ்யாசர். பாரதம் மட்டுமின்றி பதினெட்டு புராணங்களையும், மிக முக்யமாக வேத, வேதாங்கங்களையும் தொகுத்தார். க்ருஷ்ணத்வைபாயனர் எனும் இயற்பெயர் பெற்ற இந்த ரிஷி, வேதங்களை நெறிப்படுத்தியதாலேயே வேத வ்யாசர் என்று புகழப்படலானார். மகாபாரதத்தைக் கூட ஐந்தாவது வேதம் என்பர் பெரியோர்.

வ்யாச பகவானின் தந்தையார் பராசர மாமுனிவர். இவர்தான் ஸ்ரீ விஷ்ணு புராணத்தை எழுதியவர். இதற்கு புராண ரத்னம் என்பது பெயர். தனது சிஷ்யன் மைத்ரேயனுக்கு இப்புராணத்தை உபதேசிக்கும் போது வ்யாசரின் பெருமைகளைக் கூறுகிறார்.

! மைத்ரேயா! எனது பிள்ளை எனும் பாசத்தால் நான் கூறவில்லை. க்ருஷ்ணத்வைபாயனன் எனும் வேத வ்யாசரை, சாக்ஷாத் நாராயணனின் அவதாரமாக அறிவாயாக. ஏனெனில் நாராயணால் மட்டுமே நான்கு வேதங்களையும், மஹாபாரதத்தையும் தொகுத்தளிக்க முடியும் என்று.

அந்த வேத வ்யாசருக்கு நான்கு சீடர்கள். பைலர், சுமந்து, ஜைமிநி, வைசம்பாயனர் என அவர்களும் தவத்திலும் சீலத்திலும் ஞானத்திலும் சிறந்து விளங்கினர். தன் சீடர்கள் நால்வரிடத்திலும் ஒவ்வொரு வேதத்தைக் கொடுத்து அதை நன்கு ப்ரசாரம் செய்துவரும்படி வ்யாசர் பணித்தார். பைலர் ரிக் வேதத்தையும், வைசம்பாயனர் யஜுர் வேதத்தையும், ஜைமிநி மஹரிஷி சாம வேதத்தையும், சுமந்து அதர்வண வேதத்தையும் கற்றனர். ஆசாரியர் அனுமதி பெற்று அவர்கள் தனித்தனியே திவ்யதேச யாத்திரை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

பல புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று நீராடி ஜபம், தவம் செய்தும், அங்குள்ள பெருமான்களை வழிபட்டும், ஆங்காங்கு வசிக்கும் மக்களுக்கு நல்ல உபதேசங்களைச் செய்தும் அவர்கள் யாத்திரையைத் தொடர்ந்தனர்.

பைலர் பெற்ற பேறு

பைலர் இங்கு தாமிரபரணி நதிக்கரைக்கு வந்தார். அச்சமயம் இங்கு மூங்கில்காடுகள் நிறைந்திருந்தன. மானும் மயில்களும் மகிழ்ச்சியுடன் இக்காட்டில் சுற்றித் திரிந்தன. சலசலத்து ஓடும் தாமிரபரணியின் தெளிந்த தீர்த்தம், மகரிஷியின் மனது போன்று நிர்மலமாக இருந்தது.

நிற்கின்றதெல்லாம் நெடுமால் என்று இயற்கையில் இறைவனைக் காண்பதுதானே மகான்களின் மேன்மை! மூங்கில் மரங்களின் துளைகளில் காற்று புகுந்து வெளியேறும்போது, கண்ணனின் வேணுகானத்தை உணர்ந்தார். தோகை விரித்து, மயில் ஆடும் போது, கண்ணனின் கருமை நிறத்தையும், தலையில் சூடிய மயில்பீலியையும் தரிசித்தார். தாமிரபரணியின் தண்ணீர் பெருக்கில் கண்ணனின் கருணையை உணர்ந்தார்.

பல திருத்தலங்களில் தீர்த்த யாத்திரை செய்திருந்தும், இங்கு உண்டான மன அமைதி, தனக்கு வேறு எங்கும் கிடைக்கவில்லை என்பதினை நன்குணர்ந்தார் பைலர். நதிக்கரையில் சில நிமிடங்கள் கண்களை மூடி பகவானை த்யானம் செய்தார். அவர் மனக்கண்ணில், மயில் தோகையுடன் மாயக்கண்ணன் காட்சியளித்தான். ஒரு நொடியின் அரை பங்கில் அந்த காட்சி மறைந்தது.

திடீரென்று தோன்றி மறைந்த மின்னல் போன்று, அத்திவ்ய சேவையை இழந்த பைலர் துடித்தார். மீண்டும் மீண்டும் கண்களை மூடியும், காட்சி கிடைக்கவில்லை. கண்ணா! கண்ணா!” எனக் கதறினார். ஒன்றும் தோன்றவில்லை. சிறிது நேரத்தில், தன்னை நன்கு ஆச்வாசம் செய்து கொண்டார். ஏதோ ஒரு தீர்மானம் அவருள்ளத்தில் எழுந்தது போலும்.

நதிக்கரையில் ஒரு ஆசிரமம் அமைத்தார். இந்தத் தெய்வீக சூழலில், தனக்கு நிச்சயம் தெளிவு பிறக்கும் என உணர்ந்தார். தாமிரபரணியில் நீராடி சிறந்தத் தவமியற்றத் தொடங்கினார். பன்னிரெண்டு எழுத்துக்கள் உடைய வாசுதேவ மகா மந்திரத்தை இடைவிடாமல் ஜபம் செய்தார். 

இவரின் தவத்திற்குத் தன்னால் இடையூறு கூடாது என்று தாமிரபரணியும் தனது ப்ரவாக வேகத்தின் ஒலியை குறைத்துக் கொண்டாள். பைலரின் ஆசார்யர் வேதவ்யாசரின் தவத்திற்கு, சரஸ்வதி நதியின் சப்தம் இடையூறாக இருந்ததாம். இதனால் வெகுண்ட வ்யாசர் அந்நதிக்கு சாபமளித்தாராம். எனவே பதரிகாச்ரமத்தில் வ்யாசர் தவம் புரிந்த குகை அருகே சரஸ்வதி நதி பூமிக்குள் மறைகிறாள். இந்த அற்புதத்தை இன்றும் காணலாம். அதுபோன்றுதான் சிஷ்யரின் தவத்தைக் கெடுக்க தாமிரபரணியும் பயந்தாள் போலும்.

கோவிந்தன் கருணை

கருணையுள்ளம் கொண்ட கோவிந்தன் பைலரின் தவம் கண்டு மகிழ்ந்தான். தன்னைக் காணத் தவிக்கும் தபோதனருக்கு காட்சியளித்தான். சங்கம், சக்ரம் கதை, வில், என ஆயுதங்கள் ஏந்தி அபயமளிப்பவனாக, இருபுறமும் ஸ்ரீதேவி, பூமிதேவி திகழ, திவ்யமான காட்சியளித்தான். மயிர்கூச்சலுடன் பைலர் மகரிஷி, பலமுறை விழுந்து எழுந்து, பெருமானை சேவித்து ஆனந்தமடைந்தார். ப்ரபோ! கருணைக் கடலே! கார்முகில் வண்ணனே!” என்று போற்றினார். மகரிஷியே! நீர் தவம் செய்த இந்தப் பாறை என்னுடைய சுயம்பு மூர்த்தியாகும். இதையே கொண்டு எனக்கு ஒரு ஆலயத்தை ஏற்படுத்துவாயாக என்று எம்பெருமான் கட்டளையிட்டான்.

என்ன ஆச்சர்யம்!! பெருமான் மறைந்தவுடன், அந்த கற்கள் மறைந்து அதில் அழகிய வடிவுடன் ஸ்ரீநிவாஸன் தோன்றினார். உடனடியாக சுயம்பு ஸ்ரீநிவாசனுக்கு ஒரு அழகிய ஆலயத்தை பைலர் நிர்மாணித்தார். சுவேதமலை எனும் சிறு குன்றின் மீது கறுத்தமலையாக பெருமானின் வடிவழகை இன்றும் சேவிக்கலாம். அன்று முதல், அவ்வனப்பகுதி,  வேங்கடநாதபுரம் எனும் அழகிய அக்ரகாரமாகியது. அடியார்கள் பலரும் அங்கு வாசம் செய்யலாயினர்.

வனதேவதை பெற்ற வரம்

ஆண்டுகள் பல உருண்டோடின. மீண்டும் ஒரு மகரிஷி இங்கு வந்தார். கடுந்தவம் புரிந்தார். அப்போது அங்கிருந்த ஒரு வனதேவதை அவரின் தவத்திற்கு இடையூறு புரிந்தது. இதனால் கோபமுற்ற மகரிஷி, நீ உருவமில்லாமல் போவாய்!” என சாபமிட்டார். சுவாமி எனது தவறை மன்னியுங்கள் என அத்தேவதை வேண்டியது. மனமிரங்கிய மகரிஷியும், கலியுக தெய்வமான வேங்கடவன் அருளால் உனது சாபம் நீங்கும் என அநுக்ரகம் செய்தார்.

கொடிமரத்தில் குடி கொண்ட மாடன்

பின்னர் மேலும் பல நூற்றாண்டுகள் கழித்து வேங்கடப்ப நாயகர் எனும் மன்னரின் காலத்தில் பெருமாளுக்குக் கொடிமரம் ஒன்று புதியதாக நிர்மாணிக்கப்பட்டது. என்ன ஆச்சர்யம்!! முனிவரின் சாபத்தால் வனதேவதை, அரூபமாக, மாடனாக (மாடசாமி எனும் பெயர்) இருந்த மரத்தை, பெருமாளின் கொடிமரத்திற்காக வெட்டி எடுத்து வந்தனர். அங்கிருந்த ஒரு பக்தரின் மேல் ஆவேசித்த மாடன் தனது சாபத்தைக் கூறி பெருமாளின் நிர்மால்ய ப்ரசாதம் தனக்களித்தால் சாபம் நீங்கும் என்று கூறினான். அந்த கொடிமரத்திலேயே குடிகொண்ட மாடனுக்கு, இன்றும், பெருமாளின் நிர்மால்ய ப்ரசாதங்கள் தினந்தோறும் அளிக்கப்படுகின்றன. மாடனிடம் ப்ரீதி கொண்ட மக்களும் கொடிமரத்தில் அவரை வணங்கி பூஜைகள் செய்கின்றனர்.

கலியுக வரதன் 

சமீபத்தில் இவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் மகனுக்கு, பிறவியிலிருந்தே பேச்சு வரவில்லை. எங்கெங்கோ திரிந்து பரிகாரம் செய்த அவர்கள், முடிவில் தங்களின் குலதைவமான இந்த பெருமாளுக்கு வெள்ளியில் நாக்கும், திருப்பாதகமலமும் செய்து வைத்தனர். என்ன ஆச்சர்யம்! மடை திறந்த வெள்ளம் போன்று அச்சிறுவன் பேச ஆரம்பித்தான்.

இப்பகுதியின் பெரும்பாலான க்ராமங்களுக்கு இந்த பெருமாள்தான் குலதெய்வம். புரட்டாசி சனிக்கிழமையன்று நடைபெறும் கருட சேவை விசேஷமானது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி வழிபடுவார்கள். சிறந்த ப்ரார்த்தனை தலமான இப்பெருமானை, ஒருமுறை சென்று வழிபட்டு,  வாழ்வில் சகல வளங்களையும் பெற்றிடுங்கள்.

திருநெல்வேலி ஜங்க்ஷனிலிருந்து சுமார் நாற்பது நிமிட ப்ரயாணத்தில் இவ்விடத்தை அடையலாம். வேங்கடநாதபுரத்திற்கு பேருந்து, ஆட்டோ என அனைத்து வசதிகளும் உள்ளன. ஊரிலும் மிகச்சிறந்த தங்கும் விடுதிகள் உள்ளன.

த்யான ச்லோகம்

ஸ்ரீமந்தம் ஸ்ரீநிவாஸம் தம் பைல ஸேவ்யம் வரப்ரதம் |

நமோ வேங்கட நாதாக்யே வநே வம்சே நிவாஸிநம் ||

ஏ.பி.என் சுவாமி எழுதியது


(மஹாலட்சுமியுடன் கூடியவனும், பைலர் எனும் மகரிஷியால் சேவிக்கப்படுபவனும், வரங்களை அருளுபவனுமாகிய ஸ்ரீநிவாஸன், மூங்கில் காட்டின் நடுவே திருவேங்கடநாதபுரத்தில் வசிக்கிறான். அவனையே தஞ்சமடைகிறேன்.)

Wish Fulfilling Venkatanathapuram

Thamirabarani is the perennial river in southern Pandya Kingdom.  This river is indeed the Life for the enitre tamilnadu. The only river that originates in tamilnadu as well as ends into the seas of Tamilnadu is Thamarabarani.  On both banks of this river are dense gardens, beautiful hills and magnificent temples.

The holy places of Vaishnava, Saiva and many sacred ghats add glory to this river.  Namazhvar’s birth place Azhwarthirunagari, including the Nine Thirupathis are spread across the banks of Thamarbharani river.

One of the most important towns of Tirunelveli district is Tiruvenkatanathapuram.  It is situated very near to Tirunelveli.  In this beautiful village, that is spread over the river bank, lies a wonderful temple which is surrounded by Brahmins’ Agraharam on its four sides.   This pleasant surrounding, create a vibration of joy and peace in our hearts.  On a small rocky hill lies the Tiruvenkatamudaiyan temple.   This hill is called as “Swetha Malai” meaning white hill. 

Lord Srinivasan is the presiding deity of Kaliyuga.  He is also called as Malaiappan – residing on Thirumala hills.  After we climb over the 7 hills, reaching Anjanagiri – the black hill, we will have HIS blissful Darshan. That place is called Vadavenkatam (Venkatam of North).  While here, in the southern tip of Tamil Nadu, the same Perumal gives us darshan from this small mound.   This shows HIS merciful compassion.  Let us enter this beautiful temple to worship the Perumal as well as get to know about its divine history.

Veda Vyasa:

The Sage Veda Vyasa compiled Mahabharatha, the 18 Puranas as well as the most important Vedas and Vedantas.  His birth name is Krishnadwaipayana.  As he compiled the 4 Vedas, he acquired the name Veda Vyasa.  Elders call Mahabharatha as the 5th Veda.

Vyasa is the father of the great sage Parasara.  Parasara is the author of Sri Vishnu Purana, which is called the Gem of Puranas. While explaining this great Purana to his disciple Maithreya, Sage Parasara talks about the glories of Veda Vyasa.

Hey Maithreya, don’t think I am talking about Vyasa because he is my son.  Please understand, that Krishnadwaipayana, who is also known as Veda Vyasa, is the absolute incarnate of Lord Narayana.  Except Lord Narayana, no one else can compile the 4 Vedas and Mahabharatha.

Veda Vyasa had 4 disciples namely Bailar, Sumanthu, Jaimini and Vaisampayanar. They were great in Penance, Knowledge and Qualities.   Vyasa distributed them with one Veda each and asked them to propagate.   Bailar was given Rig Veda, Vaisampayana was given Yajur, Jaimini was given Sama and Sumanthu was given Atharvana Veda. After thorough learning, taking the consent of their Guru, they started on a pilgrimage to holy places.

After bathing in several sacred waters, they performed penance, chanting and meditation. They worshiped the presiding deities of those holy lands they visited and continued their task of preaching good to the people.

Bailar’s Vision:

Sage Bailar reached the banks of Thamarabarani.  In those times, it was spread by vast bamboo forests. The Deer & the Peacocks roamed happily in the forest. The crystal clear water of the river Thamarabarani reflected the peaceful mind of the sage.

The intellectuals, always conceive Perumal in everything they see.  The sound that is produced when the wind pass through the bamboo holes, Bailar perceived as Sri Krishna’s Venu gaana (music from the flute). Through the Peacocks’ dance, he saw the dark complexion of Lord Krishna and His hair decorated with peacock’s feather.   He experienced Krishna’s compassion in the abundance of the Tamarabarani river.

Bailar never felt this kind of mental peace in any of those many holy places he visited.  He sat on the banks of the river and meditated for a few minutes on Bhagavan.   While in meditation, he got a vision of Lord Sri Krishna adorning the peacock’s feather, that lasted for a fraction of a second.    

This sacred vision of Sri Krishna, from nowhere like a flash of lightening, lasted no more.  This disturbed Bailar a lot.  He could not bear the loss of this enchanting vision.  He cried Kanna! Kanna! and sobbed, but nothing seen.   He closed his eyes many times but the vision was no more.  A little later, Bailar consoled himself as if he has decided on something. 

He built a hermitage on the banks of the river.  He thought that this mystic environment will calm his mind.   He bathed in the Tamarabarani river and started his unceasing penance.   He continued his meditation on the 12 lettered sacred Maha mantra of Vasudeva.

