Bhagavatha Apacharam! Beware! | Sri APN Swami’s #Shishya Writes

Srimathe Ramanujaya Nama:

Srimathe Nigamantha Mahadesikaya Nama:

Prapatti/Saranagathi is the only way to attain moksha for those us who are incapable of doing Bhakti yoga. It will undoubtedly allow us to attain Sri Vaikuntam. Prapatti is the process of surrendering ourselves at the holy feet of Perumal under the guidance of an acharya.

Two key things a prapanna should practice after Saranagathi are:

1. We should stay away from Devathanthira Sambandam (i.e., worshipping deities other than MahaVishnu) after we surrender to lotus feet of Sriman Narayanan.

2. We should stay away from Bhagavatha Apacharam (committing sin against the devotees of Lord Vishnu). It is important to note that the most powerful sin that can make Prapatti void is Bhagavatha Apacharam.

The impact of Bhagavatha Apacharam is beautifully explained in the vaibhavam of Koorthazhwan. It was the time when King Kulothunga was spreading Shaivism. In order to accomplish his goal, the King wanted to either convert Swamy Ramanujacharya (who was spearheading SriVaishnavism) to Shaivism or kill Him so that SriVaishnavism would not flourish. So, the King invited Swami Ramanujar for a discussion to the King’s Darbar.

Koorthazhwan one of the foremost disciples of Swami Ramanujar, pleaded Swamy Ramanujar not to go with the soldiers, as they would plan and kill Swamy Ramanujar. The world should never lose such a great Guru was Koorathazhwan’s mindset. Hence, Koorthazhwan decided to disguise himself as Swamy Ramanujar and went with the soldier to the King’s court and Swami Ramanujar managed to travel safely out of the city towards Karnataka/Melnadu. At the king’s court, Koorathazhwan (who disguised as Swami Ramanujar) disagreed with the King’s orders to accept Shaivism and hence king Kulothunga ordered his soldiers to takeaway Koorthazhwan’s eyes. Koorathazhwan didn’t wait for the soldiers to punish him and he himself took away his precious eyes.  Thus, Koorathazhwan lost his eyes.

One day, one of the fellow men asked blind Koorthazhwan, how could a person like him lose his eyes when he was Parama Bhagavatan who followed the core principles of Srivaishnavam strictly. Koorthazhwan replied – “Why not him? Maybe he saw a devoted Bhagavatan and wondered why his Thiruman Kappu (Thilakam worn on the forehead by a SriVaishnava) looked crooked thus causing Bhagavatha Apacharam. “

This incident reveal that even a simple thought would result in a greatest sin of Bhagavatha Apacharam. The point to note here is that not only words or action is considered sin even a negative thought would add sin to a Prapanna and could impact the Prapatti.

If Koorathazhwan who is known for his bhagavad bhagavata bhakthi, aacharam & anushtanam, have faced this situation, then take a moment to think of the position of people like us who are always focussed in blaming others. It must be acknowledged that it is very hard to control our mind, nevertheless through consistent practise and most importantly the guidance of right Guru we can achieve this mind control with ease.

Now that we have understood that Bhagavatha Apacharam is harmful, let us see a scenario from Ramayana about Lakshmana & Sugreeva which teaches us on how to come out of Bhagavath apacharam if committed.

Sugreeva, after becoming the king of Kishikinda with the help of Rama, has agreed to help Rama to search for Seetha. Sugreeva informed Rama and Lakshmana that they will get ready and start the search after the monsoon period gets over.  Rama & Lakshmana stayed in the Rishyamukha mountain, while Sugreeva started to live happily with his family & subjects at Kishkinda.

Sugreeva ordered his Monkey army to gather and get prepared in order to start the search of Seetha once the rainy season ends. However, Sugreeva forgot to communicate his plan or updates on what’s happening to Rama as he simply trusted the friendship between them.

Rama at other end was unaware of the plans of Sugreeva and was in distress and couldn’t bear the separation of Seetha Devi. Hence, at the end of the rainy season, Rama asked Lakshmana to meet Sugreeva and remind about his promise to help in searching Sita. Lakshmana prepared himself to meet Sugreeva and confront him with his thunderous wrath. Rama stopped Lakshmana and advised him, “Dear brother Lakshmana, remeber that Sugreeva is our friend. We need to trust the relation and hence you cannot lose control of your emotions. Please stay calm when you meet Sugreeva and just remind Sugreeva about his promise to help us in searching Sita.”

Lakshmana listened to Rama carefully, however his love for Rama could not calm his mind completely. The land was vibrating for miles as furious Lakshmana walked towards Kishkinda to meet Sugreeva.

Hanuman informed Sugreeva that furious Lakshaman had arrived at Kishkinda to meet him. On understanding the purpose of Lakshmana’s visit, Sugreeva asked his capable minister Hanuman to advise on how to handle the situation in a calm manner.

कृतापराधस्य हि ते नान्यत् पश्याम्यहं क्षमम् |
अन्तरेणाञ्जलिं बद्ध्वा लक्ष्मणस्य प्रसादनात् || 4.32.17

This is the slokam from Valmiki Ramayana stated by Hanuman to Sugreeva which means – “As you (Sugreeva) have committed sin (of not keeping Ram updated), I cannot see another option other than put your hands together (Anjali/Namaskaram/Vanakkam) and ask for forgiveness to Lakshamana”.

Sugreeva learnt the great art of Anjali which is the foremost mudra to solve many big problems.  Anjali is defined as “am + jalayathi” or that which makes even Paramathma’s solid heart melt into a watery state.

When Sugreeva met Lakshmana, Sugreeva immediately apologised to Lakshmana by doing Anjali and explained the preparations he had already done in detail. He communicated that he didn’t forget the promise made to Ram and had made all arrangements except for not informing the status back to Rama.

यदि किञ्चिदतिक्रान्तं विश्वासात् प्रणयेन वा |
प्रेष्यस्य क्षमितव्यं मे न कश्चिन्नापराध्यति ||4.36.11

This is the slokam from Valmiki Ramayana stated by Sugreeva to Lakshmana which means – Out of trust or friendship if I have committed any mistake(sin) please bear with me Lakshmana, there is no prefect person (Jeevan) in this world who has not committed mistakes and hence please forgive me.

Hearing those words from Sugreeva and because of the magic of Anjali, Lakshmana cooled down and replied that he never mistook Sugreeva’s actions.

यच्च शोकाभिभूतस्य श्रुत्वा रामस्य भाषितम् |
मया त्वम् परुषाण्युक्त: तच्च त्वं क्षन्तुमर्हसि || 4.36.20

This is the slokam from Valmiki Ramayana stated by Lakshmana to Sugreeva which means – Oh! Sugreeva, on hearing the sadness of Rama being separated from His wife Seetha, I expressed my anger to you. There is no personal vengeance on you.

Swami Vedanta Desikan, inspired by this Ramayana incident and how those characters behaved, advises a simple way to make up for Bhagavata Apacharam: say sorry to the person you hurt (the Bhagavata), like using “Anjali.” in his Chillarai Rahasyam work called Anjali Vaibhavam.

Thus, is the greatness of Anjali Vaibhavam which can help us come out of Bhagavata Apacharam.

Key Take Away

Even if we have not committed a mistake knowingly, our words and actions might wound another Bhagavata. Upon realising the mistake, we must immediately apologise and attempt to right all wrongs. This is shown by Sugreeva.

On the other hand, if the other person ask for apology, we must abandon our ego and accept it which is shown by Lakshmana.

After reading this it is quite evident that there are no counselling sessions compared to learning our epics Ramayanam, Mahabharatam and puranas like Srimadh Bhagavatam, Sri Vishnu Puranam with the guidance of our Gurus who guide us.

Koodi irundhu Kuliruvom!!

Adiyen,

Smt. Priya Sathyan

Sri APN Swami’s Kalakshepa Shishayi

11-10-2023

அரங்கன் உரைத்த அந்தரங்கம் & அரங்கம் ஏறிய அந்தரங்கம் | Secrets Uttered by Lord Ranganathan & Secrets that got up the stage | Sri APN Swami Writes

Scroll down to read the english translation of this article.

This article is an extract from the series called Ramanuja Vaibhavam written by Sri APN Swami.

அரங்கன் உரைத்த அந்தரங்கம்

திருவரங்கம் – பூலோக வைகுண்டம் எனும் பெருமை வாய்ந்தது.  108 வைணவ திருத்தலங்களுக்குத் தலைமை அலுவலகம்.  ஆழ்வார்கள் மட்டுமின்றி நாதமுனிகள், ஆளவந்தார் தொடங்கி இதோ  இன்று ராமானுஜர் வரையில் ஆசார்ய வள்ளல்கள் வாழ்ந்து வைணவம் வளர்க்கின்றனர்.  அவர்களுக்கு அரங்கனே கதி.   அழகிய மணவாளனே மணாளன்.

ஆராத காதலில் ஆழ்வார்களும், ஆசார்யர்களும் அரங்கனை ஆட்கொண்டனரா!  அல்லது அழகிய மணவாளன் இவர்களை ஆட்கொண்டானா!  என்பது தனிப்பட்ட முறையில் விவாதத்துக்குரிய ரசமான தலைப்பு.

 தற்போது பகவத் ராமானுஜர் தலைமைப் பொறுப்பினை ஏற்று தன்னலமற்ற தொண்டாற்றி வருகின்றார்.  சுமார் எண்ணாயிரம் சந்யாசிகள் அவருடன் இருந்தனராம்.  அது தவிர இல்லறத்தில் இருந்து கொண்டே எம்பெருமான் தவிர ஏனையவற்றில் ஈடுபாடற்ற பரமைகாந்திகள் கணக்கற்றவர் வசித்து வருகின்றனர்.  கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், கிடாம்பியாச்சான், மிளகாழ்வான், திருக்குருகைப்பிரான்பிள்ளான் என எதிராஜரின் சீர்மிகு சீடர்கள் அரங்கத்தின் வைணவத்துக்கு அரண்களாக உள்ளனர்.

ஶ்ரீரங்கநாதனும் ஶ்ரீரங்கநாயகியும் நித்யோத்ஸவம், பக்ஷோத்ஸவம், மாஸோத்ஸவம் என்று, தினமும் திருவிழாக்களைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பொலிக, பொலிக, பொலிக என ஆழ்வார் பாடியது இன்று அரங்கத்தில் திருவாகத் திகழ்கிறது.  எதிராஜராம் ராமானுஜரின் அருள் மொழிகளைக் கேட்டு லட்சக் கணக்கில் மக்கள் நல்வாழ்வு அடைகின்றனர்.  ராமானுஜன் சொல்வன்மைக்கு யாது காரணம்?” என திருக்குறுங்குடி நம்பி சந்தேகம் கொண்டு பின்னர் சிஷ்யனாகி அதனை அறிந்தமையை முன்னமேயே கண்டோமன்றோ!  இதோ.. இத்திருவரங்கத்தில் அதன் பெருமை தொடர்கின்றது.

பொன்னரங்கமென்னில் மயலே பெருகும் இராமானுசன் என்கிறார் திருவரங்கத்து அமுதனார்.  ரங்கநாதன் மீது மையல் கொண்டவர் ராமானுஜர்.  அவர் மூலமாகத்தானே தன் உபதேசங்களை ரங்கநாதன் உலகறியச் செய்கிறான்.

முக்கியமாக, சரணாகதி சாஸ்த்ரம் (அடைக்கலமே ஆன்மாவைக் காப்பாற்றும்) உலகில் செழித்து,  எல்லோரையும் வைகுண்டத்தை அடைவிக்க வேண்டும் என்பதில் ரங்கநாதன் உறுதியாக இருந்தான்.  ராமானுஜனாக (பலராமன் தம்பியாக) தான் உரைத்த கீதையின் பொருளை- குறிப்பாக சரம ச்லோகத்தின் பெருமையை – இந்த ராமானுஜரைக் கொண்டு பிரசாரம் செய்ய தீர்மானித்தான்.

அவதாரங்களில் உயர்ந்தது அர்ச்சாவதாரம்.  அதாவது  தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் என்பதாக நாம் எப்படியெல்லாம் விரும்புகிறோமோ அப்படியெல்லாம் அலங்காரங்கள், உத்ஸவங்கள் செய்து பெருமாளை ரசிக்கலாம்.

ஒரு சமயம் பங்குனி உத்திரத் திருநன்னாள்.  வைணவ திருகோயில்களுக்கு இந்நாள் மிகவும் முக்கிமானது.  ஏனெனில் அன்றுதான் பிராட்டியின் திருவவதாரம்.  ஆம்! ராமனாக, கிருஷ்ணனாக, நரஸிம்ஹனாக அவதரித்த பெருமாள் அந்தந்த அவதாரங்களில் ஜயந்தி (பிறந்த நாள்) கொண்டாடுகிறான்.  ஆனால் சீதையோ, ருக்மிணியோ என்று பிறந்தார்கள் என்பது தெரியுமா?  அவர்களின் பிறந்த நாளை நாம் கொண்டாடுகிறோமா?

