Sri #APNSwami #Writes #Trending | சின்னதம்பி கும்கியா? | Save Chinnathambi

Note: Scroll down to read the article in Tamil and in English.

                   #சின்னதம்பி கும்கியா?

     அதுவொரு அழகான காடு.   அதற்கு பத்மவனம் என்பது பெயர்.   நல் பூந்தோட்டங்கள் நிறைந்தும், சுவையான தண்ணீர் வசதிகளுடனும் கூடிய அந்தக் காட்டில், கூட்டமாக பல யானைகள் வசித்து வந்தன.   செழுமையான கரும்புகள், இளம் மூங்கில் குருத்துக்கள் என தங்களின் விருப்பமான உணவுகளை உண்டு களித்திருந்தன.   அந்தக் காட்டில் அவைகளை கட்டுப்படுத்துபவர்களே இல்லை.   ஆனந்தமான ஆகாரத்துடன், ஆரோக்யமான சூழலில்,  அமைதியான வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருந்த அவைகளுக்கு, சமீபகாலமாக பல சோதனைகள் உண்டாயின.

    மக்கள் தொகை பெருக்கத்தைக் காரணம் காட்டி காடுகளை அழிக்கத் தொடங்கிவிட்டனர்.  அரசாங்கமும் இயற்கையின் இந்தப் பேரழிவைக் கண்டு தடுக்க முயல்வதாகக் காணோம்.   இதைத் தேடிச் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் ஆக்ரமிக்கப்பட்டன.   உணவும், குடிநீரும் இல்லாமல் யானைகள் பெரும் துயரத்தில் தள்ளப்பட்டன.   கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை எழில் கொஞ்சும் காட்டின் பரப்பளவு சுருங்க ஆரம்பித்தது.   நீர் ஆதாரத்திற்கான வழிகள் அடைபட்டன.   இவற்றினிடையே மீண்டுமொரு பெரும் விபரீதம் விளைந்தது.

     ஒருநாள் நகரத்தைச் சேர்ந்த சில மனிதர்கள் பெரும் கயிறு, மிகப்பெரிய யந்திரங்கள், கோடரி, வில், கடப்பாறை முதலிய ஆயுதங்களுடன் காட்டிற்கு வந்தனர்.   யானைக் கூட்டம் பயந்தது. தங்களுக்கு நேர உள்ள பெரும் ஆபத்தினை உணர்ந்தன யானைகள்.

     சில வயது முதிர்ந்த யானைகள் உடனடியாக ஒரு கூட்டத்தை கூட்டின.   எம் இன மக்களே! இஃதொரு இன மான எழுச்சிப் போராட்டம்! நம் வாழ்வாதாரத்தை அழித்த கயவர் கூட்டம் இப்போது மொத்தமாக நம் இனத்தையே அழிக்க வந்துள்ளனர்.   ஆண்டாண்டு காலமாக இவர்களின் அடக்குமுறையில் நாம் ஒடுக்கப்பட்டு வந்துள்ளோம்.   இதோ! பெரும் கயிறுகள், நெருப்பு, யந்த்ரம், வாள், வேல் என அனைத்தையும் கொண்டு நம்மை அடக்க முயல்கின்றனர்.   வீரம் விளைந்த மண்ணில் பிறந்த நாம் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம்.   ஆனால் நம்பிக்கை த்ரோகத்தைத்தான் தாங்க முடியாது.”

    இவ்விதம் துதிக்கையை உயரத் தூக்கி வீர முழக்கமிட்ட யானைகள், மேலும் கூறின:  இங்கே பாருங்கள்! நம்மைப் பிடிக்க நம் இனத்தவர்களே உதவி செய்கின்றனர்! பெரும் பலசாலிகளாக இருந்தும், மக்களால் பிடிக்கப்பட்டு, பழக்கப்பட்டு, அவர்களின் கட்டளைப்படி நடக்கும் இந்த பழகிய (கும்கி) யானைகள்தான் ஆபத்து மிகுந்தவை.   இவைகள், நம்மைப் பிடிக்கும் வழிமுறைகளை மனிதருக்குக் காண்பித்துக் கொடுக்கின்றன.   இந்தப் பழகிய (கும்கி) யானைகளின் துணையில்லையென்றால் மனிதர்களால் நம்மை நெருங்கவே முடியாது.   இந்த உலகில் பங்காளிகள்தான் பெரும் பகையாளிகள் என்று வெகு அழகாக உபதேசித்தன.

