திருவல்லிக்கேணி கண்டேனே! Sri APN Swami Writes Samvadham | Experience about Mylapore Srinivasan @Triplicane Sri Ahobila Mutt – 8-July-2023

குறிப்பு :

சம்பிரதாய உரையாடல்களை எழுதுவது  ஸ்ரீ ஏபிஎன் சுவாமியின் தனிப்பட்ட பாணி என்று கூறலாம். ஸ்ரீ ஏபிஎன் சுவாமியின் ஆசார்யனான ஸ்ரீ உ.வே.புரிசை சுவாமியின் திருவுள்ளப்படி பல உரையாடல் நூல்களை வெளியிட்டுள்ளார். இந்த சம்பாஷணைகளில் (conversations) சுவாமி ராமானுஜர், சுவாமி வேதாந்த தேசிகர் போன்ற நம் ஆசார்யர்கள் பெருமாளுடனும்  பிராட்டியுடனும் பேசிய விஷயங்களை மிகவும் ரசமாக எழுதியுள்ளார்.

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி எழுதிய ஏனைய உரையாடல் வடிவில் இருக்கும் நூல்களாவன –

1. தேவதேவனும் தேசிகனும்

2. அனந்தன் கண்ட ஆனந்தாநுபாவம்

3. நைமிஷத்தில் அநிமிஷர்கள்

4. ஆழ்வாரின் பாபம்

5. ஆசார்யரும் அடியேனும்

6. காண்டகு தோளண்ணல்

7. ஸிம்ஹங்களின் ஸல்லாபம்

8. ராஜராஜர்களின் ஸம்வாதம்

9. திவ்ய தம்பதிகளின் ஸம்வாதம் 

10. அரங்கன் உரைத்த அந்தரங்கம்

11. இடைமறித்த  இமையோர் தலைவன்

12. வரதனின் விருப்பம் – 1

13. வரதனின் விருப்பம் – 2

14. விச்வ(வா)மித்ரர்களின் ஸம்வாதம்


ஸ்ரீ:

திருவல்லிக்கேணி கண்டேனே!

திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கர் பெருமாள் சன்னதி தெரு. சேலேய் கண்ணியரான மதிமுக மடந்தயரும், விலக்ஷணமான ஊர்த்வ புண்ட்ர விசேஷங்களுடன் ஸ்ரீவைஷ்ணவ புருஷர்களும், உத்ஸாகத்துடன் ஓடி ஆடி கொண்டிருக்கும் சிறுவர்களுமாய் ஒரே கோலாகல குதூகலத்துடன் விளங்கியது.

ஆனி மாதத்தின் அவ்வழகிய காலைப்பொழுதில் ஒரு சில பெண்டிர் பூமி பரப்பை மறைத்த வெண்மேகக்குவியல் போன்று அழகிய கோலமிட்டு ஆனந்தித்தனர். வாய்ஜாலம் மட்டுமில்லை, எனக்கு வர்ணஜாலமும் தெரியும் என வேறு சில மகளிர் முத்துக்கோலத்தில் பல சித்திரவர்ணங்களை பதித்தனர்.

தட்டுகள் நிறைய புஷ்பங்களையும் பழங்களையும் ஏந்தியவர்களாகப் பலரும் வழிமேல் விழிவைத்து காத்திருந்தனர். அனைவரின் பார்வையும் பார்த்தஸாரதியின் தெற்கு தோரணவாயிலை நோக்கியே அனைவரின் விழிகளும் மலர்ந்திருந்தன. அல்லி மலர்கள் நிறைந்த அழகிய கழனிகள் சூழ் திருத்தலம் திருஅல்லிக்கேணியன்றோ! பகலில் குவளை மலருமா? எனும் கேள்வியும் உண்டாகிறதே! கதிரவன் குணதிசைச்சிகரம் வந்தணைந்த காலைப்பொழுதில் அல்லிகள் மலர்ந்தாற்போல் அங்கு காட்சியளித்தன. இதில் விசித்திர ரகசியம் ஒன்றுமில்லை. “மிதிலை நகரத்துப்பெண்களின் கண்களான சகோரப்பறவைக்கு ராமன் எனும் சந்த்ரன் ஆனந்தமளித்தான்.” என்கிறார் கவிஸிம்ஹமாம் தேசிகன்.

சந்திரகாந்த ராமனின் வரவு கண்டு இன்று ப்ருந்தாரண்ய வாசிகளின் அல்லிக்கண்கள் அழகாக மலர்ந்து விளங்கின. இங்குக்குழுமிருக்கும் ஆஸ்திக கோஷ்டிக்கு விஸ்வாமித்திரர், வசிஸ்டர் போன்று தேசிகனும், ஆதிவண் சடகோப ஸ்வாமியும் நடுநாயகமாக விளங்கினர்.

சந்தடி மிகுந்த அந்த சாலையின் சப்தங்களை மீறி பெருமாளின் அசாதாரண வாத்யம் உடல், திருச்சின்ன ஒலி கேட்டதுதான் தாமதம் பெரும் ஆர்ப்பரிப்பு அலையாகக் கிளர்ந்தது அங்கு “ஹோ”வெனும் உற்சாக சப்தம் எங்கும் எதிரொலித்தது.

ஓர் அழகிய மேனா பல்லக்கு ஆடியாடி அசைந்து வர ஸ்ரீநிவாஸா! தேசிகா! ஸ்ரீநிவாஸா! தேசிகா! என ஸ்ரீபாதம் தாங்கிகள் மெலிதாக ஒலியெழுப்பிக்கொண்டு பல்லாக்கைச் சுமந்து வருகின்றனர்.

“அழகெல்லாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றகில்லார்” என அனுபவத்தின்படியே உயர் சோதி வெள்ளமாக மயிலை ஸ்ரீநிவாசன் உபய நாச்சிமார்களுடன் சேவை சாதித்தான். ஒருத்தர்கொருவர் முண்டியடித்துக்கொண்டும், தள்ளுமுள்ளுடன் எட்டி, எட்டி கண்ணாடிக்கதவு வழியாகவும், கைகளின் இடுக்குகள் வழியாகவும் பெருமாளை சேவித்தனர்.

ஸ்வாமி தேசிகனுக்கும், ஆதிவண் சடகோப ஸ்வாமிக்கும் அருளப்பாடுடன் மரியாதை ஆனவுடன் விண் அதிர தமிழ் மறை ஒலித்தது.

“ராமானுஜ தயாபாத்ரம் ஞான வைராக்கிய பூஷணம்” என திவ்ய ப்ரபந்தம் தொடங்கியவுடன் அங்கு கூடியிருந்த அனைவர்க்கும் மேனி சிலிர்த்தது. தெள்ளிய சிங்கனின் ராஜகோபுர நிழலில் கவிதார்கிக ஸிம்ஹத்தின் கர்ஜனை போன்று அந்த அதிர்வலைகள் இனம்புரியா ஆனந்தத்தை அளித்தது அனைவர்க்கும்.

மேனா பல்லாக்கு மெதுவாக அசைந்தபடி அஞ்ஜநாத்ரீச்வரன் அனைவர்க்கும் அனுக்ரஹத்தை  வாரி வழங்கிக்கொண்டு ஆனந்தமாக பவனி வந்தான் அந்த மாடவீதிகளில். அழகாக அலங்கரிக்கப்பட்ட ஆஸ்தான மண்டபமாகிய அஹோபில மடத்தின் நடுநாயகமாகப்பெருமாள் எழுந்தருளினதும் உபய கோஷ்டிகள் முடிந்தன.

மதியம் விசேஷ திருமஞ்சனம் அதியத்புதமாக நடைபெற்றது. வழிநடை விடாய்தீர்ந்த வேங்கடவன்.

மாலை சுமார் ஆறுமணியிருக்கும். மதியபொழுதுச்சற்றே வந்திருந்த மக்கள் வெள்ளம் சிறுதுசிறிதாகச் சேர அரம்பித்தது,பௌர்ணமியன்று தானே கடலலை கிளர்ந்தெழும். ஆர்பரிக்கும் அலைகடல் நகரத்தினுள் புகுந்ததா என்ன? என அனைவரும் திகைத்தனர். உப்புசாறான வங்கக்கடல் அல்ல இது. பக்தாம்ருதம் வழிந்தோடும்  பக்தி எனும்  பாற்கடல். வேங்கடவன் எனும் பௌர்ணமி சந்திரனை கண்டதும் நிலப்பரப்பில் பொங்கியதோ எனத்தோன்றியது.

இருபுறமும் உபயநாச்சிமார், எதிர்ப்புறம் உபய வேதாந்த ஆசிரியர் என ஸ்ரீநிவாஸனின் திருமாமணிமண்டபம் சேவை அத்யத்புதம். பரமபதத்திலும் நம் ஆசிரியர் நமக்கு அஃதேபோன்று சேவை சாதிப்பார் என்கிறார் ஸ்வாமி தேசிகன். அதாவது இங்கே நேரில் எவ்விதம் அவர்களை நாம் சேவித்தோமோ (கிறோமோ) அவ்விதமே பரமபதத்திலும் பெருமாளின் திருவடிக்கீழ் அவர்களின் சேவை நமக்கு கிடைக்கும்.

மேலும் அவர்களிடம் தனக்குள்ள ப்ரீத்தியை வெளிப்படுத்தும் பெருமாள், அவர்களின் திருவடிகளில் தங்கச்சிலம்பினை அணிவித்து ஆனந்தமடைகிறான்.

கூறுகவர்ந்த குருக்கள் குழாங்கள் குரை கழற் கீழ் ” என்கிறார் ஸ்வாமி தேசிகன்

ஸங்கல்ப ஸுர்யோதய நாடகத்திலும் இவ்விஷயத்தை நன்கு ரசிக்கலாம்.

ஒரு ஊருக்குச் செல்வதற்கு முன்பாக அது குறித்த விவரங்களை அறிந்து சென்றால் நமக்கு அனுபவம் இன்னும் மேலிருகிறதல்லவா! அதே போன்று பரமபதத்தில் இப்படித்தான் தன் ஆசார்யர்களுடன் சேவை சாதிப்பேன் என ஸ்ரீநிவாசன் தன் திருக்கோலத்தைக் காட்டினான்.