அதாவது பெருமானுக்குக்கூட அவதாரங்களில் கர்ப்பவாஸம் உண்டு.  ஆனால், பிராட்டி என்றுமே அயோநிஜை.  தானாக ஆவிர்பவிப்பவள்.  அதில் குறிப்பாக, துர்வாஸ முனிவரின் சாபத்தினால் மூவுலகிலும் மஹாலக்ஷ்மி மறைந்தாள்.  பின்னர் தேவர்களும் அசுரர்களும் அமுதத்துக்காகப் பாற்கடலைக் கடைந்தனர்.  அமுதில் வரும் பெண்ணமுதமாக மஹாலக்ஷ்மி அதில் ஆவிர்பவித்தாள்.  கடற்கரையிலேயே அவளின் திருமணம் அன்றைய தினத்திலேயே நடந்தேறியது.

இப்படி அவள் அவதரித்து அழகிய மணவாளனாம் எம்பெருமானை மணம் புரிந்த திருநன்னாள் பங்குனி மாதம் உத்திர நக்ஷத்திர திருநாள்.  அதனால்தான் எல்லா விஷ்ணு கோயில்களிலும் விமரிசையாக பெருமாள், தாயார் கல்யாண உத்ஸவம் அன்று நடைபெறும்.  சேர்த்தி உத்வஸம் என்று ஒரே ஆஸனத்தில் பெருமாளையும், தாயாரையும் எழுந்தருளப் பண்ண வைத்து பக்தர்கள் சேவித்து மகிழ்வார்கள்.

எல்லாக் கோயில்களிலும் இது விமரிசையாக நடந்தாலும் திருவரங்கத்துக்குப் பெருமை சேர்க்கத்தான் ராமானுஜர் இருக்கிறாரே!  ரங்கநாதனும் அதற்காகத்தானே அவரை எங்கும் செல்ல விடாமல், ஒருவேளை சென்றாலும், உடனேயே திரும்பி வரும்படியாகச் செய்து விடுகிறானே.

இந்த சமயம் பங்குனி உத்திர நன்னாள்.  ஶ்ரீரங்கன் ரங்கநாயகியின் சன்னிதிக்கு எழுந்தருளி அங்கே சேர்த்தி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திருநாளன்று ரங்கநாயகி மண்டபத்தில் ஜே! ஜே என்று கூட்டம் அலைமோதுகிறது.  ஒரே சமயத்தில் தன் குழந்தைகள் அனைவரையும் உடன் சேர்த்து தாய், தந்தையர் களிப்பது போன்று ரங்கனும், அவன் நாயகியும் மகிழ்ந்துறைகின்றனர்.

சிஷ்யர்கள், பக்தர்கள் புடைசூழ ராமானுஜர் அவ்விடத்துக்கு பெருமாளைச் சேவிக்க வருகிறார்.  மக்கள் வெள்ளத்தினூடே அவரின் வருகையை திவ்ய தம்பதிகள் மகிழ்வுடன் பார்க்கின்றனர்.  இதுவரை இருந்த சலசலப்பு ஒரே நொடியில் அமைதியாகிவிட்டது.  மக்கள் ராமானுஜர் மீது கொண்ட மதிப்பு அத்தகையது.  எங்கும் நிசப்தம்.  எல்லோருடைய கவனமும் ராமானுஜர் மீதே நிலைத்து நின்றன.  தங்களை சேவிக்க மறந்து ராமானுஜரையே வைத்த கண் வாங்காமல் மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருப்பதை திவ்ய தம்பதிகளும் ரசித்தனர்.

மெதுவாக மண்டபத்தின் படிக்கட்டுகளில் ஏறி பெருமாளையும், தாயாரையும் சேவித்தார் ராமானுஜர்.  இவன் அழகிய மணவாளன்.  அவனழகைச் சேவிக்க இரண்டு கண்கள் போதாது.  ஆனால், ராமானுஜரால் அத்தனை அழகையும் அள்ளிப் பருக முடிந்தது.  ஏனெனில் அவர்தான் ஆதிசேஷன் அவதாரமாயிற்றே.  இமையோர் தலைவனை இமைக்க மறந்து சேவித்தார்.  ராமானுஜரின் உள்ளத்தில் பக்தி வெள்ளம்.  இரண்டும் எதிரெதிரே பொங்கிப் பிரவகிக்கின்றது.

நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனிக்கிறது எதிரே உள்ள கூட்டம்.  திருவடி முதல் திருமுடி வரையிலும் நிதானமாக சேவிக்கிறார் எதிராஜர்.  காதல் கணவனை அன்பு ததும்ப ஆசை மனைவி அனுபவிக்கும் நிலையிது என்று, நாம் புரிந்து கொள்ள, பெரியோர்கள் உதாரணம் காட்டுகின்றனர்.

ஒருபுறம் அரங்கம் நிறைந்த மக்கள் வெள்ளம்.  மறுபுறம் அரங்கநாயகன்.  நடுவினில் தனிப்பெரும் தலைவனாகிய ராமானுஜர்.  அரங்கனின் அழகிய முகத்தில் மெலியதான புன்னகை தவழ்ந்தது.  என்றுமே அவன் திருமுகம் மந்தகாசத்துடன் கூடியது என்றாலும், இன்றைய புன்னகையில் ஏதோ திருவுள்ளம் உறைந்துள்ளது போலும்.  அருகிலிருந்த அன்னையான ரங்கநாயகியும் ஆமோதிப்பது போன்று மெதுவாகத் தலையசைத்தாள்.

எம்பெருமான் திருவுள்ளத்தில் என்ன உள்ளது என்பதை அறியும் வன்மை யாருக்கு உள்ளது?  அவன் அடியார்களே அதை அறிபவர்கள்.  இன்று அரங்கனின் அந்தரங்கத்தை ராமானுஜர் நன்கு உணர்ந்தார்.  அந்த ரங்கன் அவரிடம் அந்தரங்கமாக ஏதோ சொல்லியுள்ளான் போலும்.  கிடைத்த வாய்ப்பை வீணாக்காதவன்தானே செயல்வீரன்.

முன்பொரு நாள் குருக்ஷேத்ர யுத்தத்தில் சோகத்தினால் கலங்கிய அர்ஜூனனின் கலக்கம் தெளிய கீதை எனும் பெரும் தத்துவத்தை உபதேசித்தவன் இதே ரங்கன்.  அரங்கம் என்றால் மேடை என்பது தானே பொருள்.  அன்று யுத்தரங்கத்தில் இவனின் பிரசங்கத்தை கேட்பவருமில்லை.  போற்றினவரும் இல்லை.  அர்ஜூனன் ஒருவனே கிடைத்தான்.  ஒரு வழியாக மனது இசைந்து யுத்தம் செய்தான்.  இருப்பினும் உயரிய அக்கீதையின் உட்பொருளை உலகம் உணர வேண்டாமா?  அதே அரங்கன் இன்று அரங்கத்தில் குழுமியுள்ள மக்கள் திரளைக் கண்டான்.  ராமானுஜரின் அந்தரங்கத்தில் புகுந்து பேச வைத்தான்.  கணீரென்று அவர் அக்கூட்டத்தில் பேசியது, அரங்கத்தின் திருமதிள்களில் இன்றும் எதிரொலிக்கிறது.

அரங்கம் ஏறிய அந்தரங்கம்

எதிரே பெரும் ஶ்ரீவைஷ்ணவத் திரள்.  எல்லோரும் ரங்கா!  ரங்கா!  என்று இதுவரையிலும் ஓலமிட்டவர்கள், இப்போது ராமானுஜா!  ராமானுஜா!  என்று கொண்டாடி மகிழ்கின்றனர்.  அரங்கனும்,  அழகிய  நாச்சியாரும் மகிழ்ந்து இதனை ரசிக்கின்றனர்.  சரி…. ராமானுஜனாக (பலராமன் தம்பியாக), தான் சாதிக்க முடியாததை, தற்போது ராமானுஜராக (ஆசார்யராக) சாதிக்கலாம் எனும் எண்ணம் அரங்கனின் அந்தரங்க திருவுள்ளம்.

எல்லோரும் குழுமியிருந்த இடத்தில் யாருமே கேட்காமலிருந்தாலும் அர்ஜுனனுக்கு கீதையைக் கூறியவன்;  இப்போது எதிராஜர் என்ன சொன்னாலும் கேட்பதற்குத் தயாராக உள்ள இக்கூட்டத்தைக் கண்டு வாளா இருப்பானா என்ன!  எனவே அவன் தன் அந்தரங்கக் கட்டளையை, அந்த ரங்கனின் கட்டளையை,  ராமானுஜருக்களித்தான். 

ரங்கன் ஒரு பித்தன்.  தன் பக்தர்கள் எவ்வாறேனும் தன்னை வந்து அடையமாட்டார்களா!” என்று ஏங்குபவன்.  மிகவும் கடினமான பக்தி முதலான வழிமுறைகளைச் சொன்னால், எங்கே இவர்கள் பயந்து தன்னிடம் வராமலேயே இருந்து விடுவரோ எனத் தயங்குபவன்.  பத்துடை அடியவர்க்கு எளியவனன்றோ!  ஆகையால் எல்லோரும் வாழ்ந்து போகும்படியான ஒரு வழிமுறையை உலகிற்குணர்த்த அத்திவ்ய தம்பதிகள் தீர்மானித்தனர்.

முதலில் உபாயத்தின் மேன்மை அறியலாம்.  பின்னர் வாய் திறந்த அரங்கனின் வைபவத்தை அறியலாம்.  எல்லாம் ராமானுஜர் அநுக்ரகம். 

பரமபதமாகிய மோட்சத்தை அடைய இரண்டே வழிகள் தான் உள்ளன.  இது தவிர வேறெந்த உபாயத்தினாலும் மோட்சத்தை அடைய முடியாது.  அது தவிர மோட்சத்தை அருளுபவன் எம்பெருமான் ஒருவனே.  அவன் தவிர வேறு எவர்க்கும் மோட்சம் அளிக்கும் தகுதி இல்லை.  எனவே,  தேறும் கால் தேவன் ஒருவனே என்று அறுதியிடுகின்றனர் ஆழ்வார்கள்.  இதுவே வேதமுரைத்தது.

இரண்டு வழிகளுள் ஒன்று பக்தியோகம்.  மற்றொன்று ப்ரபத்தி யோகம்.  அதாவது ஒருவன் வேதம் கற்கக்கூடிய குலத்தில் பிறந்து (அதுவும் ஆண் மகனாக), வேதத்தை நன்கு கற்க வேண்டும்.  அந்த வேதத்திற்கு ஆறு பிரிவுகள் உண்டு.  அதையும் அறிய வேண்டும்.  இவ்விதம் அறிபவன் வேதத்தில் கூறப்பட்டுள்ளபடியே தனக்குரிய ஒரு உபாஸனையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 

தற்காலத்திலுள்ள நரசிம்ம உபாஸனை,  ஹனுமத் உபாஸனை,  தேவீ  உபாஸனை போன்றதல்ல இது.  இதற்கு வித்யா என்பது பெயர்.  அந்த உபாஸனையை அவன் வாழ்நாள் முழுதும் கடைபிடிக்க வேண்டும்.  அது தவிர மேலும் பல பிறவிகளும் அவனுக்கு உண்டாகும்.  அத்தகு  பிறவிகளிலும் இதையைல்லாம் விடாது (ஒருக்கணமும் விடாது) உபாஸனை செய்ய வேண்டும்.  இதையெல்லாம் அதிகம் விவரித்தால் கதையிலுள்ள சுவாரசியம் போய்விடும்.  மொத்தத்தில் நம்மால் முடியாது.

 சரி. இவ்விதம் சொன்னால், பின் எப்படி சாமான்யர்கள் மோட்சம் அடைவது. நாமெல்லாம் நற்கதி அடைய வழியே இல்லையா! எனும் கேள்வி எழுகிறதே.  இதற்குத்தான் பரம தயாமூர்த்தியான பெருமாள்,  ராமானுஜர் மூலமாக விடை தருகிறார்.

நான் அனைவர்க்கும் பொதுவானவன்.  எல்லோருமே எனக்கு வேன்டியவர்களே என்கிறான் கீதையில் கண்ணன்.  இப்படிச் சொன்னவன் யாரோ ஒரு சிலர் மட்டும் தன்னை வந்தடையட்டும் என எண்ணுவானா? அங்கு கீதையில் சொன்ன ஒரு அர்த்தத்தை இன்று இங்கு அரங்கத்திலும் சொல்லுகிறான்.  ஹே அர்ஜுனா!  எத்தனையோ புண்ணிய பிறவிகள் கழிந்து தான் நாராயணனாகிய நானே அனைத்தும் எனும் நினைவுடன் ஒரு பக்தன் என்னை வந்தடைகிறான்.  ஆனால், இத்தகையதொரு நிலையுடன் என்னை அணுகும் அந்த மஹாத்மா கிடைப்பது மிக, மிக துர்லபமாயுள்ளது என்கிறான்.

இதனால்,”என்னிடம் பக்தர்கள் அதிகம் வர வேண்டும்.  நான் அவர்களுக்கு மோட்சமளித்து அளவில்லா ஆனந்த வாழ்க்கை தர காத்திருக்கிறேன் எனும் திருவுள்ளம் நன்கு தெரிகின்றதன்றோ! அதற்குரிய வழிமுறைகளையும் இப்போது தெளியலாம்.

