Temple Run in Srimadh Bhagavatam | Based on Sri APN Swami’s Upanyasam | Sri APN Swami’s Shishya Writes

Temple Run in Srimadh Bhagavatam | Based on Sri APN Swami’s Upanyasam 

Temple Run is a famous 3D endless running video game.  It is an infinite runner where the player must escape from his enemy and avoid all the obstacles and traps that are found along the way.  The evil monkey monsters keep chasing and the runner escapes by traversing all odds and finally escape with the gold idol. 

Let’s look at Temple Run from a traditional angle and see who is running away from a Temple and what is the golden idol obtained by the runner. The video game is an endless running but this Temple run paves way for ending our run i.e cycles of birth and death from this evil samsaram

Let the Temple Run begin…. 

எம்பெருமானின் தயா ஸ்வரூபமாக திகழுபவள் 

பரமாத்மாவின் அவதாரத்திற்கேற்ப ஒத்த நிலையில் அவதரிப்பவள் 

விதர்ப தேச குண்டினபுரத்தில் வைதர்பினியாக தோன்றினவள் 

பிறப்பற்றவள் பீஷ்மகனின் புத்திரியாக பிறந்தாள் 

த்வாரகாதீஷனின்  தீய குணங்களைப் பற்றி கேட்டு கேட்டே  அவனுக்காக காதல் கோட்டை கட்டியவள்  

பழம் பகைவன் சிசுபாலனை மணக்க மனமில்லாதவள் 

எப்படியாவது கண்ணனையே கண்ணாளனாக அடைய ஆவல் கொண்டவள்  

ஓர் இரவில் கண்ணனை அழைத்து வர தகுந்த த்விஜனிடம் (கருடன்) ஸந்தேசம் அனுப்பியவள் 

aptஆனாவர்  (ப்ராஹ்மணர்) ஆப்தராக  ஆப்டவுடன் அவரை த்வாரகாதீஷனிடம்  காதல் தூது அனுப்பியவள்

காதல் கடிதத்தை கண்ணனிடம் படித்து காட்டும் படி பிராமணனிடம் (கருடனிடம்) விப்ர ஸந்தேசம் கொடுத்தவள் 

ஸுதாமா மண்டபத்தில் அமர்ந்திருந்த புவன சுந்தரனுக்கு ஸந்தேசம் கொடுத்தவள் 

தாமதித்தால்  Mrs. சிசுபாலன் ஆகிவிடுவேன் என்று கண்ணனை  எச்சரித்தவள் 

கோவர்தனத்தை தாங்கினவனை தன் ஹ்ருதயத்தில் தாங்குபவள்

அச்யுத்தன் கைவிடாமல் கைப்பிடிக்க மணாளனாக எப்பொழுது வருவான் என்று அவன் வரவை எதிர்பார்த்தவள் 

எவ்வித தயக்கமின்றி கண்ணனிடம் தன் மனதை பறிகொடுத்தவள் 

எல்லாவிதத்திலும் பொருத்தமாக இருந்த கண்ணனுக்கு காதல் செய்தி அனுப்பியவள் 

ப்ரஹ்லாதனுக்கு அப்பொழுதே தோன்றிய ந்ருஸிம்ஹனுக்கு ஹரிணியாக(பெண் சிங்கமாக) ஸந்தேசம் அனுப்பியவள் 

பராக்ரமம் கொண்ட சிங்கத்துக்குரிய மாமிசத்தை ஒரு நரி எடுத்து போகலாமா என்று கடிதத்தில்  கேள்வி கேட்டவள் 

தான் செய்த தவத்தின் பலன் உண்மையானால்,  தபகோஷனின் மகனான சிசுபாலனின் நகம் கூட படாதபடி அழைத்துச்செலுத்துமாறு பிரானிடம் ப்ரார்த்தித்தவள் 