திரை திறந்து கற்பூர ஹாரத்தியானவுடன் கண் இமைக்க மறந்து அனைவரும் சேவித்தனர். அக்கம்பக்கம் யார் இருக்கின்றனர் என்பது கூடத் தெரியாமல் அனுபவத்தால் மெய்மறந்து நின்றனர். இதைவிட ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைக்குமா எம்பிரானுக்கு. பத்தர்கள் என்றாலும் பக்தர்கள் தானே. தன் பேரருளை புலப்படுத்த ஸரஸ   ஸம்பாஷணத்தை தொடங்கினான் ஸ்ரீனிவாசன்.

குருக்கள் கூட்டமும், அடியார் குழாமும், அத்தன் உயர் வேங்கடவனும் அளவளாவிய அந்த அற்புத உரையாடலை இனி அனுபவிக்கலாம்.

(தேசிகன் “ஹ்ருதி  முக்த சிகண்ட மண்டந:” என்று ஸ்ரீநிவாஸனின் கோடரி முடிச்சு எனும் அழகிய சௌரிக் கொண்டையின் அனுபவத்தில் ஆழ்ந்திருக்கிறார். தேசிகன் பெருமாள் ஸேவிக்கும் அழகை ஆதிவண் சடகோபஸ்வாமி அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.)

பெருமாள் மெதுவாக “ஸ்ரீநிவாஸ” என்று ஆதிவண்சடகோப ஸ்வாமியை அழைக்கிறார்.

அவரோ! சலனமேதுமின்றி  தேசிகனையே ஸேவித்துக்கொண்டிருக்கிறார்.

பெருமாள் மறுபடியும் “சடகோப ஜீயரே! ” என்று சற்று பலமாக அழைக்கிறார்.

ஆதிவண்சடகோப ஸ்வாமி துணுக்குற்று “என்ன ! என்ன ! யார் அழைத்தது ? “

ஸ்ரீநிவாசன் : ஏன் நான் தான் அழைத்தேன். ஒருமுறை அல்ல! பல முறை அழைத்தேன்.

ஆதிவண்சடகோப ஸ்வாமி : க்ஷமித்தருளவேணும்  ஸ்ரீநிவாஸ! ஆசார்யன் உன்னை ஸேவிக்கும் அழகில் அடியேன் வசமிழந்தேன்.

 ஸ்ரீநிவாசன் : எது? உம் ஆசார்யர்  என்னை ஸேவிக்கிறாரா? இல்லை இல்லை. அவரின் மனோ பாவம் வேறு.

ஆதிவண்சடகோப ஸ்வாமி : (பதில் சொல்லத்தலைப்படுகிறார். பின்னர் ஸ்வாமி தேசிகன் கவனிப்பதைக் கண்டு மௌனமாகிறார்.)

 ஸ்ரீநிவாசன் : என்ன பதில் இல்லை. சொல்லத்தெரியவில்லையா? சொல்ல விருப்பம் இல்லையா?

(ஆதிவண்சடகோப ஸ்வாமி தேசிகனைப் பார்க்கிறார்.)

 ஸ்ரீநிவாசன் : அங்கென்ன பார்வை. எனக்கு பதில் கூறு. (மீண்டும் தேசிகனைப்பார்க்க அவர் கண்களாலேயே அனுமதியளிக்கிறார்.)

ஆதிவண்சடகோப ஸ்வாமி: அலர்மேல் மங்கை உறைமார்பனே! அத்யாச்சர்யமான உனது அழகை அனுபவித்துக் கொண்டிருந்தார் எம் ஸ்வாமி.

ஆஹ்லாத சீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான்

            ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:”

(கண்களில் ஆனந்தபாஷ்பம்  குளிரருவியாகப்பெறுக, உடம்பு சிலிர்த்து ரோமாந்சத்துடன் எம்பெருமானை அனுபவிக்கும் மஹான்கள் எப்போதும் சேவிக்கத்தக்கவர்கள்) எனும் ப்ரமாணத்திற்கேற்ப அவரை நான் ஸேவித்துக்கொண்டிருந்தேன்.

(தேசிகன் ஆனந்தத்துடன் தலையை அசைத்து ரசிக்கிறார்)

ஸ்ரீநிவாசன் : (சற்றே கோபமாக ) வேங்கடநாதா! உண்மையைச் சொல். நீ என்னையா ஸேவித்துக்கொண்டிருந்தாய் ?

தேசிகன் : அதிலென்ன ஸந்தேகம் ப்ரபோ! தங்களைத்தான் ஸேவித்துக்கொண்டிருந்தேன். இதோ இங்கு திகழும் இருபெரும் தேவியரே ஸாக்ஷி. (அவர்கள் பக்கம் திரும்பி) என்ன அம்மா ! நான் சொன்னது சரிதானே!

(தேவியர் இருவரும் ஆமாம், ஆமாம் என தலை அசைக்கின்றனர்)

ஸ்ரீநிவாசன் : (முன்னிலும் கோபமாக) சரிதான். தேவிகளை சிபாரிசுக்கு அழைக்காதே. தாய்மார்கள் என்றுமே பிள்ளைகளின் பக்ஷபாதிகள் தான்.

சரி அதைவிடு. எங்கே என்னை ஸேவித்த ச்லோகத்தைச் சொல் பார்க்கலாம்.

தேசிகன் : (  “ஹ்ருதி  முக்த சிகண்ட மண்டந : “) என மறுபடியும் துதிக்கிறார்.

ஸ்ரீநிவாசன் : (பரபரப்புடன்) பார்த்தாயா! பார்த்தாயா! ஸ்ரீநிவாஸனாகிய நானிருக்க என் விஷயமான தயாசதகம் சொல்லாமல் வேறு ஸ்தோத்ரம் சொல்லி துதிக்கிறாயே ! இதுதான் உனது பக்தியின் பரிவாஹமா!

(தேசிகன் மெளனமாக புன்சிரிப்புடன் வீற்றிருக்கிறார்)

ஸ்ரீநிவாசன் : எனது கேள்விக்கு பதிலுரைக்காமல் சிரிக்கிறாயே . (கோபமாகச் சொல்கிறான்)

(ஆதிவண்சடகோப ஸ்வாமி பக்கம் திரும்பி) சடகோப! நீயாவது சொல்லேன்.

(அவர் மீண்டும் தேசிகனைப் பார்க்க அவர் தலை அசைத்து அனுமதி தருகிறார்)

ஆதிவண்சடகோப ஸ்வாமி : வேங்கடேச இதுவும் உனது துதி தானே.

 ஸ்ரீநிவாசன் : அதெப்படி எனது ஸ்தோத்ரமாகும். இது கோபால விம்சதி ச்லோகமல்லவா  ?

ஆதிவண்சடகோபஸ்வாமி : அதனால் என்ன ?

ஸ்ரீநிவாசன் : அதனால் என்னவா? எனக்குரிய ஸ்தோத்தரங்கள் அனேகம் இருக்க, அவையனைத்தையும் விட்டுவிட்டு கோபால விம்சதியைச் சொல்லி என்னைத் துதிப்பது என்?

ஆதிவண்சடகோப ஸ்வாமி: கோபால விம்சதியும் தேவரீரது ஸ்தோத்தரமேயன்றோ ! அதைத்தான் எமது ஆசிரியர் பாடினார்.

தேசிகன் : நன்று, நன்று (ஆனந்திக்கிறார்)

ஸ்ரீநிவாசன் : என்ன நன்று? கோபால விம்சதி எப்படி என் ஸ்தோத்தரமாகும்?

ஆதிவண்சடகோபஸ்வாமி : : “மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர் சந்தி செய்ய நின்றான் அரங்கத்தரவின் அணையான் “(என்று சொல்லி நிறுத்தி தேசிகனைப்பார்க்கிறார். தேசிகன் மகிழ்வுடன் தலை அசைப்பதைக் கண்டு )

இந்த பாசுரத்தில் வடவேங்கடமுடையானும், அரங்கநகராளனும் எவ்விதம் ஒன்றோ ! அவ்விதமே இங்கும் பொருளாகலாமே!

ஸ்ரீநிவாசன்: (சற்று கோபத்துடன்) நன்றாய் இருக்கிறது உனது வாதம். அங்கு பாசுரத்தில் இரண்டு திவ்யதேசத்தையும் தெளிவுறக்காட்டியுள்ளார் ஆழ்வார். தேசிகனின் ஸ்தோத்ரத்தில் அவ்விதம் ஏதாவது தெரிகிறதா? ஏதோ சமாதானம் சொல்லவேண்டும் என்பதற்காகவே சொல்கிறாய். ஆனால் அர்த்தகம்பீரம் இல்லை.

தேசிகன்: ஸ்ரீநிவாச! (என்றழைக்கிறார்) உடனே பெருமாளும்  ஆதிவண்சடகோபஸ்வாமியும் ஒரே சமயம் திரும்புகிறார்கள்)

தேசிகன் : (பெருமானைப்பார்த்து ) ஸ்ரீநிவாச! ஸ்ரீநிவாச என்று உன்னை அழைக்கவில்லை, இதோ சடகோப ஜீயரை ஸ்ரீநிவாச! என்றேன்.

ஸ்ரீநிவாசன்: ஸ்ரீநிவாசனாகிய என்னை நேரில் வைத்துக்கொண்டு, சடகோபன் என ஸந்யாஸநாமம் பெற்றவனின் பூர்வாச்ரமப் பெயரை அழைத்தேன் என்கிறாயே!

தேசிகன்: உண்மைதான். ஆனால் முக்தானுபூதியில் இந்த வித்யாசம் கிடையாதன்றோ!

ஸ்ரீநிவாசன் : (தயக்கத்துடன் ) ஆ …மா ….ம் .

தேசிகன் : அஃதே போன்று அர்ச்சாவதார வடிவில் அப்ராக்ருத ரூபனாக சேவை ஸாதிக்கும் தேவரீரிடம் வித்யாசம் உண்டா !

ஸ்ரீநிவாசன் :  (பொறுமையிழந்து) சரி. அதற்கு என்ன இப்போது ?

ஆதிவண்சடகோப ஸ்வாமி:  வேங்கடமாமலை மேவிவாழும் வேங்கடவனாகிய ப்ரபுவை வேங்கடக்ருஷ்ண (பார்த்தஸாரதி- கோபாலவிம்சதி) ச்லோகம் கொண்டு ஏற்றினார் எம் ஆசார்யர்.

உபயநாச்சிமார்:  அத்புதம். அத்யத்புதம் (என கைதட்டிக் கொண்டாடுகின்றனர்)

ஸ்ரீநிவாசன் : போறும், போறும். உங்களின் ஆசார்ய பக்ஷபாதத்தைக்  காண்பித்தது போதும்.