முன்னம் நாம் பார்த்த பக்தி கடினமானது.  எப்போது பலனளிக்கும் என்பது தெரியாது. நாம் அதைச் செய்யும் வல்லமையற்றவர்கள்.  ஆனால், மோட்சத்தில் விருப்பமுடையவர்கள்.  இதனால் நாம் அவனை அடையும் வழி சுலபமானதாகவிருந்தால் மேலானது.  அத்தகையதொரு வழிமுறைதான் சரணாகதி என்பது.

 நான், என்னைச் சேர்ந்த அறிவுடைய அறிவற்ற என அனைத்தையும், ஹே ப்ரபோ! தேவதேவ! நீ உன் கைங்கர்யத்துக்காக ஏற்றுக்கொள் என அனைத்தையும் அவன் திருவடியில் சமர்ப்பிப்பதற்குத்தான் சரணாகதி என்பது பெயர்.  இதனை யாரும் செய்யலாம்.  எக்காலத்திலும் செய்யலாம்.  எவ்விடத்திலும் செய்யலாம்.  எவ்வித நியம நிஷ்டைகளும் கிடையாது.  ஒன்றே ஒன்றைத் தவிர.  அது மஹாவிச்வாஸம்“.  எல்லாம் நாராயணனே;  அவனே நம்மை ரட்சிப்பவன்;  அவனை அடைவது தவிர இப்பிறவிக்கு பயன் ஏதுமில்லை எனும் உறுதியிருந்தால் போதுமானது.

மகானாகிய ஆசார்யருடைய சம்பந்தத்தை அடைந்து, இந்த ஆத்மாவை மேற்கூறியபடி பகவானின் திவ்யமான திருவடித் தாமரைகளில் சமர்ப்பித்தால்,  இனி நமக்கு பிறவி எனும் பயம் என்றுமே கிடையாது.  ஒரே ஒருமுறை விரைவாக செய்து முடிக்கக்கூடிய கார்யம் இது.  இந்த மாபெரும் அமுத வெள்ளத்தை அகில உலகமும் அடைந்து, அழியாத ஆனந்தமான பேரின்பத்தைப் பெற வேண்டும் என நினைத்த அரங்கன் ராமானுஜரைப் பேச வைத்தான்.  தானும் பேசினான்.

இந்த சரணாகதி மந்த்ரத்துக்கு த்வய மந்த்ரம் என்பது பெயர்.  திருவுடன் சேர்ந்த பகவானுடைய திருவடித் தாமரைகளை அடைக்கலமாக அடைகிறேன்.  திருவுடன் கூடிய திருமாலுக்கு (நாராயணனுக்கு) கைங்கர்யம் செய்கிறேன் என்பது அந்த மந்திரத்தின் பொருள்.  அத்தகைய உயரிய மந்திரத்தைக் கூறி என்னையே அடைக்கலமாக அடைவாயாக!”; நான் உன்னை அனைத்து வினைகளிலிருந்தும் காப்பாற்றுகிறேன் என்று கீதையின் சரம ச்லோகத்தில் கண்ணன் உபதேசித்தான்.  கவலைப்படாதே எனும் அவன் வாக்கியத்தின் பொருளை இன்று உலகம் உணர்கின்றது.

பரம பவித்ரமான பங்குனி உத்திரத் திருநன்னாளில், அரங்கனின் ஆணைப்படி, உலகறிய, ராமானுஜர் சரணாகதி செய்தார் !  ராமானுஜர் எவ்வழியோ,  உலகம் அவ்வழி ! என்பதற்கேற்ப, தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் ரங்கநாதன் திருவடிகளில் சமர்ப்பணம் செய்தார்.

அந்தச் சமயம் ராமானுஜரால் அருளிச் செய்யப் பட்ட அமுத மொழிகளுக்கு கத்ய த்ரயம் என்பது பெயர்.  அரங்கன் திருவடிகளில் அடைக்கலம் அடைய சரணாகதி கத்யம்‘;  ஶ்ரீவைகுண்டத்தின் பெருமையை வர்ணிக்கும் வைகுண்ட கத்யம்‘; பூலோக வைகுண்டமான ஶ்ரீரங்கத்தின் அழகை வர்ணிக்கும் ஶ்ரீரங்க கத்யம் என மூன்றும் ஆசார்யரால் அருளப்பட்டன.

எம்பெருமானே !  உன் திருவடித் தாமரைகளில், வேறொன்றிலும் பற்றில்லாத எனது மனது லயிக்க வேண்டும்.  இதுவரையிலும் நான் செய்த தீவினைகளிலிருந்து நீ காக்க வேண்டும்.  அவற்றை இனியும் நான் செய்யாதபடி நீ தடுத்தாட்கொள்ள வேண்டும்.  கருணாநிதியே!  குணக்கடலே,  இனிமையானவனே உன்னையே சரணடைந்தேன்  என்று இதில் பகவத் ப்ரார்த்தனையைச் செய்கிறார்.  பிராட்டியாம் ரங்கநாயகித் தாயாரை முன்னிட்டு, ராமானுஜரால் ரங்கநாதனிடம் சரணாகதி செய்யப்பட்டது.

இங்கிருக்கும் காலம்வரை அடியேன் தேவரீர் உகந்த கைங்கர்யத்தை – ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்  என்று ப்ரார்த்தனை செய்தார்.  உடனே, பேசும் தெய்வம் அரங்கன்,  அப்படியே ஆகுக.  உன் விருப்பங்கள் அனைத்தும் ஈடேறும்.  இந்நிலவுலகில் இருக்கும் வரை முன் சொன்ன த்வய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டேயிரு.  இந்தத் திருவரங்கத்திலேயே பரம சுகமாக வசிக்கக் கடவாய்  என்று திருவாய் மலர்ந்தருளினான்.  இந்த அதிசயத்தை உலகமே கண்டு போற்றியது.

எளிமையான இந்த உபாயம் எல்லோருக்கும்தானே.”தன்னடியார்கள் இதைச் செய்தால் அவர்கள் திறத்தில் இரங்கும் அரங்கன் பித்தன் என்கிறார் ஆழ்வார்.  அன்பர்களே! இனியும் என்ன குறை; என்ன  கவலை! உய்ய ஒரே வழியான உடையவர் திருவடியை அடைந்துய்யலாம்.  அரங்கத்தில் நிகழ்ந்த அந்தரங்கம் இந்த உலகிற்கோர் அற்புதம்.

அன்புடன்

அனந்தன்


Aranganuraithaandharangam(Secrets uttered by Lord Ranganathan)

Thiruvarangam has the distinction of being called “BhoolokaVaikuntam” or the Vaikuntam on earth. This is the Head Quarters of all the 108 divyadesams. This is the place where azhwars and eminent acharyas starting from Naathamunigal and Alavandhar to Swami Ramanuja, have lived for the propagation of Vaishnavam. For them, Aranganar (presiding Lord of SriRangam) is the only refuge. Azhagiyamanavalan himself is their only love.

Did Azhwars and acharyas embraced Him with their unflinching devotion, or did Aranganar embrace them? That separate subject for interesting debate at another time.

Now, Swami Ramanuja took the responsibility of being the Chieftain and served selflessly. Around 8,000 sanyasis said to have been there with him at that time. Besides, countless number of householders who worshipped only Sriman Narayana (such people are called paramaikaanthis) were living there. Many distinctive disciples of Swami Ramanuja such as Koorathazhwan, Mudaliaandan, Embar, ArulaalaPerumalEmberumaanaar, KidambiAachan, Milagazhwan and Thirukurugaipiraanpillan, who were like the fort of Sri Vaishnavism, of Sri Rangam.

SriRanganaathar and SriRanganaayaki are enjoying Nithyothsavam, Pakshothsavam, maasothsavam and other utsavams (festivals) everyday.

Azhwar sang, “Poliga, Poliga, Poliga” then, which today is shining as the wealth of Sri Rangam.

Countless people have benefitted from Ethirajar (Ramanuja)’s words of wisdom for their welfare. Earlier, we saw how Lord Nambi, after having a doubt “what is the reason for Ramanuja’s oratory power”, became Ramanuja’sdisciple to experience his teachings. Lo! The same continues in Thiruvarangam too.

Thiruvarangaamudhanar once said, “PonarangamEnnil, mayalperugum Ramanuja.” (meaning: when I say shining Sri Rangam, Ramajuja gets into a trance) Ramanuja was mad (crazy) mad with love for Ranganathan.  Lord Ranganathan published his upadesam (preaching) to the world only through Ramanuja.

Specifically, Ranganathan was determined that saranagathi principle should prosper in the world and all should attain Sri Vaikuntam. He decided to preach, through Ramanjuja, the meaning of Bhagavad Gita, (particularly the greatness of Charama Slokam), which, He, as brother of Rama (younger brother of Balarama) gave out.

Archavatharam is the best of all avatharams (incarnations). “Whichever image you like, is My image” is what it is. Whatever way we wish, we can enjoy Him, by dressing Him, conduct celebrations etc

Once, it was the holy day of Panguniuthiram.This is an important day for Sri Vaishnava temples. That is the day of Thiruavatharam (Appearance day) of Piratti (consort of Lord). In general, we celebrate it as Jayanthi day, (the birthdays) of Perumalthose days when He incarnatedas Rama, Krishna or Nrsimha. But, do we know the birthdays of Sita or Rukmini? Do we celebrate Their birthdays?

Perumal has spent time in the womb of different mothers during His avatharas. Pirattis Ayonija – she has always emerged directly without going through the process of birth.    She appears on Her own. One time, Mahalakshmi disappeared from the face of all the three worlds due to a curse by Sage Durvasa. Later, when Devas and Asuras came together to churn the paarkadal (milky ocean) to get nectar, there emerged from it, like a lady-nectar, Mahalakshmi. On that very day, Her marriage happened on the shores of paarkadal.

Her advent and marriage to the BeautifulBride-groom, Perumal, took place on the uthiram star in the tamil month of Panguni. In commemoration of this event, a kalyanautsavam (divine marriage) is performed for Perumal and Piratti on that day every year, in all Sri Vaishnava temples. Called as “Serthiutsavam”, Perumal and Piratti are seated together and devotees happily pray them on this day.

Though this event happens in all temples, there is Sri Ramanujato add extra touch of specialty to Sri Rangam. This is also why Lord Ranganathar doesn’t let Ramanuja go away from Him, and even if he goes, He makes him come back soon.

Once it was panguniuthiram day, this day, whenLord Ranganathar comes to the shrine of Ranganayaki, then together They Bless the devotees, at RanganayakiMandpam there is a very large congregation of bustling devotees. Perumal and Piratti were overwhelmed by the joy, just like how parents would be very happy to be with all their children at one place.

Ramanuja, along with this retinue of devotees and disciples, came there to take the Blessings of Perumal and Thaayar. TheDivyadampathi (Perumal and Piratti) welcomed him joyously. Suddenly, the crowd became silent. That was the respect the people had for Swami Ramanuja. Everyone’s attention was focused only on Ramanuja.The Divya Dampathi were enjoying the pointed attention that Ramanuja was getting from the crowd which forgot to have darshan of Them.

Slowly Ramanuja climbed the steps of the mandapam and prayed Perumal and Thayar. The Lord is the beautiful Groom.It is impossible for normal people to behold His beauty all at once. But, Ramanuja was able to do so because he is none other than the incarnation of Adiseshan. He prayed the Lord of Devas, without batting an eye. Ramanuja’s heart brimmed with devotion. Both Lord’s beauty and Ramanuja’s devotion were overflowing there.

The crowd watched keenly at the unfolding of events. Ramanuja slowly savoured the beauty of Perumal from His Holy Feet to His Crown. To help us understand this depth of devotion, our elders have metaphorically explained this feeling as that of a “loving wife enjoying the love and affection of her beloved husband.”

With thronging crowds on one side and Lord Ranganathar on the other. Swami Ramanuja stood in between as the one and only leader. Lord Ranganathar wore a mesmerizing smile. He is always so, but today, there was also a slight ‘indication’ in His smile. Mother Ranganyakai also slightly nodded Her head, assenting to His thoughts.

Who has the skill to know what is in His mind? Only His devotees know His mind. Today, Ramanuja clearly understood the secret thoughts of the Lord. It seemed that the Lord Ranga had secretly told something to Ramanuja. One who makes the most of the given opportunity is a champion.

This is the same Ranganathar who preached at Kurukshethra war, the great concept of ‘Gita’ to Arjuna, who was disillusioned by sorrow. Arangam means stage. On that day, there was no one to listen to His preaching or appreciate the same. Only Arjuna was there. After listening to all that the Lord said, Arjunan relented and went for war. But should not everyone in the world understand the inner meaning of this exalted Bhagavad Gita? Same Arangan (Krishna) today saw the congregation in Arangam. He entered into Ramajua and made him speak. The booming voice in which Ramanuja spoke those words, resonate even now in the compound walls of Sri Rangam.

Andharam Eriya Andharangam(Secrets that got up the stage)

Swarms of Sri Vaishnava people who were shouting “Ranga! Ranga!” until now, started celebrating Ramanuja. Lord Ranganathar and Piratti were also proudly enjoying these scenes. Amidst these scenes, Ranganathar secretly decided to accomplish through Ramanuja, what he could not do in the battlefields of Kurukshetra.

