Sri APNSwami #Writes #Articles | Rukmangathan – Greatness of Ekadasi Vratham – ருக்குமாங்கதன் – ஏகாதசி விரதத்தின் மகிமை

அயோத்தியாபுரியில் ருஷபத்துவஜன் எனும் அரசன் ஆண்டு வந்தான். அவன் மகன் ருக்குமாங்கதன். ருக்குமாங்கதன் அரசனானபோது திருநந்தவனம் வைத்து மலர்களைக் கொண்டு எம்பெருமானைப் பூசித்து வந்தான். அந்நந்தவனத்தில் பல சிறந்த மலர்களிருந்தன. அதனைத் தேவேந்திரன் அறிந்து ரம்பை முதலான தெய்வலோகப் பெண்களின் உதவியால் அம்மலர்களைத் தான் பெற்று வந்தான். மலர்கள் குறைவது அரசனுக்குத் தெரிந்ததும் காவலாளர்களை அமைத்தான். அவர்காளாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் அரசன் அவர்களைத் தண்டித்தான். அவர்கள் அருகே இருந்த ஒரு தவசியைப் பிடித்துக் கட்டி அரசனிடம் கொண்டு வந்தனர். அரசன் அவர் கட்டுக்களை மெல்ல அவிழ்த்து விசாரித்தான். அவர் உண்மையைக் கூறிக் கொம்மட்டிக் கொடியைப் பயிரிட்டால் அவர்களைக் கண்டு பிடிக்கலாம் என்று கூறினார். அரசன் அவ்வாறே செய்தான்.

ஒரு நாள் மலர் பறித்துக்கொண்டு செல்லும் ரம்பா ஸ்திரீகளில் ஒருத்தி காலில் அக்கொடி பட, அவள் தெய்வப் பிறவியின் வலிமையையிழ்ந்து தேவலோகம் செல்லமுடியாது நின்றாள். காவலாளர் அச்செய்தியை அரசனுக்கு அறிவித்தனர். அரசன் அங்கு வந்து அவளை விசாரித்தான். அவள் உண்மையைக் க்றினாள். பின், அரசன் அவளை நோக்கித் தேவலோகம் செல்லத்தக்க உபாயம் யாதெனக் கேட்டான். அவள் ஏகாதசி தினத்தன்று பட்டினி கிடக்கும் ஒருவர் அதன் பலனை எனக்குக் கொடுத்தால்தான் தேவலோகம் செல்லக் கூடும் என்று கூறினாள். அரசன் ஏகாதசி தினத்தில் பட்டினி இருக்கும் விரதத்தை அனுஷ்டிப்பார் எவரேனுமுண்டோ என்று பலரை விசாரித்தான். ஒருவரும் அகப்படவில்லை. அப்போது அத்தேவலோகப் பெண் அரசனது கைத்தாயை வரவழைக்க வேண்டினள். அவளும் வந்தாள். அவளை நோக்கித் தேவலோகப் பெண், அம்மா நீ ஒரு நாள் கோபத்தால் புசியாமல் இருந்தாய், மறுநாட் காலையில் புசித்தாய். நீ புசியாமலிருந்த நாள் துவாதசி. அவ்விஷயம் உனக்குத் தெரியாதிருந்தும் புண்ணியம் செய்தாய். அப்புண்ணியத்தை எனக்குக் கொடு, என்று கேட்டாள். அவளும் இசைந்து கொடுக்கத் தேவலோகப் பெண் தேவலோகம் போய்ச் சேர்ந்தாள்.