பிராட்டிமார்: ஏன் ஸ்வாமி நாங்கள் ரசிப்பது தங்களுக்கு ஏன் கோபம் ?

ஸ்ரீநிவாசன் :  (சற்றே வருத்தத்துடன்) இன்று அனைவரும் ஒன்று கூடி என்னைத் தனிமைப்படுத்தி விட்டீர்கள்.

ஆதிவண்சடகோப ஸ்வாமி: ப்ரபோ! இப்படியும் தங்களின் திருவுள்ளம் கலங்கலாமா? ஒப்பில்லாத மாதர்களும், ஆடவர்களும் இங்கே திறண்டிருப்பது “திருவல்லிக்கேணி கண்டனே! ” எனத்தங்களை தரிசிப்பதற்காகவன்றோ!

ஸ்ரீநிவாசன் : அவர்கள் வந்து ஸேவிப்பது இருக்கட்டும். ஏன்  என்னுடைய ஸ்தோத்ரத்தைச்  சொல்லவில்லை என நான் கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை.

தேசிகன்: வருந்த வேண்டாம் வேங்கடேச! இதோ வண்சடகோபன் பதிலுரைப்பான்.

ஆதிவண்சடகோபஸ்வாமி: (தேசிகனை வணங்கி ) பக்தர் இடர் களையும் கேசவ இன்று தேவரீரின் அலங்கார விஷேசம் என்ன ?

ஸ்ரீநிவாசன் : (புரியாமல்) என்ன ! எப்போதும் போல் குருலிமாலை, மல்லிமாலை , திருவாபரணங்கள், பட்டு பீதாம்பரங்கள். வேறென்ன!

ஆதிவண்சடகோபஸ்வாமி: அதெல்லாம் சரி. திருக்குழலில் கோடரிமுடிச்சு என்று அழகாக சவரி சாற்றிக்கொண்டு கேசவனாக (குழல்கற்றையுடன்) ஸேவைசாதிக்கிறாயே !

ஸ்ரீநிவாசன் : உம் ஆசார்யர்  ச்லோகம் சொன்னது ஒருபுறம் இருக்கட்டும் நீ சுற்றி வளைத்துப் பேசுவது இன்னமும் புரியாமல் இருக்கிறது.

ஆதிவண்சடகோபஸ்வாமி : ப்ரபோ! க்ஷமித்தருளவும். அழகிய குழல் கற்றையில் மயிற்பீலி சொருகியவனாகிய  இக்கண்ணன் இடைப்பெண்களின் காதல் நோயினைத் தீர்ப்பவன். மோஹன மூர்த்தியான இவனின் திருவுள்ளத்தை என் இதயத்தில் செதுக்கிய சிற்பியார்? என்பதன்றோ அந்த ச்லோகத்தின் பொருள்.

ஸ்ரீநிவாசன் : ஆம்.

ஆதிவண்சடகோபஸ்வாமி :இன்று வேங்கடநாதனாகிய தாங்கள் ஒப்பில்லா மாதர்களாகிய இப்பெண்களுக்கு (ஜீவன்களுக்கு) காட்சியளிக்கும் அழகினை எம் ஆசார்யர் வேங்கடேசன்  வர்ணித்தார். இன்றைய திருக்கோலத்தின் அழகை அத்யத்புதமாக வர்ணிக்கும் இந்த ச்லோகத்தின் ஆழம் புரியாமல் நீயன்றோ மனம் கலங்குகிறாய் !

நாச்சிமார் : ஆஹா அத்புதம். அத்யத்புதம்.

ஸ்ரீநிவாசன் : எப்படியோ உன் ஆசார்யர்க்காக பரிந்துபேசி என்னை ஏளனம் செய்கிறாய்.

ஆதிவண்சடகோபஸ்வாமி : (அவசரமாக மறுத்து) சாந்தம் பாபம். திருமலையப்பனே இவ்விதம் சொல்லலாமா? என் ஆசர்யனே தாங்களன்றோ!

ஸ்ரீநிவாசன் :  (வியப்புடன் ) நானா? எப்படி ?

ஆதிவண்சடகோபஸ்வாமி :

அன்று இவ்வுலகினை ஆக்கி

அரும்  பொருள் நூல் விரித்து

நின்று தன் நீள் புகழ் வேங்கட மாமலை மேவி

பின்னும் வென்றி புகழ் திருவேங்கடநாதன்

என்னும் குருவாக அவதரித்தவனே!

இன்னுமா ஒன்றும் புரியாமல் என்னை கேள்வி கேட்கிறாய்!

ஸ்ரீநிவாசன் :  ஆஹா, ஆஹா அருமையான விளக்கம்,. ஆச்சர்யமான அனுபவம் (என ஆனந்திக்கிறான்) அதற்குள் புறப்பாட்டிற்குத் தயாராக திருச்சின்னம், உடல்  வாத்ய கோஷங்கள் முழங்கவாரம்பித்தன.

ஸ்ரீநிவாசன் : ஆசார்யார்களே ! திருமாமணிமண்டபம் போன்று இன்று உங்களுடன் ஸரஸ ஸல்லாபம் செய்தது அதியத்புதம் ஆனந்தம் அளிக்கிறது. இனி மிதிலையின் மாடவீதிகள் போன்ற இப்ப்ருந்தாரண்யத்தின் வீதிகளில் பவனி வரலாம் வாருங்கள்.

இப்படி வேங்கடகிருஷ்ணனின் அல்லிக்கேணியில் வேங்கடேசனும், வேங்கடநாதனும்(சுவாமி தேசிகன்), ஸ்ரீநிவாஸனும் (ஆதிவண்சடகோபஸ்வாமி) செய்தருளிய சம்வாதம் கேட்டு ஆனந்தம் அடைந்த பக்தர்கள் எம்பெருமான் தங்களுக்கு இங்கேயே முக்தர்களின் அனுபவத்தை அளித்த கருணையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

எழுத்து

APN

10-7-2023

Watch videos at

https://www.facebook.com/watch/?v=817769733360698

https://www.facebook.com/Thirukandaen/videos/651672006875322/

https://fb.watch/lGBCNLKHsd/?mibextid=6aamW6

Reels life & Real life | Sri APN Swami Writes உகப்பும் கசப்பும் – 004

श्रीः

शोभकृत् चैत्र – 23

06/05/23

Reels life & Real life

(உகப்பும் கசப்பும்)

சாந்தர் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். வம்பர் சத்தம் போடாமல் வந்து பின்புறத்திலிருந்து எட்டிப்பார்த்து “என்ன புத்தகம் படிக்கிறீர் ஓய்?”

சாந்தர்: (திடுக்கிட்டு திரும்பிப்பார்த்து) ஓ நீர் தானா?

வம்பர்: இவ்வளவு சுவாதீனமாக யார் வருவார்? என்னைத் தவிர! TV பாக்கலயா? நீர் தான் எப்போதும் trending-ல இருப்பீரே… News பாக்கலயா?

சாந்தர்: என்ன! சார்லஸ் பட்டாபிஷேகம் ஓடிண்டிருக்கு. அத தான சொல்றே!

வம்பர்: சுவாமிஜி சான்ஸே இல்ல. ஒவ்வொரு தடவையும் உம்மகிட்ட நான் பல்ப் வாங்கிண்டேயிருக்கேன். But அதுவும் I like it.

சாந்தர்: என்னை praise பண்ணது போறும். நீ வந்த விஷயத்த சொல்லு.

வம்பர்: வேறென்ன ஓய். After 70 years, British கோலாஹலம் பார்த்தீரா!

சாந்தர்: ம் (மௌனம்)

வம்பர்: என்ன ஓய் துளிகூட interest காண்பிக்க மாட்டேங்கிறீர்? என்ன ப்ரம்மாண்டம், என்ன arrangements… அப்பப்பா. SuperO Super. அதுவும் அவா follow பண்ற traditional protocols இருக்கே…. சான்ஸே இல்ல moment.

சாந்தர்: எ..ன்…ன? என்ன சொன்ன?

வம்பர்: (தனக்குள்) என்னடா! நாமளா ஏதாவது வாயை கொடுத்து மாட்டிண்டோமா? எல்லாத்தயும் correct ஆகத்தானே சொன்னோம். இந்த மனுஷன் எத வச்சு மடக்கறார்-னு தெரியலயே!

சாந்தர்: என்னப்பா யோசன? நீ சொன்னது மறந்து போச்சா?

வம்பர்: (விழித்தபடி) என்ன.. என்ன… சொன்னேன்?

சாந்தர்: என்னமோ tradition-னு சொன்னயே! அத கேட்டேன்.

வம்பர்: ஆமா! Tradition தான். ஒரு perfect royal ceremony. ரொம்பவே impressive ஆக இருந்தது.

சாந்தர்: Correct. எனக்கும் ரொம்ப புடிச்சிருந்தது.

வம்பர்: அப்புறம் என்ன ப்ரச்சன? அத accept பண்ண என்ன தயக்கம்?

சாந்தர்: அத Accept பண்ண தயக்கம் இல்ல. But நம்ப situation நெனச்சாதான் கஷ்டமா இருக்கு

வம்பர்: (தலையில் கை வைத்தபடி) போச்சுடா! இதிலயும் ப்ரச்சனயா!

சாந்தர்: இங்கிலாந்து இளவரசர் முடிசூட்டு விழா பாரம்பரிய முறைப்படி நடந்ததுன்னா ரசிக்கற நாம நம்ப வீட்டு கல்யாணங்கள எப்படி நடத்தறோம்?

வம்பர்: (என்ன சொல்ல வறார் என்பது புரியாமல் பார்க்கிறார்)

சாந்தர்: வரவர நம்ப கல்யாணங்கள்ல வைதிக ச்ரத்தையே போய்டுத்து. Nobody cares about traditional customs.

வம்பர்: (மௌனம்)

சாந்தர்: ஒரே பாட்டு, கூத்து, கேலி, சத்தம் இப்படித்தான் போயிண்ட்ருக்கு. DJ, மெஹந்தின்ற பேர்ல சகிக்க முடியாத கூத்து நடக்கறது.

வம்பர்: (ஏதோ சொல்ல வாயெடுக்கிறார்)

சாந்தர்: இதெல்லாம் சொன்னா எங்கள நீங்க பிற்போக்குவாதின்னு கேலி பண்ணுவேள். But this is reality. We are not against celebrations. But celebration-ன்ற பேர்ல கூத்தடிக்கிறது தான் un-ஸகிக்கபிள். Ok உங்க sideலயே பேசறேன் – பாட்டு, dance-னு கூத்தடிச்சுட்டு அப்புறம் கல்யாணத்தயாவது ஒழுங்கா பண்ணிக்கலாமே? அதுவும் இல்ல.