Though everyone was gathered in the Kurukshetra battlefield, no one could listen to Him. Yet He preached Bhagavd Gita to Arjunan. Today, everyone is ready and willing to listen to Swami Ramanuja. Will He let go of such an opportunity! So, He gave His secret order (wish) to Ramanuja.

Rangan is paranoid. He longs for His devotees to reach Him through some means. He was also skeptical about teaching the difficult path of Bhati yogam to people, as He feared that people would get scared and would never come to Him. He wanted to be accessible to all His devotees. So, He and Piratti decided to give everyone an easy option that they would be able to practice.

First of all, let us understand Upayam (the means), so we can understand the greatness of Lord Ranganathan with the blessings of Swami Ramanuja.

There are only two ways to reach Paramapadham (attain moksham). There is no other means to moksham. In addition, Lord Vishnu is the only one who can grant moksham and no one else has that privilege. This is why both Azhwars and vedas pronounce that “He is the everlasting refuge.”

Out of these two paths – one is Bhati yogam and the other is prapatti yogam. It means, a person who is a male and is born in a lineage that is eligible to learn veda, must learn it well. There are six branches in vedas and he should also know that. In addition, he should follow the rituals (upasana) as said in the vedas.

This upasana is not like the Nrsimha upasana, Devi upasana or Hanumath upasana that’s prevailing in modern days. This is called ‘vidya’ and one has to follow it all through his life. Also, he will have rebirths and during all those births, he should follow each of these rules strictly. If we keep elaborating on this, the essence of the story will be lost. Overall, this is something that we cannot follow.

This brought up the question – how can a common man get moksham? Does he not have any option to reach Him? The All-Compassionate Lord gave the answer to this question through Ramanuja.

“I am common to everyone. I want all of you.” – says Krishna in Bhagavad Gita.  Will a person who said this ever think that only a chosen few should reach Him? Today, he says a meaning, which is the same one that he uttered in Bhagavad Gita that day. Then, He said, “Hey Arjuna! Only after many births does a person have a birth in which he thinks that Narayanan is everything and reaches Me. But, it is very difficult to get a person like that”, he said.

From this, we can understand that He wishes, “More people should come to me. I’m waiting to give them moksham and a blissful life after that.” Now, we can also know the means for this.

The bhakti yogam that we saw earlier is difficult to practice. We don’t know when it will yield results. Also, we are incapable of following it. At the same time, we are interested in getting moksham. This is why, it is best if there is an easier path to reach Him. Such a means is “saranagathi.”

Saying, “O Lord, please take me and all the living and non-living things associated with me for your service” and submitting everything at His lotus feet is called saranagathi. Anyone can do this. We can do this at any time. It can be done anywhere. There are no rules related to it, except one called “Maha Vishwasam,” which is unflinching faith in Sriman Narayana. We should just understand and resolve to ourselves that He is everything, He will take care of us and we have no other goals in this life except to reach Him.

This saranagathi mantram is called “dwaya mantram.” The meaning of this mantram is, “I am taking refuge in the lotus feet of the Lord Who is always with Piratti. I am doing service to Perumal and Piratti.” In Bhagavad Gita’s charama slokam, He says, “Take refuge in Me! I will save you from all sins.” Today, the world understood the meaning of His word – “Don’t fear:”

On this divine day of Panguni uthiram, under the orders of Lord Ranaganthan, Swami Ramanuja did saranagathi. The world follows Ramanuja, and true to this, Ramanuja did saranagathi not just for himself, but also for all others associated with him.

The words that Ramanuja uttered during that time is compiled as “Gadya Trayam.” It comprises of “Saranagathi Gadyam” that teaches us to take refuge in Rangannathar’s lotus feet, “Vaikunta Gadyam” that describes the Lord at Sri Vaikuntam and “Sriranga Gadyam” that describes the beauty of Sri Rangam (Bhooloka Vaikuntam).

In this book, Swami Ramanuja prays to Ranganthar and says, “O Lord! I want my mind to meditate only on Your lotus feet without falling to any distractions. You have to protect me from all the sins I have committed so far. O compassionate One! Virtuous One! I take refuge only in You.” This way, Ramanuja did saranagathi to Lord Ranganathar in the presence of Ranganaayaki.

“As long as I am here, I want to serve you tirelessly,” prayed Swami Ramanuja. Imemdiately, Lord Ranganathar said, “So be it. All your wishes will be fulfilled. Keep chanting the dwaya mantram as long as you live here. You will continue to live comfortably in this Sri Rangam.” The entire world watched this event with awe.

This easy means is for everyone. Azhwar says, “When followers do this, unwanted thoughts will leave them.”

Friends! Why fear! Let us all reach the golden feet of Swami Ramanuja. The event that happened in Sri Rangam is a fantastic event for the entire world.

Translation by Shishyas of Sri APN Swami


Sri APNSwami’s Shishya Writes | சர்க்கரைப் பொங்கலும் சரணாகதியும்

குறிப்பு: அடியேன் ப்ரசன்ன வரதன், பஹ்ரைன் தேசத்தில் பணிபுரிந்து வருகிறேன். ஆசார்யன் அனுக்கிரஹத்தினாலே, இங்குள்ள 30 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் திவ்யப்ரபந்த ஸத்ஸங்கத்தில் ஒரு அங்கமாக கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அடியேனுடைய  சரணாகதியின் போது ஏற்பட்ட அனுபவங்களையும் ஸ்ரீ APN ஸ்வாமியின் காலக்ஷேபத்தின்போது கிட்டிய ஞானத்தையும் இங்கே பகிர்கிறேன். பிழையிருப்பின் பொருத்தருளப் பிரார்த்திக்கிறேன்.

நமது ஸ்ரீ APN ஸ்வாமி 07-05-2022 சனிக்கிழமையன்று சாதித்த சில்லறை ரஹஸ்யங்கள் காலக்ஷேபத்தின்போது..

“சரணாகதி பண்ணிக் கொண்டால், சர்க்கரைப் பொங்கல் தருவா.. வாங்கோ” என்று சொல்லி ஒருவரை அழைத்துக் கொண்டுபோய், அவரும் சர்க்கரைப் பொங்கலுக்கு ஆசைப்பட்டு ப்ரபத்தி செய்து கொண்டால், எம்பெருமானின் அனுகிரஹத்தாலே அவருக்கு ஸத் சிந்தனை உண்டாகும் / வ்ருத்தியாகும் என்று சாதித்தார். சரணாகதி பற்றி அத்தனை தெரியாத போதிலும் அல்லது அத்தனை விருப்பமில்லாத போதிலும், எம்பெருமானுடைய அனுகிரஹத்தினாலே நமக்கு சரணாகதி நடந்தேறினால், கொஞ்சம் கொஞ்சமாக அதுகுறித்து தெளிவும், சம்ப்ரதாயம், அனுஷ்டானம் இவைகளில் மெள்ள மெள்ளப் பற்றுதலும் உண்டாகும் என்பது உட்கருத்து.

உண்மை.

அடியேன் இந்தியா வரும்போதெல்லாம், தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தாலன்றி, ஆசார்யனை நிச்சயம் சேவித்துவிடுவேன். 2021 ஜூலை மாதம் இந்தியா வந்திருந்தபோது ஆசார்யன் சாதுர்மாஸ்ய விரதத்தை கும்பகோணத்தில் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார்.

சேவித்துவிட்டு வரலாம் என்று முடிவானபோது, அடியேனின் மாமனார் மாமியார், எங்களுக்கும் ஆசார்யனை சேவிக்க வேண்டும். பரந்யாஸம் செய்துவைக்க வேண்டுமென்று ஆசார்யனை சில வருடங்கள் முன் பிரார்த்தித்தோம். ஆனால் அப்போது ஆசார்யன் அனுக்கிரஹம் கிடைத்திருக்கவில்லை. இந்த முறை கண்டிப்பாக ஆசார்யனிடம் பிரார்த்தித்து சரணாகதி செய்து கொள்ள வேண்டும் என்றனர்.

அவர்கள் பரந்யாஸம் செய்துகொள்ளவும், நாங்கள் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடவும் (ஸ்ரீஸந்நிதியில் ததியாராதனத்திற்கு விண்ணப்பித்திருந்தபடியால்) என, அனைவரும் செல்ல முடிவாயிற்று. ஆசார்யன் மிகப்பெரும் அனுக்கிரஹம் பண்ணப்போகிறார் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.

அந்த நாளும் வந்தது. காலை உணவருந்திவிட்டு தேனியிலிருந்து கிளம்பினோம். நடுவில் 2 முறை காரும் நாங்களும் இளைப்பாறி, ஆறாமல் சூடாக கொஞ்சம் காபியை நாங்களும் பெட்ரோலை காருக்கும் கொடுத்து சுமார் 8 மணியளவில் கும்பகோணம் அடைந்தோம். நேராக ஸ்ரீஸந்நிதி சென்று ஆசார்யனை சேவித்தோம்.

சாவதானமாக கைங்கர்யபரர்களிடம் பேசிக்கொண்டிருந்த ஆசார்யனிடம், மாமனார் பரந்யாஸத்திற்கு விண்ணப்பித்தார். மறுநாள் 44ம் பட்டம் அழகியசிங்கரின் வார்ஷிக திருவாராதனம் இருந்தபடியால், அதற்கடுத்த நாள் செய்துவிப்பதாய் அவருக்கு ஆசார்யன் அநுக்ரஹம் செய்துவிட்டு, அப்படியே நானும் பிரார்த்தனை செய்யப் போகிறேனோ என்று நான் இருந்த பக்கம் பார்த்தார். அவருக்கா தெரியாது நான் அப்படியொன்றும் முடிவு செய்திருக்கவில்லையென்று…

ஆனாலும், அவருடைய திருவாக்கினின்றும் நான் சரணாகதி பற்றி தெரிந்துகொள்ள அப்படி கேட்டிருக்கிறார். “அழகியசிங்கர் திருவுள்ளம்” என நான் ஏதோ வாய்க்கு வந்ததை உளறிவைக்க, இதுல நான் சொல்றதுக்கு என்னடா இருக்கு? நீ சொல்லு.. என்றார். நான் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாயிருக்க, “என்னடா விஷயம்” எனக்கேட்டார் ஆசார்யன். மாத்யாஹ்நிகம் திருவாராதனம் எல்லாம் பண்றதில்லை.. இது நான்.

இதையும் அதையும் போட்டு கொழப்பிக்காதடா. இது நித்ய கர்மா.. அது பர சமர்ப்பணம் என்று சொல்லிவிட்டு, மேலும் பரசமர்ப்பணம்-ன்னா என்ன? நாமெல்லாம் யாரு? எம்பெருமானோட குழந்தைகள். இந்த ஜீவாத்மாவை, அந்தப் பரமாத்மா-கிட்ட சேர்த்துக்க வேண்டியும், இந்த ஜென்மாவோட முடிவிலே, நமக்கு மோக்ஷப்ராப்தி கிடைக்க வேண்டியும் பண்ணிக்கற விஷயம். என்ன.. பண்ணிக்கிறாயா? அதே வாத்சல்யத்துடன் அன்பான குரலில் கேட்டார்.

எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படியொரு ஆசார்ய கடாக்ஷம்?  அப்போதும் கூட என் மந்தபுத்திக்கு அது எட்டவில்லை. ஆனாலும், என்னையறியாமல் என் வாய் “அழகியசிங்கர் உத்தரவு” என்று சொன்னது.

நாங்கள் பதிவு செய்திருந்த ததியாராதனம் மறுநாள் 44ம் பட்டம் அழகியசிங்கரின் வார்ஷிக திருவாராதனம் அன்று வாய்க்கப்பெற்றது எத்தனை பெரிய பாக்கியம்.. அதற்கடுத்த நாள் எங்களுக்கு பரந்யாஸம் செய்துவித்தார் ஆசார்யன். அதன் ஏற்றம் அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை என்பதே ஸத்யம்.

அதற்கடுத்த சில நாட்களில் மைசூரு அஹோபில மடத்திலிருந்து ஸ்ரீ APN ஸ்வாமியின் காலக்ஷேபம் ஏற்பாடு செய்கிறோம். விருப்பமிருப்பவர்கள் கலந்துகொள்ளலாம் என்று மின்னஞ்சல் வந்தது.  உடனே விருப்பம் உண்டென்று பதிவு செய்துவிட்டேன்.

வந்திருந்த நூற்றுக்கணக்கான பெயர் லிஸ்ட்டில், என் பெயரை ஸ்ரீ APN ஸ்வாமி டிக் அடித்தது, என் அதிர்ஷ்டமே. அதிலும், இந்த காலக்ஷேபம் மூலம் என்போன்ற ஒரு வாழைமட்டையின் காதில் நாலு ஸத் விஷயம் விழவேண்டி ஆசார்யன் செய்த அனுக்கிரஹமே என்றால் மிகையல்ல.

காரணமில்லாமல் காரியமில்லை என்று சொல்வதற்கேற்ப, சில பல நாட்களுக்கு முன்னர் “வந்தே வத்ஸ விபூஷணம்” என்ற 3 நாள் ஒர்க்-ஷாப்பில் “ஸமாச்ரயணமும் சரணாகதியும்” என்ற ஒரு தலைப்பில் பல ஞானவான்களின் உபதேசம் நடந்தேறியது. இது காரியம்.