     அதனால்தான் பங்காளிகளை (உறவுகளை) நம்பலாகாது.   “ஏ விபீஷணா!! நீயும் அதுபோன்றவன்தான்.   என்னைப் பிடிப்பதற்காக ராமனுக்கு உதவி செய்கிறாய் என்று ராவணன் விபீஷணனைப் பார்த்து வசை பாடினான்.   இந்த அழகான கும்கி யானை கதையைச் சொன்னவன் இலங்கேச்வரனாகிய ராவணன் (யுத்த காண்டம் – 16ம் ஸர்கம்).   ராவணனுடைய இரண்டு தம்பிகளில் பெரிய தம்பி கும்பகர்ணன்;   சின்ன தம்பி விபீஷணன்.   தன் சின்ன தம்பியை,  ராமன் பழக்கிய கும்கி யானையாக ராவணன் வர்ணித்தான். இதனால் மனம் நொந்த சின்ன தம்பி விபீஷணன், ராமனிடம் அடைக்கலமானான்.   ராமனும் கடற்கரையில் Save சின்னதம்பி  #SaveChinnathambhi விபீஷணனைக் காப்பாற்றுவேன் என்றான்.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

Save Chinnathambi

This is an English translation of the article சின்னதம்பி கும்கியா? written by Sri APN Swami in Tamil. The translation was done by his sishyas. Click here to read the original Tamil article.

It was a beautiful forest called Padmavanam with lots of vegetation and copious water sources. A group of elephants lived there. They spent their time eating their favorite foods such as juicy sugarcane and tender bamboo shoots, as there was no one to control them. So, these elephants were living a peaceful life in a good environment.

But in the recent past, they had to face some difficulties.

People started destroying forests to make way for human habitation. Even the government did not seem to stop this destruction.

All the paths of the elephant were confiscated by humans, and this made them suffer from lack of food and water. Little by little, the acreage of forests began to shrink. Water canals and the overall flow was also restricted. In the midst of all this, the elephants faced yet another huge blow.

One day, a group of men came to the forest. They were carrying axes, crowbar and other weapons. They even brought large machines with them. Elephants understood what was coming and they shivered in fright.

The older elephants in the group called for a quick meeting. “My dear elephants. This is a fight for our survival. Earlier, men cleared our homes and now, they have come to wipe us off once for all. For many generations, we have been curbed by their supremacy. Now, they have come with machines and weapons to control us. As residents of this Mother Earth, we can’t take this atrocity, especially this violation of trust.”

Hearing this, all elephants lifted their trunk and trumpeted loudly. A few wise elephants said, “See our own species is being used to control us. The biggest danger is from elephants that have been captured and trained (Kumkis) to control us. These Kumkis(trained elephants) are showing humans how to fight and win over us. Without the help of these Kumkis, humans cannot even come near us. In this world, our relatives are our biggest enemies.”

This is why we should never trust our relatives completely. “Hey Vibishana! You’re also like this Kumki because you’re helping Rama to capture me”, said Ravana.

    The person who said this story of Kumki elephant is none other than the Lord of Lanka, Ravana (Yuddha Kandam – 16th sargam).

Ravana had two brothers – the elder one is Kumbakarna and the younger one is Vibhishana. Ravana described Vibishana as Rama’s trained Kumki elephant. Hearing this, the dejected Vibishana left Ravana and surrendered to Rama.