River Thamarabarani too decreased its noise, not to disturb the sage’s penance.  Once, Bailar’s guru Veda Vyasa did penance on the banks of River Saraswati.   He got terribly annoyed of the noise made by Saraswathi river’s flow.   He got angry and cursed the river.   Hence, in Badrikashramam, near the cave where Sage Vyasa did penance, the river Saraswathi hides herself and flows underground. This amazing phenomena can be sighted even today.  Looks like, the river Thamarabarani too, got scared of this disciple of Sage Vyasa.

Govindan’s Compassion:

Lord Govinda got very pleased of Bailar’s penance.  HE appeared before Sage Bailar, who was yearning for long.  Lord Govinda showed HIS enchanting darshan with all his mystic weapons such as Conch, Discus, Maze, Bow & arrow flanked by Sridevi & Bhoomidevi.   Sage Bailar was overwhelmed with this sight, enjoyed Lord’s captivating darshan by prostrating several times.   Bailar revered the Lord in admiration calling HIM, Hey Prabho! Hey the Merciful Ocean! Hey the Dark Complexioned!  “Hey Maharishi! The rock on which you penanced is MY self-manifestation. Create a temple out of this!”, commanded Lord Sri Krishna. 

What a surprise!! When the Lord disappeared, the stones too vanished and transformed into a beautiful form of Lord Sri Srinivasan.   Sage Bailar constructed a beautiful temple for the Self-Manifested Sri Srinivasan immediately.  Even today, the  dark  beauty of the Lord can be seen on the white hillock, Swethamalai.  Since then, the forest area got transformed into a beautiful Agraharam called Venkatanathapuram. Many devotees started to dwell there. 

The Boon of Vanadevatha:

Years passed, another Maharishi visited the place and did penance. A forest angel happened to disturb his penance. The Maharishi got angry and cursed the angel to become formless.  The forest angel pleaded with the Maharishi to forgive him.  The kind hearted Maharishi excused him and assured that with the blessings of the Kaliyuga’s presiding deity Venkatavan, he will be relieved of the curse. 

Maadan dwels in the flag mast:

After several centuries, during the King Vekatappa Naicker’s time, a new flag mast was installed at the temple. What a surprise! The forest angel Maadan (called as Madasamy) who was cursed to be formless by the maharishi, was dwelling in a Maada tree.  That particular Maada tree was chosen by the locals to craft the flag mast for the Perumal. The forest angel Maadan manifested on a devotee and spoke about his curse. He also said that his curse will be relieved upon Perumal’s Nirmalya Prasadam (the very first offerings of the day) is offered to him. Since then, Perumal’s Nirmalya Prasadam is being offered every day to Maadan residing on the Flag Mast.  Even the people of the land offer their prayers to Maadan residing in the flag-mast every day.

Kaliyuga Varadan:

Recently, one of the local devotee’s son, could not speak since his birth.  The devotee approached many to cure his son, he offered oblations to many demi-gods but no change, finally he prayed to this Perumal, who is also his Family-God.   He made a Silver replica of Tongue & Feet and offered to Perumal.  What a surprise! The boy began to speak like the flood gates are opened.

For most of the hamlets around this region, this Perumal is their Family-God. Every year they celebrate Garuda Sevai Utsavam on a Saturday, during the Tamil month Puratasi.   This festival is very famous and Lakhs of devotees gather to worship the Perumal on Garuda.   Please make a visit to this holy place and worship the compassionate Perumal.  You are sure to get all the prosperity in your life.

It takes about 40 minutes to reach this town from Tirunelveli Junction.  All facilities including Buses and Autos are available to reach Venkatnathapuram. The town has decent lodging facilities too!

Dhyana Slokam

Srimantham Srinivasam tham Baila Sevyam varapradam I

Namo Venkata Nathakye Vane Vamse Nivasam II

Written by Sri APN Swami

(Lord Srinivasan, who is with Mahalaksmi, who is being worshiped by Sage Bailar, who always blesses and grants boons, lives amidst bamboo forest in Thiruvenkatanathapuram. I surrender only to HIM)

Sri APNSwami #Writes #Slokam | Sri U.Ve. K.S Narayanacharyar Swami – MangalaMaalikaa by Sri APN Swami

Click here for PDF version

ஸ்ரீ:

Srimath Ahobila Mutt Asthana Vidhwan

Sri U.Ve. K.S Narayanacharyar Swami – MangalaMaalikaa

By

Mukundagiri Sri U.Ve. AnanthaPadmanabachariar ( Editor, Sri Nrusimha Priya)

Plava, Vruchchika Sukla, Panchami, Shravanam

 ஸ்ரீமத் அஹோபில மடம் ஆஸ்தான வித்வான்

ஸ்ரீ உ.வே K.S. நாராயணாசார்யார் ஸ்வாமி மங்களமாலிகா

ப்லவ வ்ருச்சிக சுக்ல பஞ்சமி ச்ரவணம்

8-December-2021

मङ्गलमालिका –   மங்களமாலிகா

ஸ்ரீமத் அஹோபில மடம் ஆஸ்தான வித்வான்

ஸ்ரீ உ.வே K.S. நாராயணாசார்யார் ஸ்வாமியைப் பற்றி

முகுந்தகிரி ஸ்ரீ உ.வே. அநந்தபத்மநாபாசார்யர் இயற்றியது

श्रीमन्नारायनार्य:  गुरुवरमनघ: सर्वशास्त्रार्थवेत्ता

ख्यातश्श्रीरङ्गकारीट् प्रभवयतिपते: प्राप्तमुद्राञ्च  विष्णो: |

वेदान्ताचार्यनाम्ना  यतिपतिचरणे न्यस्त सर्वात्मभार:

जीयात् रामायणार्य:   बहुजनकमलोद्भास मार्ताण्डतेज: ||

ஸ்ரீமந்நாராயணார்ய: குருவரமனக:

ஸர்வஶாஸ்த்ரார்த வேத்தா

க்யாதஶ்ஶ்ரீரங்ககாரீட் ப்ரபவ யதிபதே:

ப்ராப்தமுத்ராஞ்ச விஷ்ணோ: |

வேதாந்தாசார்யநாம்னா யதிபதிசரணே

ந்யஸ்த ஸர்வாத்மபார:

ஜீயாத் ராமாயணார்ய: பஹுஜனகமலோத்பாஸ

மார்தாண்ட தேஜ: ||

          [மிகச் சிறந்த குருவான ஸ்ரீமந்நாராயணாசார்யர், ஸர்வ சாஸ்திரங்களையும் நன்கு அறிந்தவர். மிகவும் பெருமை வாய்ந்த ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹ திவ்யபாதுகா ஸேவக ஸ்ரீவண்சடகோப ஸ்ரீ ஸ்ரீரங்க சடகோப யதீந்த்ர மஹாதேசிகனிடம் ஸமாச்ரயணம் பெற்றவர். ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவேதாந்த தேசிக யதீந்த்ர மஹாதேசிகனின் திருவடியில் தன்னுடைய ஆத்ம ரக்ஷாபரத்தை  ஸமர்பித்தவர். “ராமாயணாசார்யர்” என்று போற்றப்படும்   இவர், மக்களாகிய தாமரைகளை மலரச் செய்யும் சூரியனாக விளங்குகிறார்.]

          [Sriman Narayanacharyar, the best Guru, is well versed in all the scriptures. He underwent Samashrayanam under Sri Lakshminrusimha Divyapaduka Sevaka Srivan sadagopa Sri Sriranga Sadagopa Yatindra Mahadesikan. He performed complete surrender i.e Bharanyasam under SrivanSatakopa Sri Vedanta Desika Yatindra Mahadesikan. He is revered as “Ramayanacharyar” and he is to the people like how the sun is to the lotus flower.]

श्रीरङ्गशठजित् योगि दयया प्राप्तसत्पथं |

वाधूलान्वय सञ्जातम् श्रये नारायणं गुरुम् ||  1

ஸ்ரீ ரங்கசடஜித் யோகி தயயா ப்ராப்த ஸத்பதம்|

வாதூலாந்வய ஸஞ்ஜாதம் ஶ்ரயே நாராயணம் குரும் ||          1

          [ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹ திவ்யபாதுகா ஸேவக ஸ்ரீவண்சடகோப ஸ்ரீ ஸ்ரீரங்க சடகோப யதீந்த்ர மஹாதேசிகனிடம் ஸமாச்ரயணம் பெற்றவரும், வாதூல குலத்துதித்த நாராயணகுருவை சரணடைகிறேன்.]

          I surrender to Narayanaguru who was born in Vadula Kulam and who had samashreyanam under Sri LakshmiNrusimha DivyaPaduka Sevaka SrivanSatakopa Sri Sriranga Satakopa Yatindra Mahadesikan.

वीरराघव योगीन्द्र शठारातिमहर्निशम् |

हृदये चिन्तयन्तम् तं श्रये  नारायणं गुरुम् ||  2

வீரராகவ யோகீந்த்ர சடாராதிம் அஹர்நிஶம் |

ஹ்ருதயே சிந்தயந்தம் தம் ஶ்ரயே நாராயணம் குரும் ||   2

          [ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவீரராகவ சடகோப யதீந்த்ர மஹாதேசிகனை எப்போதும் ஹ்ருதயத்தில் த்யானித்துக் கொண்டிருக்கும் நாராயணார்யரை சரணடைகிறேன்.]

          I surrender to Narayanaguru who always meditates on SrivanSatakopa SriVeeraRaghava Satakopa Yatindra Mahadesikan.

वेदान्तार्य मुनीन्द्रस्य पदपङ्कजषट्पदं |

वेदान्तोभय संपन्नं श्रये  नारायणं गुरुम् ||  3

வேதாந்தார்ய முநீந்த்ரஸ்ய பதபங்கஜ ஷட்பதம் |

வேதாந்தோபய ஸம்பந்நம் ஶ்ரயே நாராயணம் குரும் ||  3

          [ ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவேதாந்த தேசிக யதீந்த்ர மஹாதேசிகனின் திருவடித்தாமரைகளில் வண்டானவரும், உபயவேதாந்த ஸம்பந்நருமான நாராயணகுருவை சரணடைகிறேன்]

          I surrender to Narayanaguru, a well versed scholar in ubayavedanta and who is a beetle prostrating the lotus feet of SrivanSatakopa Sri Vedanta Desika Yatindra Mahadesikan.

नारायण यतीन्द्रस्य दयापात्रं गुणोज्वलं |

काव्यालङ्कार मर्मज्ञं श्रये नारायणं गुरुम् ||  4

நாராயண யதீந்த்ரஸ்ய தயாபாத்ரம் குணோஜ்வலம் |

காவ்யாலங்கார மர்மஜ்ஞம் ஶ்ரயே நாராயணம் குரும் || 4

          [ ஸ்ரீலஷ்மீந்ருஸிம்ஹ திவ்யபாதுகா ஸேவக ஸ்ரீவண்சடகோப ஸ்ரீநாராயணயதீந்த்ர மஹாதேசிகனின் கருணைக்கு பாத்ரபூதரும், குணங்களால் உயர்ந்தவரும், காவ்யம், அலங்காரம் முதலிய சாஸ்த்ரங்களில் அதிநிபுணருமான நாராயணார்யரை சரணடைகிறேன்]

          I surrender to Narayanaguru who has the grace of SriLakshmiNrusimha DivyaPaduka Sevaka SriVanSatakopa SriNarayanaYatindra Mahadesikan and who excels with auspicious character and mastered the science of poetry and shastras.

श्रीरङ्गनाथ  यतीन्द्रेण दत्तास्थान बुधं पदं |

दत्त पीठाधिपै: मान्यं श्रये  नारायणं गुरुम् ||  5

ஸ்ரீரங்கநாத யதீந்த்ரேண தத்தாஸ்தாந புதம்பதம் |

தத்தபீடாதிபை: மாந்யம் ஶ்ரயே நாராயணம் குரும் || 5

          [ஸ்ரீவண்சடகோப ஸ்ரீரங்கநாதயதீந்த்ர மஹாதேசிகனால் ஆஸ்தான பண்டிதராக நியமிக்கப்பட்டவரும், தத்தபீடம் முதலிய பெரியோர்களால் பஹுமானிக்கப்பட்டவருமான நாராயணார்யரை சரணடைகிறேன்]

          I surrender to Narayanaguru who was appointed as Asthana Vidhwan of Ahobila Mutt by SriVanSatakopa SriRanganatha Yatindra Mahadesikan and who was honored by the elders of the Dattapitam etc.

सांस्कृतीभि: द्रामिडीभि: कन्नडाङ्गल भाषणै: |

जनताकर्षकं पूज्यं श्रये  नारायणं गुरुम् ||  6

ஸாம்ஸ்க்ருதீபி: த்ராமிடீபி: கந்நட ஆங்கல பாஷணை: |

ஜநதாகர்ஷகம் பூஜ்யம் ஶ்ரயே நாராயணம் குரும் || 6

          [ ஸம்ஸ்க்ருதம், த்ராவிடம், கன்னடம், ஆங்கிலம் என்று பல பாஷைகளால் மக்களை ஆகர்ஷணம் செய்த உயர்ந்தவரான நாராயணார்யரை சரணடைகிறேன்]

         I surrender to Narayanaguru, who draws attention of people across many languages, namely Sanskrit, Tamil, Kannada & English.

भेजावर् स्वामि पादै: हि तद्वदन्य मठाधिपै: |

सादरं सत्कृतं श्रेष्टं श्रये  नारायणं गुरुम् ||  7

பேஜாவர் ஸ்வாமி பாதை: ஹி தத்வத் அந்ய மடாதிபை: |

ஸாதரம் ஸத்க்ருதம் ஶ்ரேஷ்டம் ஶ்ரயே நாராயணம் குரும் || 7

          [பேஜாவர் ஸ்வாமி, அஃதே போன்று யதிராஜ ஜீயர் போன்ற பல மடாதிபதிகளால் ஆதரவுடன் ஸத்கரிக்கப்பட்டவரான நாராயணார்யரை சரணடைகிறேன்]

          I surrender to Narayanaguru, who is honored by many Mutt heads like Pejawar Swami & Yathiraja Jeeyar.

परकाल मुनीन्द्रस्य सुह्रुदामग्रगामिनम् |

रङ्गप्रिया दयामग्नं श्रये नारायणं गुरुम् ||  8

பரகால முநீந்த்ரஸ்ய ஸுஹ்ருதாமக்ரகாமிநம் |

ரங்கப்ரியா தயாமக்நம் ஶ்ரயே நாராயணம் குரும் || 8

          [ப்ரக்ருதம் பரகால ஸ்வாமியின் ஆப்தர்களில் முதன்மையானவர். ரங்கப்ரியா ஸ்வாமியின் கருணையில் மூழ்கியவரான நாராயணார்யரை சரணடைகிறேன்]

         I surrender to Narayanaguru, who is dear most to Prakrutham Parakala Mutt Swami and has the grace of Rangapriya Swami.

रामायणे जये चैव कृत भूरि परिश्रमं |

गीता प्रवचने दक्षं श्रये  नारायणं गुरुम् ||  9

ராமாயணே ஜயே சைவ க்ருதபூரி பரிஶ்ரமம் |

கீதாப்ரவசநே தக்ஷம் ஶ்ரயே நாராயணம் குரும் || 9

          [ ராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றில் ஆழ்ந்தபுலமை பெற்றவரும், கீதை ப்ரவசனத்தில் நிபுணருமான நாராயணார்யரை சரணடைகிறேன்]
          I surrender to Narayanaguru, who mastered Ramayana, Mahabharata and excels in his Gita discourses.

वादूल श्रीनिवासाय नायक्याम् रङ्गपूर्विकाम्  |

संभूतं सर्वशास्त्रज्ञं श्रये  नारायणं गुरुम् ||  10

வாதுல ஸ்ரீநிவாஸாய நாயக்யாம் ரங்கபூர்விகாம் |

ஸம்பூதம்  ஸர்வஶாஸ்த்ரஜ்ஞம் ஶ்ரயே நாராயணம் குரும் || 10

          [ வாதூல ஸ்ரீநிவாஸாசார்யருக்கும், ரங்கநாயகி அம்மாளுக்கும் பிறந்த ஸத்புத்ரரான நாராயணார்யரை சரணடைகிறேன்]

                    I surrender to Narayanaguru, who was born to Vadula Srinivasacharyar and Ranganayaki Ammal.