Silentaaga வா ஆனால் சீக்கிரமாக வா என்று கண்ணனுக்கு செய்தி அனுப்பியவள் 

பகைவர்களின் படையை அழித்து, தன்னை ராக்ஷஸ விவாஹம் செய்துகொள்ளுமாறு கண்ணனிடம் வேண்டியவள்

ஊருக்கு வெளியில் இருந்த கிரிஜா (இந்திராணி) தேவாலயத்தில் காத்திருப்பதாக கடிதம் எழுதியவள் 

கண்ணா உன் திருவடி துகள்களுக்கு ஆசைப்படும் என்னிடம் நீ வரவில்லையென்றால் உயிர் துறப்பேன் என்றவள் 

கண்ணா நீ வந்தே ஆகவேண்டும் என்று கண்ணனுக்கு ஆணையிட்டவள்

இடது கண், புஜம் துடிக்க, துளஸி பரிமளம் காற்றில் வீச  கண்ணன் வருவதை அறிந்தவள் 

யாரும் அறியா வண்ணம் silentaaga வா என்ற பொழுதும், violentaaga பம் பம் பம் என்று சங்கத்த்வனியுடன் வந்த கண்ணனை கண்டு ஸந்தோஷித்தவள் 

ஆச்சரியத்தின் உருவானவள் தன்  மணாளனை கண் முன் கண்ட பின் தன்னையே மறந்தவள் 

“இனிபயம் வேண்டாம்” என்ற கண்ணனின் திருத்தோள்களில்  அமைதியாக அணைந்தவள் 

கிழக்கு திக்கு சூரியன் மேற்கு  செல்லச் செல்ல  கிழக்கே இருள் சூழ்வது போல்,  கண்ணனுடன் த்வாரகை நோக்கி சென்று,  குண்டினபுரத்தை இருள் சூழச்செய்தவள் 

எம்பெருமானும் பிராட்டியும் என்றும் பிரியாதவர்கள் என்று அறியாதவர்களுக்கு  அறிவித்தபடி மிதுனமாக கண்ணனுடன் திருத்தேரில் குண்டினபுரத்தில் பவனி வந்தவள் 

த்வாரகையில்  த்வாரகாதீஷனை மணம் புரிந்தவள் 

அவளே நம் ருக்மிணி பிராட்டியானவள். 

அந்த பிராட்டி நமக்கு ஸகல மங்களங்களையும் அருளட்டும். 

Thus Rukmani escaped from the shackles of Shishupala and got her golden soulmate Krishna. Meditating on this Temple run by Rukmani paves way for us to escape the evil samsaram for sure. 

This is an extract based on Sri APN Swami’s Rukmani Kalyanam Upanyasam (10th July 2017) from his Skandam wise Srimadh Bhagavata upanyasam conducted over a period of 15 years at Malleshwaram, Desika Sabha. 

அடியேன் 

Sriranjani Jagannathan

SARAN Sevak & Shishyai of Sri APN Swami

2-11-2022 

Sri #APNSwami #Writes #Trending |சட்டத் திருத்த மசோதா

“சட்டத் திருத்த மசோதா”- இன்று (21/01/19) ஶ்ரீஏபிஎன் சுவாமி அவர்கள் தாக்கல் செய்கிறார்.

                      சட்டத் திருத்த மசோதா

     அரசியல் சட்டங்கள் கொண்டுவருவதும், பின்னர் மறுபடியும் அதில் திருத்தம் செய்வதும், அதற்குரிய நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதையும் சகஜமாக இக்காலத்தில் காண்கிறோம்.   ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றாற்போன்று, அரசியலமைப்பு சட்டங்கள் மாறுதலுக்கு உட்படுகின்றன.  இத்தகைய மாறுதல்கள் தவிர்க்கவே முடியாதவை எனும் கருத்து, எங்கும் பரவலாக உள்ளது.