காரணம் – பகவத் ராமானுஜரின் 1005வது திருநக்ஷத்ர வைபவத்தில் அடியேனை உபன்யாஸம் பண்ண வேண்டுமென்று பஹ்ரைன் திவ்யப்ரபந்த ஸத்ஸங்கப் பெரியோர்கள் பணிக்க, தலைப்பு என்னவென்று நான் கேட்க, “ஸமாச்ரயணமும் சரணாகதியும்” என்று பதில் வந்தது.

அடியேனுக்கு ஸமாச்ரயணம் சில பல வருடங்களுக்கு முன்னமே நடந்திருந்தாலும், இந்த ஒர்க்-ஷாப் மூலமாகத்தான் பஞ்சஸம்ஸ்காரத்தின் விளக்கம் புரிந்தது. போலவே, சரணாகதி என்றால் “அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்” என்ற ஒற்றை வரியை தவிர வேறொன்றும் தெரிந்திருக்காத நிலையில், சரணாகதி என்றால் என்ன, அதை எப்படி எப்போது யார் செய்துகொள்ளவேண்டும் என்றெல்லாம் அத்தனை எளிமையாக எனக்கும் கூட புரியும் அளவுக்கு நடந்தேறியது “வந்தே வத்ஸ விபூஷணம்”.

இது நமது ஸ்ரீ APN ஸ்வாமியின் அனுக்கிரஹமே என்றால் மிகையல்ல.

ஆசார்யன் திருவடிகளே  சரணம்

ஸ்ரீ APN ஸ்வாமியின் காலக்ஷேப சிஷ்யன்

அடியேன் தாஸன்

ப்ரசன்ன வரதன் – பஹ்ரைன்
16-May-2022

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19|தூய்மை பணியாளர்களுக்கு ஒரு Royal Salute| Royal Salute to Cleanliness Workers

This article is available in both Tamil (written by Sri APN Swami) and English (translation done by his sishyas).

தூய்மை பணியாளர்களுக்கு ஒரு Royal Salute

 

“சுத்தம் சோறு போடும்” என்பது முதுமொழி. சுத்தம், சுகாதாரம் இதை வலியுறுத்தியே அரசாங்கமும் பல திட்டங்களை முன்னெடுக்கிறது. “தூய்மை இந்தியா “ எனும் மாபெரும் சிந்தனையின் செயல்பாடுகளையும் நாம் பார்த்து வருகிறோம். ஆரோக்யமான வாழ்க்கைக்கு “சுத்தம்” அதாவது “ஆசாரம் “ மிகவும் இன்றியமையாததாகிறது.

ஊரடங்கு சட்டம் முழுமையாக அமுலில் உள்ள நிலையிலும் மருத்துவம், காவல், தூய்மை பணியாளர்கள் அயராது பாடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வுகளையும் ஊடகங்களில் காண்கிறோம். தன்னலமற்ற தொண்டாற்றும் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்பது மிகையல்ல.

தூய்மைப் பணியாளர்களை பாராட்டி மலர்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், பாத பூஜை செய்தும், மக்கள் கொண்டாடி வருவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதே போன்று நாம் அனுதினமும், ஏன் ஒவ்வொரு கணமும் மாலையிட்டு, மலர்தூவி, பாதபூஜை செய்து கொண்டாட வேண்டிய தூய்மைப் பணியாளர்களின் பெருமையைக் காணலாம்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் பெரிய கோட்பாடான “சரணாகதி” என்பதை விளக்கி சுவாமி வேதாந்த தேசிகன் “ரகசியத்ரயசாரம்” எனும் ஒரு நூல் இயற்றியுள்ளார். ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் நற்கதி அடையலாம் என்பதே இதன் தத்துவம். இந்த நூலின் முகவுரையில் “தூய்மை பணியாளர்களைப் போற்றி பின்னர் நூலினை எழுதத் தொடங்குகிறார். அவர்கள் யார்? என்ன செய்கின்றனர்?” என்று பார்க்கலாம்.

தூய்மைப் பணியாளர்களின் காரியம் என்ன? நகரத்தையும் சாலைகளையும் துப்புரவாக வைப்பது. அதாவது குப்பைகள், கற்கள், முட்கள், படுகுழிகள் என பல வகையான இடையூறுகள் பயணிக்கும் பாதையில் இருந்தது என்றால் அதனை சீர் செய்வது. அதாவது குப்பைகளை ஒதுக்கி அப்புறப்படுத்துவது. அதே போன்று சாலைகளையும் செப்பனிடுவது.

அப்போது தானே பயணம் எளிதாகவும், சுகமாகவும் செய்ய முடியும். இதிலிருந்தே புரிகிறதே தூய்மைப்பணி மகத்தானது மட்டுமல்ல சவாலானது. ஏனெனில் ஒரு புறம் தூய்மைப்படுத்தப்படும்போது, மற்றொரு புறம் எவராது அதன் தூய்மையைக் கெடுக்கலாம் அல்லவா!  இவ்வாறு நிகழாவண்ணம் வேலிபோட்டு, அனைத்தையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு, திறமையாகத் தூய்மைப்பணி செய்பவர்கள் நம் ஆசார்யர்கள் .

போச்சுடா! மறுபடியும் ஆரம்பித்து விட்டாயா? என அலுத்துக்கொள்ளலாம். ஆனாலும் மேலே படியுங்கள். எம்பெருமான் வேதம் எனும் ராஜ மார்கத்தில் (Express Highway) பயணம் செய்கிறான். ஆம். அதுதான் அவனது ராஜவீதி. “அதாவது வேதத்தில் உறைபவன் இறைவன்” என்பது பொருள். அப்போது சில வீணர்கள் (வீணர்கள் என்றால் விதண்டா வாதம் செய்பவர்கள். தேவையான விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது தேவையற்ற பதிவுகளை இடையே நுழைத்து கர்வப்படுபவர்கள். குறிப்பாக எதுவும் தெரியாமல், புரியாமலேயே எல்லாம் தெரிந்ததாகத் தங்களை நினைத்துக் கொண்டு இறுமாப்புடன் திரிபவர்கள். மொத்தத்தில் பயனற்ற காரியங்களைச் செய்வதையே தங்களின் பிறவிப் பயனாக எண்ணுபவர்கள்) வேதத்தின் உண்மை நிலை அறியாமல் எதிர்வாதம் செய்திடுவர். அது மட்டுமல்ல, வேதத்தின் உள்ளம் அறியாமல் நேர் எதிராக, தவறாக, விபரீதமாகப் பொருள் கூறுவர்.

சுத்தமாக வைத்திருக்கும் தெருவில் வேண்டுமென்றே குப்பைகளைக்கொட்டுவது, பள்ளம் தோண்டுவது, கல்லும், முள்ளும் கொண்டு கொட்டி பாழ்படுத்துவது என அதர்மமான கார்யங்களைச் செய்பவர்கள் உண்டல்லவா! அதேபோன்று வேத மார்கத்தையும் சிதைகின்றனர் சிற்றறிவாளர்கள். அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குமவர்கள் நமது ஆசார்யர்கள். அதாவது “வைதீக தர்மத்துக்கு கேடு விளைப்பவர்களை களையெடுப்பவர்கள்”.  “ஆரணநூல் வழிச் செவ்வை அழிப்பவர்” என்கிறார் சுவாமி தேசிகன்.

அழகிய வழிதனை ஆபாஸம் செய்பவர்கள் என்று பொருள். இப்படி இவர்களை அடக்கி, வேதத்தின் தூய்மையை நிலைநாட்டுமவர்களே “ஸ்ரீமத் வேதமார்க ப்ரதிஷ்டாபனாசார்யர்” என அழைக்கப் படுகின்றனர்.

 பெருமாளுக்கு உத்ஸவம் என்றால் முதல்நாள் சேனை முதலியார் எழுந்தருளி நகர சோதனை செய்வதுண்டே, நம் ஆசார்யர்களும் நகரத்தை (வேத மார்கத்தை) சுத்தம் செய்யும் தூய்மைப்பணியாளர்கள். தேவாதிராஜனாம் வரதனின் ராஜவீதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து காக்குமவர்கள்.

அத்தகைய மஹாத்மாக்களை போற்றியுகந்து, மலர்தூவி, மாலை அணிவித்து, பாதபூஜை செய்து வழிபடுவது என்றுமே நமது கடமையாகும்.

-ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

07/04/2020

Royal Salute to Cleanliness Workers

Cleanliness is Godliness” is a phrase that we all know and our government has also rightly come up with many schemes that promote health, hygiene, and sanitation, with Clean India being its flagship scheme. All this reiterates the fact that cleanliness and Acharam are an integral part of our lives. 

Even in this state of complete lockdown, medical, police, and sanitation workers are working in full swing and they are being appreciated by all sections of the society. Undoubtedly, no amount of appreciation is enough for their selfless service. 

It is heartening to see that the entire world appreciates their services by showering them with flowers, garlanding them, and by worshipping their feet. Let’s now see some reasons why we should appreciate them every day.

Swami Desikan has written a work called Srimad Rahasya Traya Saram that is based on the SriVaishnava Sampradayam’s fundamental philosophy of Saranagathi. It expounds the fact that everyone, regardless of race, religion, or gender, can attain a good state. In the foreword, Swami Desikan has specifically praised the cleanliness workers. Let’s see who they are and what they do.

What’s the work of a cleanliness worker? To keep the roads and city clean, right? In other words, they remove the stone, garbage, thorns, and other unwanted things from the roads to make it easy for people to travel through it. They remove the garbage and make the roads easy to commute.

Their work ensures that our travel is smooth and easy. This clearly brings out the fact that keeping the roads cleans is not only important, but also challenging. And that’s because when they clean on one side, there is always a possibility for someone to pollute it at the other end. To prevent this, a fence is erected and everything is kept under control to prevent this constant polluting. And our acharyas execute this perfectly.

Though this may sound familiar to you, please read on.

Perumal travels on this express highway called Vedas. Yes, that’s his Raja Veedhi (Royal Street) and it means He is the hidden meaning of Vedas. While traveling, there are a few dissenters, that is those who argue against the tenets established in the Vedas and those who intervene in an important discussion with unwanted and unrelated arguments just to gain attention. This specifically includes those who are highly ignorant, yet they argue as if they know everything. In all, they are people who constantly engage in unwanted activities. Without understanding the essence of Vedas, they argue incessantly and worse, they interpret its meaning wrongly and propagate the same to the world. 

Just like how people engage in wrong activities like polluting a clean street with garbage, digging pits in it, and covering it with stones and thorns, there are many who pollute and misinterpret Vedas also. Fortunately, our acharyas deal with them using their iron fist. That is, they eradicate the wrong notions/interpretations of Vedas with their profound knowledge. Swami Desikan says, “Arananool vazhi chevvai azhippavar.” It means those who pollute a beautiful path. Those who control them and re-establish the right Vedic path are called “Srimad Vedamarga Pratishtaapanaachariar”

Before Perumal’s festival begins, Senai Mudaliar goes on an inspection around the place. Like that, our acharyas are also cleanliness workers who clean the Vedic path and they stay in control of the Raja Veedhi of Varadan at all times. 

Let us praise such great acharyas by showering them with flowers, garlanding them, and by praying at their holy feet. 

-Translation by Sri APN Swami Sishyas

 

Sri #APNSwami #Writes #Trending |சட்டத் திருத்த மசோதா

“சட்டத் திருத்த மசோதா”- இன்று (21/01/19) ஶ்ரீஏபிஎன் சுவாமி அவர்கள் தாக்கல் செய்கிறார்.

                      சட்டத் திருத்த மசோதா

     அரசியல் சட்டங்கள் கொண்டுவருவதும், பின்னர் மறுபடியும் அதில் திருத்தம் செய்வதும், அதற்குரிய நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதையும் சகஜமாக இக்காலத்தில் காண்கிறோம்.   ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றாற்போன்று, அரசியலமைப்பு சட்டங்கள் மாறுதலுக்கு உட்படுகின்றன.  இத்தகைய மாறுதல்கள் தவிர்க்கவே முடியாதவை எனும் கருத்து, எங்கும் பரவலாக உள்ளது.

     கணவன்-மனைவி உறவு, முறையற்ற உறவு, விவாகரத்து, இது முதலானவற்றில்,  நெறிமுறைப்படுத்துவதில் பெரும் தடங்கல்கள், தடுமாற்றங்கள் உண்டாகின்றன.   பெருமான்மையான சபை உறுப்பினர்களின் ஆதரவு அல்லது எதிர்ப்புகளினால், நிலையான தீர்மானம் செய்ய முடியாமல் ஆட்சியில் உள்ளவர்கள் தடுமாறுகின்றனர்.   ஆனால். நமது முன்னோர்கள், இவ்விஷயத்தில் தெளிந்த மனத்துடன், மதிநுட்பத்துடன் சட்டமியற்றி ஆட்சிபுரிந்து வந்துள்ளனர்.   பின்புள்ளோர் தடுமாற்றமில்லாமல் அவ்வழி நடக்க வழிகோலுகின்றனர்.

மாமன்னன் துஷ்யந்தனின் கதையினில் ஒரு நிகழ்வைக் காணலாம்.

      அவனது ராஜ்யத்தில் ஒரு பணக்காரன் இறந்துவிட்டான்.   அவனுக்கோ, வாரிசு இல்லை.   “இனி இந்தப் பெரும் சொத்து யாருக்கு உரிமையானது?” எனும் கேள்வி உண்டானது.   அப்போது துஷ்யந்த மஹாராஜா ஒரு சட்டமியற்றினார்.