तुलामासे च रेवत्यां संभूतं अङ्गिरस् समे |

अतुल: कीर्तिमन्तं तं श्रये नारायणं गुरुम् ||  11

துலாமாஸே ச ரேவத்யாம் ஸம்புதம் அங்கிரஸ்ஸமே |

அதுல: கீர்திமந்தம் தம் ஶ்ரயே நாராயணம் குரும் || 11

          [அங்கிரஸ் வருஷத்தில், துலா ரேவதியில் அவதரித்த அதுலர்- அதாவது தனக்குநிகரற்ற  கீர்தியுள்ள  நாராயணார்யரை சரணடைகிறேன்]

                    I surrender to Narayanaguru, who was born in the Angirasa Year, Thula month, Revathy Star and had unparalleled reputation.

श्रीनृसिंहे सदा सक्तं कमलागृहमेधिनम्  |

शिष्यवर्यै: सदा वन्द्यं श्रये नारायणं गुरुम् ||  12

ஸ்ரீ ந்ருஸிம்ஹே ஸதாஸக்தம் கமலாக்ருஹமேதிநம் |

ஶிஷ்யவர்யை: ஸதாவந்த்யம் ஶ்ரயே நாராயணம் குரும் ||  12

          [ஸ்ரீ ந்ருஸிம்ஹனிடம் எப்போதும் மனதுவைத்தவரும், கமலையுடன் இல்லறம் பூண்டவரும், சிஷ்ய களால் சேவிக்கப்படுபவராகிய நாராயணார்யரை சரணடைகிறேன்]

          I surrender to Narayanaguru, who has always been devoted to Sri Nrusimhan; who is married to Kamala; who is served by his disciples.

सच्छिष्य वर्ग भृङ्गानाम्  कमलं कमलापतिम् |

कोमलाङ्गम् कृपापूर्णं श्रये  नारायणं गुरुम् ||  13

ஸச்சிஷ்யவர்க ப்ருங்காநாம் கமலம் கமலாபதிம் |

கோமளாங்கம் க்ருபாபூர்ணம் ஶ்ரயே நாராயணம் குரும் ||  13

          [ஸச்சிஷ்யர்களான வண்டுகளுக்குத் தாமரையானவரும், கமலையின் கணவரும், அழகிய திருமேனியுடையவரும், கருணையுடையவருமான நாராயணார்யரை சரணடைகிறேன்]

         I surrender to Narayanaguru, who is like a beetle to his Shishyas; who is married to Kamala; who is the embodiment of good looks (i.e. with beautiful Thirumeni); who is full of compassion.

नारायण गुरो: पूर्ण पीयूष गुणसागरात् |

उद्धृतं मौक्तिकं स्तोत्रं अर्पितं तत् पदांबुजे  ||

अनन्तपद्मनाभेन दासेन शुभदायकं || 14

நாராயண குரோ: பூர்ண பீயுஷ குணஸாகராத்|

உத்ருதம் மௌக்திகம் ஸ்தோத்ரம் அர்பிதம் தத் பதாம்புஜே ||

அநந்தபத்மநாபேந தாஸேந ஶுபதாயகம் || 14

         நாராயண குருவின் அம்ருத குணஸாகரத்தினின்று எடுத்த முத்தான, மங்களம் அளிக்கும் இந்த ஸ்தோத்ரம், அநந்தபத்மநாப தாஸனாலே அவருடைய திருவடித்தாமரைகளில் ஸமர்பிக்கப்படுகிறது.  (14)

         This glorious hymn is a pearl taken from the divine ocean of Narayana Guru’s attributes and is presented at His lotus feet by Ananthapadmanabha Dasan.

@ Bengaluru, during First Public Screening of the movie
Sri Vedanta Desika’s Ghantavatharam on 31-Dec-2019

Sri APNSwami #Writes #Article | “இப்படிக்கு APN”| எல்லைச்சாமிகள்

க்ராமங்களிலும், நகரங்களிலும் நான்கு எல்லைகளில் தெய்வங்களுக்குக் கோயில் எழுப்பப்பட்டிருக்கும். ஐயனார், முனியன் இதுமுதலான தேவதைகளை எல்லைச்சாமி என்று அழைப்பர். அதாவது மற்றவர்கள் எளிதில் உட்புகாதவாறு ஊரைக்காக்கும் காவல் தெய்வங்கள் அவர்கள் என்று பொருள். நமது தேசத்தின் எல்லைகளைப் பாதுகாக்கும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரும் எல்லைத் தெய்வங்கள் தான் என்பதில் சந்தேகமில்லை.  சமீபத்தில் கல்வான் (இந்திய சீனா எல்லை) பள்ளத்தாக்கில் அன்னியரை உள்ளே நுழையவொட்டாமல் தீரத்துடன் தடுத்த ராணுவ வீரர்களின் பெருமையை உணர்ந்துள்ளோமே.

            அஃதே போன்று க்ராமங்களில் மாற்றுமதத்தினர் உள்ளே நுழையாமல் காவல்காக்கும் எல்லைச்சாமிகளாக ஸ்ரீவைஷ்ணவ பாகவதர்களைக் கூறலாம். ஆம் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது நான்கைந்து வைஷ்ணவ பாகவதர்கள் இருப்பார்களேயாயின் மதம் மாற்றுப்பணியாளர்கள் அவ்வூரில் நுழைய முடியாது என்பது நிதர்சனம்.

            சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பாகவதர்களுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியின் வெளியீடு இக்கட்டுரை.

            சிறுவயதில் வரதன் ப்ரஹ்மோத்ஸவத்தில் ஆடிப்பாடிகளித்துக் கொண்டு பாகவதர்களின் பஜனையை ரசித்த அனுபவம் மறக்க இயலாது. வேதம், ப்ரபந்தம் என்று ப்ராஹ்மண சமூகத்தில் பழகிய எனக்கு ப்ரஹ்மணர் அல்லாத அந்தபாகவதர்களின் மேன்மையான பக்தி வியப்பளித்தது. கொளுத்தும் வெயிலில் காஞ்சி கருடசேவையில் கூட்டம் கூட்டமாகப் பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் அவர்கள் பின்தொடரும் அழகு இன்றளவும் சமன் செய்யமுடியாத சாதனை என்பேன்.

                  இடையியே தண்ணீர் கூட அருந்தாமல் தன்னைமறந்து உரத்த குரலில் கணிரென்று பாடியாடுவது சாத்தியமேயில்லாத சத்தியம் என்பது எனது தீர்மானம். பெருமாள் கோவிலுக்குத் திரும்பி வந்தவுடன் தன்னைமறந்து அசதியில் அவர்கள் தூங்குவதும் ஒரு அழகுதான்.

      அதேசமயம் ஸ்ம்ப்ரதாயப் பெரியோர்களைக் கண்டால் வயது வித்யாசம் பாராமல் விழுந்து வணங்குவது, உபசரிப்பது, விநயத்துடன் பழகுவது என பாகவததர்மம் பண்பின் சிகரம். “தொடர்ந்து அவர்களைத் துதி பாடுகிறேன்“ என நீங்கள் எண்ணலாம். இவையெல்லாம் எனது முழுமையான அனுபவம். இதற்கெல்லாம் காரணம் தேடிக் கொண்டு உங்களின் காலநேரத்தை வீணடித்துக் கொள்ளாதீர்கள்.

      இப்படி குதித்து பஜனை பாடுவதால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைத்துவிட வேண்டாம். சிலர் திவ்யப்ரபந்த அதிகாரிகளாகவும், சிலர் காலஷேப அதிகாரிகளாகவும், வேறு சிலர் சுத்த பரமைகாந்திகளாக தங்களின் வர்ணாச்ரம தர்மங்ககள் வழுவாமல் ஆசாரத்துடன் இருப்பதும் கண்கூடு. எவ்வித ப்ரதிபலன்களையும் எதிர்பாராமல் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தை பாகவதர்கள் ப்ரசாரம் செய்து வருகின்றனர்.

            ஆனால் சமீபகாலங்களில் இவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வேதனைக்குரியது மட்டுமின்றி, உண்மையில் நாம் சிந்தித்தும் செயல்படவேண்டும். ஏனெனில் முன்னமே சொன்னபடி இவர்களே எல்லைச்சாமிகள். தற்போதுள்ள விவசாய சூழல் மாறுவதாலும், நாகரீகம் என்னும் மாயவலையில் மயங்கி பாகவத இளைஞர்கள் தடம் மாறுவதாலும், க்ராமங்களில் ஸ்ரீவைஷ்ணவ பாகவதக் குடும்பங்கள் குறைந்து வருகின்றன.

            ஸ்ரீரங்கத்துக்கு அருகில் மாராடி எனும் ஊரில் சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பு மாற்றுமதத்தவர் மக்களை மனம்மாற்ற முயற்சித்தனர். அப்போது அங்கிருந்த பாகவத ரெட்டியார்களின் வேண்டுகோளின் படி புத்தம்கோட்டம் சுவாமி அவ்வூருக்குச் சென்று பலமாதங்கள் தங்கியிருந்து மதமாற்றத்தை முறியடித்தார். அதன் நினைவாக ஒரு தேசிகர் சன்னிதியையும் ஏற்படுத்தினார். மிகவும் பாழடைந்த அந்த சன்னிதியை தேசிகசூக்தி சம்ரட்சணை சபையோர் தற்போது மீண்டும் புதுப்பித்து வருகின்றனர்.

            இதுபோன்று சேட்டலூர் சுவாமி, நவநீதம் சுவாமி, கோஷ்டிபுரம் சுவாமி போன்ற பெரியோர்கள் க்ராமங்கள்தோறும் நடந்து பஞ்சஸம்ஸ்காரங்கள் செய்து பாகவத தர்மத்தைப் பரப்பினர்.

            சமீபகாலங்களில் குமாரவாடி சுவாமி (தற்போது ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள்), ரகுவீரபட்டாசார்யார், ஒப்பிலியப்பன் கோவில் கோபால தேசிகாசார்யார் சுவாமி, திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் இன்னமும் இம்மாபெரும் கைங்கர்யத்தினைச் செய்துவருகின்றனர்.

                  இருந்தாலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஸ்ரீவைஷ்ணவ பாகவத கோஷ்டிகள் இப்போது குறையத்தொடங்கியுள்ளதை மீண்டும் வருத்தத்துடன் குறிப்பிடுகிறேன். பாகவதர்களின் கோட்டைகளாகத் திகழும் ராமானுஜக் கூடங்களும் கவனிப்பாரற்று சிதிலமடைந்து வருகின்றன. இதனால்தான் ஜடேரி முதலிய க்ராமங்களில் மதம் மாற்றம் நடைபெற்றதை உணரவேண்டும். க்ராமங்கள் தோறும் பாகவதர் செழிக்கவேண்டும். இளைஞர்களுக்கு பஜனை, திவ்யப்ரபந்தம் முதலியவற்றை பயிற்றுவிக்க வேண்டும். அவர்கள் அனைவர்க்கும் ஆசார்ய சம்பந்தத்தின் அவசியத்தை உணர்த்த வேண்டும். ஆசார்யனிடம் பக்தி செலுத்துவதில் உதாரணமாகத் திகழும் பாகவத அடியார்களையும், மதம்மாற்றத்தைத் தடுக்கும் எல்லைச்சாமிகளாக திகழ்பவர்களையும் போற்றிப் பல்லாண்டு பாடுவோமாக.

      ஒரு சில பாகவதர்கள் ராணுவத்தில் பணி புரிந்தும் ஓய்வுபெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நமது எல்லைகளை நாம் அறியவேண்டும், உணரவேண்டும். தேசிய கீதத்தின் பெருமிதம் போன்று தேசிக (ஆசார்ய ) கீதத்தின் பெருமையை பட்டொளி வீசச்செய்வோம்.

ஜயஹிந்த்!!!

இப்படிக்கு

APN  

Sri #APNSwami #Writes #Slokam | Ramayanam Bala Kandam | Vikhari Rama Navami | 2-Apr-2019

Slokam by Sri APN Swami on Ramayanam Bala Kandam | Rama Navami

பால காண்டம் சுலோகம் : இயற்றிவர்: ஸ்ரீ ஏபின் ஸ்வாமி
அமரை: வந்த்யமாநேச மஹதாவிர்பவேந ச |
ந்ருபாத்மஜாவதாரை: ச விச்வாமித்ரேண தீமதா ||
தாடகாநிதநே சைவ யஜ்ஞஸம்ரக்ஷணேபிச |
அஹல்யா சாப நிர்மோக்ஷே தநுர்பங்கே ச மைதிலே ||
ஸீதா விவாஹ ஸந்தர்பே பார்கவஸ்ய தபோஜயே |
ஸுஸ்பஷ்டம் ராகவ: ஸ்ரீமந் வேதவேத்ய: ஜகத்பதி: ||

தேவர்கள் வந்து சரணாகதி செய்ததினாலேயும், பெருமாள் பாயசத்தினால் ஆவிர்பாவம் செய்ததினாலேயும், ந்ருபாத்மஜா அதாவது பிராட்டியின் அவதாரத்தினாலேயும், பெருமாளின் அவதாரத்தினாலேயும், விஸ்வாமித்ரார் “அஹம் வேதி மகாத்மா” என்று சொன்னதினாலேயும், தாடகை கொன்று யாக ஸம்ரக்ஷணம் செய்ததினாலேயும், அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்தினாலேயும், சிவனின் தனுர் பங்கம் செய்ததினாலேயும், சீதையை விவாஹம் செய்ததினாலேயும், மேலும் பரசுராமரின் தபோ வலிமையை ஜயித்ததினாலேயும் தெளிவாக (ஸ்பஷ்டமாக) தெரிவது என்னவென்றால் ராகவானான ராமனே வேத வேத்யனான பரமாத்மா என்று தெரிகிறது.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

Sri APNSwami #Writes #Article| Karthigai Pooradam | HH43rd Devanarvilagam Srimadh Azhagiyasingar Thirunakshatram

இன்று (29/11/2019) கார்த்திகை பூராடம் HH 43 தேவனார்விளாகம் அழகியசிங்கர் ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவீரராகவசடகோப யதீந்த்ர மஹாதேசிகன் திருநக்ஷத்திரத்தை முன்னிட்டு அவரின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் சிறிய தொகுப்பு.

#கார்த்திகை #பூராடம் |#HH 43 | #தேவனார்விளாகம்  #அழகியசிங்கர்|#திருநக்ஷத்திரம்

Scroll down to read the English version.

Scroll down to see rare pictures. Picture courtesy – Sri Nrusimha Priya

            HH43rd pattam Azhagiyasingar

WhatsApp Image 2019-11-29 at 1.32.53 PM

                    தொடர்வதா? விலகுவதா?

தேவனார்விளாகம் ஸ்ரீமதழகியசிங்கர் பம்பாயிலிருந்து புஷ்கர், குருக்ஷேத்ரம், ஹரித்வார், பதரிகாச்ரமம் எழுந்தருள நிச்சயித்திருந்த சமயம் மிகவும் கடுமையான ஸஞ்சாரம். பெரும்பரிவாரத்துடன் பல மைல்கள் நடைப்பயணம் செய்ய வேண்டும். யானை, குதிரை, மாடுகள் என்று ஸ்ரீந்ருஸிம்ஹனின் ஸமஸ்த பரிவாரங்களுடன் பயணத்தை மேற்கொள்வது மிகுந்த ச்ரமத்தை அளிக்கும் என்று பலரும் எண்ணினர்.

கைங்கர்யபரர்கள் (ஸ்ரீசன்னிதியில் கைங்கர்யம் செய்பவர்கள்) உட்பட ஒருவித அச்சம் எல்லோரையும் ஆட்கொண்டிருந்தது நேரிடை யாகவும், ஜாடைமாடையாகவும் அழகிய சிங்கரிடம் இதனை ஒரு சிலர் விண்ணப்பித்திருந்தனர். சில சமயம் ஸ்ரீமதழகிய சிங்கரே மூன்று வேளை திருவாராதனங்களையும் செய்ய வேண்டிய நிர்பந்தமும் உண்டு. இதனால் தேஹத்திற்கு அசௌகர்யம்’ என்றும் சிஷ்யர்கள் கவலையுற்றனர்.

ஸ்ரீமதழகியசிங்கரோ! புன்முறுவலுடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டாயிற்று. இவ்வளவு கடுமையான ஸஞ்சாரம் இருந்த போதிலும் சிஷ்யர்களுக்கு காலக்ஷேபம் சாதிக்கவும், ஸ்ரீமத் ராமாயணம் சேவிக்கவும் ஒருநாள், ஒருவேளை கூட நிறுத்தியதில்லை. புதுக்கோட்டை ஸ்வாமி என்று ப்ரஸித்தரான சேஷாத்ரியாசார்யார் ஸ்வாமி நெஞ்சுருகி கண்பனிப்ப இந்த அனுபவங்களை அவ்வப்பொழுது இருகரம் கூப்பியபடி தெரிவித்தாகும். வடதேசயாத்ரையில் இரண்டு முறை ஸ்ரீபாஷ்யம், இரண்டு முறை ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், ஒரு முறை ஸ்ரீகீதாபாஷ்யம், ஒரு முறை ஸ்ரீபகவத் வவிஷயம் (ஆறாயிரப்படி) என்று அழகியசிங்கர் பூர்த்திசெய்துள்ளார். செயற்கரியதொரு சாதனையிது என்றால் மிகையில்லை.