     கணவன்-மனைவி உறவு, முறையற்ற உறவு, விவாகரத்து, இது முதலானவற்றில்,  நெறிமுறைப்படுத்துவதில் பெரும் தடங்கல்கள், தடுமாற்றங்கள் உண்டாகின்றன.   பெருமான்மையான சபை உறுப்பினர்களின் ஆதரவு அல்லது எதிர்ப்புகளினால், நிலையான தீர்மானம் செய்ய முடியாமல் ஆட்சியில் உள்ளவர்கள் தடுமாறுகின்றனர்.   ஆனால். நமது முன்னோர்கள், இவ்விஷயத்தில் தெளிந்த மனத்துடன், மதிநுட்பத்துடன் சட்டமியற்றி ஆட்சிபுரிந்து வந்துள்ளனர்.   பின்புள்ளோர் தடுமாற்றமில்லாமல் அவ்வழி நடக்க வழிகோலுகின்றனர்.

மாமன்னன் துஷ்யந்தனின் கதையினில் ஒரு நிகழ்வைக் காணலாம்.

      அவனது ராஜ்யத்தில் ஒரு பணக்காரன் இறந்துவிட்டான்.   அவனுக்கோ, வாரிசு இல்லை.   “இனி இந்தப் பெரும் சொத்து யாருக்கு உரிமையானது?” எனும் கேள்வி உண்டானது.   அப்போது துஷ்யந்த மஹாராஜா ஒரு சட்டமியற்றினார்.

     “என் ராஜ்யத்தில், யார் யார் உறவுகள் இல்லாமல் உள்ளனரோ!, அவர்களுக்கு மன்னனாகிய நானே உறவினன் – அதாவது வாரிசு இல்லாதவர்களின் சொத்து, அரசாங்கத்திற்குச் சொந்தமானது.   அவர்கள் சொத்தை அரசுடைமையாக்குவது என்பதே இதன் பொருள்.

     இவ்விதம் வாரிசு இல்லாதவர்களின், அசையும், அசையா சொத்துக்கள், பணம் முதலியவை நாட்டுடைமையாக்கப்படும்போது, மக்கள் இருவகையில் பயனடைகின்றனர்.   ஒன்று அந்த பொருட்களின் உபயோகம், மற்றொன்று வரிச்சுமை நீங்குவது.

     சரி!   அதை விடுவோம்.   விஷயத்திற்கு வருவோம்.   துஷ்யந்தன் போட்ட சட்டத்திலும் சில ஓட்டைகள் உண்டு.   இத்தீர்மானம் நிறைவேறினால், சட்டத்திலுள்ள ஓட்டைகளை சிலர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வர். பின்னர் மறுபடியும் இதில் திருத்தம் கொண்டுவருவது, சில சமயம் இயலாததாகிவிடும்.   அதனால் துஷ்யந்த மஹாராஜா சட்டம் இயற்றும்போதே,  மதிநுட்பத்துடன், பின்னாளில் எவ்வித இடைஞ்சலும் ஏற்படாவண்ணம் சட்டம் இயற்றினான்.

     ஆம்!   உறவுகள் இல்லாதவர்களுக்கு, மன்னன், “நானே உறவு” என்றான் அல்லவா!   அதிலொரு அருமையான குறிப்பு (Point) வைத்திருந்தான்.  அதாவது, மக்களே!   எந்த உறவாக நானிருந்தால், எனக்கும், மற்றவர்களுக்கும் பாவம் நேரிடாதோ!   அந்த உறவாக நானிருப்பேன் என்கிறான்.

இந்த சட்டம் குறித்த துஷ்யந்தனின் விளக்கவுரையை சபையில் கேட்கலாம்.

     அதாவது ஒருவருக்குப் பிள்ளை இல்லையென்றால், அவரின் புத்திர ஸ்தானத்தில் மன்னன் இருக்கலாம்.   மற்றொருத்தருக்கு சகோதரன் அல்லது தந்தை இல்லையெனில் அந்த நிலையில் மன்னன் இருக்கலாம்.   ஆனால் ஒரு பெண்ணுக்குக் கணவன் இல்லையென்றால் – அதாவது அவள் கணவனால் கைவிடப்பட்டோ!  அல்லது கைம்பெண்ணாகவோ இருந்தால், அதே உறவாக மன்னன் இருப்பதாகச் சொன்னால், அது இருவருக்கும் (பெண்ணுக்கும், அரசனுக்கும்) பெரும் பாவமன்றோ!