     “என் ராஜ்யத்தில், யார் யார் உறவுகள் இல்லாமல் உள்ளனரோ!, அவர்களுக்கு மன்னனாகிய நானே உறவினன் – அதாவது வாரிசு இல்லாதவர்களின் சொத்து, அரசாங்கத்திற்குச் சொந்தமானது.   அவர்கள் சொத்தை அரசுடைமையாக்குவது என்பதே இதன் பொருள்.

     இவ்விதம் வாரிசு இல்லாதவர்களின், அசையும், அசையா சொத்துக்கள், பணம் முதலியவை நாட்டுடைமையாக்கப்படும்போது, மக்கள் இருவகையில் பயனடைகின்றனர்.   ஒன்று அந்த பொருட்களின் உபயோகம், மற்றொன்று வரிச்சுமை நீங்குவது.

     சரி!   அதை விடுவோம்.   விஷயத்திற்கு வருவோம்.   துஷ்யந்தன் போட்ட சட்டத்திலும் சில ஓட்டைகள் உண்டு.   இத்தீர்மானம் நிறைவேறினால், சட்டத்திலுள்ள ஓட்டைகளை சிலர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வர். பின்னர் மறுபடியும் இதில் திருத்தம் கொண்டுவருவது, சில சமயம் இயலாததாகிவிடும்.   அதனால் துஷ்யந்த மஹாராஜா சட்டம் இயற்றும்போதே,  மதிநுட்பத்துடன், பின்னாளில் எவ்வித இடைஞ்சலும் ஏற்படாவண்ணம் சட்டம் இயற்றினான்.

     ஆம்!   உறவுகள் இல்லாதவர்களுக்கு, மன்னன், “நானே உறவு” என்றான் அல்லவா!   அதிலொரு அருமையான குறிப்பு (Point) வைத்திருந்தான்.  அதாவது, மக்களே!   எந்த உறவாக நானிருந்தால், எனக்கும், மற்றவர்களுக்கும் பாவம் நேரிடாதோ!   அந்த உறவாக நானிருப்பேன் என்கிறான்.

இந்த சட்டம் குறித்த துஷ்யந்தனின் விளக்கவுரையை சபையில் கேட்கலாம்.

     அதாவது ஒருவருக்குப் பிள்ளை இல்லையென்றால், அவரின் புத்திர ஸ்தானத்தில் மன்னன் இருக்கலாம்.   மற்றொருத்தருக்கு சகோதரன் அல்லது தந்தை இல்லையெனில் அந்த நிலையில் மன்னன் இருக்கலாம்.   ஆனால் ஒரு பெண்ணுக்குக் கணவன் இல்லையென்றால் – அதாவது அவள் கணவனால் கைவிடப்பட்டோ!  அல்லது கைம்பெண்ணாகவோ இருந்தால், அதே உறவாக மன்னன் இருப்பதாகச் சொன்னால், அது இருவருக்கும் (பெண்ணுக்கும், அரசனுக்கும்) பெரும் பாவமன்றோ!

     அத்தகைய பாபம் நேரிடாமல், அப்பெண்ணின் மகனாக, சகோதரனாக, தந்தையாக இருந்து காப்பாற்றுவது, அரசனுக்குப் பெருமைதானே!  இதைத்தான் துஷ்யந்தன் அரசாணைக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டான்.

     அதாவது, முறையற்ற உறவு முதலானவற்றால் ஏற்படும் பாபத்தை இவ்வுலகம் அறியவேண்டும், தனது ஆட்சியில் மக்களும் பாபங்கள் செய்யாதவர்களாகவும், பாபம் செய்ய பயப்படுபவர்களாகவும் இருக்க வேண்டுமென நினைத்து அதைச் செயல்படுத்திய மாமன்னன்.

    திருத்தமே தேவையில்லாத தீர்மானமான இதை, மஹாகவி காளிதாசன் வர்ணிக்கிறார்:

                யேந யேந வியுஜ்யந்தே ப்ரஜா: ஸ்நிக்தேந பந்துநா |

                ஸ ஸ பாபாத்ருதே தாஸாம் துஷ்யந்த இதி குஷ்யதாம் ||

     ஸ்ரீக்ருஷ்ணனின் கீதாசாஸ்த்ரத்திற்கு அத்புதமான வ்யாக்யானம் அமைத்த வேதாந்த தேசிகர், இதே பாணியில், பதினெட்டு அத்யாயங்களின் செழும்பொருளை, ஒரேயொரு ச்லோகத்தினால் அழகாக விளக்குகிறார்.

             ஸுதுஷ்கரேண சோசேத் ய: யேந யேந இஷ்ட ஹேதுநா |

             ஸ ஸ தஸ்யாஹம் ஏவேதி சரம ச்லோக ஸங்க்ரஹ ||

     “இவ்வுலகிலுள்ள மக்கள், நிலையற்ற பல பலன்களை வேண்டி அலைகின்றனர்.   அவைகளைப் பெற முடியாமல் மேன்மேலும் இன்னலுறுகின்றனர்.   குறிப்பாக, யாரிடம் சென்று கேட்பது? எப்படிக் கேட்பது என்பதும் தெரியாமல், திகைக்கின்றனர்.   இம்மை மற்றும் மறுமை எனும் அனைத்து பலன்களையும் அளிப்பவன் நானே!  எனவே, என்னைச் சரணடைபவன், அனைத்துத் துன்பங்கள் துயரங்களிலிருந்தும் விடுபடுகிறான். பதினெட்டு அத்யாயமுள்ள கீதையின் திரண்டபொருள் இதுவே என விளக்குகிறார்.

     அதாவது கண்ணனைச் சரணடைவதே நமது அனைத்துத் துக்கங்களினின்றும் விடுதலையளிக்கும் என்பதினை உணர்ந்து அவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டு மேலான சுகம் எய்தலாம்.

     இத்தகைய மேலான சட்டம் நம்மைத் திருத்துவதற்காகவே கண்ணனால் நிறைவேற்றப்பட்டிருக்கும்போது, இன்னமுமா நாம் திருந்தாமல் இருப்பது?

    மன்னன் துஷ்யந்தன் பாவம் ஏற்படாமல், படு ஜாக்கிரதையாக சட்டம் இயற்றினான். மாமாயன் கண்ணன், பாவங்களைப் போக்குகிறேன் எனும் சட்டத்தை ஏற்படுத்தினான்.  இவ்விரண்டுமே திருத்தங்கள் தேவைப்படாதது. ஆனால் நமது உள்ளத்தைத் திருத்தக் கூடியது.

அன்புடன்

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி

Sri #APNSwami.

Sri #APNSwami #Writes #Trending | சீதை விடுத்த சவால் #10YearsChallenge

சீதை விடுத்த சவால்

Ram’s #10YearsChallenge

ஸ்ரீமத்ராமாயணத்தில் ராமன் காட்டிற்கு கிளம்பும் பொழுது, தானும் உடன் வருவேன் என்று சீதாதேவி பலபடியாக நிர்பந்தம் செய்கின்றாள். ராமன், காட்டில் உள்ள கஷ்டங்களை எடுத்துக் கூறியும், சீதை பிடிவாதமாக தான் உடன் வருவேன் என்று நிர்பந்தித்து ராமபிரானிடத்தில் ஒரு விஷயத்தை கூறுகிறாள்.

“ஹே ராமா! உன் தந்தையார் அழைத்தபோது, நீ சென்று அவரை பார்த்து விட்டு வந்தாய் அல்லவா?  இது ஒரு முகூர்த்த காலம். அதாவது,  மிகக் குறைந்த ஒரு கால அவகாசம். இந்த சமயத்தில் கூட உன்னுடைய பிரிவை பொறுக்க முடியாமல் தவிக்கும் நான்,  எவ்விதம் உன்னை பிரிந்து பத்து ஆண்டுகளும், மூன்று ஆண்டுகளும், ஒரு ஆண்டும் மொத்தம் பதினான்கு ஆண்டுகள் வசிக்க முடியும்” என்கிறாள்?

இங்கே ராமனிடத்தில் சீதை சொல்லும் இந்த பதினான்கு ஆண்டுகளின் கணக்கு மிக விசித்திரமாய் அமைந்திருக்கிறது. “ஒட்டு மொத்தமாக பதினான்கு ஆண்டுகள் உன்னை பிரிந்து, எப்படி இருப்பேன்?” என்று கேட்கவேண்டி இருக்க,  பத்து ஆண்டுகள், மூன்று ஆண்டுகள், ஒரு ஆண்டு என்று தனித்தனியாக அவள் குறிப்பிடுகிறாள். அப்படியானால் இதன் பின்னனியில், சீதை ராமனிடத்தில் எதையோ சொல்ல வருகிறாள். அதாவது இங்கே எதையோ ராமனுக்கு மட்டும் புரியும் படி சீதை சொல்லுகிறாள் என்பதை நாம் உணரலாம்.

இனி நாம் ஆரண்ய காண்டத்திற்கு வரலாம்.

ஆரண்ய காண்டத்தில் முதன் முதலில் ராமனும் சீதையும் லக்ஷ்மணனும் உள்ளே நுழைகிறார்கள். அப்பொழுது, பல மஹரிஷிகள் வந்து, பெருமானிடத்தில் சரணாகதி செய்கிறார்கள். “ஹே ராமா! காட்டில் இருந்தாலும் ராஜ்ஜியத்தில் இருந்தாலும், நீயன்றோ என்றுமே எங்கள் தலைவன்.” என்பதை அந்த மஹரிஷிகள் தெரிவிக்கின்றார்கள். இப்படி மஹரிஷிகள் ராமபிரானிடத்தில் சரணாகதி செய்கிறார்கள்.

அதன் பின்னர் ‘விராத வதம்’. அதாவது விராதன் சீதையை கவர்ந்து செல்கிறான்.  பின்னர் ராம லக்ஷ்மணர்களை தூக்கிச் செல்கிறான். அந்த ராம லட்சுமணர்கள் விராதனை வதம் செய்கிறார்கள். சாபத்தினாலே கோரமான உருவம் கொண்ட விராதன், ராமபிரானால் தன் நிலையுணர்ந்து அதாவது தனக்கு சாப விமோசனம் ஏற்பட்டு,  பெருமாளை ஸ்தோத்திரம்  செய்கிறான்.

அதற்குப் பிறகு, சரபங்கருடைய ஆசிரமத்திற்கு செல்கிறார்கள். ராமனை சேவித்துவிட்டு சரபங்கர் தன் தேகத் தியாகம் செய்கிறார். அவர் சொர்க்கத்திற்க்குச் செல்வதை ராம லட்சுமணர் சீதை பார்க்கிறார்கள். இது முடிந்து, மறுபடியும் ஆறாவது சர்க்க த்தில் அனைத்து மஹரிஷிகளும் வந்து – தண்டகாரண்யம், பஞ்சவடி, சித்திரக்கூடம் போன்ற இடங்களில் உள்ளதான அனைத்து மஹரிஷிகளும்  ஒன்று திரண்டு வந்து ராமனிடத்தில் மீண்டும் சரணாகதி செய்கின்றார்கள். அப்பொழுது ராமபிரான் அவர்களை தான் காப்பதாக அபயப் பிரதானம் செய்கிறார். ராக்ஷஸர்களை வதம் செய்து, மஹரிஷிகளை ரக்ஷிப்பதாக ராமன் அங்கே ப்ரதிஞை செய்தான்.

அதன் பின்னர் அவர்கள் மூவரும் சுதீக்ஷணருடைய ஆசிரமத்திற்கு செல்கின்றார்கள். அங்கே அழகியதான அந்த ஆசிரமத்தில், அவர்கள் சில காலம் ஆனந்தமாக வசிக்கின்றார்கள்.  பின்னர் சுதீக்ஷணர் இடத்தில் விடைபெற்றுக்கொண்டு ராமன் கிளம்புகிறான். அப்பொழுது சீதாதேவி ராம லக்ஷ்மணர்களுக்கு வில் மற்றும் கூர்மையான அம்புகள் இவற்றை எடுத்து கொடுக்கிறாள். அழகியதான வில்லை கையில் ஏந்தியவர்களான இவர்கள் இருவரும், சீதையுடன் கிளம்பினார்கள் என்று வால்மீகி அங்கே வர்ணிக்கிறார்.

பின்னர், ஒன்பதாவது சர்க்கத்தில், ப்ரயாணத்தில்  அவர்கள் தனியாக இருக்கும் பொழுது ஏறத்தாழ ராமனும் சீதையும் தனிமையில் இருக்கக்கூடிய சந்தர்ப்பம் என்பதாக நாம் வைத்துக் கொள்ளலாம். சீதை ராமனிடத்தில் மெதுவாக பேச ஆரம்பிக்கிறாள்.