வம்பர்: (மௌனம்)

சாந்தர்: ஒரு பெரிய ராஜ்யத்துக்கு மன்னராக முடிசூட்டப்படும் நிகழ்வில் எங்காவது உற்சாகம் என்னும் பெயரில் வரம்புமீறுதல் அல்லது மரபு மீறுதல் இருக்கா? அத ரசிக்கற நாம complete-ஆ நம்ப மரபுகள மீறுகிறோம்னு என்னிக்காவது நினச்சுப் பாத்ததுண்டா?

வம்பர்: சும்மா வேடிக்கதானே சுவாமி!

சாந்தர்: அத தான் நானும் சொல்றேன். இந்த pre-wedding shoot, reelsன்ற பேர்ல கணவன் மனைவியின் அந்தரங்கம் பகிரங்கமாகிறதே. இப்ப recent-ஆ ஒரு reels பார்த்தேன்.

வம்பர்: (ஆவலுடன்) என்ன அது?

சாந்தர்: ஒரு பொண்ணு கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்குப் போறத்துக்கு முன்னாடி தன்னோட அப்பாவ கட்டிப்பிடிச்சுண்டு அழறா!

வம்பர்: சகஜம் தானே!

சாந்தர்: ஆமாம் தான். ஆனா அங்க தான் ஒரு twist வெச்சா அந்தப் பொண்ணு.

வம்பர்: Twist-ஆ?

சாந்தர்: ஐயோ பாவம் பொண்ணு அழறாளேன்னு அவ அம்மா, கிட்டவந்தா, ஆறுதல் சொல்றதுக்கு. ஆனா அந்தப் பொண்ணு என்ன பண்ணா தெரியுமா?

வம்பர்: என்ன… என்ன பண்ணா?

சாந்தர்: அவ அம்மாவ பாத்து “அம்மா! நீ குறுக்க வறாத reels போய்ண்ட்ருக்கு” அப்படின்னா!

வம்பர்: அடிப்பாவி!

சாந்தர்: பாத்தியா… உனக்கே கடுப்பா இல்ல? இப்ப நடக்கற சம்பவங்கள் நிஜமான திருமணமா இல்ல reels திருமணமான்னு சந்தேகம் வற்து. அந்த வீடியோ ரீலா அல்லது ரியலா என்று கூட தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் நாள் தொலைவில் இல்லை என்பது தான் உண்மை நிலை.

மேல் நாட்டு நாகரீக மோகத்துல மூழ்கின நமக்கு அந்த மேல் நாட்டவர்கள் தங்களின் பாரம்பர்யத்தை மறக்கலேங்கற்து கண்ல பட மாட்டேங்குது.

Like mind திருமணமா! likeஸ்க்கு மயங்கும் திருமணமா?

Reels life திருமணமா real lifeக்காக திருமணமா?

இன்னமும் என்னென்ன கூத்துகள் அரங்கேறப் போறதோ தெரியல. நூறு Kerala Stories திரைப்படங்கள் வந்தாலும் ஹிந்து ஸமுதாயம் விழித்துக்கொள்ளுமா தெரியவில்லை.

வம்பர்: (ஒன்றும் சொல்லத் தோன்றாமல் வாயடைத்து நிற்கிறார்)

Link to video – https://www.facebook.com/reel/249072574303453?s=chYV2B&fs=e&mibextid=6AJuK9

शोभकृत् चैत्र – 23

06/05/23

அரங்கன் உரைத்த அந்தரங்கம் & அரங்கம் ஏறிய அந்தரங்கம் | Secrets Uttered by Lord Ranganathan & Secrets that got up the stage | Sri APN Swami Writes

Scroll down to read the english translation of this article.

This article is an extract from the series called Ramanuja Vaibhavam written by Sri APN Swami.

அரங்கன் உரைத்த அந்தரங்கம்

திருவரங்கம் – பூலோக வைகுண்டம் எனும் பெருமை வாய்ந்தது.  108 வைணவ திருத்தலங்களுக்குத் தலைமை அலுவலகம்.  ஆழ்வார்கள் மட்டுமின்றி நாதமுனிகள், ஆளவந்தார் தொடங்கி இதோ  இன்று ராமானுஜர் வரையில் ஆசார்ய வள்ளல்கள் வாழ்ந்து வைணவம் வளர்க்கின்றனர்.  அவர்களுக்கு அரங்கனே கதி.   அழகிய மணவாளனே மணாளன்.

ஆராத காதலில் ஆழ்வார்களும், ஆசார்யர்களும் அரங்கனை ஆட்கொண்டனரா!  அல்லது அழகிய மணவாளன் இவர்களை ஆட்கொண்டானா!  என்பது தனிப்பட்ட முறையில் விவாதத்துக்குரிய ரசமான தலைப்பு.

 தற்போது பகவத் ராமானுஜர் தலைமைப் பொறுப்பினை ஏற்று தன்னலமற்ற தொண்டாற்றி வருகின்றார்.  சுமார் எண்ணாயிரம் சந்யாசிகள் அவருடன் இருந்தனராம்.  அது தவிர இல்லறத்தில் இருந்து கொண்டே எம்பெருமான் தவிர ஏனையவற்றில் ஈடுபாடற்ற பரமைகாந்திகள் கணக்கற்றவர் வசித்து வருகின்றனர்.  கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், கிடாம்பியாச்சான், மிளகாழ்வான், திருக்குருகைப்பிரான்பிள்ளான் என எதிராஜரின் சீர்மிகு சீடர்கள் அரங்கத்தின் வைணவத்துக்கு அரண்களாக உள்ளனர்.

ஶ்ரீரங்கநாதனும் ஶ்ரீரங்கநாயகியும் நித்யோத்ஸவம், பக்ஷோத்ஸவம், மாஸோத்ஸவம் என்று, தினமும் திருவிழாக்களைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பொலிக, பொலிக, பொலிக என ஆழ்வார் பாடியது இன்று அரங்கத்தில் திருவாகத் திகழ்கிறது.  எதிராஜராம் ராமானுஜரின் அருள் மொழிகளைக் கேட்டு லட்சக் கணக்கில் மக்கள் நல்வாழ்வு அடைகின்றனர்.  ராமானுஜன் சொல்வன்மைக்கு யாது காரணம்?” என திருக்குறுங்குடி நம்பி சந்தேகம் கொண்டு பின்னர் சிஷ்யனாகி அதனை அறிந்தமையை முன்னமேயே கண்டோமன்றோ!  இதோ.. இத்திருவரங்கத்தில் அதன் பெருமை தொடர்கின்றது.

பொன்னரங்கமென்னில் மயலே பெருகும் இராமானுசன் என்கிறார் திருவரங்கத்து அமுதனார்.  ரங்கநாதன் மீது மையல் கொண்டவர் ராமானுஜர்.  அவர் மூலமாகத்தானே தன் உபதேசங்களை ரங்கநாதன் உலகறியச் செய்கிறான்.

முக்கியமாக, சரணாகதி சாஸ்த்ரம் (அடைக்கலமே ஆன்மாவைக் காப்பாற்றும்) உலகில் செழித்து,  எல்லோரையும் வைகுண்டத்தை அடைவிக்க வேண்டும் என்பதில் ரங்கநாதன் உறுதியாக இருந்தான்.  ராமானுஜனாக (பலராமன் தம்பியாக) தான் உரைத்த கீதையின் பொருளை- குறிப்பாக சரம ச்லோகத்தின் பெருமையை – இந்த ராமானுஜரைக் கொண்டு பிரசாரம் செய்ய தீர்மானித்தான்.

அவதாரங்களில் உயர்ந்தது அர்ச்சாவதாரம்.  அதாவது  தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் என்பதாக நாம் எப்படியெல்லாம் விரும்புகிறோமோ அப்படியெல்லாம் அலங்காரங்கள், உத்ஸவங்கள் செய்து பெருமாளை ரசிக்கலாம்.

ஒரு சமயம் பங்குனி உத்திரத் திருநன்னாள்.  வைணவ திருகோயில்களுக்கு இந்நாள் மிகவும் முக்கிமானது.  ஏனெனில் அன்றுதான் பிராட்டியின் திருவவதாரம்.  ஆம்! ராமனாக, கிருஷ்ணனாக, நரஸிம்ஹனாக அவதரித்த பெருமாள் அந்தந்த அவதாரங்களில் ஜயந்தி (பிறந்த நாள்) கொண்டாடுகிறான்.  ஆனால் சீதையோ, ருக்மிணியோ என்று பிறந்தார்கள் என்பது தெரியுமா?  அவர்களின் பிறந்த நாளை நாம் கொண்டாடுகிறோமா?

அதாவது பெருமானுக்குக்கூட அவதாரங்களில் கர்ப்பவாஸம் உண்டு.  ஆனால், பிராட்டி என்றுமே அயோநிஜை.  தானாக ஆவிர்பவிப்பவள்.  அதில் குறிப்பாக, துர்வாஸ முனிவரின் சாபத்தினால் மூவுலகிலும் மஹாலக்ஷ்மி மறைந்தாள்.  பின்னர் தேவர்களும் அசுரர்களும் அமுதத்துக்காகப் பாற்கடலைக் கடைந்தனர்.  அமுதில் வரும் பெண்ணமுதமாக மஹாலக்ஷ்மி அதில் ஆவிர்பவித்தாள்.  கடற்கரையிலேயே அவளின் திருமணம் அன்றைய தினத்திலேயே நடந்தேறியது.

இப்படி அவள் அவதரித்து அழகிய மணவாளனாம் எம்பெருமானை மணம் புரிந்த திருநன்னாள் பங்குனி மாதம் உத்திர நக்ஷத்திர திருநாள்.  அதனால்தான் எல்லா விஷ்ணு கோயில்களிலும் விமரிசையாக பெருமாள், தாயார் கல்யாண உத்ஸவம் அன்று நடைபெறும்.  சேர்த்தி உத்வஸம் என்று ஒரே ஆஸனத்தில் பெருமாளையும், தாயாரையும் எழுந்தருளப் பண்ண வைத்து பக்தர்கள் சேவித்து மகிழ்வார்கள்.