     அத்தகைய பாபம் நேரிடாமல், அப்பெண்ணின் மகனாக, சகோதரனாக, தந்தையாக இருந்து காப்பாற்றுவது, அரசனுக்குப் பெருமைதானே!  இதைத்தான் துஷ்யந்தன் அரசாணைக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டான்.

     அதாவது, முறையற்ற உறவு முதலானவற்றால் ஏற்படும் பாபத்தை இவ்வுலகம் அறியவேண்டும், தனது ஆட்சியில் மக்களும் பாபங்கள் செய்யாதவர்களாகவும், பாபம் செய்ய பயப்படுபவர்களாகவும் இருக்க வேண்டுமென நினைத்து அதைச் செயல்படுத்திய மாமன்னன்.

    திருத்தமே தேவையில்லாத தீர்மானமான இதை, மஹாகவி காளிதாசன் வர்ணிக்கிறார்:

                யேந யேந வியுஜ்யந்தே ப்ரஜா: ஸ்நிக்தேந பந்துநா |

                ஸ ஸ பாபாத்ருதே தாஸாம் துஷ்யந்த இதி குஷ்யதாம் ||

     ஸ்ரீக்ருஷ்ணனின் கீதாசாஸ்த்ரத்திற்கு அத்புதமான வ்யாக்யானம் அமைத்த வேதாந்த தேசிகர், இதே பாணியில், பதினெட்டு அத்யாயங்களின் செழும்பொருளை, ஒரேயொரு ச்லோகத்தினால் அழகாக விளக்குகிறார்.

             ஸுதுஷ்கரேண சோசேத் ய: யேந யேந இஷ்ட ஹேதுநா |

             ஸ ஸ தஸ்யாஹம் ஏவேதி சரம ச்லோக ஸங்க்ரஹ ||

     “இவ்வுலகிலுள்ள மக்கள், நிலையற்ற பல பலன்களை வேண்டி அலைகின்றனர்.   அவைகளைப் பெற முடியாமல் மேன்மேலும் இன்னலுறுகின்றனர்.   குறிப்பாக, யாரிடம் சென்று கேட்பது? எப்படிக் கேட்பது என்பதும் தெரியாமல், திகைக்கின்றனர்.   இம்மை மற்றும் மறுமை எனும் அனைத்து பலன்களையும் அளிப்பவன் நானே!  எனவே, என்னைச் சரணடைபவன், அனைத்துத் துன்பங்கள் துயரங்களிலிருந்தும் விடுபடுகிறான். பதினெட்டு அத்யாயமுள்ள கீதையின் திரண்டபொருள் இதுவே என விளக்குகிறார்.

     அதாவது கண்ணனைச் சரணடைவதே நமது அனைத்துத் துக்கங்களினின்றும் விடுதலையளிக்கும் என்பதினை உணர்ந்து அவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டு மேலான சுகம் எய்தலாம்.

     இத்தகைய மேலான சட்டம் நம்மைத் திருத்துவதற்காகவே கண்ணனால் நிறைவேற்றப்பட்டிருக்கும்போது, இன்னமுமா நாம் திருந்தாமல் இருப்பது?

    மன்னன் துஷ்யந்தன் பாவம் ஏற்படாமல், படு ஜாக்கிரதையாக சட்டம் இயற்றினான். மாமாயன் கண்ணன், பாவங்களைப் போக்குகிறேன் எனும் சட்டத்தை ஏற்படுத்தினான்.  இவ்விரண்டுமே திருத்தங்கள் தேவைப்படாதது. ஆனால் நமது உள்ளத்தைத் திருத்தக் கூடியது.

அன்புடன்

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி

Sri #APNSwami.