“ஹே ராமா!  நீ காட்டிற்கு வரும்பொழுது நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த காட்டில் அமைதியான ஒரு வாழ்க்கை நமக்கு  கிடைக்கப்போகின்றது  எனும் ஆனந்தத்தில் உன்னுடன் வந்தேன்.  ஆனால், தற்போது வில்லையும் அம்பையும் கையில் ஏந்தியிருப்பதை பார்க்கும்போது என் மனம் வேதனைப்படுகிறது.  நல்ல மஹரிஷிகளும் தபோதனத்தனர்களும் மஹான்களும் நிறைந்திருக்கக்கூடிய காடு இது. இந்தக் காட்டில் நாம் பரம சுகமாக வசித்து வருகிறோம்.  நீ மஹரிஷிகளுக்கு அபய ப்ரதானம் செய்ததை நான் பார்த்தேன். ராமா நான் சிறு வயதிலேயே உன்னை மணந்து கொண்டு உன்னுடன் வந்துவிட்டேன். உனக்கு தர்மத்தை நான் உறைக்கலாகாது,  இருந்தாலும் என் மனதில் பட்டதை சொல்கிறேன். நீயோ உயர்ந்தவன். ஒரு பொழுதும் பொய் பேச மாட்டாய். பிறர் மனைவியை ஏறெடுத்தும் பார்க்கமாட்டாய். அது போன்றே ஜீவ காருண்யம் மிக்கவன் அல்லவா? அத்தகைய நீ, நமக்கு எவ்வித துன்பமும் விளைவிக்காத ராக்ஷஸர்களுக்கு, அதாவது நம்மை துன்புறுத்தாத ராக்ஷஸர்களை கொல்கிறேன் என்று  ப்ரதிக்ஞை செய்துள்ளாய் அல்லவா? மஹரிஷிகளை காப்பாற்ற வேண்டியது தர்மம் என்றால் கூட, நமக்கு எந்த தீங்கும் இழைக்காத அந்த ராக்ஷஸர்களை கொல்கிறேன் என்று, நீ சொல்லியிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  ராமா! இந்த கூர்மையான வில், அம்பு கையில் வைத்திருந்தால் எவரையாவது அடிக்க வேண்டும், கொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அமைதியான இந்த ஆரண்யத்தில் எதற்காக அதிரடியாக ஆயுதங்கள்?  ஹே நாதா! பெண்மையின் புத்தியினால் நான் உன்னிடத்தில் சில வார்த்தைகள் பேசி விட்டேன். உண்மையில் உனக்கு தர்மத்தை சொல்வதற்கு யார் சமர்த்தர்கள்?  ஒருவேளை நான் சொல்லும் வார்த்தையில் ஒப்புக்கொள்ளும்படியான விஷயங்கள் இருந்தது என்றால், எல்லா விதத்திலும் உனக்கு தகுந்தவனாக உள்ள இளையபெருமாளாம் லக்ஷ்மணனுடன் ஆலோசித்து நீ தீர்மானம் செய்வாயாக” என்று மெதுவாக ராமனிடத்தில் தன்னுடைய கருத்துக்களை எடுத்துரைத்தாள்.

இதன் மூலம்,  என்ன தெரிகிறது என்றால், மஹரிஷிகளை ரக்ஷிப்பதாக ராமன் செய்த சத்திய பிரதிஞை, ராக்ஷஸர்களை கொல்வதற்கு காரணமாகிறது என்னும் காரணத்தினால், அனாவசியமாக  அவர்களை கொல்வது தகாது என்று சீதை தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளதை நாம் இங்கே அறியலாம்.

     உண்மையில் ராமனின் சரணாகத ரக்ஷகத்தின் உறுதியை சீதை சோதிக்கிறாள்.  Challenge!

அப்படி பொருள் பதிந்த வார்த்தைகளை சீதாதேவி தொடுத்து, ராமன் பதில் சொல்வதற்காக காத்திருந்தாள். அதற்கு அடுத்த சர்கத்தில், ராமன் பதிலுரைக்கிறான்.

“பெண்ணே! நீ என் மனதிற்கு இனியவளே! என்றுமே என் நன்மையில் நோக்குடையவள். என் மீது உனக்குள்ள ப்ரேமம் அலாதியானது என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். ஆனால் மஹரிஷிகளை, கண்டாய் அல்லவா?  அவர்கள் ஒவ்வொருத்தரும், எவ்வளவு துன்பத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள் என்று பார்த்தாயா? ராக்ஷஸர்கள் பலம் வாய்ந்தவர்களாக, இந்த மஹரிஷிகளை எல்லாம் பெரும் துன்பத்தில் உட்படுத்தி வருகிறார்கள். அவயவங்களை இழந்தும், ஆச்ரமங்களை இழந்தும், மஹரிஷிகள் துன்பப்படுகிறார்கள். ஆனால், அதே சமயம் தபோதனர்களான அவர்கள், காமக்ரோதங்களுக்கு வசப்பட்டு அந்த ராக்ஷஸர்களை சபித்து விடவில்லை. ஏன் தெரியுமா?  தங்கள் தவ வலிமையை சேமித்து வைத்துக் கொண்டு, ப்ரஹ்மலோகத்தை அடைவதற்காக அவர்கள் காத்திருக்கின்றார்கள். அப்பொழுது என்னை போன்ற க்ஷத்ரியர்கள்,  தபோதனர்களை, சாதுக்களை ரக்ஷிக்க வேண்டாமா?  சீதை, என் உயிரை விட்டாலும் விடுவேன், என் உயிரினும் மேலான உன்னை விட்டாலும் விடுவேன், இதோ லக்ஷ்மணன், பரத, க்ஷத்ருக்குநர்களை விட்டாலும் விடுவேன், ஒரு பொழுதும் சாதுக்களை ரக்ஷிக்கிறேன் என்று சொன்ன என் வார்த்தையை, வாக்குறுதியை கை விடமாட்டேன்” என்று ராமபிரான் சூளுரைத்தான்.

அதன் பின்னர், சீதா தேவி எதுவும் பேசவில்லை. சீதை ராமனின் உறுதி கண்டு வியந்தாள்.

பின்னர் மீண்டும் வில்லுடன் கூடிய ராமன் அங்கிருந்து அகஸ்தியர் ஆச்ரமம் நோக்கி புறப்படுகிறான். இங்கு தான் ப்ரணவத்தின் அர்த்தமாக, அதாவது “அ, உ, ம”  என்பதை விளக்கும் வகையில், “அ” என்பதின்  பொருளாக  ராமனும், “உ” என்பதின்  பொருளாக சீதையும், “ம” என்பதின்  பொருளாக லக்ஷ்மணனும், அந்த காட்டில் நுழைந்ததை வால்மீகி வர்ணிக்கிறார். வால்மீகியால் சொல்லப்படும் அந்த அற்புதமான ச்லோகம்

அக்ரத: ப்ரயயௌ ராம: ஸீதா மத்யே ஸூமத்யமா

ப்ருஷ்டதஸ்து தநுஷ்பாணி: லக்ஷ்மண: அனுஜகாம ஹ

ஸ்வாமி வேதாந்த தேசிகனின் மாமா அப்புள்ளார் ப்ரணவத்தின் பொருளாக நமக்கு இந்த ச்லோகத்தை விளக்கி அருளுகிறார். இப்படி வால்மீகி “ஹ!” என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு ராமன் முன்னேயும், அவரை தொடர்ந்து சீதை நடுவிலும், இலக்குவன் மூன்றாவதாக சென்றனர்.

     அகஸ்தியர் ஆச்ரமத்தில், மஹரிஷியின் விசேஷங்களை எல்லாம் கேள்விப்பட்டு ஆனந்தம் அடைகின்றார்கள். வாதாபி இல்வலன் என்னும் அசுரர்களை அகஸ்தியர் அழித்த ப்ரபாவத்தையும், விந்தியமலையின் கர்வத்தை அகஸ்தியர் அடக்கியதையும், சமுத்திரத்தின் தண்ணீரை அகஸ்தியர் ஆசமனம்  செய்த கதையையும் அறிந்து, இவர்கள் மிகுந்த ஆச்சர்யம் அடைகிறார்கள். அகஸ்தியர் இவர்களுக்கு கோதண்டம் என்னும் வில்லையும், தெய்வீக பாணங்களையும் அளிக்கிறார். பின்னர் அவர்கள் பஞ்சவடிக்கு செல்கிறார்கள்.

இந்த இடைப்பட்ட காலங்களில், பல மஹரிஷிகளின் ஆச்ரமங்களில் ராமா லக்ஷ்மண சீதை வசித்து வருகிறார்கள். இப்படியாக ஒரு பத்து வருடம் கழிந்து விடுகிறது. பின்னர் அவர்கள் பஞ்சவடிக்கு செல்கிறார்கள்.  அங்கே ஜடாயுவை முதலில் காண்கின்றனர். சில காலம் பஞ்சவடியில் வசிக்கும் பொழுது தான் சூர்ப்பனகை வருகிறாள். அந்த சூர்ப்பனகை, ராமனிடத்தில் தன் காதலை தெரிவிக்கின்றாள். லக்ஷ்மணனால் மான பங்கம் செய்யப்படுகிறாள். அதன் பின்னர் கர தூஷணர்கள் வருகிறார்கள். ராமபிரான் தான் தனி ஒருவனாகவே கர தூஷணர்களை எதிர்த்து வெற்றி பெறுகின்றான். இதுவரையிலும் நாம் இங்கே நிறுத்திக்கொள்ளலாம்.

இனி சீதை ராமனுடன் காட்டுக்கு வருவேன் என்று சொன்ன சமயத்தில் சொன்ன ச்லோகத்தின் பொருளை மறுபடியும் ஆராயலாம்.   ஒரு வேளை  இது தான் அந்த #10yearChallenge ஆக  இருக்குமோ?

அதாவது சீதை முதலில் சொன்ன வார்த்தை “தந்தையை பார்க்க சென்ற சமயத்தில் கூட உன்னுடைய பிரிவை பொறுக்க முடியாமல் தவிக்கும் நான்,  எவ்விதம் உன்னை பிரிந்து பத்து ஆண்டுகளும், மூன்று ஆண்டுகளும், ஒரு ஆண்டும் மொத்தம் பதினான்கு ஆண்டுகள் பிரிந்து இருக்க முடியம்?” என்பதாகும்.

ஸ்ரீராமபிரான் சரணாகத ஸம்ரக்ஷகன். சரணமாக அடைக்கலம் வந்தவர்களை காப்பாற்றுபவன். அவனுடைய அந்த விரதங்களில் பரிபூரணமான ஒத்துழைப்பு நல்கி, அனைவரும் பெருமாளை அணுகும் படி செய்பவள் மங்கள தேவதையான சீதா தேவி.

இவர்கள் இருவரும் வைகுண்டத்திலிருந்து பூலோகத்தில் அவதரிக்க கிளம்புவதற்கு முன்னதாக, பூலோகத்தில் ராமாவதாரத்தில் என்ன என்ன செய்யவேண்டும் என்று தீர்மானித்து கொண்டார்கள். அதன் படி, சீதை ஜனகருக்கு பிறக்க வேண்டியது, ராமபிரான் வில்லை முறித்து அவளை மணம் முடிக்கவேண்டியது, பின்னர் பன்னிரெண்டு ஆண்டுகள் அயோத்தியில் இருவரும் சுகமாக வசிக்கவேண்டியது, கைகேயி கேட்ட வரம் என்னும் ஒரு காரணத்தினால் இருவரும் சேர்ந்து காட்டுக்குச்  செல்ல வேண்டியது, மஹரிஷிகள் செய்த தவத்தினால் காட்டில் அவர்களுடன் வசிக்க வேண்டியது, பின்னர் பஞ்சவடியில் மூன்று வருடம் வசிக்க வேண்டியது, பின்னர் ராமனும் சீதையும் பிரிந்து ஒரு வருடம் வசித்தால் தான், ராவணனை கொல்வது என்று ஏற்பாடு.

“இப்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பூமியில் அவதரித்து, ராமா இப்பொழுது என்னை விட்டு நீ தனியாக சென்றால், இந்த பத்து, மூன்று, ஒன்று என்ற கணக்கின் படியாக எவ்விதம் உன்னால் ராவண வதம் செய்ய முடியும்” என்று சீதை கேட்டதை புரிந்து கொண்ட ராமன், அவளை காட்டிற்கு உடன் அழைத்து வந்தான். என்ன புரிகிறதா?

இதற்கு பிறகு சீதை ராமபிரானை மீண்டும், பரிசை செய்கிறாள். மஹரிஷிகள் தங்களை காக்கும் படி ராமபிரானிடத்தில் சரணாகதி செய்தார்கள். ராக்ஷஸர்களை கொன்று, அவர்களை ரக்ஷிக்கிறேன் என்றான் ராமன். அதை சீதை ஆக்ஷேபம் செய்தாள். “நமக்கு எவ்வித தீங்கும் செய்யாத ராக்ஷஸர்களை கொல்கிறேன் என்று ராமா நீ சொன்னது எவ்விதத்தில் ஏற்புடையது?” என்பது சீதையின் ஆக்ஷேபம் அல்லவா?