எல்லாக் கோயில்களிலும் இது விமரிசையாக நடந்தாலும் திருவரங்கத்துக்குப் பெருமை சேர்க்கத்தான் ராமானுஜர் இருக்கிறாரே!  ரங்கநாதனும் அதற்காகத்தானே அவரை எங்கும் செல்ல விடாமல், ஒருவேளை சென்றாலும், உடனேயே திரும்பி வரும்படியாகச் செய்து விடுகிறானே.

இந்த சமயம் பங்குனி உத்திர நன்னாள்.  ஶ்ரீரங்கன் ரங்கநாயகியின் சன்னிதிக்கு எழுந்தருளி அங்கே சேர்த்தி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திருநாளன்று ரங்கநாயகி மண்டபத்தில் ஜே! ஜே என்று கூட்டம் அலைமோதுகிறது.  ஒரே சமயத்தில் தன் குழந்தைகள் அனைவரையும் உடன் சேர்த்து தாய், தந்தையர் களிப்பது போன்று ரங்கனும், அவன் நாயகியும் மகிழ்ந்துறைகின்றனர்.

சிஷ்யர்கள், பக்தர்கள் புடைசூழ ராமானுஜர் அவ்விடத்துக்கு பெருமாளைச் சேவிக்க வருகிறார்.  மக்கள் வெள்ளத்தினூடே அவரின் வருகையை திவ்ய தம்பதிகள் மகிழ்வுடன் பார்க்கின்றனர்.  இதுவரை இருந்த சலசலப்பு ஒரே நொடியில் அமைதியாகிவிட்டது.  மக்கள் ராமானுஜர் மீது கொண்ட மதிப்பு அத்தகையது.  எங்கும் நிசப்தம்.  எல்லோருடைய கவனமும் ராமானுஜர் மீதே நிலைத்து நின்றன.  தங்களை சேவிக்க மறந்து ராமானுஜரையே வைத்த கண் வாங்காமல் மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருப்பதை திவ்ய தம்பதிகளும் ரசித்தனர்.

மெதுவாக மண்டபத்தின் படிக்கட்டுகளில் ஏறி பெருமாளையும், தாயாரையும் சேவித்தார் ராமானுஜர்.  இவன் அழகிய மணவாளன்.  அவனழகைச் சேவிக்க இரண்டு கண்கள் போதாது.  ஆனால், ராமானுஜரால் அத்தனை அழகையும் அள்ளிப் பருக முடிந்தது.  ஏனெனில் அவர்தான் ஆதிசேஷன் அவதாரமாயிற்றே.  இமையோர் தலைவனை இமைக்க மறந்து சேவித்தார்.  ராமானுஜரின் உள்ளத்தில் பக்தி வெள்ளம்.  இரண்டும் எதிரெதிரே பொங்கிப் பிரவகிக்கின்றது.

நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனிக்கிறது எதிரே உள்ள கூட்டம்.  திருவடி முதல் திருமுடி வரையிலும் நிதானமாக சேவிக்கிறார் எதிராஜர்.  காதல் கணவனை அன்பு ததும்ப ஆசை மனைவி அனுபவிக்கும் நிலையிது என்று, நாம் புரிந்து கொள்ள, பெரியோர்கள் உதாரணம் காட்டுகின்றனர்.

ஒருபுறம் அரங்கம் நிறைந்த மக்கள் வெள்ளம்.  மறுபுறம் அரங்கநாயகன்.  நடுவினில் தனிப்பெரும் தலைவனாகிய ராமானுஜர்.  அரங்கனின் அழகிய முகத்தில் மெலியதான புன்னகை தவழ்ந்தது.  என்றுமே அவன் திருமுகம் மந்தகாசத்துடன் கூடியது என்றாலும், இன்றைய புன்னகையில் ஏதோ திருவுள்ளம் உறைந்துள்ளது போலும்.  அருகிலிருந்த அன்னையான ரங்கநாயகியும் ஆமோதிப்பது போன்று மெதுவாகத் தலையசைத்தாள்.

எம்பெருமான் திருவுள்ளத்தில் என்ன உள்ளது என்பதை அறியும் வன்மை யாருக்கு உள்ளது?  அவன் அடியார்களே அதை அறிபவர்கள்.  இன்று அரங்கனின் அந்தரங்கத்தை ராமானுஜர் நன்கு உணர்ந்தார்.  அந்த ரங்கன் அவரிடம் அந்தரங்கமாக ஏதோ சொல்லியுள்ளான் போலும்.  கிடைத்த வாய்ப்பை வீணாக்காதவன்தானே செயல்வீரன்.

முன்பொரு நாள் குருக்ஷேத்ர யுத்தத்தில் சோகத்தினால் கலங்கிய அர்ஜூனனின் கலக்கம் தெளிய கீதை எனும் பெரும் தத்துவத்தை உபதேசித்தவன் இதே ரங்கன்.  அரங்கம் என்றால் மேடை என்பது தானே பொருள்.  அன்று யுத்தரங்கத்தில் இவனின் பிரசங்கத்தை கேட்பவருமில்லை.  போற்றினவரும் இல்லை.  அர்ஜூனன் ஒருவனே கிடைத்தான்.  ஒரு வழியாக மனது இசைந்து யுத்தம் செய்தான்.  இருப்பினும் உயரிய அக்கீதையின் உட்பொருளை உலகம் உணர வேண்டாமா?  அதே அரங்கன் இன்று அரங்கத்தில் குழுமியுள்ள மக்கள் திரளைக் கண்டான்.  ராமானுஜரின் அந்தரங்கத்தில் புகுந்து பேச வைத்தான்.  கணீரென்று அவர் அக்கூட்டத்தில் பேசியது, அரங்கத்தின் திருமதிள்களில் இன்றும் எதிரொலிக்கிறது.

அரங்கம் ஏறிய அந்தரங்கம்

எதிரே பெரும் ஶ்ரீவைஷ்ணவத் திரள்.  எல்லோரும் ரங்கா!  ரங்கா!  என்று இதுவரையிலும் ஓலமிட்டவர்கள், இப்போது ராமானுஜா!  ராமானுஜா!  என்று கொண்டாடி மகிழ்கின்றனர்.  அரங்கனும்,  அழகிய  நாச்சியாரும் மகிழ்ந்து இதனை ரசிக்கின்றனர்.  சரி…. ராமானுஜனாக (பலராமன் தம்பியாக), தான் சாதிக்க முடியாததை, தற்போது ராமானுஜராக (ஆசார்யராக) சாதிக்கலாம் எனும் எண்ணம் அரங்கனின் அந்தரங்க திருவுள்ளம்.

எல்லோரும் குழுமியிருந்த இடத்தில் யாருமே கேட்காமலிருந்தாலும் அர்ஜுனனுக்கு கீதையைக் கூறியவன்;  இப்போது எதிராஜர் என்ன சொன்னாலும் கேட்பதற்குத் தயாராக உள்ள இக்கூட்டத்தைக் கண்டு வாளா இருப்பானா என்ன!  எனவே அவன் தன் அந்தரங்கக் கட்டளையை, அந்த ரங்கனின் கட்டளையை,  ராமானுஜருக்களித்தான். 

ரங்கன் ஒரு பித்தன்.  தன் பக்தர்கள் எவ்வாறேனும் தன்னை வந்து அடையமாட்டார்களா!” என்று ஏங்குபவன்.  மிகவும் கடினமான பக்தி முதலான வழிமுறைகளைச் சொன்னால், எங்கே இவர்கள் பயந்து தன்னிடம் வராமலேயே இருந்து விடுவரோ எனத் தயங்குபவன்.  பத்துடை அடியவர்க்கு எளியவனன்றோ!  ஆகையால் எல்லோரும் வாழ்ந்து போகும்படியான ஒரு வழிமுறையை உலகிற்குணர்த்த அத்திவ்ய தம்பதிகள் தீர்மானித்தனர்.

முதலில் உபாயத்தின் மேன்மை அறியலாம்.  பின்னர் வாய் திறந்த அரங்கனின் வைபவத்தை அறியலாம்.  எல்லாம் ராமானுஜர் அநுக்ரகம். 

பரமபதமாகிய மோட்சத்தை அடைய இரண்டே வழிகள் தான் உள்ளன.  இது தவிர வேறெந்த உபாயத்தினாலும் மோட்சத்தை அடைய முடியாது.  அது தவிர மோட்சத்தை அருளுபவன் எம்பெருமான் ஒருவனே.  அவன் தவிர வேறு எவர்க்கும் மோட்சம் அளிக்கும் தகுதி இல்லை.  எனவே,  தேறும் கால் தேவன் ஒருவனே என்று அறுதியிடுகின்றனர் ஆழ்வார்கள்.  இதுவே வேதமுரைத்தது.

இரண்டு வழிகளுள் ஒன்று பக்தியோகம்.  மற்றொன்று ப்ரபத்தி யோகம்.  அதாவது ஒருவன் வேதம் கற்கக்கூடிய குலத்தில் பிறந்து (அதுவும் ஆண் மகனாக), வேதத்தை நன்கு கற்க வேண்டும்.  அந்த வேதத்திற்கு ஆறு பிரிவுகள் உண்டு.  அதையும் அறிய வேண்டும்.  இவ்விதம் அறிபவன் வேதத்தில் கூறப்பட்டுள்ளபடியே தனக்குரிய ஒரு உபாஸனையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 

தற்காலத்திலுள்ள நரசிம்ம உபாஸனை,  ஹனுமத் உபாஸனை,  தேவீ  உபாஸனை போன்றதல்ல இது.  இதற்கு வித்யா என்பது பெயர்.  அந்த உபாஸனையை அவன் வாழ்நாள் முழுதும் கடைபிடிக்க வேண்டும்.  அது தவிர மேலும் பல பிறவிகளும் அவனுக்கு உண்டாகும்.  அத்தகு  பிறவிகளிலும் இதையைல்லாம் விடாது (ஒருக்கணமும் விடாது) உபாஸனை செய்ய வேண்டும்.  இதையெல்லாம் அதிகம் விவரித்தால் கதையிலுள்ள சுவாரசியம் போய்விடும்.  மொத்தத்தில் நம்மால் முடியாது.

 சரி. இவ்விதம் சொன்னால், பின் எப்படி சாமான்யர்கள் மோட்சம் அடைவது. நாமெல்லாம் நற்கதி அடைய வழியே இல்லையா! எனும் கேள்வி எழுகிறதே.  இதற்குத்தான் பரம தயாமூர்த்தியான பெருமாள்,  ராமானுஜர் மூலமாக விடை தருகிறார்.