இப்போது பதரிகாச்ரமம் வரையிலும் செல்லாமல் திரும்பிவிடலாம்’ எனும் விசாரம் வந்தபோது, அன்றைய தினத்தில் கீதாபாஷ்ய காலக்ஷேபத்தில் சாதித்த விஷயங்கள் என்றென்றும் நினைவு கூறத்தக்கவை.

பகவத்கீதையில் இரண்டாமத்யாயம். பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் அர்ஜுனின் வருத்தத்தைப் போக்கும் உபதேசம் செய்கிறான். வலுவில் வந்த யுத்ததிதைச் செய்வதால் அர்ஜுனனுக்கு ஏற்படும் நன்மையையுரைத்தவன்; செய்யாமல் போனால் ஏற்படும் தீமைகளையும் விவரிக்கிறான். இதில் 32,33,34 ச்லோகங்கள் மிகவும் முக்யமானவை.

‘அர்ஜுனா! க்ஷத்ரியனுக்கு யுத்தம் என்பது மேலானதர்மம். அத்தகையதர்மத்தை விடுவதால் மேலான சுகத்தையும், புகழையும் இழந்து விடுவாய்’ என்கிறான் கண்ணன். அதனாலென்ன? எனக்கொன்றும் கவலையில்லையே’ என்று அர்ஜுனன் கூறுவதாகக் கொண்டு மேலும் பதில் கூறுகிறான் கண்ணன்.

‘அர்ஜுனா! சுகம், புகழை நீ விரும்பவில்லை என்றாலும் தர்மத்தை மீறிய பாபத்தை அடைவாயே’ மேலையார்கள் வழியான அதனைச் செய்யாதது பெரும் பாபமாயிற்றே. தர்மானுஷ்டானத்தில் ஊற்றமுடையவர்கள் பாபத்தைக் கண்டு பயப்படுவரே’ என்கிறான். மேலும் இவ்விதம் நீ கருணையினால் பின் வாங்குவதைக் கண்ட பொறாமைக்காரர்கள் அதாவது துரியோதனன் முதலானவர்கள் நீ கருணையினால் யுத்தத்தை நிறுத்தியதாக நினைக்க மாட்டார்கள். எதிரிகளைக் கண்டு பயத்தினால் பின்வாங்கினாய்’ என்று நினைப்பார்கள். வீரனுக்கு இதைவிட வேறென்ன அவமானம் வேண்டும்’ என்றான் கண்ணன்.

இந்த யாத்திரை விஷயத்தில் ஏற்பட்ட சலசலப்புக்கு அழகியசிங்கர் இந்த காலக்ஷேப விஷயத்தினால் சமாதானம் அருளியாயிற்று. 40,41, 42 என்று மூன்று அழகியசிங்கர்களின் விசேஷ கடாக்ஷம் பெற்றோம். இரண்டாவது உலகப் போர் காரணமாக இஞ்சிமேடு ஸ்ரீமதழகியசிங்கரால் ஸஞ்சாரம் செய்ய முடியவில்லை . அவரின் அநுக்ரஹத்துடன் வந்துள்ளதால் இதற்கு யாதொரு விக்னமும் நேரிடாது. ந்ருஸிம்ஹன் சன்னிதியில் சங்கல்பித்துக்கொண்டு பின் வாங்கினால் ஏனையவர்கள் இளக்காரமாகப் பார்க்கமாட்டார்களா!’ ந்ருஸிம்ஹன் எங்கும் ஸஞ்சாரம் (பயணம்) செய்து ஆஸ்தீகர்களை அநுக்ரஹம் செய்வதற்காகத்தானே அவதரித்தான். அவனை ஆராதிக்கும் நமக்கும் ஸஞ்சாரம் தானே ஸ்வதர்மம். அதை விடலாமா! ஆகையால் நிர்பயமாக இந்த யாத்ரையைத் தொடரவேண்டும்’ என்று அருளியாயிற்று.

   அன்றைய தினம் நடந்த இந்த கீதாபாஷ்ய காலக்ஷேபம் அனைவர் மனதிலும் ஒரு தெளிவை உண்டாக்கியது என்பது வரலாறு.

நவம்பர் 2017 ஸ்ரீ ந்ருஸிம்மப்ரியாவில் வெளிவந்த தொகுப்பு.

1953_153_HH43 Pattam1953_154_HH43 pattabhishekam1953_155_Hh43 sancharam1953_392_HH431953_450_HH431956_11 HH43 in Purisai

                    Go on or Quit?

On the occasion of the Thirunkashatram of HH43rd Azhagiyasingar, here is a small incident that brings out the greatness of this Acharya.

   Once Devanarvilagam Azhagiyasingar had embarked on a difficult sancharam starting from Mumbai to places such as Pushkar, Kurukshetram, Haridwar and Badrikashramam. People knew that this was going to be a difficult journey as they had to walk for many miles each day, not to mention the maintenance of Sri Nrisimhan’s entire retinue which included elephants, horses, and cows.
The kainkaryaparars (those doing service in the mutt) were concerned about this sancharam and some of them brought this up with Azhagiyasingar directly and indirectly. They were concerned that sometimes he may have to do Thiruvaradhanam all three times in a day by himself and this could put a big strain on his health.

   Azhagiyasingar listened to all their concerns with a slight smile. Despite this strenuous schedule, he continued giving kalakshepam to his sishyas and he continue reading Srimad Ramayanam every day, according to the insider account of Seshadrichariar, popularly known as Pudukottai swami. In fact, during this sancharam he had completed Sribashyam kalakshepam twice, Srimad Rahasyatrayasaram twice, and Gita Bhashyam and Bhagavad Vishayam once each respectively – no mean feat by any standard!

   Once, there was a discussion of returning back without going to Badrikashramam and this is what Azhagiyasingar explained in Gita Bhashyam kalakshepam on that day.

   In the second chapter of Bhagavad Gita, Lord Krishna gives advice to a worried and dejected Arjuna. In this chapter, Krishna explains the good consequences of doing one’s karma and the bad repercussions of not adhering to one’s dharma. Out of these, slokas 32,33, and 34 are most important.

   Lord Krishna said, “Arjuna, war is an important and an exalted Dharma for every Kshatriyan. By not adhering to it, you will lose the fame and happiness that come with it.”

   Arjuna said, “So what Krishna? Fame and happiness don’t matter much to me.”
Krishna said, “Even if you don’t crave for happiness and fame, remember that this is your dharmam. If you fail to do it, you will incur sin. Those who believe in Sastrams and anushtanams should feel scared of incurring sins. Moreover, when you withdraw, people who are jealous of you like Duryodhana will not see your compassion. They will only think that you have withdrawn due to your fear of them. Can there be a greater disgrace for a warrior?”

    Azhagiyasingar used this conversation to put to rest all the doubts and concerns that came up during this sancharam. He said,” We have the special grace of the 40th, 41st, and 42nd pattam azhagiyasingars. Due to the second world war, Injimedu Azhagiyasingar could not do his sancharam, but he is always with us in this sancharam, so no harm will befall us. Won’t others look at us with disdain if we quit now and go back after taking an oath at SriNrisimhan’s sannidhi? As we all know, Nrisimhan took avataram to travel everywhere and to bless all His devotees across the length and breadth of Bharatham. Isn’t it our dharamam to fulfill His wish? How can we quit? So, let us proceed on this journey and He will take care of us.”
This kalakshepam session was an eye-opener in many ways and created an indelible memory in the minds of all those who were present that day.

   Undoubtedly, this article brings out our responsibility to adhere to our dharmam with steadfastness and determination. Can we also take a first step in following our dharma as a mark of respect to the esteemed HH43rd pattam Azhagiyasingar?

(English Translation by Shishyas of Sri APN Swami.)

Sri #APNSwami #Writes #Trending |#Parasaran’s #victory |#பராசர #விஜயம்

                    Parasaran’s victory

                      பராசர விஜயம்

(By Sri APNSwami)

This article has both the original Tamil version written by Sri APN Swami and the English translation by his students. Scroll down to read the English version.

WhatsApp Image 2019-11-09 at 11.33.53 AM

மஹரிஷி வசிஷ்டரின் பிள்ளையின் பிள்ளை (பேரன்) பராசரமஹரிஷி. இவரே வேத வ்யாஸ்ரின் தந்தை. புராணங்களில் ரத்னமான ஸ்ரீவிஷ்ணுபுராணத்தை இயற்றிய மகாத்மா இவரேயாவர். சுவாமி ஆளவந்தார் இயற்றிய ஸ்தோத்ர ரத்நம் எனும் நூலில் புராண ரத்னம் இயற்றிய மகரிஷி ரத்நமான பராசரரைப் புகழ்கிறார்.

தெளிந்த தத்வ அறிவை உடையவராம் பராசரர். ம்ருதுவாகவும், சாந்தமாகவும் பேசும் இவர், அதே சமயம் தனது வலிமையான கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்து எதிரணியினரை வாயடைக்கச் செய்து விடுவாராம்.

  “பரா: – என்றால் எதிரணியினர் என்று பொருள். சர: – அம்பு மழை பொழிவது போன்று வாதங்களை முன்வைத்து அவர்களை அடக்கும் வெற்றி வீரர பராசரர் என்பது பொருள்” எங்கிறார் சுவாமி தேசிகன்.
முதிர்ந்த ஞானியான இவரின் வாதங்கள் பரப்ரம்மமாகிய பகவானின் பெருமையை உலகறியச் செய்கிறதாம்.

அதே போன்று கூரத்தாழ்வான் திருக்குமாரர் பராசர பட்டரும் இந்த சம்ப்ரதாயத்தின் தீபமாகத் திகழ்ந்தார்.

மூன்றாம் பராசரன்:-
இன்று 9.11.2019 (ஐப்பசி.23) நமது தேசத்தின் காவல் தெய்வமான ஸ்ரீராமபிரானின் பெருமைதனை “தோலாத தனிவீரன்” உலகறியச் செய்தார் வழக்கறிஞர் திரு.பராசரன் அவர்கள். மகாத்மா பராசர மகரிஷி போன்றே பழுத்த பகவத் அநுபவம், அநுக்ரகம் பெற்ற இவரின் ராமபிரான் விஷயமான தொண்டு மகத்தானது.
வாதங்களாகிய மழையினால் ப்ரதி வாதிகளை வியக்கும்படி செய்து தர்ம ஸம்ஸ்தாபனம் செய்த திரு “கேசவ பராசரனுக்கு” பல்லாண்டு பாடுவோம்.
“ஸநாதந ரத்னமான” இவரின் ராம கைங்கர்யம், ராமாயணத்தின் புகழ், ராமபிரானின் புகழ் உள்ளளவும் நிலைக்கும் என்பது திண்ணம். ஸம்ப்ரதாய ஆசார்யர்கள் இவருக்கு மாபெரும் பாராட்டு விழா நடத்தி, அடுத்த தலைமுறையினருக்கு இவரின் தொண்டினை அறிமுகப்படுத்த வேண்டுமென்று பேராவலுடன் எதிர் பார்க்கிறேன்.

– தாஸன் ஸ்ரீஏபிஎன் சுவாமி.

                                     Parasaran’s victory

Sage Parasara is the grand son of sage Vasishta and the father of Sri Veda vyasa. This eminent sage composed “Sri vishnupuranam” which is considered to be the gem of puranas. Swami Alavandar in his stotra ratnam hails him as the gem among sages who authored the gem among puraanas.

Sage parasara has in depth knowledge on the sanatana dharma with unprecedented clarity. He is said to be soft spoken with great equanimity of mind who on the other hand when arguing against the enemies would strongly emphasise and irrevocably establish the right facts and opponents dumbstruck.

The word “para” means enemies and “sara” means arrows. Thus swami Vedanta desika quotes that the name “parasara” by itself indicates that his arguments would fall like rain of arrows aimed at the opponents and defeat them.

With ripened knowledge and enormous wisdom, this sage’s arguments reveal to the world the greatness of “parabramham”.

In the same manner, swami koorathazhwan’s son parasara bhattar, is also a jewel of our Sri Vaishnava sampradhaya.

The third Parasaran-

Today 09/11/2019 (ipassi 23), the glory of our nation’s protector lord Sri rama has been brought to light by the “one man army”, veteran advocate Sri Parasaran ji. Just like sage parasara, with astute wit and abundant blessings from the lord, this humongous service rendered by him to Ram Lalla is immeasurable.

To this illustrious personality who made his opponents awestruck by his unshakable arguments, we bow down humbly with respect and pay our obeisance.

It is not an exhaggeration to laud him as the gem of sanathana dharma. His yeoman service to lord Sri rama and the holy book srimadh ramayana will always be etched in our hearts and minds.

We eagerly look forward at the acharyas and other learned scholars of our sampradhaya to celebrate and honour advocate Sri parasaran’s triumph and show to the next generation the significance of his services to sanathana dharma.

(English Translation by students of Sri APN Swami.)

Sri APNSwami’s Shishya Writes | Swami Desikan’s Life Chronicles – A Perspective for Modern Life

NOTE:  As we celebrate Swami Desikan’s Thirunakshatram, here is an article written by Sri APN Swami’s Shishya that talks about what we can learn from Swami Desikan’s life today.

    Swami Desikan’s Life Chronicles – A Perspective for Modern Life

     Multi-faceted, illustrious, brilliant, devout, austere…….are some of the adjectives that come to our mind when we think of Swami Vedanta Desikan.  In fact, his life and the many accomplishments that embellish it are a wonder that can overwhelm us today.

     As we celebrate the 751st birth anniversary of Swami Vedanta Desikan, let us see how we can imbibe his life and the many incidents in it, for our modern life.

Faith and Devotion

    Today, we ask many questions regarding the existence of God, philosophical ideas, our sastrams, and just about everything else that we cannot comprehend with our limited knowledge  and capacity. We often think these questions are a manifestation of our intelligence. But in reality, they reflect our ignorance and lack of faith in our sastrams and principles that have been established by Perumal and followed by our acharyas.

    Swami Desikan, despite his intelligence and capabilities, never questioned what his acharya said. He simply followed it and got profound results at the end. 

    When Swami Desikan was about 20 years old, his maternal uncle and acharyan, Appullar taught him the Garuda mantram and asked him to meditate on it. Dutifully following his acharya’s words, Swami Desikan went to Thiruvaheendrapuram, a divya desam near Cuddalore. He climbed up the Oushadagiri hill, sat under a banyan tree and meditated on the sloka taught by his acharyan. He controlled his senses and focused his mind singularly on Garudan, the embodiment of Vedas.

    Garudan, pleased with his devotion and meditation, emerged before Desikan and taught him the exalted Hayagriva mantram, To top it, Garudan also gave Desikan the Hayagriva idol that he had been worshipping for many years. Keeping this idol in front of him, Desikan started meditating on the Hayagriva mantram. Pleased with desikan, Lord Hayagrivan emerged and gave him “lalamrutham” and due to his grace, Desikan composed more than 120 different literary works, each a gem in itself. 

    This incident goes to show the unconditional faith and devotion that Swami Desikan had in his acharya and on Perumal that helped him to establish Bhagavad Ramanujar’s principles through his works. The fact that many of his works are being read and celebrated 650 years after his life reflects the depth of their meaning and their relevance even today. 

Adamant Detachment 

   Swami desikan was never attracted to money or riches. He lived a life detached from material pleasures, as is evident from the many incidents in his life.

    As we all know, he prayed to Perundevi thayar to give wealth to a poor brahmin boy so he could get married. Hearing his Sri Stuti, Perundevi Thayar showered gold coins, but Desikan never took even a single coin home. He thanked Thayar for Her benevolence and left while the boy collected it all. Likewise, in another incident, a rich man gave some gold coins during Desikan’s daily unchavruthi. His wife, Thirumagai, who had never seen gold coins before, asked Desikan what these are. In response, he used a stick and pushed it away as if these gold coins were a piece of dirt. Such is his detachment to money and material pleasures.

    Today, all of us run behind money in one form or another. While it is impossible to live like Desikan, we can ensure that our life doesn’t always revolve around money and we make time for other important aspects too, such as family, God, spiritual pursuits, kainkaryam (service), and more. 

Mental strength (Vairagyam)

   Swami Desikan’s detachment to wealth stems from his enormous mental strength.

    Once his childhood friend, Vidyaranyar, wanted to help Desikan by making him the royal poet at Vijayanagar kingdom. So, he sent a messenger to bring Desikan to the king immediately. But Desikan refused to come as he didn’t want to praise any king with his words. He understood the insignificance of this wealth and refused to entertain any king. He only wanted to praise Perumal and his acharyas through his words and hence rejected the offer. This also led him to compose the famous Vairagya Panchagam, five stotras that describe the reason for his vairagyam. It takes a lot of fortitude to refuse the name, fame and wealth that came knocking at Swami Desikan’s door. 