In turn, Rama also took an oath to “Save this younger brother (chinnathambi).” –  #SaveChinnathambhi

–Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

#SaveChinnathambhi

Sri .APN Swami

Sri #APNSwami #Writes #Trending |களவு போன கோவிந்தன் கிரீடம் | The Stolen Crown of Govindan

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

                   களவு போன கோவிந்தன் கிரீடம்

     வைகுந்தத்தில் ஒரே களேபரம்!!! நித்யசூரிகள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்! எதையோ தேடிக்கொண்டிருக்கின்றனர்!! ஸ்ரீதேவி, பூமிதேவிகள் ஆதிசேஷனாகிய படுக்கையை இப்படியும், அப்படியுமாகப் புரட்டிப்போட்டு உதறிக் கொண்டிருக்கின்றனர்.   வருடக்கணக்கில் தேங்கியிருந்த தும்புகள், தூசிகள் அதனால் பறந்து, ஸத்வமயமான வைகுண்டம் ரஜோ(தூசி) மயமானது.

     வைகுண்டப் பணியாளர்களை வரிசையாக நிற்கவைத்து விஷ்வக்சேனர் விசாரித்துக் கொண்டிருக்கிறார்.   தன் கையிலிருந்த திருப்பிரம்பை அசைத்து, அசைத்து, கண்களை உருட்டி அவர் விசாரணை செய்கிறார்.

    த்வாரபாலகர்கள், சாமர கைங்கர்யம் புரிபவர் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. சந்தேகப்படும் நபர்கள் எவராவது வந்தனரா?!   இன்று வைகுண்டத்திற்கு வந்தவர்களின் வருகைக் குறிப்பேடு சரிபார்க்கப்பட்டதா?! ஆதிசேஷனின் ஆயிரம் கண்களும் நடந்த சம்பவத்தை கண்காணிக்கவில்லையா?!

    “ஒன்றிலும் பொறுப்பில்லை!! எப்போது பார்த்தாலும் தூங்க வேண்டியது!” என்று அவ்வப்போது பிராட்டி பெருமாளைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டேயிருந்தாள்.   பெருமாளோ, பாவமாக(!) ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்.

    இவ்வளவு பரபரப்பிற்குக் காரணம், இன்று நம் பெருமாளின் கிரீடம் காணாமல் போய்விட்டது. பாதுகாப்பு நிறைந்த வைகுண்டத்திலேயே வைரகிரீடம் காணாமல் போனால் மற்ற தெய்வங்களின் நிலை என்ன ஆவது? காணாமல் போன கோவிந்தனின் கிரீடத்தைத் தேடித்தான் இத்தனை களேபரமும்.!!

    “பக்தர்கள் மட்டுமே உள்ளே வரும் வைகுண்டத்தில், கிரீடம் களவு போக வாய்ப்பேயில்லையே?!”

    “பெருமாள் தூங்கும்போது ஆதிசேஷனின் உடல் மடிப்பில் எங்காவது இடுக்குகளில் விழுந்திருக்குமோ!” எனத் தேடுவதற்காகத்தான் ஆதிசேஷனை பிரித்து உதறினார் லக்ஷ்மியும், பூமியும்.

    தனது பெருத்த உடலை முக்கி, முனகி அசைத்து அசைத்து நெகிழ்த்தினார் ஆதிசேஷன்.

    இதுதான் சமயமென்று கருடனும் தனது கூரிய அலகினால் அனந்தனை அப்படியும் இப்படியும் புரட்டினார்.

    ம்ஹூம்….. எங்கு தேடியும் காணவில்லை.

    நடுநடுவே பிராட்டி பெருமாளுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.

    ஓவியத்தில் எழுதவொண்ணா உருவத்தன் கோவிந்தன், இப்போது சோகத்தில் ஆழ்ந்திருந்தான்.

    திடீரென்று கருடனுக்கு பொறி தட்டியது. இன்று மஹரிஷிகளைத் தவிர வேறு யார் இங்கு வந்தனர்?” என யோசித்தவன், ஆஹா! கரெக்ட், கரெக்ட்… அவனேதான்…. அவனேதான்…..” என்று கூவினான்.