நான் அனைவர்க்கும் பொதுவானவன்.  எல்லோருமே எனக்கு வேன்டியவர்களே என்கிறான் கீதையில் கண்ணன்.  இப்படிச் சொன்னவன் யாரோ ஒரு சிலர் மட்டும் தன்னை வந்தடையட்டும் என எண்ணுவானா? அங்கு கீதையில் சொன்ன ஒரு அர்த்தத்தை இன்று இங்கு அரங்கத்திலும் சொல்லுகிறான்.  ஹே அர்ஜுனா!  எத்தனையோ புண்ணிய பிறவிகள் கழிந்து தான் நாராயணனாகிய நானே அனைத்தும் எனும் நினைவுடன் ஒரு பக்தன் என்னை வந்தடைகிறான்.  ஆனால், இத்தகையதொரு நிலையுடன் என்னை அணுகும் அந்த மஹாத்மா கிடைப்பது மிக, மிக துர்லபமாயுள்ளது என்கிறான்.

இதனால்,”என்னிடம் பக்தர்கள் அதிகம் வர வேண்டும்.  நான் அவர்களுக்கு மோட்சமளித்து அளவில்லா ஆனந்த வாழ்க்கை தர காத்திருக்கிறேன் எனும் திருவுள்ளம் நன்கு தெரிகின்றதன்றோ! அதற்குரிய வழிமுறைகளையும் இப்போது தெளியலாம்.

முன்னம் நாம் பார்த்த பக்தி கடினமானது.  எப்போது பலனளிக்கும் என்பது தெரியாது. நாம் அதைச் செய்யும் வல்லமையற்றவர்கள்.  ஆனால், மோட்சத்தில் விருப்பமுடையவர்கள்.  இதனால் நாம் அவனை அடையும் வழி சுலபமானதாகவிருந்தால் மேலானது.  அத்தகையதொரு வழிமுறைதான் சரணாகதி என்பது.

 நான், என்னைச் சேர்ந்த அறிவுடைய அறிவற்ற என அனைத்தையும், ஹே ப்ரபோ! தேவதேவ! நீ உன் கைங்கர்யத்துக்காக ஏற்றுக்கொள் என அனைத்தையும் அவன் திருவடியில் சமர்ப்பிப்பதற்குத்தான் சரணாகதி என்பது பெயர்.  இதனை யாரும் செய்யலாம்.  எக்காலத்திலும் செய்யலாம்.  எவ்விடத்திலும் செய்யலாம்.  எவ்வித நியம நிஷ்டைகளும் கிடையாது.  ஒன்றே ஒன்றைத் தவிர.  அது மஹாவிச்வாஸம்“.  எல்லாம் நாராயணனே;  அவனே நம்மை ரட்சிப்பவன்;  அவனை அடைவது தவிர இப்பிறவிக்கு பயன் ஏதுமில்லை எனும் உறுதியிருந்தால் போதுமானது.

மகானாகிய ஆசார்யருடைய சம்பந்தத்தை அடைந்து, இந்த ஆத்மாவை மேற்கூறியபடி பகவானின் திவ்யமான திருவடித் தாமரைகளில் சமர்ப்பித்தால்,  இனி நமக்கு பிறவி எனும் பயம் என்றுமே கிடையாது.  ஒரே ஒருமுறை விரைவாக செய்து முடிக்கக்கூடிய கார்யம் இது.  இந்த மாபெரும் அமுத வெள்ளத்தை அகில உலகமும் அடைந்து, அழியாத ஆனந்தமான பேரின்பத்தைப் பெற வேண்டும் என நினைத்த அரங்கன் ராமானுஜரைப் பேச வைத்தான்.  தானும் பேசினான்.

இந்த சரணாகதி மந்த்ரத்துக்கு த்வய மந்த்ரம் என்பது பெயர்.  திருவுடன் சேர்ந்த பகவானுடைய திருவடித் தாமரைகளை அடைக்கலமாக அடைகிறேன்.  திருவுடன் கூடிய திருமாலுக்கு (நாராயணனுக்கு) கைங்கர்யம் செய்கிறேன் என்பது அந்த மந்திரத்தின் பொருள்.  அத்தகைய உயரிய மந்திரத்தைக் கூறி என்னையே அடைக்கலமாக அடைவாயாக!”; நான் உன்னை அனைத்து வினைகளிலிருந்தும் காப்பாற்றுகிறேன் என்று கீதையின் சரம ச்லோகத்தில் கண்ணன் உபதேசித்தான்.  கவலைப்படாதே எனும் அவன் வாக்கியத்தின் பொருளை இன்று உலகம் உணர்கின்றது.

பரம பவித்ரமான பங்குனி உத்திரத் திருநன்னாளில், அரங்கனின் ஆணைப்படி, உலகறிய, ராமானுஜர் சரணாகதி செய்தார் !  ராமானுஜர் எவ்வழியோ,  உலகம் அவ்வழி ! என்பதற்கேற்ப, தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் ரங்கநாதன் திருவடிகளில் சமர்ப்பணம் செய்தார்.

அந்தச் சமயம் ராமானுஜரால் அருளிச் செய்யப் பட்ட அமுத மொழிகளுக்கு கத்ய த்ரயம் என்பது பெயர்.  அரங்கன் திருவடிகளில் அடைக்கலம் அடைய சரணாகதி கத்யம்‘;  ஶ்ரீவைகுண்டத்தின் பெருமையை வர்ணிக்கும் வைகுண்ட கத்யம்‘; பூலோக வைகுண்டமான ஶ்ரீரங்கத்தின் அழகை வர்ணிக்கும் ஶ்ரீரங்க கத்யம் என மூன்றும் ஆசார்யரால் அருளப்பட்டன.

எம்பெருமானே !  உன் திருவடித் தாமரைகளில், வேறொன்றிலும் பற்றில்லாத எனது மனது லயிக்க வேண்டும்.  இதுவரையிலும் நான் செய்த தீவினைகளிலிருந்து நீ காக்க வேண்டும்.  அவற்றை இனியும் நான் செய்யாதபடி நீ தடுத்தாட்கொள்ள வேண்டும்.  கருணாநிதியே!  குணக்கடலே,  இனிமையானவனே உன்னையே சரணடைந்தேன்  என்று இதில் பகவத் ப்ரார்த்தனையைச் செய்கிறார்.  பிராட்டியாம் ரங்கநாயகித் தாயாரை முன்னிட்டு, ராமானுஜரால் ரங்கநாதனிடம் சரணாகதி செய்யப்பட்டது.

இங்கிருக்கும் காலம்வரை அடியேன் தேவரீர் உகந்த கைங்கர்யத்தை – ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்  என்று ப்ரார்த்தனை செய்தார்.  உடனே, பேசும் தெய்வம் அரங்கன்,  அப்படியே ஆகுக.  உன் விருப்பங்கள் அனைத்தும் ஈடேறும்.  இந்நிலவுலகில் இருக்கும் வரை முன் சொன்ன த்வய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டேயிரு.  இந்தத் திருவரங்கத்திலேயே பரம சுகமாக வசிக்கக் கடவாய்  என்று திருவாய் மலர்ந்தருளினான்.  இந்த அதிசயத்தை உலகமே கண்டு போற்றியது.

எளிமையான இந்த உபாயம் எல்லோருக்கும்தானே.”தன்னடியார்கள் இதைச் செய்தால் அவர்கள் திறத்தில் இரங்கும் அரங்கன் பித்தன் என்கிறார் ஆழ்வார்.  அன்பர்களே! இனியும் என்ன குறை; என்ன  கவலை! உய்ய ஒரே வழியான உடையவர் திருவடியை அடைந்துய்யலாம்.  அரங்கத்தில் நிகழ்ந்த அந்தரங்கம் இந்த உலகிற்கோர் அற்புதம்.

அன்புடன்

அனந்தன்


Aranganuraithaandharangam(Secrets uttered by Lord Ranganathan)

Thiruvarangam has the distinction of being called “BhoolokaVaikuntam” or the Vaikuntam on earth. This is the Head Quarters of all the 108 divyadesams. This is the place where azhwars and eminent acharyas starting from Naathamunigal and Alavandhar to Swami Ramanuja, have lived for the propagation of Vaishnavam. For them, Aranganar (presiding Lord of SriRangam) is the only refuge. Azhagiyamanavalan himself is their only love.

Did Azhwars and acharyas embraced Him with their unflinching devotion, or did Aranganar embrace them? That separate subject for interesting debate at another time.

Now, Swami Ramanuja took the responsibility of being the Chieftain and served selflessly. Around 8,000 sanyasis said to have been there with him at that time. Besides, countless number of householders who worshipped only Sriman Narayana (such people are called paramaikaanthis) were living there. Many distinctive disciples of Swami Ramanuja such as Koorathazhwan, Mudaliaandan, Embar, ArulaalaPerumalEmberumaanaar, KidambiAachan, Milagazhwan and Thirukurugaipiraanpillan, who were like the fort of Sri Vaishnavism, of Sri Rangam.

SriRanganaathar and SriRanganaayaki are enjoying Nithyothsavam, Pakshothsavam, maasothsavam and other utsavams (festivals) everyday.

Azhwar sang, “Poliga, Poliga, Poliga” then, which today is shining as the wealth of Sri Rangam.

Countless people have benefitted from Ethirajar (Ramanuja)’s words of wisdom for their welfare. Earlier, we saw how Lord Nambi, after having a doubt “what is the reason for Ramanuja’s oratory power”, became Ramanuja’sdisciple to experience his teachings. Lo! The same continues in Thiruvarangam too.

Thiruvarangaamudhanar once said, “PonarangamEnnil, mayalperugum Ramanuja.” (meaning: when I say shining Sri Rangam, Ramajuja gets into a trance) Ramanuja was mad (crazy) mad with love for Ranganathan.  Lord Ranganathan published his upadesam (preaching) to the world only through Ramanuja.

Specifically, Ranganathan was determined that saranagathi principle should prosper in the world and all should attain Sri Vaikuntam. He decided to preach, through Ramanjuja, the meaning of Bhagavad Gita, (particularly the greatness of Charama Slokam), which, He, as brother of Rama (younger brother of Balarama) gave out.

Archavatharam is the best of all avatharams (incarnations). “Whichever image you like, is My image” is what it is. Whatever way we wish, we can enjoy Him, by dressing Him, conduct celebrations etc

Once, it was the holy day of Panguniuthiram.This is an important day for Sri Vaishnava temples. That is the day of Thiruavatharam (Appearance day) of Piratti (consort of Lord). In general, we celebrate it as Jayanthi day, (the birthdays) of Perumalthose days when He incarnatedas Rama, Krishna or Nrsimha. But, do we know the birthdays of Sita or Rukmini? Do we celebrate Their birthdays?