    We can too emulate such mental strength that is sure to help us handle many stressful and difficult situations in our life.

Humility

    Despite all his wondrous capabilities, Desikan was a humble person who saw the hand of God in everything, from his breath to every morsel of food that went into his mouth. He understood that everything is Sarveshwaran and he is a servant of his Lord. Such an understanding gave him a lot of humility too. 

     In this Kaliyugam, we tend to believe that we are on top of everything. We like to flaunt even the smallest of our accomplishments by forgetting the Hand that gave it to us. Swami desikan was a living example of humility and let us pray to him to give us a bit of his humility, so we can live a life of gratitude and modesty. 

Courage to take on challenges

    Humility is not the same as meekness. Despite being humble, Desikan never shied away from challenges. He participated in many debates to establish the validity and greatness of Bhagavad Ramanuja’s principles at every opportunity and took on many scholars at the same time. Probably the best example of his fearlessness is the challenge to complete a 1000 slokas within a single night. After taking the blessings of Sri Ranganathar, Desikan finished 1008 slokas on His paduka within just four hours! This work, called Paduka Sahasram, is a magnum opus of Swami Desikan and one that etched his name in this land forever. 

    Like that, our life is full of challenges, both from within and outside. Instead of running away from challenges, we should develop the courage to face them in the faith that our Perumal and Acharyas will guide us through it. 

Unconditional support

    Any learning from Swami Desikan’s life is never complete without a mention of his wife Thirumagai. She supported him in every way possible and like him, stayed away from wealth and material pleasures. She followed her husband dutifully and served him in the best way possible – all of which gave her a sense of fulfillment and completeness and one that is sadly missing in our lives today. 

    To conclude, these incidents in Swami Desikan’s life teach us a ton of different aspects that we should imbibe to live a happy, healthy, and peaceful life, according to what’s prescribed in our sastras . This is not an exhaustive list as Swami Desikan lived a blemishless life by strictly following our Sastras and the words of our purvacharyas. 

    On this 751st thirunakshatram of Swami Desikan, let us all strive towards emulating at least a few of these aspects in our life too.

Acharyan Thiruvadigale Charanam. 

Adiyen
Lavanya Badrinarayanan.

Sri #APNSwami #Writes #Trending | வரதனின் விருப்பம் – 02

வரதனின் விருப்பம் – 02

(By Sri APNSwami)

     அனந்தசரஸின் அழகிய தோற்றம் நிலவொளியில் நன்கு தெரிந்தது.  இரண்டொரு நாட்களுக்கு முன்னர்தான் பௌர்ணமி தினமாதலால் சந்திரனின் ஒளி இன்னமும் குறையவில்லை.  குளத்தில் ஆங்காங்கு சிறிதுசிறிதாகத் தேங்கியுள்ள தண்ணீரில், நிலவின் பிம்பத்தைக் காணும்போதும், சிறு காற்றின் அசைவில் அத்தண்ணீர் அசையும்போது நிலவின் பிம்பம் அசைவதையும் கண்டால், அக்குளத்தினுள் சந்திரன் எதையோ தேடுவது போன்றிருந்தது.

     இன்று சந்திரனும் என்னைப் போன்றுதான் இளைத்து வருகிறானோ?  சுக்லபட்சத்தில் சுடர்விட்டு ப்ரகாசித்தவன், இப்போது தேய்பிறையில் ஏனோ தேம்புகிறான்!

      நைவாய எம்மேபோல் நாள்மதியே!  நீஇந்நாள்

     மைவானிருளகற்றாய் மாழாந்து தேம்புதியால்

      ஐவாயரவணைமேல் ஆழிப்பெருமானார்

     மெய்வாசகம்கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே!   

                                                                                              திருவாய்மொழி 2.1.6)

என்ற ஆழ்வாரின் பாசுரத்திற்கு ஆசார்யர்கள் உபதேசித்த அர்த்தம் மனதிலே கனிந்தது.

     முழுமதி இளைத்துள்ளது கண்டு ஆழ்வார் வினவுகிறார்.  வரதனைப் பிரிந்த ஏக்கத்தில் தலைமகளாக (பராங்குச நாயகியாக) ஆழ்வாரின் பிரிவுத்துயர் பாசுரம் இது.

    “என்னைப் போன்றே சந்திரனே! நீயும் இளைத்துள்ளாயே!”  என வினவுகிறார்  நிற்கின்றதெல்லாம் நெடுமால் என எல்லாவற்றிலும் எம்பெருமானைக் காணும் ஆழ்வார், இப்போது சந்திரனும் பெருமாளின் பிரிவினால் வாடுகிறதோ!  என்று எண்ணுகிறார்.

     “அமுதைப்பொழியும் நிலவே!  நீ இப்போது இந்த இருளை ஏன் அகற்றவில்லை  உன் ஒளி ஏன் மங்கியது?  உன் மேனியின் வாட்டத்தின் காரணம்தான் என்ன?  ஓ…  நீயும் என்னைப்போன்று எம்பெருமானின் வார்த்தையில் நம்பிக்கை வைத்துப் பின்னர் அவனால் ஏமாற்றத்திற்குள்ளானாயோ?”  “மாசுச:” “கவலைப்படாதே” என்று அபயமுத்திரை அளித்தவன் ஏமாற்றினானே.

     “ஓ அவன் பழகுமவர்களின் இயல்பினைப் பெற்றிருப்பவன் தானே என்ற ஆழ்வார்,  அப்படி யாருடன் பெருமாள் பழகினான்?  அவர்களைப் போன்று இவனும் எப்படி பொய்யனானான்?”  விதியின் பிழையால் ஒளியிழந்த மதியின் நிலை கண்டு மேலும் விவரிக்கிறார் ஆழ்வார்.

     “நம் வரதன் கொடுமையான இக்கலியுகத்தில் “அனந்தன்” எனும் ஆதிசேஷனால் ஆராதிக்கப்படுகிறானல்லவா!  மேலும் அனந்தசயனனாக ஆதிசேஷன் மீது (அனந்தசரஸில்) பள்ளி கொள்கிறானன்றோ!  அனந்தன்  எனும் பாம்புக்கு இரண்டு நாக்குகள் உண்டோ? அதாவது, பொய் பேசுபவரை இரட்டை நாக்குடையவர் என்பர் பெரியோர்  அனந்தனான ஆதிசேஷனுடன் பழகுபவனான வரதனும் பொய் பேசி உன்னை ஏமாற்றினானோ  வெண்ணிலவே!”  என்கிறார். 

    “மேலும், வரதனின் ஆயுதங்கள் அழகு.  அவற்றினுள் அழகோ அழகு சுதர்ஸந சக்ரம்.  எதுவொன்று மேன்மேலும் பார்க்கத் தூண்டுமோ,  அதுதானே சுதர்ஸனம்”.  அந்த திவ்ய சக்ரத்தின் கதையைக் கேளுங்கள்.

     “கௌரவ, பாண்டவ யுத்தத்தில் அபிமன்யுவை அந்யாயமாகக் கொன்றான் ஜெயத்ரதன்.  இன்று சூரிய அஸ்தமனத்திற்குள் அவனைக் கொல்கிறேன் என சபதம் செய்தான் அர்ஜுனன்.  அர்ஜுனனின் சபதம் காக்க சுதர்ஸந சக்ரம் சூரிய ஒளியை மறைத்து,  பகலின் நடுவே இரவு வந்தது போன்றதொரு மாயத் (பொய்த்) தோற்றத்தை விளைவித்தது.  இருள் சூழ்ந்தது என எண்ணி குதூகலித்த ஜயத்ரதன் வெளியே வர, சுதர்ஸன சக்ரம் விலகி, சூரியன் ஒளிவிட, அர்ஜுனன் அவரைக் கொன்றான்.”

     இப்படி பகல் நடுவே இரவழைக்க வல்லான் சுதர்ஸனன் செய்ததும் வஞ்சனை தானே.  இருநாக்கு பாம்புடனும், வஞ்சனை செய்யும் சக்கரத்துடன் பழகும் வரதன், ஏமாற்றாமலிருப்பானா!”

     ஆழ்வார் ப்ராகாரத்தின் நடுவே கம்பீரமாகத் தோன்றும் நம்மாழ்வாரின் சன்னிதியும், அதன் மேலே முகிழ்த மதியும் கண்டபோது, நமக்குள்ளும் ஆழ்வாரின் இந்த பாசுரமும், அர்த்தமும் தோன்றியது.

     அப்படியானால் வரதன் வஞ்சனை செய்பவந்தானா!  நாயகி நிலையில் ஆழ்வார் பாடியது நம்மைப் பொறுத்த வரையில் இன்று நிஜமாகத் தோன்றுகிறதே!  என் விதியை என் என்பது?

     எப்போதும் உடன் இருப்பதாகச் சொன்னவன், இன்று விட்டுச் சென்றுவிடுவானோ?  அப்படியெனில் கவலைப்படாதே என்பதின் பொருள் ப்ரமையா?

     தொண்டரடிப் பொடியில் பூத்துக் குலுங்கும் மகிழ மரத்தின் சுகந்த பரிமள வாசனையை சுமந்து வரும் காற்று, நெஞ்சத்தை நிறைத்தது.  சோகத்தால் கனத்திருந்த நம் இதயத்தில் நுழைந்து, நுரையீரலில் புகுந்த அந்த வாசனை, சற்றே ஆறுதலளித்தது.  இதுபோன்ற அமைதியான சூழலில், ஆழ்வார் பாசுரங்களையும், ச்லோகங்களையும் அர்த்தத்துடன் அசைபோடுவது ஆனந்தமளிக்கும்.  ஆனால் இப்போதோ, உள்ளத்தில் ஓசையில்லை… உதடுகள் ஒட்ட மறுக்கின்றன.  ஒளியில்லாத பார்வையுடன், எதையும் கவனிக்கும் மனநிலையின்றி, ஒலியில்லாத வார்த்தைகள் இதழின் ஏக்கத்தைத் தெரிவித்தன.

    இதயம் கனத்திருந்தால் இதழால் இயம்ப முடியுமா? உலர்ந்த உதடுகள் ஒலியின்றி உச்சரித்தன. வ…. ர….. தா….    வ….ர…..தா….” என்று…

     பாக்கியத்தின் பக்குவத்தில் எழுந்த ஓசையெனில் விண்ணதிர வரதா என ஒலித்திருக்கும் சோகத்தின் சாயலில் சுவாரஸ்யமின்றி சுருண்டன அந்த வார்த்தைகள்.   ஆம்… இன்னும் சற்று நேரத்தில் எம் அத்திவரதன் அனந்தசரஸினுள் அமிழப் போகிறான்!!  சம்சார சாகரத்தில் அமிழ்ந்த எம்மைக் காக்கப் பிறந்தவன், பாற்கடலுள் பையத்துயிலும் பரமன், அனந்தன் மீது பள்ளிகொள்ளும் ஆதிப்பிரான், அனந்த கல்யாணகுணங்களுடையவன்,  அனந்தசரஸினுள் மீண்டும் செல்லப் போகிறான்!!

     பிரியமானவனைப் பிரிய மனமின்றி பிரியாவிடை கொடுக்கத் தெரியாமல் தவியாகத் தவிக்கும் போது, உதடுகள் உலர்ந்துதானே போகும்… தனிமையில் உள்ளத்துள் அழுவதை இந்த ஊருக்குப் புரிய வைத்திட முடியுமா?

     ஆயாசத்தின் ஆதிக்கத்தால், நெஞ்சத்தின் பாரத்தை சுமக்க முடியாமல் நூற்றுக்கால் மண்டபத்தின் குளக்கரைப் படிகளில் அமர்ந்தேன்.  கனத்த இதயம் கண்களைத் தானாக மூடியது வ….ர….தா… என ஒருமுறை வாயால் சொன்னாலும் மூச்சுக்காற்றின் வெம்மை உள்ளத்தின் வெறுமையைக் காட்டியது.

     கலக்கத்தில் கண்கள் மூடினவேயன்றி களைப்பில் மூடவில்லையன்றோ! அதனால் உறக்கம் எப்படி வரும்?  சில நொடிகள் சென்றிருக்கும்.  சிலீரென்று ஒரு ஸ்பரிசம்!!!!   இதுவரையிலும் உணர்ந்திராதது!!  ஆயிரம் வெண்மதியின் அனைத்து குளிர்ச்சியும் ஓரிடத்தில் ஸ்பரிசித்தால் எப்படி இருக்குமோ அதுபோன்று…

     மேனி சிலிர்த்த அந்த ஸ்பரிசம் தொடர்ந்திடாதா? என ஏங்க வைத்தது.

     ‘தனிமையில் தவிக்கும் நம்மைத் தொடுபவர் யார்?’ என தலையைத் திருப்பினால்….

      திசைகள் அனைத்தும் எழும்பிட ஒரு திகைப்பு உண்டானது.  இது திகைப்பா! அல்லது தித்திப்பா என் எதிரே நிற்பவன் …. நிற்பவன்…. தடுமாறித்தான் போனது உள்ளம்..

     “என் எதிரே நிற்பவன் தேவாதிராஜனா!!!. அத்திவரதனா!!! மும்மறையின் முதல்வனா!!! மூலமென ஓலமிட நின்றவனா!!!”

     திருவபிஷேகமும், திருக்குழைக்காதுகளில் கர்ணபத்ரமும், பங்கயக்கண்களும், பவளச் செவ்வாயும், திருக்கையின் திவ்ய ஆயுதங்களும், காண்தகு தோளும், திருமார்பு நாச்சியாரும், அனந்தநாபியும், அரைச்சிவந்த ஆடையும், ஆதிவேதத்தின் அனுபவம் கமழும் பாதகமலங்களும் சோதிவெள்ளமென சுடரிடும் ஆபரணங்களுடன் அருள்வரதன் என் முன்னே நின்ற பெருமையை எவ்வண்ணம் பேசுவேன்? எவரிடம் விளக்குவேன்?

     என்னைத் தொட்ட கைகள் இமையோர் தலைவனதா?  கருடனையும், அனுமனையும் அணைத்த கைகளா?  பெருந்தேவியுடன் பிணைந்த கைகளா? ஹஸ்திகிரிநாதனின் ஹஸ்தமா(கையா) அடியேனை ஸ்பரிசித்தது!!!!!

     என் உள்ளத்தை உணர்ந்தான் உரக மெல்லணையான்…. ஓதநீர் வண்ணன் மெலிதாக நகைத்தான். மந்தகாசப் புன்னகையின் மாறாத பொருள் கவலைப்படாதே“..

    “வ…. ர….. தா..” திகைத்தவன், திடுக்கிட்டு நான் எழுவதற்குள், தோளைத் தொட்டு அழுத்தி அமர வைத்தான் துழாய்முடியான்.

    அவனும் அருகே அமர்ந்ததை யாரிடம் சொன்னால் நம்புவர்?!!!!!!

     பிரமனின் யாகத்தில் வபை எனும் திரவியம் சேர்த்த போது அவதரித்தான் வரதன்.  அதனால் அவனது அதரத்தில் இன்றும் வபையின் பரிமளம் வீசுகிறது. வபையின் வாசனை, பெருந்தேவியின் தழுவலில் அவளின் திருமார்பக சந்தனத்தைத், தான் ஏற்றதால் வந்த பரிமளம், தனக்கு நிகர் எவருமில்லை என தன்னொப்பாரைத் தவிர்த்திடும் துளசிமாலையின் திவ்யசுகந்தம் என வேதக்கலவையின் பொருளானவன் இன்று வாசனைக் கலவியில் வந்தமர்ந்தான்.

     இமைக்க மறந்து இமையோர் தலைவனைக் கண்டேன்! எழுதவறியாத எம்பெருமானைக் கண்டேன்.  ஓவியத்தில் எழுதவொண்ணா உருவத்தைக் கண்டேன்.  ஆர்ப்பரிக்கும் உணர்ச்சிகள் உந்தித்தள்ள நிலைதடுமாறின என்னை, மென்மையாக ஆச்வாசம் செய்தான் ஆனைமலை நாயகன்.

     “முப்பது நாட்களுக்கு முன்பு நமது உரையாடலை நாடறியச் செய்தாயே! இன்று உனக்கு என்ன ஆயிற்று?  ஏன் இந்த வாட்டம்?”

     அனைத்துலகும் காக்கும் அருளாளன், அனைத்துக்கும் அதிபதியானவன், அடியேனை ஆறுதல்படுத்தக் கேட்கிறான் இது உண்மையா? அல்லது பிரமையா?

     “வரதா….. வரதா…. என் ப்ரபோ! தேவாதிராஜா! மாயம் செய்யேல் என்னை. உன்னைப் பெற்று அடியேன் எப்படி இழப்பேன் என்று தேம்பினேன்.