    “பாற்கடலில் நழுவி உள்ளே விழுந்திருக்குமோ?” எனக் கருதி உள்ளே மூழ்கிய சில சூரிகள் கருடத்வனி கேட்டு அலைகளின் மேலே வந்தனர்.

எல்லோரும் கருடன் சொல்வதையே கவனித்தனர்.

    “தாயே! மஹாலட்சுமி! இன்று அசுர குல வேந்தன் விரோசனன் வந்தானல்லவா!! அவன் தான் கிரீடத்தை அபகரித்திருக்க வேண்டும் என்றான் சுபர்ணன்.

    “வைனதேயா! அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதே! விரோசனன் பக்தன். ப்ரஹ்லாத மஹாராஜா வழியில் வந்தவன்.   அவன் களவு கொண்டிருப்பதாகச் சொல்வது பாகவத அபசாரம் – மஹாலட்சுமி எச்சரித்தாள்.

    “தாயே! இந்தப் போலி பாகவதனைக் கண்டு எனக்கொன்றும் பயமில்லை. நிச்சயம் சொல்கிறேன்; விரோசனன்தான் பெருமாளின் கிரீடத்தை கொள்ளையடித்திருப்பான் கருடன்.

    “ஆமாம்.. ஆமாம்…. கருடன் சொல்வது சரியாகத்தான் உள்ளது என ஏனைய சூரிகளும் தெரிவித்தனர்.

    உடனடியாக விரோசனனைத் தேடி பாதாள லோகத்திற்கு விரைந்தான் கருடன்.   அவன் எதிர்பார்த்தபடியே, விரோசனன் கோவிந்தனின் கிரீடத்தை கவர்ந்து வந்திருந்தான்.

    அவனை வீழ்த்தி பெருமாளின் கிரீடத்தை கருடன் கொண்டுவரும் வழியில்,  ப்ருந்தாவனத்தில் கண்ணனைக் கண்டான்.   இந்த கோவிந்தனுக்குக் கிரீடத்தை அர்ப்பிக்கலாமே என எண்ணி கண்ணனுக்கு அதை அணிவித்தான்.

    கண்ணன் அந்த வைர கிரீடத்தைத் தனது ஆராதனப் பெருமாளான ராமப்ரியருக்கு அணிவித்தான். அதுவே இன்றளவும் வைரமுடியாக பொலிகின்றது.

வைகுண்டத்தில் களவுபோன கோவிந்தனின் கிரீடமே வைரமுடியாகும்.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

The Stolen Crown of Govindan

It was complete chaos in SriVaikuntam, as Nithyasuris were running here and there looking for something. Sridevi and Bhudevi were rummaging through the bed of Adiseshan. The dirt and dust accumulated over many years flew about and converted the Saatvik SriVaikumtam into a Rajas (dusty) one.

Vishwaksenar, with a stick in his hand, was interrogating all the workers of SriVaikuntam, as they stood in line and answered his questions.

Vishwaksenar also questioned the door-keepers and those who fan Him to check if there were any intruders. The list of people who came to SriVaikuntam was checked again. How come Adiseshan, who has 1000 eyes, did not see this?

“No responsibility at all. Your only job is to sleep all the time”, said Piratti looking at Perumal. She kept murmuring something looking at Him. Perumal, on the other hand, was seated in a corner with an innocent look.

What is the reason for so much agitation?

Our Perumal’s crown is missing. If a diamond-studded crown gets lost in the most secure place (SriVaikuntam), imagine the plight of other Perumals? Yes, this agitation is due to the loss of Govindan’s crown.

“Only devotees can enter SriVaikuntam. In that case, how can His crown get stolen? Maybe the crown could have slipped in the folds of Adiseshan”, thought Lakshmi and Bhoomi. This is why they rummaged through him earlier.

Adisheshan twisted and twirled his large body to help Lakshmi and Bhoomi in their search. Using this opportunity, garudan also tossed and turned Ananthan with his sharp beak. Between all this, Piratti was scolding Perumal.