Perumal has spent time in the womb of different mothers during His avatharas. Pirattis Ayonija – she has always emerged directly without going through the process of birth.    She appears on Her own. One time, Mahalakshmi disappeared from the face of all the three worlds due to a curse by Sage Durvasa. Later, when Devas and Asuras came together to churn the paarkadal (milky ocean) to get nectar, there emerged from it, like a lady-nectar, Mahalakshmi. On that very day, Her marriage happened on the shores of paarkadal.

Her advent and marriage to the BeautifulBride-groom, Perumal, took place on the uthiram star in the tamil month of Panguni. In commemoration of this event, a kalyanautsavam (divine marriage) is performed for Perumal and Piratti on that day every year, in all Sri Vaishnava temples. Called as “Serthiutsavam”, Perumal and Piratti are seated together and devotees happily pray them on this day.

Though this event happens in all temples, there is Sri Ramanujato add extra touch of specialty to Sri Rangam. This is also why Lord Ranganathar doesn’t let Ramanuja go away from Him, and even if he goes, He makes him come back soon.

Once it was panguniuthiram day, this day, whenLord Ranganathar comes to the shrine of Ranganayaki, then together They Bless the devotees, at RanganayakiMandpam there is a very large congregation of bustling devotees. Perumal and Piratti were overwhelmed by the joy, just like how parents would be very happy to be with all their children at one place.

Ramanuja, along with this retinue of devotees and disciples, came there to take the Blessings of Perumal and Thaayar. TheDivyadampathi (Perumal and Piratti) welcomed him joyously. Suddenly, the crowd became silent. That was the respect the people had for Swami Ramanuja. Everyone’s attention was focused only on Ramanuja.The Divya Dampathi were enjoying the pointed attention that Ramanuja was getting from the crowd which forgot to have darshan of Them.

Slowly Ramanuja climbed the steps of the mandapam and prayed Perumal and Thayar. The Lord is the beautiful Groom.It is impossible for normal people to behold His beauty all at once. But, Ramanuja was able to do so because he is none other than the incarnation of Adiseshan. He prayed the Lord of Devas, without batting an eye. Ramanuja’s heart brimmed with devotion. Both Lord’s beauty and Ramanuja’s devotion were overflowing there.

The crowd watched keenly at the unfolding of events. Ramanuja slowly savoured the beauty of Perumal from His Holy Feet to His Crown. To help us understand this depth of devotion, our elders have metaphorically explained this feeling as that of a “loving wife enjoying the love and affection of her beloved husband.”

With thronging crowds on one side and Lord Ranganathar on the other. Swami Ramanuja stood in between as the one and only leader. Lord Ranganathar wore a mesmerizing smile. He is always so, but today, there was also a slight ‘indication’ in His smile. Mother Ranganyakai also slightly nodded Her head, assenting to His thoughts.

Who has the skill to know what is in His mind? Only His devotees know His mind. Today, Ramanuja clearly understood the secret thoughts of the Lord. It seemed that the Lord Ranga had secretly told something to Ramanuja. One who makes the most of the given opportunity is a champion.

This is the same Ranganathar who preached at Kurukshethra war, the great concept of ‘Gita’ to Arjuna, who was disillusioned by sorrow. Arangam means stage. On that day, there was no one to listen to His preaching or appreciate the same. Only Arjuna was there. After listening to all that the Lord said, Arjunan relented and went for war. But should not everyone in the world understand the inner meaning of this exalted Bhagavad Gita? Same Arangan (Krishna) today saw the congregation in Arangam. He entered into Ramajua and made him speak. The booming voice in which Ramanuja spoke those words, resonate even now in the compound walls of Sri Rangam.

Andharam Eriya Andharangam(Secrets that got up the stage)

Swarms of Sri Vaishnava people who were shouting “Ranga! Ranga!” until now, started celebrating Ramanuja. Lord Ranganathar and Piratti were also proudly enjoying these scenes. Amidst these scenes, Ranganathar secretly decided to accomplish through Ramanuja, what he could not do in the battlefields of Kurukshetra.

Though everyone was gathered in the Kurukshetra battlefield, no one could listen to Him. Yet He preached Bhagavd Gita to Arjunan. Today, everyone is ready and willing to listen to Swami Ramanuja. Will He let go of such an opportunity! So, He gave His secret order (wish) to Ramanuja.

Rangan is paranoid. He longs for His devotees to reach Him through some means. He was also skeptical about teaching the difficult path of Bhati yogam to people, as He feared that people would get scared and would never come to Him. He wanted to be accessible to all His devotees. So, He and Piratti decided to give everyone an easy option that they would be able to practice.

First of all, let us understand Upayam (the means), so we can understand the greatness of Lord Ranganathan with the blessings of Swami Ramanuja.

There are only two ways to reach Paramapadham (attain moksham). There is no other means to moksham. In addition, Lord Vishnu is the only one who can grant moksham and no one else has that privilege. This is why both Azhwars and vedas pronounce that “He is the everlasting refuge.”

Out of these two paths – one is Bhati yogam and the other is prapatti yogam. It means, a person who is a male and is born in a lineage that is eligible to learn veda, must learn it well. There are six branches in vedas and he should also know that. In addition, he should follow the rituals (upasana) as said in the vedas.

This upasana is not like the Nrsimha upasana, Devi upasana or Hanumath upasana that’s prevailing in modern days. This is called ‘vidya’ and one has to follow it all through his life. Also, he will have rebirths and during all those births, he should follow each of these rules strictly. If we keep elaborating on this, the essence of the story will be lost. Overall, this is something that we cannot follow.

This brought up the question – how can a common man get moksham? Does he not have any option to reach Him? The All-Compassionate Lord gave the answer to this question through Ramanuja.

“I am common to everyone. I want all of you.” – says Krishna in Bhagavad Gita.  Will a person who said this ever think that only a chosen few should reach Him? Today, he says a meaning, which is the same one that he uttered in Bhagavad Gita that day. Then, He said, “Hey Arjuna! Only after many births does a person have a birth in which he thinks that Narayanan is everything and reaches Me. But, it is very difficult to get a person like that”, he said.

From this, we can understand that He wishes, “More people should come to me. I’m waiting to give them moksham and a blissful life after that.” Now, we can also know the means for this.

The bhakti yogam that we saw earlier is difficult to practice. We don’t know when it will yield results. Also, we are incapable of following it. At the same time, we are interested in getting moksham. This is why, it is best if there is an easier path to reach Him. Such a means is “saranagathi.”

Saying, “O Lord, please take me and all the living and non-living things associated with me for your service” and submitting everything at His lotus feet is called saranagathi. Anyone can do this. We can do this at any time. It can be done anywhere. There are no rules related to it, except one called “Maha Vishwasam,” which is unflinching faith in Sriman Narayana. We should just understand and resolve to ourselves that He is everything, He will take care of us and we have no other goals in this life except to reach Him.

This saranagathi mantram is called “dwaya mantram.” The meaning of this mantram is, “I am taking refuge in the lotus feet of the Lord Who is always with Piratti. I am doing service to Perumal and Piratti.” In Bhagavad Gita’s charama slokam, He says, “Take refuge in Me! I will save you from all sins.” Today, the world understood the meaning of His word – “Don’t fear:”

On this divine day of Panguni uthiram, under the orders of Lord Ranaganthan, Swami Ramanuja did saranagathi. The world follows Ramanuja, and true to this, Ramanuja did saranagathi not just for himself, but also for all others associated with him.

The words that Ramanuja uttered during that time is compiled as “Gadya Trayam.” It comprises of “Saranagathi Gadyam” that teaches us to take refuge in Rangannathar’s lotus feet, “Vaikunta Gadyam” that describes the Lord at Sri Vaikuntam and “Sriranga Gadyam” that describes the beauty of Sri Rangam (Bhooloka Vaikuntam).

In this book, Swami Ramanuja prays to Ranganthar and says, “O Lord! I want my mind to meditate only on Your lotus feet without falling to any distractions. You have to protect me from all the sins I have committed so far. O compassionate One! Virtuous One! I take refuge only in You.” This way, Ramanuja did saranagathi to Lord Ranganathar in the presence of Ranganaayaki.

“As long as I am here, I want to serve you tirelessly,” prayed Swami Ramanuja. Imemdiately, Lord Ranganathar said, “So be it. All your wishes will be fulfilled. Keep chanting the dwaya mantram as long as you live here. You will continue to live comfortably in this Sri Rangam.” The entire world watched this event with awe.

This easy means is for everyone. Azhwar says, “When followers do this, unwanted thoughts will leave them.”

Friends! Why fear! Let us all reach the golden feet of Swami Ramanuja. The event that happened in Sri Rangam is a fantastic event for the entire world.

Translation by Shishyas of Sri APN Swami


ஸ்ரீராமாவதார வைபவம் | SriRamavathara Vaibhavam | Sri APN Swami Writes

Scroll down to read the English translation of the article

ஸ்ரீ:

ஸ்ரீராமபிரானின் அரும்பெருமைகளையெல்லாம் அகம் குழைந்து அனுபவித்தவர் வால்மீகி முனிவர். ப்ரம்ஹாவின் அநுக்ரஹத்தினால் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று அனைத்தையும் அறிந்ததினால் இதிஹாஸங்களுக்குள் சிறந்ததாக வால்மீகி ராமாயணம் கொண்டாடப்படுகிறது. “வால்மீகி, வ்யாஸர் எனும் இரு பெரும் ரிஷிகளே கவிகள்; ஏனையவர் அனைவரும் தங்களைக் கவிகளாகச் சொல்வது கேலிக்குரியது” என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

வஸுதா⁴ஶ்ரோத்ரஜே தஸ்மின் வ்யாஸே ச ஹ்ருʼத³யஸ்தி²தே |

அன்யே(அ)பி கவய꞉ காமம்ʼ ப³பூ⁴வுரனபத்ரபா꞉ || 1.4 யாதவாப்யுதயம்

இவ்வளவு பெருமைபெற்ற மஹாத்மாவின் காவியத்தை அடியொற்றி பல கவிகள் பல மொழிகளில் ராமாயணம் பாடினர். முராரி எனும் கவி  “அநர்கராகவம்” – குற்றமற்ற ராமபிரானின் பெருமை – எனும் உயர்ந்த நாடகத்தை ஸம்ஸ்க்ருதத்தில் இயற்றினான். எதற்காக எல்லா கவிகளும் ராமனைத் தலைவனாகக் கொண்டு காவியம் புனைகின்றனர்? ஏன் வேறு யாரும் நாயகனாக அவர்களுக்குத் தெரியவில்லையா என்ன? என கேள்வி கேட்டு, அதற்குரிய விடையையும் அவனே தருகிறான்.