     “என்னது என்னைப் பிரிகிறாயா?  யார் சொன்னது? உன்னையும், என்னையும் பிரிக்க யாரால் முடியும்?” சற்றே குரலில் கடுமையுடன் வரதன்.

    “இல்லை வரதா! இன்னும் சற்று நேரத்தில் நீ குளத்தில் எழுந்தருளி விடுவாயே! அப்புறம் உனைக்காணும் பாக்கியம் எனக்குண்டா?” அந்த ஏக்கம் எனக்கில்லையா?” என்றேன்.

    நிவந்த நீண்முடியன் சற்றே குனிந்து எனது முகத்தை நிமிர்த்தி என் கண்களை ஊடுருவிப் பார்த்தான்.

     அம்புஜலோசனின் பார்வையின் கூர்மை தாளாமல் தலையை கவிழ்த்துக் கொண்டேன்.

     “இந்த உலகம்தான் பைத்தியக்காரத்தனமாக உளறுகிறது என்றால், உனக்கென்ன ஆயிற்று?” வரதன் குரலில் கடுமை…

    புரியாமல் பார்த்தேன்.

     “உன்னுள் மறைந்திருக்கும் நான், இக்குளத்தினுள் மறைந்தால், வாடுவாயோ?”

    “இதோ…. தூர்வாரி, பழுதுகளை நீக்கி பராமரித்து, தெளிந்த தீர்த்தத்துடன் உள்ள இக்குளத்தில் இருப்பது போன்றுதானே உன் மனதிலும் மூழ்கிட ஆசைகொண்டேன்…

     “கோபம், பொறாமை, ஆசை, கள்ளம், கபடம் என்று மனதில்தான் எத்தனை வகையான சேறுகள்!!  அதையெல்லாம் தூர்வாரி துடைத்தெறிந்து என்னை அனுபவிக்கத் தெரியாத நீ,  குளத்தினுள் நான் செல்ல கவலைப்படுகிறாயா? முட்டாள்….” என்று சீறினான் வரதன்.

     வ….ர….தா…. என நான் பேசத் தொடங்குமுன், நில்.. குறுக்கே பேசாதே! நாற்பது நாட்களுக்கு மேலாக மலையில் சென்று மூலவரையும், உற்சவரையும் சேவிக்க முடியவில்லையே! என்று ஏங்கியவன்தானே நீ!!…” – வரதன்.

     “ ஆமாம்..” – அடியேன்.

     அங்குள்ளவனும் நான்தானே! என்னை வெளியே வைத்தாலும், உள்ளே வைத்தாலும் உற்சவரின் உற்சவங்களால்தானே காஞ்சிக்கும் எனக்கும் பெருமை….” – வரதன்.

     தலையாட்டினேன் ஆமாம் என்று.

     “இப்போது எந்த உற்சவமாவது பழைய பொலிவுடன் பெருமையுடன் கம்பீரமாக நடந்ததா? சொல்… என்றான்.

     “ஆனால் வரதா! அத்திவரதரை தரிசிக்கத்தான் நாள்தோறும் பக்தர்கள் அலையலையாகப் படையெடுக்கின்றனரே!”

     “நான் அதையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.   இந்த மண் பக்தி மணம் கமழும் மண் என்பது மறுபடியும் நிரூபணம் ஆகியுள்ளது.  ஆனாலும் இந்த மக்களின் செயல்பாடு சற்று வருத்தமளிக்கிறது – வரதன்.

     வரதனே பேசட்டும் என மௌனம் காத்தேன். 

     “இப்போது ஓடோடி வருபவர்கள் இதே பக்தியினை இனியும் வெளிப்படுத்துவார்களா அத்திவரதர் ஊடகங்களுக்குச் செய்தியாகிவிட்டார். அத்திவரதர் உள்ளே போகலாமா?  கூடாதா?” என்றும் பட்டிமன்ற பொருளாகிவிட்டார்?  ஆதியுகத்து அயன் கண்ட அற்புத உற்சவங்களைத் தடுப்பதற்கு அவதரித்தவராகி விட்டார்“.

     எம்பெருமானின் இந்தப் பேச்சின் வேகத்தில் திடுக்கிட்ட சில பறவைகள்,  ராஜகோபுரத்தின் பொந்திலிருந்து படபடத்துப் பறந்தன.

     “இப்படியெல்லாம் ஊரார் என்னைப் பேசும்படி செய்துவிட்டனர் சிலர்.   நான் பத்திரமாக உள்ளே எழுந்தருள வேண்டும் என நீயும்தானே விரும்பினாய்?” வரதனின் கேள்வி.

     “நிச்சயமாக வரதா! அதுவும் உனது திருவுள்ளம்தானே! உனது தரிசனம் பக்தி வளர்த்தது நிதர்சனம்.  ஆனால் நடைமுறைக்கு ஒவ்வாத திட்டங்களை சிலர் செயல்படுத்த முனைந்தனர்.  அவ்விதம் நிகழ்வது பல பெரிய குழப்பங்களை உண்டாக்கும்.  ஆதலால் நன்கு தீர்மானித்து எல்லோரும் விரும்பும்படியான ஒரு நல்ல தீர்வை எடுக்க வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன்.  ஆ……னா….ல்….

    “ஆனால் என்ன?”… வரதன்.

     “எனது கருத்தில் முக்யமானதை விட்டுவிட்டு, அவரவர்கள் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் பேசவாரம்பித்து விட்டனர்.  இது வருத்தத்தினால் விளைந்த கருத்து என்பதை உணராமலேயே தங்களின் சுய காழ்ப்புணர்ச்சியை விமர்சனமெனும் பெயரில் வெளியிட்டனர்.”

    “இங்குள்ள மக்களும் இங்கு வரும் பக்தர்களும் படும்பாட்டைக் காணும்போது, எவருக்குமே இது புரியுமே!!  அதற்காக உன்னைப் பிரிய நாங்கள் இசைந்தோம் என்பது பொருளாகிவிடுமா நடைமுறையின் சில அசாத்யங்களை இவ்வுலகம் உணரவில்லையே!  ஏறத்தாழ ஒரு நாஸ்திகனின் நிலையில் அடியேனை விமர்சிக்கின்றனரே!” அழுகையுடன் அடியேன்….

    ஹா…… ஹ…… ஹா….. எனச் சிரித்தான் அருளாளன்.

    “இதற்குத்தான் வருத்தப்படுகிறாயா என் குமரா?!!” என்றான்.

     விழிகளின் ஈரத்திரைகளின் ஊடே புரியாமல் அவன் முகத்தைப் பார்த்தேன். புன்னகை மாறாமல் பேசினான் புண்யகோடீச்வரன்.

    “நல்லதொரு ஆசார்யன் மூலமாக நம் சம்ப்ரதாய அர்த்தங்களை அறிந்தவன் தானே நீ?” வரதனின் கேள்வி.

   “என்ன சொல்ல வருகிறான் எம்பிரான்?” எனப் புரியாமல் ..மா..ம் என மெதுவாகத் தலையசைத்தேன்.

   “கீதையில் நான் சொன்னதை உனது ஆசார்யார் விளக்கியிருப்பாரே!” நினைவுபடுத்திகிறேன் கேள்.

    “ அர்ஜுனா! இன்னமும் இந்த உலகம் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. மனிதபாவனையுடனே என்னைப் பார்ப்பதால் எனக்குரிய மதிப்பளிப்பதுமில்லை என்று சொன்னேனே…. என்னையும், எனது உபதேசங்களையும் புரிந்து கொள்ளாத இவ்வுலகம்,  உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாம்!!  இன்னமும் நான் நாலாயிரம் அவதாரம் எடுத்தாலும் இவர்கள் இப்படித்தான்….”

     சத்யவ்ரதன் சத்யமான உலகியல்பைப் பேசினான். 

     “ஆம் ப்ரபோ! எனது சுவாமி தேசிகனும் உன் விஷயமான ஸ்தோத்ரத்தில்,  நிலையில்லா மனமுடைய மாந்தர், நிலையான உன்னை, உன் உண்மையை உணரவில்லையே!” என ஏங்குகிறாரே!” – அடியேன்.

     “ம்ம்.. சரிதான். இதையெல்லாம் அறிந்துமா உனக்கு வருத்தம்! ராமனையும், கண்ணனையும் ஏன் ராமானுஜனையும் தேசிகனையுமே குறைகூறும் இவ்வுலகம், உன்னை மட்டும் ஏற்கும் என்று எதிர்பார்க்கிறாயா?”

     பதில் சொல்லத் தெரியாமல் மௌனமாகத் தலைகுனிந்தேன்.

     “ஸர்வஜ்ஞனாகிய (எல்லாம் அறிந்தவனாகிய) என்னாலேயே இவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  சாமான்யன் உன்னால் முடியுமா?”

    “அது சரி, நான் இன்னமும் எவ்வளவு நாட்கள் தரிசனம் தந்தால் எல்லோரும் விரும்புவார்கள்?” என்றான் வரதன்.

    “ஒருசிலர் நூற்றியெட்டு என்கின்றனர் வேறு சிலர் நிரந்தரமாகவே நீ வெளியே சேவையாக வேண்டுமென்கின்றனர்.  உன் திருவுள்ளம் என்ன வரதா?” – அடியேன்.

     மறுபடியும் ஹா…. ஹ….. ஹா…… என்றவன், என்னை என்றுமே அனுபவிக்க வேண்டுமெனும் ஆவலில் அவர்கள் பேசுகின்றனர்.  அதிலொன்றும் தவறில்லை. ஆனால் எனது இந்த அர்ச்சா மூர்த்தியும் அவதாரம்தானே?!” – வரதன்.

     “அதிலென்ன சந்தேகம் வரதா! ஆகமங்கள் உனக்கு ஐந்து நிலைகளை அவதாரங்களாக அறிவிக்கின்றன.” – அடியேன். 

    “அப்படியானால் ராம க்ருஷ்ண அவதாரங்களைப் போன்று, ஒரு காரண கார்யத்தில் அவ்வப்போது அவதரிக்கும்(தோன்றும்) நான், அது முடிந்தவுடன் அந்த அவதாரத்தை முடித்துக் கொள்கிறேனல்லவா!” – வரதன்.

    நான் மௌனமாகவே இருந்தேன்.

     “நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்திலிருந்து வெளியே வந்து அருள்பாலிப்பது ஒரு அவதாரம் போன்றுதானே! அது முடிந்தவுடன் மறுபடியும் மறைகிறேன்.  இதை உலகம் புரிந்து கொள்ளாமல் போகலாம். உனக்குமா புரியவில்லை?” – வரதன்.

    “ராமனும், கண்ணனும் தங்களது அவதாரத்தை முடித்துக் கொண்டு சென்றபோது, இவ்வுலகம் பட்டபாட்டை புராணங்களில் அறிகிறோமே வரதா!!! அதுபோன்றுதான் உன்னைப் பிரிய மனமின்றி தவிக்கிறோம் – எனது ஏக்கம்.

    மீண்டும் ஹா….. ஹா…..

    “ஊருக்கெல்லாம் உபந்யாசம் செய்யும் திறமை பெற்றவன் நீ – எனக்கும் நன்கு உபதேசிக்கிறாய்!” – வரதன்.

    “ஐயோ! ப்ரபோ! ப்ரபோ! அபசாரம்…..” பதறினேன்.

   “ஏனடா பதறுகிறாய்? நான் பழக்கி வைத்ததை, ஒரு கிளி போன்று என்னிடம் பேசுகிறாயே! நான் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் இது உனது ஆசார்யன் சொன்னதுதானே!.”

   “அடியேன்… தேசிகனல்லால் தெய்வமில்லை..”

    “ம்ம்…. ம்….” என வரதன் விழிகளைச் சுழற்றி உதடுகளைக் குவித்தது அதியத்புதமாக இருந்தது.

    அந்த அழகில் மயங்கி அப்படியே நின்றேன்.

    “ஏன் பேசவில்லை பிள்ளாய் உன் மொழி கேட்கத்தானே நான் வந்தேன்… வரதன். 

    “என்னுடை இன்னமுதே! வானவர்தம் ஈசனே! மெய்நின்று கேட்டருள். அடியேனின் விண்ணப்பம் ராமாவதாரத்தில், உன்னைப் பிரிய மனமின்றி நதிகளும், குளங்களும், மரங்களும், பறவைகளும், மீன்களும்கூட கதறியழுதன என்றில்லையா!”

     “கண்ணனாக மாயம் செய்த உன்னைக் காணாமல் உயிர் தரியேன் என உத்தவர் ஓலமிட்டு அழவில்லையா?  நாங்கள் தபோவலிமையற்றவர்தாம்…. ஆனால் உனது பிரிவு எங்களுக்கு இனிக்குமா இத்தனை நாட்களும் உன் பெருமை பேசிவிட்டு இனி வெறுமையாக எப்படி இருப்பது?”

    “நன்று நன்று..” என ஆனந்தமாகத் தலையசைத்தான் ஆனையின் துயர் தீர்த்தவன்.

     “ராமாவதாரம் போன்று என்னுடன் எல்லோரும் வருவதற்குத் தயாராகவுள்ளனரா? அல்லது க்ருஷ்ணாவதாரத்தில் கோபிகளைப் போன்று என் நினைவிலேயே இருப்பவர் எத்தனை பேர்?” வரதன் வினவினான்.

    “உண்மைதான்… அந்த அளவிற்குப் பக்குவப்பட்ட பிறவிகள் இல்லை நாங்கள்.  ஆனாலும் உனது பிரிவு பேரிழப்புதானே” – அடியேன்.

    “பிரிகிறேன், பிரிகிறேன் என்கிறாயே! நான் எங்கு செல்கிறேன் இதே குளத்தினுள்தானே!. மேலும் எனது ஏனைய நிலைகள் மூலவர், உற்சவர் என்றுமே உங்களுடன்கூடியது தானே… ராம, க்ருஷ்ண அவதாரம் போன்று ஒட்டுமொத்தமாக விடுத்துச் செல்லாமல், என்றுமே என்னை அனுபவிக்க அளித்த அர்ச்சையின் மேன்மைதனை எப்பொழுது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?”

    “அத்திவரதனாகிய நான், உனது அந்தர்யாமி. உன் உள்ளத்துள் உறைபவன்தானே… ஏதோ காரண காரியத்தால் இக்குளத்தினுள் அமிழ்ந்துள்ளேன் இது தேவரகசியம்!!!! தேவாதிதேவன் எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!! உள்ளே செல்லும் எனக்கு வெளியே வரத் தெரியாதா? நான் எந்த அரசாணைக்குக் காத்திருக்க வேண்டும்?

     “தர்மத்தை நிலைநிறுத்த எனது அவதாரம். அதைத்தான் எவ்வளவு பேர்கள் புரிந்து கொண்டு அதன்படி நடக்கின்றனர்?  இந்த நாற்பது நாட்கள் என்னைக் கொண்டாடுமவர்கள், தொன்றுதொட்ட பழக்கங்களான உற்சவங்கள் செவ்வனே நடைபெறவில்லை என்று உணர்ந்தனரா!”

    வரதனின் வார்த்தைகள் நடுவே குறுக்கிடுவது கூடாது என்று அமைதி காத்தேன்.

    சற்றே வேகம் தணிந்தவனாக என்னைப் பார்த்து கனிவான குரலில் மீண்டும் பேசினான்.

    “அதுசரி! என்னை நினைத்திருக்கும் நீ நித்யோத்சவரை மறந்து விட்டாயா? அவர்தானே என்றுமே உங்களுடன் கலந்திருப்பவர்!!”.

    திடீர் தாக்குதலாக வரதனின் கேள்வியில் நிலைகுலைந்து போனேன்.

    “என்ன! என் பெருமானை மறப்பதா அவனை சேவிக்க முடியவில்லையே எனும் ஏக்கத்தில்தானே ஓர் அறிக்கை சமர்ப்பித்தேன்.   ஆனால் அதன் கருத்தை ஆஸ்திகர்கள்கூட சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே!  இன்னமும் என்னை திட்டித் தீர்த்து வருகின்றனர் என் இயலாமையைக் கொட்டினேன்.

    ஆறுதலாகக் கரம் பிடித்து ஆச்வாசம் செய்தான் அரவிந்தலோசனன்.

    “நீ பெரியோர்கள் தாள் பணிந்து சம்ப்ரதாய பொருள் அறிந்தவன்தானே! இவர்கள் உன்பால் கொண்ட விரோதம் உனது பாபங்களைப் போக்குமென்பதை நீ அறியாயோ?”

    வாஞ்சையுடன் வரதன் விரல் பிணைத்தான் அந்தத் தீண்டுமின்பத்தில் திளைத்த அடியேன் திக்குமுக்காடிப் போனேன்.

