Sri #APNSwami #Writes #Slokam | Ramayanam Bala Kandam | Vikhari Rama Navami | 2-Apr-2019

Slokam by Sri APN Swami on Ramayanam Bala Kandam | Rama Navami

பால காண்டம் சுலோகம் : இயற்றிவர்: ஸ்ரீ ஏபின் ஸ்வாமி
அமரை: வந்த்யமாநேச மஹதாவிர்பவேந ச |
ந்ருபாத்மஜாவதாரை: ச விச்வாமித்ரேண தீமதா ||
தாடகாநிதநே சைவ யஜ்ஞஸம்ரக்ஷணேபிச |
அஹல்யா சாப நிர்மோக்ஷே தநுர்பங்கே ச மைதிலே ||
ஸீதா விவாஹ ஸந்தர்பே பார்கவஸ்ய தபோஜயே |
ஸுஸ்பஷ்டம் ராகவ: ஸ்ரீமந் வேதவேத்ய: ஜகத்பதி: ||

தேவர்கள் வந்து சரணாகதி செய்ததினாலேயும், பெருமாள் பாயசத்தினால் ஆவிர்பாவம் செய்ததினாலேயும், ந்ருபாத்மஜா அதாவது பிராட்டியின் அவதாரத்தினாலேயும், பெருமாளின் அவதாரத்தினாலேயும், விஸ்வாமித்ரார் “அஹம் வேதி மகாத்மா” என்று சொன்னதினாலேயும், தாடகை கொன்று யாக ஸம்ரக்ஷணம் செய்ததினாலேயும், அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்தினாலேயும், சிவனின் தனுர் பங்கம் செய்ததினாலேயும், சீதையை விவாஹம் செய்ததினாலேயும், மேலும் பரசுராமரின் தபோ வலிமையை ஜயித்ததினாலேயும் தெளிவாக (ஸ்பஷ்டமாக) தெரிவது என்னவென்றால் ராகவானான ராமனே வேத வேத்யனான பரமாத்மா என்று தெரிகிறது.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.