Hmmmm…..but the crown could not be found even after such an intense search!

Suddently, a flash idea came to Garudan. He started thinking. “Who else came here today except Maharishis? Yes..yes..it’s him…it’s him…”, screamed Garudan.

Some devotees thought that the crown could have fallen in Paarkadal, so they had gone deep down in search of it. Hearing Garudan’s voice, they also came up.

Everyone watched Garudan with rapt attention.

“O mother! Mahalakshmi! The asura, Virochanan, came here today right? He should have stolen the crown”, he said.

“Vainatheya! Don’t drop words unnecessarily. He is a devotee, who came in the line of King Prahalad. It is Bhaagavatha apachaaram to say that he stole the crown”, said Mahalakshmi.

“Mother! I’m not scared of this pseudo devotee. I know for sure that Virochanan has stolen the crown.” – Garudan.

“Yes, what Garudan says seems to be true”, chimed other Nithyasuris.

Immediately, Garudan went to Paathalalokam in search of Virochanan.

As Garudan was bringing back the crown after defeating Virochanan, he saw Kannan in Brindavanam. “Let me give this crown to Kannan”, thought Garudan and gave it to Him.

In turn, Kannan put this crown on His presiding diety, Ramapriyan. This is what still continues to dazzle as Vairamudi.

The crown that got lost in Vaikuntam is Vairamudi.

-Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

Sri #APNSwami #Writes #Trending | ஜாதிக்கலப்பு

                              #ஜாதிக்கலப்பு

     காலையிலிருந்தே ஆகாயத்துக்கும் பூமிக்குமாக எகிறி குதித்துக் கொண்டிருந்தார் ஆத்மநாத ஐயர்.   திருநெல்வேலிகாரர் நல்ல ஆசாரமானவர். தினந்தோறும் காலையில் ஸந்த்யாவந்தனம் தொடங்கி, பூஜைகள் எதையும் விடாமல் செய்து வருபவர்.  ஆபிசிலும் discipline  உடையவர். மொத்தத்தில் வியட்நாம் வீடு சிவாஜியை imagine செய்து கொண்டால் நமது ஆத்மநாத ஐயர் தான்.

“I am going to write a letter to the Government…” அந்த காலத்து British Englishஐ       அட்சரம் பிசகாமல் அதே Accentடோட அழுத்திச் சொன்னார்.

     “என்ன கவர்மெண்ட்?…… முட்டாள்கள், மடையர்கள்? ப்ளாஸ்டிக்கை ஒழிச்சா மட்டும் போதுமா!! இத ஒழிக்க வேணாமா? என்ன அயோக்யத்தனம்?!! பொறுக்க முடியல! Intolerable!!”

    இப்போ மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி தமிழயும், இங்க்லீஷையும் மாத்தி மாத்தி சொன்னார்.

ஜாதி கலப்படம், ஜாதி கலப்படம்.  I am going to write to the authorities…

    இந்த ப்ராம்மணன் எடுத்ததெற்கெல்லாம் குதிக்கும்னு மீனாட்சி மாமிக்குத் தெரியும்.  ஆனா, இவர் ஜாதி கலப்படம்னு சொன்னதும் மாமிக்கு பகீர்னுத்து!!

    ‘அமெரிக்கால படிக்கிற இவா பையன் வேங்கடேஷ் ஏதாவது ஏடாகூடம் பண்ணிட்டானா!!’

    “நேத்து கூட SkypeChat பண்ணச்சே ஒண்ணும் சொல்லலயே?!!”

    “இதென்ன சோதனை! இன்னிக்கு சனி ப்ரதோஷம். நெல்லயப்பருக்கு ஒரு விளக்கு போடணும். அப்படியே திருவேங்கடநாதபுரம் போய், பெருமாளயும் சேவிச்சுட்டு வரணும் மனசுக்குள் வேகமாக வேண்டிண்டாள்!!