   “வரதா! ஒரு பாசுரம் பாடட்டுமா?” என்றேன்.

    ஹா.. ஹா… எனச் சிரித்தவன், நான் வருவதற்கு முன்பு நம்மாழ்வார் பாசுரத்தைக் கொண்டு சந்திரனைக் கண்டாயே! அது போன்று மறுபடியும் பாசுரமா?” வினவினான் வரதன்.

   வெட்கத்தில் தலை கவிழ்ந்தேன்.   என் உள்ளத்துள் உறையும் இவனை அறியாது ரகசியமாக என் எண்ணங்களை வளர்த்தேனே!  இஃதென்ன முட்டாள்தனம்!”.

    என் மௌனம் கலைத்து ஆதிப்பிரான் பேசினான்.  “நானன்றி உன்னை உரிமையுடன் யார் சீண்டுவார்?  சரி.. சரி.. அந்த பாசுரத்தைச் சொல். உன் உபந்யாசத்தை நான் ரசிப்பேன் வரதன்.

         “விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை

           நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதனை”

                                                                                        (திருவாய்மொழி 175)

என்று முடிப்பதற்குள் முந்திக் கொண்ட வரதன்,  இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்றான்.

    “வரதா! பூர்வர்கள் காட்டிய விரிவுரை ஒருபுறம்…. இங்கு இப்போது எனது அனுபவம் மறுபுறம் என்றேன்.

    “அதைத்தான் சற்று விளக்கமாகக் கூறேன்..” என்றான் ஆழியான்.

     “என் விளக்கைஅதாவது, வரதா, எனக்கு ஜ்ஞானம் தந்து ஆட்கொண்ட விளக்கு நம் வரதன். கரிகிரிமேல் நின்றனைத்தும் காக்கும் கண்ணன்..“.

    “ம்… சரி… வரதன்.

    “என் விளக்கை விடுவேனோ! – என் வரதனை மறப்பேனா?”.

    “என் ஆவியை விடுவேனோ? – என் ஆவி பெருந்தேவி… இந்த ஆத்மாவுக்கு உயிரளித்து என்னைக் காக்கும் அன்னை.. அவளை விடுவேனா.. மறப்பேனா?..” அடியேன்.

    “அடடே… ம்… அப்புறம் மேலே சொல்…. வரதன்.

   நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதனை விடுவேனோ?” என அத்திவரதனைக் கைகாட்டினேன்… 

    “பேஷ்…. பேஷ்… என்றான். 

    “வரதா…. 

இவர்கள் நடுவே வந்து என்னை உய்யக் கொண்டாய்… 

என் வாழ்வின் நடுவே வந்து உய்யக் கொண்டாய்… 

குளத்தின் நடுவே வந்து உய்யக் கொண்டாய்… 

நாற்பது நாட்கள் நடுவே வந்து உய்யக் கொண்டாய்…

மேலே சொல்ல முடியாமல் தழுதழுத்த என் தலை கோதின தேவராஜன், உன் மனது எனக்குத் தெரியும் பிள்ளாய்..” என இதயம் வருடுகிற வார்த்தைகளை ஒலித்தான்.

     “வரதா! தரிசனம் காக்கவே இன்று தரிசனம் தந்தாய் நீ… ஆனால் தரிசு நிலமான இம்மனசில் உன் அனுபவம் இன்னமும் நிறையவில்லையே என ஏங்குகிறேன் என்று தேம்பினேன்.

   “அதை அனுபவிக்க ஆழ்வார்களே ஆசைப்பட்டனர்.  நீ எம்மாத்திரம் எனப் புன்னகைத்தான்…

   “பிள்ளாய்… உரையாடல்கள் போதும். உள்ளத்தில் வருத்தத்தை விடு.. உயர்வான உற்சவங்களும், உற்சாகமான உபயவேத கோஷ்டியும் காத்திருக்கிறது.  இனியென்ன கலக்கம்?” வரதன் விழி துடைத்தான்.

   உண்மைதான்.  மயர்வற (சந்தேகமற) என் மனத்தே மன்னினான் அத்திவரதன் அயர்வில் அமரர் ஆதிக் கொழுந்தாகச் சுடர்விட்டவனை, பாதாதிகேசம் தொழுதேன்.  எனது துயரங்கள் பறந்தோடின.

    நான் ஏன் கலங்க வேண்டும்? எனக்கென்ன குறை!! ஆள்கின்றான் ஆழியான்… ஆரால் குறை நமக்கு?… இதோ இக்குளமும் உண்டு.  இக்குளத்தில் நித்யகர்மானுஷ்டானம் செய்யும் பரமைகாந்திகளின் குலமும் உண்டு என்றுமே வரதன் எமக்கெதிரே சேவையாகிறான் என் பாட்டனாராம் ப்ரம்மதேவன் சேர்த்த அழியாத பெருஞ்செல்வம், அத்திமலையில் நிரந்தரமாகக் குவிந்துள்ளதே…. அள்ள அள்ளக் குறையாத செல்வமன்றோ!

    துயரறு சுடரடி தொழுதேன்.. வரதா…. வரதா…. என்றேன்.. இப்போது அவனது திருக்கையில் “மாசுச: – கவலைப்படாதே” எனும் எழுத்துக்கள் தெளிவாக மின்னியது.. திவ்யமான தேஜோமயமாகத் திருக்குளத்தினுள் இறங்கினான் அத்திகிரியான்.  சரயூவில் இறங்கிய ராமனைத் தழுவிய சரயூ போன்றும், கண்ணனின் காலடி வைப்பில் களித்த யமுனை போன்றும், அனந்தசரசின் புன்ணியதீர்த்தம் வரதனின் திருமேனியைத் தீண்டி மகிழ்ந்தது.  அனந்தனாம் நாகராஜன் அழகிய படுக்கையாகக் காத்திருந்தான்.  வரதனின் முழுதிருவுருவமும் நீருக்குள் மறைந்தது.  குளத்தின் தண்ணீர் போன்று என் நெஞ்சமும் தெளிந்தது.

    ஆம்… வரதன் அனந்தசரஸினுள் புகவில்லை.  இந்த அனந்தன் எனும் அடியேனின் உள்ளக் குளத்தினுள் அமிழ்ந்தான் – திருமாமகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட பேரருளாளனார்.  இருபத்திநான்கு படிகளிலும் நீர் நிறைந்தது.  இருபத்திநான்கு அதிர்வேட்டுக்கள் முழங்கின!!!

    விழிகளின் ஓரம் திரண்ட துளிகளைத் துடைத்துக் கொண்டேன்.  இது சோகத்தின் வடிவமல்ல… ஆனந்தத்தின் அலைகள்.  ஆகையால் இந்தக் கண்ணீரை வரதனும் விரும்புவான். 

    ராமனைப் பிரிகிறோமோ என்று குளத்து மீன்கள் வெந்தன அயோத்தியில்! வரதனைத்  தாங்கள் மீண்டும் பெற்றோமே என்று அனந்தசரஸ் மீன்கள் துள்ளிக் குதித்தன!! மீன்களாம் நித்யசூரிகளுக்கு இங்கேயும் வரதானுபவம்!! 

    பொழுது புலரும் பின்மாலைப் பொழுதாகியது.  இப்பொழுது பார்த்தபோது வானத்து சந்திரன் சுடர்விட்டுத்தான் விளங்கினான்.  எனது கலக்கம் நீங்கியது போன்று அவனது களங்கமும் நீங்கியது. கதிரவன் தனது கிரணங்களை புண்யகோடி விமானத்தின் மீது படரவைத்தான். 

    ஏறத்தாழ ஒரு மண்டலம் தவிர்ந்து வைதிகர்கள் தங்கள் நித்யகர்மானுஷ்டானத்திற்கு திருக்குளத்தில் நீராட வந்தனர்.  அடியேன் மெதுவாக திருக்குளத்தை வலம் வந்தேன்.  தூரத்தே உடல், திருச்சின்னம் சப்தம் கச்சியின் மதிள்களில் எதிரொலித்தது. 

    ஆஹா, இதைக் கேட்டு எவ்வளவு நாட்களாகி விட்டன. அமைதியான காலையில் ராமானுஜரின் சாலைக்கிணறு தீர்த்தம் வரதனுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.  அதற்காகத்தான் திருச்சின்னம் ஊதுகின்றனர். 

     சோதியனந்தனாக, கலியில் ஸ்ரீராமானுஜர் அன்றோ வரதனுக்கு திருவாராதனம் செய்கிறார்!  இனி தீர்த்தாமாடி மலைக்குச் சென்று, பெருமாளையும் பெருந்தேவியையும் சேவிக்கவேண்டும். 

     காஞ்சியின் வீதிகளில், பெண்கள் கோலமிடத் தொடங்விட்டனர். வேதபாராயணம் மாடவீதி ப்ரதக்ஷிணம் செய்கின்றனர்.  ஆனிரைகளும் அழகாகச் சாலைகளில் படர்கின்றன.  இனி வாசலில் எழுந்தருளப்போகும் வரதனை வரவேற்கக் காத்திருப்போம்!!

அன்புடன்,

ஏபிஎன்.

Athi Varadan Special – Varadan’s wish by Sri APN Swami, Art by Sri Keshav

Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 24|வகுளாபரணன் விருப்பம்|The wish of Vakulaabaranan|Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி 24 வகுளாபரணன் விருப்பம்

    திருமங்கையாழ்வாரின் தெய்வீகத்தையுணர்ந்த சோழ அரசன், இனியும் அவரைப் பணிய வைத்துத், தான் அதிகாரம் செலுத்துவது தகாது என உணர்ந்தான்.  பாகவதோத்தமராகிய பரகாலனின் பாடல்கள் பக்தி ரசம் ததும்பி இந்த பூமியை வாழ்வித்திட வேண்டுமென விரும்பினான்.

    “கலியனே! இனி இடையூரின்றி தங்களின் கைங்கர்யம் தொடரட்டும் என அவரைப் பணிந்து போற்றினான்.

    பந்தங்கள் விலகியும், அரசுரிமையிலிருந்து விடுவித்துக் கொண்டும், ஆலிநாடன் இப்போது வாலி மாவலமாம் பூமியில் திவ்யதேசங்களில் வலம் வந்தார் அருளாளன் திருவடிகளில் சிறிது காலம் இளைப்பாற விரும்பினார். நம்மாழ்வார் பாடிய வரதனின் துயரறு சுடரடி தொழுதெழுதார்.

    சிறிது காலம் சென்றதும் உள்ளத்தினுள் எழுந்த உந்துதலினால் ஆழ்வாரின் திவ்யமங்கள விக்ரகத்தை காஞ்சியில் எழுந்தருளப் பண்ண எண்ணினார். அதற்குரிய ஏற்பாடுகளை விரைந்து தொடங்கினார்.  பத்மாஸனத்தில் அமர்ந்து கொண்டு, இடது திருக்கையினை மடி மீது வைத்தும், வலது கரத்தில் உபதேச முத்ரையுடன், நம்மாழ்வாரின் விக்ரகத்தை வார்ப்பெடுக்க ஸ்தபதிகள் ஆவன செய்தனர்.  சுபமான முகூர்த்தத்தில் ஆழ்வாரின் வார்ப்பு திருமேனி உருவானது.

    பக்திப் பரவசத்துடன் ஆழ்வாரை சேவிக்க நினைத்த பரகாலனுக்குப் பேரதிர்ச்சி!!

   “ஐயோ! என்ன இது?”

    ஆழ்வாரின் விக்ரகத்தில் உபதேச முத்திரை மாறியுள்ளது ஆம்!  உபதேசம் செய்யும் கோலத்தில் இருந்த அவரின் வலது கை, உட்புறம் மடிந்து, தனது நெஞ்சத்தின் மீது படிந்திருந்தது.

   “உபதேசம் செய்யும் ஆழ்வாரின் கரம், தனது உள்ளத்தை நோக்கியுள்ளதே! நமக்கு உபதேசம் செய்யும் ஆழ்வார், தனது நெஞ்சத்தைக் காண்பிக்கிறாரே!”. கலியனுக்கு ஒன்றும் புரியவில்லை.

   “ஏதாவது அபசாரம் நேர்ந்ததா?  சில்ப சாஸ்த்ரங்களோ ஆகம விதிகளோ மீறப்பட்டனவா?”

   “ஆழ்வாரே! திருவடிகளில் தஞ்சமடைகிறேன். உமது நெஞ்சத்தின் கருத்தினை ஆளிட வேண்டும் எனத் தொழுதார் கலியன்.

    “என்னவாயிற்றோ தெரியவில்லை.. ஆழ்வாரின் திருவுள்ளமும் புரியவில்லை… என நினைத்தவராக அன்று முழுதும் உபவாசம் இருந்தார் மங்கைமன்னன்.  இரவுப்பொழுது முழுதும் ஆழ்வாரின் த்யானம்தான். வகுளாபரணா! சடகோபா! காரிமாறா!” என வாய் ஓயாமல் ஆழ்வாரின் திருநாமஜபம் செய்து கொண்டிருந்தார்.

    எப்போது உறங்கினார் என்பது தெரியாது.  உறக்கத்தில் உண்டானது ஒரு தெய்வீக உணர்வு வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபன், மானவேல் கலியனின் கனவில் தோன்றினார்.

    “மாண்பில் சிறந்த மங்கையர்கோனே! மனக்கலக்கம் எதற்கு?” மகிழ்மாறன் மந்தகாசப் புன்னகையுடன் வினவினான்.

   “பைந்தமிழ் பாசுரங்களைப் பாடிய எம் பரம! வேதம் தமிழ்செய்த வகுளாபரணா! இஃதென்ன விபரீதம்?  தேவரீர் திருமேனியை, நினைத்தபடி என்னால் வடிக்க முடியவில்லையே!” – கலியன்.

    “அருள்மாரி கலியனே! நீர் நினைத்தபடியா?  அல்லது நான் நினைத்தபடியா!” – ஆழ்வாரின் கேள்வி புரியாமல் திகைத்தார் திருமங்கைமன்னன்.

    “நீர் நினைத்தது உமக்கு உபதேசிக்கும்படியான கோலம்.  ஆனால் நாம் விரும்பியது…. துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே… என்ன இப்போது புரிகிறதா?” – மாறனின் மோகனப் புன்னகையில் தன்னை மறந்த கலியன், மெதுவாகத் தலையசைத்தார்.

   “பிறகென்ன! எம் விருப்பத்தின்படி இந்த விக்ரகத்தின் ப்ரதிஷ்டை நடைபெறட்டுமே!” என்ற காரிமாறன் கனவிலிருந்து மறைந்தார்.

   “ஆழ்வாரின் நான்கு ப்ரபந்தகளுக்கு நல்லதொரு வ்யாக்யானமாக நாம் ஆறு ப்ரபந்தங்களைப் பாடினோமே! ஆனால் ஆழ்வாரின் திருவுள்ளம் அறியாமல் போனோமே!” என திகைத்தார் திருமங்கைமன்னன்.

   ஆம்! திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, திருவந்தாதி எனும் நம்மாழ்வாரின் நான்கு ப்ரபந்தங்கள் ருக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களாகும். அதற்கு,  பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சிறியதிருமடல், பெரியதிருமடல், திருவெழுக்கூற்றிருக்கை எனும் திருமங்கையாழ்வாரின் ஆறு ப்ரபந்தங்களும் வ்யாக்யானம் என்பர் பெரியோர்.

உயர்வற உயர் நலம் உடையவன் யவனவன்

மயர்வற மதி நலம் அருளினன் யவனவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்

துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே!  

                                                       – திருவாய்மொழி (1-1-1), நம்மாழ்வார்

என்று தொடங்குகிறது திருவாய்மொழி.  அதன் கடைசி வரிகள் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே!” என ஆழ்வார் தனது நெஞ்சத்தை நோக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது. த ற்போது கலியனின் கனவில் ஆழ்வார் தோன்றி, தனக்கு விருப்பமானதைத் தெரிவித்தார். அதன்படி பார்த்தால் நம்மாழ்வார் திருவாய்மொழியின் முதல் நூறு பாடல்களை வரதன் விஷயமாகவே அருளியது தெள்ளென விளங்குகிறது.

    வரதனின் திருவடியன்றி வேறு புகலறியாத ஆழ்வார், தனது நெஞ்சத்தில் கைவைத்து, தனது உள்ளக் கருத்தை உலகோர் அறிய வேண்டுமென்று ஆசைப்பட்டார்.

   அதனால்தான் கலியன் வடித்த ஆழ்வாரின் சிற்பம், கைமாறிய கோலத்தில் காட்சி தந்தது.