அன்று முதல் ருக்குமாங்கதன் நாட்டிலுள்ளார் அனைவரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கும்படி கட்டளையிட்டு அத்தினத்தில் யாவரும் அறிய பேரிகை முழங்கி வந்தான். அதனால் ஒருவரும் நரகலோகம் அடையாது சுவர்க்கம் புகுந்தனர். அதனால் எமன் பிரம்மனிடம் முறையிடப் பிரம்மன் ஊர்வசியை அழைத்து ருக்குமாங்கதனை வசப்படுத்துமாறு கட்டளையிட்டார். அவ்வாறே ஊர்வசி மிக்க அழகுடன் பூமியில் தோன்றி ருக்குமாங்கதனை அடைந்து தன் கருத்தைப்போல் நடப்பதாக அவனிடமிருந்து வாக்குறுதி பெற்றுக் கொண்டு அவனோடு வாழ்ந்து வந்தாள். ருக்குமாங்கதன் தன் மகன் தன்மாங்கதனை அரசனாக்கி விட்டு ஊர்வசியோடு இன்பம் நுகர்ந்து வந்தான். ஒரு நாள் காலையில் ஊர்வசி ருக்குமாங்கதனுக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுக்கையில் பேரிகை முழக்கம் கேட்டது. ருக்குமாங்கதன் அன்று ஏகாதசி தினமாதலால் தாம்பூலம் கொள்ள மறுத்தான். ஊர்வசி வாக்கு மாறியதைக் கூறி அவனை விட்டுப் பிரிந்து காட்டின் வழியே நடக்கலானாள். தன்மாங்கதன் விரைந்து அவளைத் தடுத்து அழைத்துவந்து தந்தைபால் விடுத்தான். அப்பொழுதும் ருக்குமாங்கதன் தாம்பூலம் கொள்ள மறுத்து வேறு எது செய்யவும் ஒப்புக் கொண்டான். ஊர்வசி, தன்மாங்கதன் கழுத்தை வாளால் வெட்டச் சொன்னாள். உடனே ருக்குமாங்கதன் வெட்டினான். அவ்வாள் தன்மாங்கதன் கழுத்தில் மாலையாக விழுந்தது. அப்பொழுது மும்மூர்த்திகளும் தேவேந்திரனும் தோன்றினர். அரசனும் அந்நகரிலுள்ள ஏகாதசி உபவாசிகளும் வைகுந்தம் சேர்ந்தனர். ஏகாதசியன்று உபவாசத்துடன் எம்பெருமானைச் சேவிப்பவர் வைகுந்தம் அடைவர் என்பது நிச்சயம்.


Temple Run in Srimadh Bhagavatam | Based on Sri APN Swami’s Upanyasam | Sri APN Swami’s Shishya Writes

Temple Run in Srimadh Bhagavatam | Based on Sri APN Swami’s Upanyasam 

Temple Run is a famous 3D endless running video game.  It is an infinite runner where the player must escape from his enemy and avoid all the obstacles and traps that are found along the way.  The evil monkey monsters keep chasing and the runner escapes by traversing all odds and finally escape with the gold idol. 

Let’s look at Temple Run from a traditional angle and see who is running away from a Temple and what is the golden idol obtained by the runner. The video game is an endless running but this Temple run paves way for ending our run i.e cycles of birth and death from this evil samsaram

Let the Temple Run begin…. 

எம்பெருமானின் தயா ஸ்வரூபமாக திகழுபவள் 

பரமாத்மாவின் அவதாரத்திற்கேற்ப ஒத்த நிலையில் அவதரிப்பவள் 

விதர்ப தேச குண்டினபுரத்தில் வைதர்பினியாக தோன்றினவள் 

பிறப்பற்றவள் பீஷ்மகனின் புத்திரியாக பிறந்தாள் 

த்வாரகாதீஷனின்  தீய குணங்களைப் பற்றி கேட்டு கேட்டே  அவனுக்காக காதல் கோட்டை கட்டியவள்  

பழம் பகைவன் சிசுபாலனை மணக்க மனமில்லாதவள் 

எப்படியாவது கண்ணனையே கண்ணாளனாக அடைய ஆவல் கொண்டவள்  

ஓர் இரவில் கண்ணனை அழைத்து வர தகுந்த த்விஜனிடம் (கருடன்) ஸந்தேசம் அனுப்பியவள் 

aptஆனாவர்  (ப்ராஹ்மணர்) ஆப்தராக  ஆப்டவுடன் அவரை த்வாரகாதீஷனிடம்  காதல் தூது அனுப்பியவள்

காதல் கடிதத்தை கண்ணனிடம் படித்து காட்டும் படி பிராமணனிடம் (கருடனிடம்) விப்ர ஸந்தேசம் கொடுத்தவள் 