    “Idiots…. Stupids…..” அதுக்குள்ள மாமாவின் அர்ச்சனைகள் again and again going on…….

    மாமியின் BP எகிறிண்டேயிருக்கு. வேண்டாத தெய்வமில்லை. வேங்கடேசும் நல்ல பையன் தானே! பெருமாளே!” மனசுக்குள் மறுபடியும் ப்ரார்த்தனை.

    “அதுல வேற இந்த மனுஷன் கோவத்துல கவர்மெண்டுக்கு mail அனுப்பி, அதுல ஏதவது ஜாதி சண்டை வந்துடுமோ! ப்ராம்மணன் எப்படாப்பா மாட்டுவான்னு எல்லாரும் காத்திண்டிருக்காளே! இந்த அசட்டு ப்ராம்மணன் ஏடாகூடமாக ஏதாவது பண்ணக்கூடாதே!!” மறுபடியும் ப்ரார்த்தனை.

    “ஏன்னா! என்னாச்சு? ஏதோ ஜாதி கீதீன்னு பேசறேளே! ஏதாவது ஜாதிக்கலவரமா?….. நமக்கெதுக்குன்னா வம்பு!!… “அட அசடேன்னு மனசுல சொல்லிண்டே, பொறுமையாக, பக்குவமாக ஆத்துக்காரருக்கு advice பண்ணா..

    “நீ சும்மாயிரு. இத நான் விடமாட்டேன்…. I will lodge the Complaint….” மறுபடியும் மேஜர் சுந்தர்ராஜன்.

    பொறுமையிழந்த மாமி, என்னான்னு சொல்லித் தொலையுங்கோளேன்னு கத்தினாள்….”

    இந்தக் கத்தலில் ச்ருதியிறங்கிய மாமா, மீனாட்சி! நேத்தி சாயங்கலம் மார்கெட்ல பூ வாங்கினேன் நன்னா மொக்கு, மொக்கா பாக்கவே நன்னா இருந்தது ரொம்ப நாளாச்சு… மொக்கு பூவுல பூஜை பண்ணின்னு, வாங்கிண்டு வந்தேன்“.

சரி, அதுக்கென்ன?” – மாமி.

    “அதுக்கென்னவா? நல்ல ஜாதிப்பூ… மலர்ந்தால், கமகமன்னு வாசனை வரும்னு பாத்தால், எல்லாம் கலப்பட பூ டி…. ஜாதிப்பூல மொத்தம் கலப்படம்….. எதுவுமே Original இல்ல… எல்லாம் காட்டுப்பூ… துளி கூட வாசன இல்ல… மொத்த பூவும் waste… definitely, I will complain to the authorities…..

     மாமா சொல்லச் சொல்ல, பழையபடி, இது பைத்தியம் … இத ஒண்ணும் பண்ண முடியாதுன்னு மாமி பேசாமல் திரும்பிச் சென்றாள்.  விஷயம் ஒண்ணும் பெரிசா இல்லேன்றதால சாயங்காலம் கோவிலுக்கு போறது கூட reconsideration தான்.

மாமா விடாமல் இங்கிலீஷில் பேசிக் கொண்டிருந்தார்.

இது ஜாதிக்கலப்பூ.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

Sri APN Swami.

Sri #APNSwami #Writes #Trending | நாமத்தின் மேன்மை விளக்கும் நாமக்கல்

நாமத்தின் மேன்மை விளக்கும் நாமக்கல்

சமீபத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் சன்னிதியில், பூஜையின் போது, ஒரு அர்ச்சகர் உயரத்திலிருந்து தவறி விழுந்து இறந்ததை நாம் அனைவரும் அறிவோம். ஆலயத்தில் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர்களும், உயிரைப் பணயம் வைத்துத்தான் செய்கின்றனர் என்பதை இவ்வுலகம் இனியாவது உணரட்டும். நூற்றியறுபது ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு, வார, மாத விடுமுறைகள் இன்றியும், ஓய்வூதியம், வைப்புநிதி இன்றியும் பணியாற்றும் அர்ச்சகர்களின் நிலையினை இந்த உலகம் பார்க்கட்டும்!!