    இவ்வுண்மையை நன்கு தெளிவாகப் புரிந்து கொண்ட ஆலிநாடன், உடனடியாக ஆழ்வாரின் தெய்வீகத் திருவுருவை நம்மாழ்வார் விரும்பிய நிலையிலேயே ப்ரதிஷ்டை செய்தார்.  அந்தத் திருவுருவமே இன்றும் நாம் சேவிக்கும் மகிழ்மாறனின் எழிலுருவம்.

ஆசார்யர்களும்‌  அருளாளனும்‌

    நாதமுனிகளுக்குப்‌ பின்பு ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய ஆசார்யரான ஆளவந்தார், ‌ தனக்குப்‌ பின்னர்‌ இந்த ஸத்ஸம்ப்ரதாயத்தைக்‌ காப்பாற்ற ராமாநுசனைத்‌ தந்தருள வேண்டும்‌ என்று வரதனிடம்‌ சரணாகதி செய்தார்‌. ஸ்வாமி ஸ்ரீராமாநுசரின்‌ ஆசிரியரான யாதவப்ரகாசர்‌ மூலமாக வந்த பல ஆபத்துக்களிலிருந்தும்‌ வரதன்‌ காப்பாற்றியதை, குரு பரம்பரைகள்‌ விரிவாக விளக்குகின்றன.  ராமாநுசரிடம்‌ வரதனுக்குத்‌ தாயின்‌ பரிவுண்டு என்பதை நாம்‌ பல சந்தர்ப்பங்களில்‌ காணலாம்.  ஸ்வாமி ஸ்ரீதேசிகன்‌ யதிராஜ ஸப்ததியிலும்‌ இச்சரித்ரங்களைக்‌, கல்லும்‌ கரையும்‌ வண்ணம் சாதித்துள்ளதை ரஸிகர்கள்‌ கட்டாயம்‌ அநுபவிக்க வேண்டும்‌.

கச்சதனில்‌ கண்கொடுக்கும்‌ பெருமாள்‌

    மஹாபாபியான சோழராஜாவினால்‌ கண்ணிழந்த கூரத்தாழ்வான்‌, தன்னாசார்யர்‌ ஸ்ரீபாஷ்யகாரர்‌ நியமனத்தால்‌ வரதனை வேண்டி திவ்யமான கண்பார்வை பெற்றார்‌ என்பது வரலாறு கச்சிதனில்‌ கண்கொடுக்கும்‌ பெருமாள்‌ என்று ஸ்ரீஸ்வாமியும்‌ இதனை சாதிக்கின்றார்.  திருக்கச்சிநம்பிகள்‌ மூலம்‌ ஆறுவார்த்தைகள்‌ அருளி ஸ்ரீவஷ்ணவ ஸித்தாந்தத்தை நன்கு நிலைநிறுத்தியவன்‌ வரதன்‌.

உய்யும்‌ ஆறு

  1. ஸ்ரீமானான நாமே பரதத்வம்‌.
  2. இத்தரிசனம்‌ (ஸம்ப்ரதாயம்‌) ஜீவ, பரமாத்ம பேதமே.
  3. ப்ரபத்தியே என்னையடையும்‌ உபாயம்‌. 
  4. அந்திம ஸ்ம்ருதி அவச்யமில்லை.
  5. தேஹாவசானத்தில்‌ (இச்சரீரத்தின்‌ முடிவில்) மோக்ஷம்‌.
  6. பெரியநம்பிகளை ஆச்ரயிப்பது.

இதனை ஸ்ரீமணவாளமாமுனிகள்,‌ தானருளிய ஸ்தோத்ரத்தில்‌ குறிப்பிடுகிறார் : 

ஸ்ரீகாஞ்சீ பூர்ணமிச்ரேண ப்ரீத்யா ஸர்வாபி பாஷிணே |

அதீத அர்ச்சா வ்யவஸ்தாய ஹஸ்த்யத்ரீசாய மங்களம்‌ || 

என்றுஸ்வாமி ஸ்ரீராமாநுசருக்குப்‌ பின்பு நடாதூரம்மாள்‌, சுதர்ஸன சூரி, அப்புள்ளார்‌ என்று பல மகான்கள்‌ வரதன்‌ திருவடியில்‌ அவரதரித்துள்ளார்கள்‌. அதில்‌ நம்‌ ஸ்ரீஸ்வாமி தேசிகன்,  வளர்த்ததனால்‌ பயன்பற்றேன்‌ வருகவென்று“,  வரதனால்‌ அபிமானிக்கப் பெற்ற கிளியாக,  வாரணவெற்பின் ‌மழைமுகில்போல்‌ நின்ற மாயவனையன்றி தேவுமற்றொன்றறியாதவராய்த்‌ திகழ்ந்தார்.. ஸ்வாமி ஸ்ரீதேசிகன்‌ திவ்யசூக்திகளின்றி நாம்‌ வரதனை அநுபவித்தால்‌ அது அவன்தன்‌ திருவுள்ளத்திற்கு உகப்பானதாகவிருக்காது. அனேக திவ்யப்ரபந்தங்களாலும்,  ஸ்தோத்ரங்களாலும்‌ தேசிகன், தேவாதிதேவனை உள்ளம்‌ உருகி அநுபவிக்கின்றார்.  எந்தத்‌ திவ்யதேசத்திற்குச்‌ சென்றாலும்‌ வரதன்‌ நினைவின்றி ஸ்வாமிக்கு வேறில்லை.  ஏன்…..  அத்திவ்யதேசங்களில்‌ ஸ்ரீஸ்வாமிக்கு விருப்பமில்லையென்றே கூறலாம்‌. இதனை அத்புதமானதாரு பாசுரத்தால்‌ வர்ணிப்பதைப்‌ பார்க்கலாம்…..

பத்திமுதலாமவற்றில்‌ பதியெனக்குக்‌ கூடாமல்‌

எத்திசையுமுழன்றோடி இளைத்துவிழும்‌ காகம்போல்‌

முத்திதரும்‌ நகரேழில்‌ முக்கியமாம்‌ கச்சிதன்னில்‌

அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம்‌ நான்‌ புகுந்தேனே.

                                                 – அடைக்கலப்பத்து (1), ஸ்ரீஸ்வாமி தேசிகன்

பகவத்‌ ராமாநுஜர்‌ ஸ்ரீரங்கத்தில்‌ நம்பெருமாள்‌ ஸன்னிதியில்‌ சரணாகதி செய்தாலும்‌, அங்கும்,‌ அர்த்திகல்பக, ஆபத்ஸக, ப்ரணதார்த்திஹர என்றே அநுஸந்தித்தார்‌.  அவரின்‌ மறு அவதாரமான நம்‌ ஸ்வாமி, வரதன்‌ திருவடியில்‌ நேரிடையாக சரணாகதி செய்து, இதுவே மோக்ஷமெனும்‌ பெரும் பயன்‌ பெறும் வழியென்று காட்டினார்.  இதையடியொற்றியே

வாழி சரணாகதியெனும்‌ சார்வுடன்‌ மற்றொன்றை

அரணாகக்‌ கொள்ளாதார்‌ அன்பு 

என்கிறார்‌ ஸ்வாமி.

    எத்தனையோ திவ்யதேசங்கள்‌ ஸஞ்சாரம்‌ செய்திருந்தும், தேவப்பெருமாள்‌ திருவவதரித்த வரலாற்றை மட்டும், புராணத்தை அடியொற்றி ஒரு தனி ப்ரபந்தமாக ஸ்ரீதேசிகன்‌ அருளியிருப்பதிலிருந்தே, அவருக்கு வரதனிடமுள்ள பேரன்பு புலனாகின்றது.  வரதனின்‌ திருமேனி வர்ணனம், திருவாபரணங்கள் அழகு, காஞ்சியின்‌ பெருமை, வையம்‌ போற்றும்‌ வைகாசி உற்சவத்தில்‌ வரதன்‌ வாகனப் புறப்பாடு என்று தேசிக ஸ்ரீசூக்திகள்,‌ தேவாதிராஜனின்‌ திவ்யாம்ருதத்தை நமக்கு வாரி வழங்குகின்றன.

    இன்னும்‌ எத்தனையோ அற்புதங்களை வரதன்‌ நிகழ்த்தியுள்ளான். இன்றைக்கும்‌ இக்கலியில், தன்‌ பக்தர்களுக்கு அபீஷ்டங்களை வாரி வழங்குபவனாக, ஸ்ரீஸ்வாமி சாதித்தபடி,  வாரண வெற்பின்‌ மழை முகிலாகக், கேட்டதைக்‌ காட்டிலும்‌ அதிகமாகத்‌ தருகிறான்.

மாம்‌ மதீயம் ச நிகிலம்‌ சேதனா சேதனாத்மகம்‌ |

ஸ்வ கைங்கர்யோபகரணம்‌ வரத ஸ்வீகுரு ஸ்வயம்‌ ||

                                                                   – ந்யாச தசகம் (7), ஸ்ரீ வேதாந்த தேசிகர்

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

******************************** முற்றும்***********************************

                       

                                Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

Part 24 – The wish of Vakulaabaranan

    Seeing the greatness of Thirumangai Azhwar, the king realized that he made a mistake and should not try to rule over him anymore. He also wished that the Bhakti-filled divine songs of Kaliyan should grace the earth and make it a better place for people to live. 

    “O Kailyan! May your service continue henceforth without any interruption, “ said the king and bowed before him. 

    Without the shackles of relationships and kingdom, Kailyan moved freely around Bharatham and visited every divyadesam where he sang the praise of the presiding deity of that place. He wished to take some rest at the lotus feet of Varadan and followed the verse of Nammazhwar – “Thuyar aru sudaradi thozhuthu ezhu en manane.”

    Soon, Kaliyan wished to consecrate the idol of Nammazhwar in Kanchi and he began preparing for the same. He instructed sculptors to cast the Nammazhwar idol in a padmasana pose with his left-hand on his thighs and right-hand displaying the upadesa mudra. When the idol was ready, Parakalan (Kaliyan) went to pray to Nammazhwar and he was shocked to see that the upadesa mudra was in the wrong hands! Instead of the right-hand, the upadesa mudra was in the left-hand while the right-hand was folded and kept near his heart. 

   Kaliyan was confused because the hand that does upadesam is pointing to the heart. Why is Azhwar pointing his hand to his heart, wondered Kaliyan.  ‘Did something wrong happen? Was any sastram related to sculpture or agamas violated?; thought Kaliyan. 

    Feeling  bad and confused, Mangai Mannan fasted the entire day and was meditating on Azhwar all through the day and night. He kept chanting Azhwar’s names, “Vakulaabarana! Sadagopa! Kaarimara!”

    Saying these names, Azhwar had dozed off without his knowledge and in his dreams, he experienced a unique feeling as Sadagopan, the author of Tamil vedas, came in Kaliyan’s dreams. 

   “O MangayarkOne! why are you confused?” asked Nammazhwar with a smile. 

   “O Vakulaabarana!  The One who sang a thousand verses!  The writer of Dravida Vedam! I’m confused because I’m unable to sculpt your body correctly.” – Kaliyan.

   “O Kaliyan! What is correct?  The image of myself according to what’s in your mind or mine?”  Unable to understand this question, Kaliyan stood bewildered.

   Sadagopan went on. “You wanted an idol where I give upadesam to you. But I wanted an idol that depicts the verse – ‘Thuyar aru sudaradi thozhuthu ezhu en manane’. Do you understand now?”  Kaliyan gentle nodded his head and the whole episode dawned on him now. 

   “Let this consecration happen according to my wish then!” said Nammazhwar and disappeared from Kaliyan’s dream.

   Kaliyan felt bad because he did not understand what was in Nammazhwar’s mind despite singing six prabandhams for Nammazhwar’s four works. Yes1 Nammazhwar wrote four works – Thiruviruttam, Thiruvaasiriyam, Thiruvaaymozhi, and Thiruvandaadhi that are the tamil versions of Rig, Yajur, Sama, and Atharvana vedas respectively. Kaliyan wrote six works explaining the same and they are Periya thirumozhi, Thirukurunthaandagam, Thirunedunthaandagam, Siriya Thirumadal, Periya Thirumadal, and Thiruvezhukkutrirukkai. 

The first verse of Thiruvaaymozhi goes like this,

   “Uyarvara uyar nalam udaiyavan evan avan

    Mayarvara madhi nalamarulinan evan avan

   Ayarvaru amarargal adhipadhi evan avan

    Thuyar aru sudaradi thozhuthu ezhu en manane

  •                                                                      Thiruvaaymozhi (1-1-1)

    The last lines of this verse seem like Azhwar is pointing to his own heart and saying to it. When you put together this line, as well as, the words told by Nammazhwar to Kaliyan in his dream, it is clear that Nammazhwar’s first 100 pasurams are about Varadan. 

   Azhwar knew that there is no other refuge except Varadan’s feet and this is why he kept his right-hand in his heart to tell the world what he meant in the first 100 pasurams. This is also why Kaliyan’s idol had upadesa mudra in the left-hand.

    After understanding this, Kaliyan had no more confusion and he immediately consecrated the idol according to Nammazhwar’s wish. This is the same idol that continues to bless us in Kanchi even today.

Acharyas and Arulaalan

    Alavandhar, who followed in the footsteps of his grandfather Nathamunigal, surrender at the feet of Varadan and asked Him to appoint Ramanuja as the next acharya of this great Sathsampradayam. 

    Our guru paramparai clearly describes the way Varadan protected Ramanuja from the many troubles that came through his guru, Yadavaprakashar.  From many incidents, we can also infer that Varadan had a motherly affection for Ramanujar.   Swami Vedanta Desikan describes all these incident in his work called Yathiraja Saptathi. All of you should read this work to truly experience the way swami vedanta Desikan has described these incidents.

The Lord who Grants Eyes

    Koorathazhwan lost his eyesight due to the atrocities of the then Chola king. Later, under the instructions of his acharya Ramanuja, he got a divine sight of his acharya, Perumal and Thayar.  This is why Varadan is known to grant eyesight for all those who worship Him.

Exalted six Principles

    Varadan explained the six principles of Vishishtadvaitam to Ramanuja and thorugh him to the world.  These words were said by Varadan to Thirukachchinambigal who in turn, passed it on to Ramanujar. The six principles are:

  • Sriman Narayana is the Para thathvam
  • This sampradayam differentiates between Jeevatma and Paramatma.
  • Prapatti is the only way to reach Me
  • There is no need to think of Me in your last breath (Anthima smrithi)
  • Moksham is guaranteed at the end of this birth
  • Take Periya Nambi as your Acharya.

These words have been explained by Manavala Maamunigal in this stotram.

   ShriKanchi poornamishrEna preethya sarvaapi bhaashinE |

   Atheetha archaya vyavasthaya hasthyathreeshaya mangalam ||

After Ramanujar, many great Acharyas such as Nadadur Ammal, Sudarasana suri and Appullar were born at the feet of Varadan.  Out of them, Swami Vedanta Desikan shone as an exemplary parrot who knew none other than Varadan.  This is why we can never experience Varadan without reading and understanding the works of Swami desikan because in all his works, Swami Desikan portrays Varadan and his divine qualities in the most lucide and realistic way possible. 

    Though Swami Desikan traveled to many places, his thoughts were only about Varadan. Why? We can even say that it’s because Swami Desikan had no interest to go elsewhere other than Kanchi, but was forced to, due to circumstances. This mindset of Desikan is best explained in this pasuram from Adaikala pathu.

    Pathi mudhalaam mavathil , pathi yenakku koodamal,

    Yethisayum uzhandru odi ilaithu vizhum kakam pol,

    Muthi tharum nagar ezhil mukkiyamaam kachi thannil,

    Athigiri arul aalarkku , adaikaalam naan pugundhene.

  •                                                                                        Adaikala pathu (1)

    Though Ramanujar did Saranagathi to namperumal in Srirangam, he said Arthikalpaka, Aapathsaka, and Pranathaarthihara. Swami Desikan, who is an incarnation of Ramanuja, did saranagathi directly at the feet of Varadan and showed to the world that this is the path for moksham. This is evident in this sloka by Swami Desikan.

   Vaazhi saranagathi ennum saar vudan matrondrai aranaaga kollathaar anbu.

   Though Swami Desikan traveled to many divya desams, he has written many granthas exclusively on Varadan and this goes to show the special love and affection he had for Varadan. He describes the beauty of Varadan’s body, the opulence of His jewels, the beauty of Kanchi, the splendor of Vaikasi Visakam festival and more through this many works.

   This is not the complete list of miracles done by Varadan. There are so much more. 

   Even today, in this Kaliyugam, Varadan continues to bestow unlimited boons to His devotees.  As Swami Desikan rightly said, He is the cool shade that can protect us from blistering heat and can give us all that we want and more.

    Maam matheeyam cha nikilam chEtana chEtanaathmakam |

    Sva kainkaryOpakaranam varada sveeguru svayam ||

  •                                                Nyasa Dasakam (7) written by Swami Vedanta Desikan

******************************** THE END***********************************

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5