ஸுதாமா மண்டபத்தில் அமர்ந்திருந்த புவன சுந்தரனுக்கு ஸந்தேசம் கொடுத்தவள் 

தாமதித்தால்  Mrs. சிசுபாலன் ஆகிவிடுவேன் என்று கண்ணனை  எச்சரித்தவள் 

கோவர்தனத்தை தாங்கினவனை தன் ஹ்ருதயத்தில் தாங்குபவள்

அச்யுத்தன் கைவிடாமல் கைப்பிடிக்க மணாளனாக எப்பொழுது வருவான் என்று அவன் வரவை எதிர்பார்த்தவள் 

எவ்வித தயக்கமின்றி கண்ணனிடம் தன் மனதை பறிகொடுத்தவள் 

எல்லாவிதத்திலும் பொருத்தமாக இருந்த கண்ணனுக்கு காதல் செய்தி அனுப்பியவள் 

ப்ரஹ்லாதனுக்கு அப்பொழுதே தோன்றிய ந்ருஸிம்ஹனுக்கு ஹரிணியாக(பெண் சிங்கமாக) ஸந்தேசம் அனுப்பியவள் 

பராக்ரமம் கொண்ட சிங்கத்துக்குரிய மாமிசத்தை ஒரு நரி எடுத்து போகலாமா என்று கடிதத்தில்  கேள்வி கேட்டவள் 

தான் செய்த தவத்தின் பலன் உண்மையானால்,  தபகோஷனின் மகனான சிசுபாலனின் நகம் கூட படாதபடி அழைத்துச்செலுத்துமாறு பிரானிடம் ப்ரார்த்தித்தவள் 

Silentaaga வா ஆனால் சீக்கிரமாக வா என்று கண்ணனுக்கு செய்தி அனுப்பியவள் 

பகைவர்களின் படையை அழித்து, தன்னை ராக்ஷஸ விவாஹம் செய்துகொள்ளுமாறு கண்ணனிடம் வேண்டியவள்

ஊருக்கு வெளியில் இருந்த கிரிஜா (இந்திராணி) தேவாலயத்தில் காத்திருப்பதாக கடிதம் எழுதியவள் 

கண்ணா உன் திருவடி துகள்களுக்கு ஆசைப்படும் என்னிடம் நீ வரவில்லையென்றால் உயிர் துறப்பேன் என்றவள் 

கண்ணா நீ வந்தே ஆகவேண்டும் என்று கண்ணனுக்கு ஆணையிட்டவள்

இடது கண், புஜம் துடிக்க, துளஸி பரிமளம் காற்றில் வீச  கண்ணன் வருவதை அறிந்தவள் 

யாரும் அறியா வண்ணம் silentaaga வா என்ற பொழுதும், violentaaga பம் பம் பம் என்று சங்கத்த்வனியுடன் வந்த கண்ணனை கண்டு ஸந்தோஷித்தவள் 

ஆச்சரியத்தின் உருவானவள் தன்  மணாளனை கண் முன் கண்ட பின் தன்னையே மறந்தவள் 

“இனிபயம் வேண்டாம்” என்ற கண்ணனின் திருத்தோள்களில்  அமைதியாக அணைந்தவள் 

கிழக்கு திக்கு சூரியன் மேற்கு  செல்லச் செல்ல  கிழக்கே இருள் சூழ்வது போல்,  கண்ணனுடன் த்வாரகை நோக்கி சென்று,  குண்டினபுரத்தை இருள் சூழச்செய்தவள் 

எம்பெருமானும் பிராட்டியும் என்றும் பிரியாதவர்கள் என்று அறியாதவர்களுக்கு  அறிவித்தபடி மிதுனமாக கண்ணனுடன் திருத்தேரில் குண்டினபுரத்தில் பவனி வந்தவள் 

த்வாரகையில்  த்வாரகாதீஷனை மணம் புரிந்தவள் 

அவளே நம் ருக்மிணி பிராட்டியானவள். 

அந்த பிராட்டி நமக்கு ஸகல மங்களங்களையும் அருளட்டும். 

Thus Rukmani escaped from the shackles of Shishupala and got her golden soulmate Krishna. Meditating on this Temple run by Rukmani paves way for us to escape the evil samsaram for sure. 

This is an extract based on Sri APN Swami’s Rukmani Kalyanam Upanyasam (10th July 2017) from his Skandam wise Srimadh Bhagavata upanyasam conducted over a period of 15 years at Malleshwaram, Desika Sabha. 

அடியேன் 

Sriranjani Jagannathan

SARAN Sevak & Shishyai of Sri APN Swami

2-11-2022