உண்மையில் சீதைக்கு உரிய பதிலை ராமபிரான் சொல்லவில்லை. மஹரிஷிகளை காப்பாற்றுவதாக, தான் கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று தான் ராமன் பதில் சொன்னானே தவிர்த்து, நமக்கு தீங்கு செய்யாத ராக்ஷஸர்களை நீ கொல்வது எவ்விதம் தகும் என்றதற்கு ராமபிரான் அங்கு நேரடியாக பதில் சொல்லவில்லை. ஏனென்றால் சீதை கேட்டது முழுக்க முழுக்க சரியான ஒரு கேள்வி. தன்னிடத்தில் உள்ள நற்பண்புகளை பட்டியலிடும் சீதை, முதலில் பொய் உரைக்காதவன் ராமன், பின்னர் பிறர் மனை நோக்காதவன் ராமன், அது போன்றே ஜீவ ஹிம்சை  செய்யாதவன் ராமன் என்று மூன்றாவது காரணத்தை சொல்லி ராக்ஷஸர்களை ஏன் கொல்ல வேண்டும் என்பதாக கேள்வி எழுப்பினாள் அல்லவா? இந்த நுட்பத்தை நன்கு புரிந்து கொண்டவனான ராமன், பத்து  வருடங்கள் பொறுமையாக காத்து இருந்தான்.   சீதையின் கேள்விக்கு பதிலளிக்க ராமன் மேற்கொண்டது #10YearsChallenge .

சரபங்கர், சுதீக்ஷணர், அகஸ்தியர் இது முதலானோர் ஆச்ரமங்களில் ராமபிரான் பத்து ஆண்டுகள் வசித்து வந்தான். இந்த பத்து ஆண்டுகள் எங்குமே ராக்ஷஸ வதம்  சொல்லப்படவில்லை. ஒரு ராக்ஷஸனை கூட ராமபிரான் கொன்றதாக சொல்லப்படவில்லை. பத்து ஆண்டுகள் உருண்டு ஓடின.  ராமபிரான் சத்தியத்தை காப்பாற்ற வேண்டும். அதே சமயம் சீதையின் வார்த்தைக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். அப்படியானால் எப்படித் தான் ராமன் அதை சமாளித்தான்.

இது உண்மையிலேயே ராமபிரானுக்கு சீதை விடுத்த சவால். ஒரு புறம் உயிரைவிட்டாவது சத்தியத்தை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறான் ராமபிரான். மற்றோரு புறம் சீதை கேட்ட நியாயமான கேள்வி. தனக்கு மிகவும் பிரியமானவளும், தன் உயிரைவிட மேலானவளுமான சீதையின் கேள்விக்கும் மதிப்பளிக்க வேண்டும். இது தான் தர்ம சங்கடம் என்பார்கள் அல்லவா?

ஸ்ரீராமபிரான் நடுவில் அந்த பத்து ஆண்டுகள் பொறுமையாக காத்து இருந்தான். ஏன் ? மஹரிஷிகளின் ஆச்ரமங்களில் ராமபிரான் நல்லதொரு பாடம் பயின்றான் என்று சொன்னாலும் அது மிகையில்லை. பத்து ஆண்டுகள் உருண்டோடின. அகஸ்தியர் ஆச்ரமத்துக்கு சென்றபோது அகஸ்தியர் செய்த சரணாகத ஸம்ரக்ஷணம்,  அவர் தம் சரித்திரத்தின் வாயிலாக பிராட்டிக்கு எடுத்துரைக்கப்பட்டது. வாதாபி இல்வலனர்களை கொன்றது,  விந்திய மலையின் கர்வத்தை அடக்கியது, சமுத்திரத்தை வற்றச்செய்தது அனைத்தும் லோக க்ஷேமத்திற்காக அகஸ்தியர் செய்தது. இதனால் மஹரிஷிகளை சாதுக்களை காப்பாற்றுவதற்கு ராமனின் முயற்சி நியாயப்படுத்தப்பட்டதாகிறது. ஏற்கனவே இது போன்ற நிகழ்ச்சிகளை சாதுக்கள் நடத்தியுள்ளதை சீதைக்கு எடுத்துரைக்க, ராமன் அகஸ்தியர் ஆச்ரமம் சென்றான் போலும்.

பத்து ஆண்டுகளாக ராக்ஷஸர்களை கொல்லாத  காரணத்தினால், மஹரிஷிகளுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை ராமனுக்கு நினைவுறுத்தும் படியும், அடுத்து வரும் யுத்ததிற்கு ராமனை தயார் செய்யும் விதமாக, அகஸ்தியர், வில் மற்றும் அம்புகளையும் அம்பறாத்துணிகளையும் ராமனுக்கு கொடுத்தார்.

சீதையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டவனான ராமன், பஞ்சவடிக்கு சென்று அங்கு காத்திருந்தான். முதலில் பத்து வருடங்கள் தண்டகாரண்யத்தில், அடுத்த மூன்று வருடங்கள் சீதை சொன்ன கணக்கின் படியாக, ராக்ஷஸர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் பர்ணசாலை அமைத்து தங்கினர்.

அவன் எதிர்பார்த்தது நடந்தது. சூர்ப்பனகையின் மூலமாக கர தூஷணர்கள் வந்தார்கள். ஒரே சமயத்தில் ஜனஸ்தானத்தில், பதினான்காயிரம் ராக்ஷஸர்கள் ஒன்று கூடினார்கள். அப்பொழுது ராமபிரான் சீதையினிடத்தில் சொல்லாமல் சொன்னான். ஆம், அங்கே சொல்லழகைக் காட்டாமல், ராமன் தன்  செயலழகை காட்டினான்.

“இதோ சீதை, பதினான்காயிரம் ராக்ஷஸர்கள் ஒன்று திரண்டு நம்மை எதிர்க்க வந்திருக்கிறார்கள், பதினான்கு ஆண்டுகள் நாம் காட்டில் வாசிப்பதற்காக கிடைத்த வாய்ப்பு இது. நமக்கு எந்த தீங்கும் செய்யாத ராக்ஷஸர்களை உன் சொற்படி எதுவும் செய்யவில்லை, ஆனால் இப்பொழுது அவர்களாக எதிர்த்து வந்திருக்கிறார்கள். நம்மை கொல்ல துணிந்து ஆயுதத்துடன் எதிர் நிற்கிறார்கள். உயர்ந்த க்ஷத்திரியன் தன்  பராக்கிரமத்தை இது போன்ற நேரத்தில் செயல் படுத்த வேண்டுமல்லவா?” என்று தன்  புன்னகையினாலேயே சீதைக்கு புரிய வைத்தான் ராமன்.

பின்னர், தனி ஒருவனாக தான் ஒருவன் மட்டுமே சென்றான். ஏனென்றால் இது அவன் ஒருவனுக்கு மட்டும் விடுக்கப்பட்ட சவால் தானே. அதனால் லக்ஷமணன் இல்லாமல் தான் ஒருவன் மட்டும் சென்று ஜனஸ்தானத்தில் இருந்த பதினான்காயிரம் ராக்ஷஸர்களை வென்று கொன்றான். இதை கண்டதும் ஆனந்தத்தில் திளைத்த சீதாதேவி க்ஷத்ருக்களை ஜயித்தவனுமான , மஹரிஷிகளுக்கு சுகத்தை அளிப்பவனுமான விஜயராகவனாக விளங்கும் ஸ்ரீராமபிரானுக்கு,  பத்து  ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த சவாலை ராமன் ஜயித்ததினாலே, ஓடி வந்து ஆரத்தழுவிக்கொண்டு,  தன் திருமேனியால் ஆரத்தி வழித்தாள். சீதை அந்த ஆனந்த தழுவலை வெற்றி வீரனான ராமனுக்கு பரிசாக அளித்தாள்.

இப்படி #10Yearschallenge ல் வெற்றி பெற்ற ராமன், விஜயராகவன் தானே!

     இப்படி சீதை விடுத்த #10Yearschallenge ல் வெற்றி பெற்ற  விஜயராகவனை சேவித்தால் நாமும் நம் சவால்களில் வெற்றி பெறலாம்.

இப்படிக்கு,

அன்புடன்

ஏபிஎன்

Sri #APNSwami

19-Jan-2019

 

Sri #APNSwami #Writes #Article| கடவுளெனும் விவசாயி | உழவர் திருநாள்

விளம்பி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      கடவுளெனும் விவசாயி | உழவர் திருநாள்

                      🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

உலகெங்கும் மகர சங்கராந்தி – உத்தராயண புண்யகாலம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. ஆன்மீக வாதிகள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விவசாயப் பெருமக்களுக்கு இதொரு மகிழ்ச்சியான நன்னாள். விவசாயம் இல்லை என்றால் உலகில் உயிரினங்களுக்கு உணவு ஏது ?

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.”
என்கிறார் திருவள்ளுவர். ஆடிப்பட்டம் தேடி விதைத்து, தையில் நல்ல அறுவடை செய்து மகிழ்ச்சியுடன் உழவர் திருநாளை கொண்டாடுகின்றனர் விவசாய மக்கள்.

    ஸம்ஸ்க்ருதத்தில் வ்யவஸாயம் – விவசாயம் – என்றால் முயற்சி. அதாவது சோர்ந்து போகாமல் காரியங்களைச் செய்து வெற்றியடைபவர்களே விவசாயர்கள் என்பர். சமனில்லாத பூமியை உழுது, சீர்படுத்தி, ஆழப்படுத்தி, விதை விதைத்து, தண்ணீர் தேக்கி, நாற்று நட்டு, களை பறித்து, பயிரினைக் காத்து, முடிவில் அறுவடை செய்கின்றனர் விவசாயிகள்.

இவ்வளவு பாடுபட்டு பயிரிட்டதைக் காப்பாற்ற ஒரு விவசாயி தனது நிலத்திலேயே தங்குவான். அறுவடை வரையிலும் வீட்டிற்குச் செல்ல மாட்டான். ஆடுகள், மாடுகள், பறவைகள், திருடர்கள், ஏனைய விலங்குகள் பயிரிட்டதைக் கெடுக்காதவண்ணம் காப்பது அவனது கடமை. அப்போது தானே மகசூல் (லாபம்) அடைய முடியும். தனது வயல் வெளியின் எல்லைகள் கண்ணுக்குத் தெரியும் வரை ஒரு உயர்ந்த பரணை(Loft) அமைத்து, அதிலேயே தான் வசித்துக்கொண்டு, கண்ணும் கருத்துமாக காவல் இருப்பான்.

ஸ்வாமி தேசிகன் உழவர் திருநாள் செய்தி ஒன்றை அளிக்கிறார் கேளுங்கள்.

ஸ்ரீநிவாசன் என்னும் நாராயணன் ஒரு விவசாயி. அவன் பரமபதமாகிய தனது வீட்டிலிருந்து புறப்பட்டு, வயல் வெளியாகிய பூமிக்கு(அவதாரம்) வருகிறான். இந்த பூமியில் “சரணாகதி” என்னும் விதை விதைத்து அதைக் கட்டிக் காப்பாற்றி வருகிறான்.

அதாவது விதை விதைத்து விட்டு வீட்டிற்கு(பரமபதம்) செல்லாமல் இங்கேயே (பூமியிலேயே) ஏழுமலைகள் என்னும் பெரிய பரணை (Loft) மீது நின்றுக் கொண்டு தான் இட்ட பயிரினைக் காவல் காக்கிறான். பயிரினைக் காப்பாற்ற களையெடுப்பது போன்று, அசுரர், நாஸ்திகர், வேதத்திற்கு பொய் அர்த்தம் சொல்பவர் முதலான களைகளை எடுத்து ரட்சிக்கிறான். ஒருவழியாக சரணாகதிப்பயிர் முளைவிட்டு, கிளை செழித்து, பால் பிடித்து, கதிர்கள் சீரார் செந்நெல்களாகத் திகழ்கின்றன.

     சரணாகதி சாஸ்திரத்தை நன்குணர்ந்து அனைவரும் மோக்ஷமடைய வேண்டும் என்னும் ஆவலில், விதை விதைத்த விவசாயி போன்று பெருமாள் திருமலையில் எப்பொழுதும் நிற்கிறான்.

இது உத்திராயண புண்ய காலம். அதாவது மோட்சமடையும் ஜீவன் உத்தராயண வாசல் வழியாக அர்ச்சிராதி (மோட்சமென்னும் வழி) வழியாக பரமபதம் செல்கிறான். நரகமடையும் ஜீவன் தூமாதி(புகை) தட்சிணாயன வாசல் வழியாக நரகம் செல்கிறான். போகியன்று புகைமூட்டமான தூமாதி மார்கம் விலகி உத்தராயண வாசல் திறந்து, திருவேங்கடமுடையான் கருணை என்னும் மகிழ்ச்சிப்பெருக்கு நமக்குக் கிடைத்திடும் நல்லதொரு காலம் இது.

சரணாகதி செய்த ஜீவர்களாகிய தான்யங்களைப் பெறும்(மகசூல்) ஸ்ரீனிவாசன் என்னும் விவசாயி மிகுந்த மகிழ்ச்சியடைகிறான். தனது இயற்கை(வேதம்) விவசாயம் பலித்ததே என கொண்டாடுகிறான்.

ஸ்வாமி தேசிகனின் தயா சதகம் – 21
              ஸமயோபநதைஸ் தவ ப்ரவாஹை:
              அநுகம்பே க்ருத ஸம்ப்லவா தரித்ரீ |
              சரணாகத ஸஸ்ய மாலிநீயம்
             வ்ருஷசைலேச க்ருஷிவலம் திநோதி ||

நாமும் தேசிகன் வழியில் உழவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

அன்புடன்
ஏ.பி.என் ஸ்வாமி
Sri #APNSwami