ஆலய அர்ச்சகர் பணிக்கு ஆசைப்படும் அரசியல்வாதிகள், குறைந்தபட்சம் இந்நிகழ்வுக்கு வருத்தமாவது தெரிவித்தனரா? இதில் அரசியல் ஆதாயத்திற்கான வாய்ப்புகள் எதுவும் அவர்களுக்கு இல்லையன்றோ!!

அதுபோகட்டும்… இனி சொல்லப்போகும் விஷயத்தையாவது கொஞ்சம் உணர்ச்சிபூர்வமாகப் படியுங்கள். ஏனென்றால், உணர்வுகள் மரத்துப்போனவர்களுக்கு உண்மை உறைக்காதுதான்!!!

இந்த அர்ச்சகரின் சிகிச்சைக்காக, சமூக வலைத்தளங்கள் மூலமாக பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. உடனடியாக பல லக்ஷம் ரூபாய்கள் வாங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டன. கருணையுள்ளம் கொண்ட பலர், இந்த கைங்கர்யத்தில் ஈடுபட்டனர். ஆனால் என்னவாயிற்று? அந்த ஆத்மா உடலைவிட்டுப் பிரிவதை எவராலும் தடுக்க முடியவில்லை. இது எம்பெருமானின் சங்கல்பம். ஆஞ்சநேயரின் திருவடிகளில் அவர் சேர்ந்துவிட்டார்.

அர்ச்சகரின் குடும்பத்தினர் ஓர் அறிக்கை விட்டனர்; “சமூக வலைத்தளங்கள் வாயிலாக, நிதியளிக்கும்படி நாங்கள் எவரையும் கேட்கவில்லை. அதனால், பணம் எதுவும் அனுப்ப வேண்டாம். இதெல்லாம் பகவத் சங்கல்பம்” என்று சொன்ன அந்த குடும்பத்தினர், மேலும் ஓர் அதிரடியை மொழிந்தனர். இதுவரை, அவர்கள் அறியாமலும், கேட்காமலும், உதவி செய்தவர்களுக்கு, அந்த வங்கியின் மூலமாகவே அனைத்தையும் திரும்ப அளிப்பதாகவும் கூறியுள்ளனர்!!!!

அன்பர்களே! நாமம் போட்டால் ஏமாற்றுவது என படுகேவலமாக இந்துக்களை இழிவுபடுத்தும் இந்த காலகட்டத்தில், நாமம் போடுவது நேர்மையின் உச்சகட்டம் என்பதை நாமக்கல் சம்பவம் உணர்த்துகிறது. பார்ப்பானைப் பார்த்து பொறாமைபடுபவர்களும், நாமம் போட்டு ஏமாற்றுகிறார் எனப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் இனியாவது உள்ளம் திருந்தட்டும்.

முதலில், நமக்கு நாமமே அடையாளம் என்பதை நாம் உணர வேண்டும். கட்டுப்பாடாக நெற்றிக்கு இட்டுக்கொண்டு செல்வதை, நமது தர்மம் என நிரூபிக்க வேண்டும்.

ஆதிசங்கரர், வேதாந்த தேசிகர் போன்ற மகான்கள், தங்களின் பக்தியின் மேன்மையால், தங்கக் காசு மழை பொழிவித்தனர். அதில் ஒரு சிறு துளி கூட அவர்கள் கைக்கொள்ளவில்லை!! நாமம் போட்ட பார்ப்பான்கள் பிழைக்கத் தெரியாதவர்கள்! பிறரை ஏமாற்றத் தெரியாதவர்கள்! நாமம் போட்ட நாமக்கல் குடும்பம் நம் சமூகத்தின் நெஞ்சுரத்தை பறைசாற்றுகிறது.

“நமக்கு நாமமே அடையாளம்”. 

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி

Sri APN Swami.