“ஐயா! உலகில் எத்தனையோ சிறந்த கதாநாயகர்கள் உள்ளனர். ஆனாலும், கவிகள் ராமபிரானையே பாடுவதற்கு என்ன காரணம் தெரியுமா? அது, கவிகளின் தோஷமன்று. ராமபிரானின் குணங்களின் தோஷம். ஆம். நிறைந்த கல்யாண குணங்கள் உடையவனாக ராமபிரான் திகழ்வதினாலன்றோ கவிகள் தொடர்ந்து அவனையே நாயகனாக்கி தங்களின் காவியங்களைப் பாடுகின்றன.”, என்று

யதி³ க்ஷுண்ணம் பூர்வைரிதி ஜஹதி ராமஸ்ய சரிதம்

கு³ணைரேதாவத்³பி⁴ர்ஜக³தி புனரன்யோ ஜயதி க: |

ஸ்வமாத்மானம் தத்தத்³கு³ணக³ரிமக³ம்பீ⁴ரமது⁴ர-

ஸ்பு²ரத்³வாக்³ப்³ரஹ்மாண: கத²முபகரிஷ்யந்தி கவய: ||அனர்க⁴ராக⁴வம்1.9

இப்படி, பல கவிகளின் வாக்வன்மையினால் விதவிதமான ரஸங்கள் ராமாவதார காவியங்களாகப் படைக்கப்படுகின்றன.

வால்மீகி ராமாயணத்தில் ராமபிரான் மநுஷ்ய பாவனையுடன் உலா வந்ததாகவே ஆதாரங்கள் காட்டப்பட்டாலும் மஹான்களின் மனதில் அவன் பரமாத்மாவாகவே தோன்றுகிறான். விச்வாமித்ரர், அரண்யத்தில் மஹரிஷிகள், மண்டோதரி என இவர்கள் வாயிலாக அவனது பரதத்வம் தெளிவாவது கண்கூடு.

இவ்வாறாக இருப்பினும், கவிகள் தங்களின் கவியநாயகனை எப்படிக் கொண்டாடுகின்றனர் என்பதை இச்சிறு கட்டுரை வாயிலாக நாம் அநுபவிக்கலாம்.

ஸ்வாமி தேசிகன், ஸ்ரீராமன் விஷயமாக நிறைய ச்லோகங்களையும், பாசுரங்களையும், கத்யங்களையும் அருளியுள்ளார். பாதுகா ஸஹஸ்ரம், அபயப்ரதானஸாரம் எனும் இந்த இரு பெரும் க்ரந்தங்களை வாசித்தாலேயே ராமாயணம் முழுமையும் பற்றியதொரு தெளிவு உண்டாகும் என்பது பேருண்மை. மஹாவீர வைபவம் எனும் ரகுவீரகத்யம் அத்யத்புதமானது என்பதற்குத் தனியாக நாம் ஒன்றும் சொல்லத் தேவையில்லை.

ஒருபுறம்  வார்த்தை வடிவங்களின் கரடுமுரடு போன்ற தோற்றம்; மற்றொருபுறம் திராட்சை ரஸப்ரவாளம் இனிமையின்பம். இதனை, ஸ்வாமி தேசிகனே “கடோர ஸுகுமார கும்ப கம்பீரம்” என்று குறிப்பிடுகிறார். கவிகளின் “கவிதா ஸாமர்த்யத்திற்கு கத்யமே அத்தாட்சி” என்பதற்கேற்ப ரகுவீர கத்யம் அமைந்துள்ளதை ரசிகர்களே அறிவர்.

அதில் ஒரு சூர்ணிகை – அதாவது வாக்யத்தின் பொருளை ரசிக்கலாம். “கோஸல ஸுதாகுமார பாவ கஞ்சுகித காரணாகார” – அம்ருத ப்ரவாஹம் போன்ற அர்த்தங்களைத் தரக்கூடிய சொற்றொடர் இது.  ஸ்ரீராமன் ஜகத்காரணன் – உலகனைத்தும் அவனிடமிருந்தே தோன்றுகிறது, அவனிடமே அடைகிறது.

அந்த ராமன் இப்போது மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனாக “கெளஸல்யாநந்தவர்தனன்” எனப் பிறந்துள்ளான். இவனைப் பெற்றெடுத்தபோதே வால்மீகி “ஜகந்நாதன்” எனும் சொல்லால் அவன் பெருமை பேசுகிறார்.

சினிமா, டிராமாக்களில் மாறு வேஷத்துடன் கதாநாயகன் உலா வருவதைப் பார்க்கிறோம். அதாவது தீமையைக் (வில்லனை) கண்டுபிடிக்க கதாநாயகன் விதவிதமான உடையணிந்து, தான் யார் என மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் திறமையாக நடிக்கிறான், நாமும் ரசிக்கிறோம். அவ்விதம் உடையணிவதற்கு “கஞ்சுகம்” என்பது பெயர்.  “ஜகத் காரண ஆகாரன்” அதாவது உலகின் உற்பத்திக்குக் காரணமானவன் தனது ஆகாரத்தை – தோற்றத்தை மறைத்துக்கொண்டு இருந்தான்.

இங்கு ஒரு விஷயத்தை கவனியுங்கள். ஒரு நடிகன் சிறந்த நடிப்பாற்றலுடன் நடித்தபடம் வெற்றியடைகிறது. அப்போது அவன் பயன்படுத்திய பொருட்கள், உடை, கார் முதலியன ஏலம் விடப்படுகிறது. நடிகனின் சட்டையை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர் ரசிகர்கள். அதுபோன்று, இங்கு ராமன், கெளஸல்யா புத்ரன் எனும் வேடம் – கஞ்சுகம் – அதாவது சட்டை அணிந்துள்ளான். மற்றவர்கள் தன்னை பரமாத்மா என்று அறியாத வண்ணம் திறம்பட வேடம் புனைந்துள்ளான்.

தனக்குள்ளே அனைத்தையும் கொண்டவன், தாயின் வயிற்றினுள்ளே அடங்கினான். இதனை கம்பராமாயணம் அழகாகக் காண்பிக்கிறது.

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து

அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்

கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்

திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை.   (5)

கம்பராமாயணம் (பாலகாண்டம்   அவதார படலம்  – 1 – 27 – 5)

போஜ மஹாகவி தனது சம்பு காவியத்தில் “ந்யக்ரோத பத்ர ஸமதாம் க்ரமச:ப்ரயாதாம்” என இதே அர்த்த விசேஷத்தைக் காண்பிக்கிறார்.

ந்யக்³ரோத⁴பத்ரஸமதாம் க்ரமஶ꞉ ப்ரயாதாம்

அங்கீ³சகார புனரப்யுத³ரம்ʼ க்ருʼஶாங்க்³யா꞉ |

ஜீவாதவே த³ஶமுகோ²ரக³பீடி³தானாம்

க³ர்ப⁴ச்ச²லேன வஸதா ப்ரத²மேன பும்ஸா || 27 ||

சம்பு இராமாயணம் (பாலகாண்டம் 1.27)   

ஸ்வாமி தேசிகன், விரோதபரிஹாரம் என்னும் சில்லரை ரஹஸ்ய நூலில் உபாயமாகவும், பலனளிப்பவனாகவும் உள்ள எம்பெருமான், தசரதன் பிள்ளையானான் என்பதை விளக்க முராரி கவியின் ச்லோகத்தை உதாரணமாக்குகிறார்.

புத்ராதே²ம் ஜக³தே³க- ஜா²ங்கி⁴க-யயூ-உத்³தா³மப்⁴ரமத்கீர்தினா

சாதுஹோந்த்ர விதீர்ண விஶ்வவஸுதா⁴ சக்ரேண சக்ரே மக²꞉ |

ராஜ்ஞாபங்க்க்திரதே²ன யத்ர ஸகல ஸ்வர்வாஸி ஸர்வாதிதோ²

ஸ ஸ்வேனைவ ப²லப்ரத³꞉ ப²லமபி ஸ்வேனைவ நாராயண꞉

அநர்க்க ராகவம் (3-20)

உலகில் எங்கும் மிக்க விரைந்து செல்லுகின்ற அச்வமேதக் குதிரையைச் செலுத்தி ஸார்வபௌமன் என்னும் புகழைப் பெற்றவரும், அச்வமேத யாகத்தில் நான்கு வேதங்களின் ப்ரயோகங்களை அறிந்தவர்கட்டு பூமி அனைத்தையும் தானம் செய்தவருமான தசரத மஹாராஜனால் மக்கள் பேற்றை விரும்பி அச்வமேத யாகம் செய்யப்பட்டது.

ஸ்வர்க்க லோகத்திலுள்ள தேவர்கள் அனைவரையும் விருந்தினால் மகிழ்விக்கும் இந்த யாகத்தில் ஸ்ரீமந் நாராயணன் தானே பயனை அளிப்பவனாகவும், பயனாகவும் (தசரத புத்ர ராமனாக) ஆனான். இக்காலத்தில் ரசிகர்கள் நடிகனின் பொருட்களை வாங்கி மகிழ்வது போன்று பக்தர்களும், கவிகளும் ராமனின் கஞ்சுக வைபவத்தை – (மனிதனாக சட்டையணிந்து நடித்ததை) கொண்டாடி புகழ்ந்து வருகின்றனர்.  ஸ்ரீராமபிரானின் அவதார மஹோத்ஸ்வ சமயம் நாமும் அவனது பெருமைகளை நினைந்து கொண்டாடி மகிழலாம்.

அன்புடன்

அனந்தன்


Sri Ramavathara Vaibhavam

Sri:

Sage Valmiki was the one who completely bowed down to the glory of Sri Rama. This was possible due to the fact that he was blessed by none other than Brahma. In fact Brahma gave the quintessential summary like a sweetened gooseberry. Hence Valmiki Ramayana is considered as the best amongst all epics. Swami Desikan says that “Only Valmiki and Vyasa are considered as poets, rest whoever considers them as poets are making a mockery of themselves”.

वसुधा श्रोत्रजे तस्मिन् व्यासे च हृदयस्थिते ।

अन्येऽपि कवयः कामं बभूवुरनपत्रपाः ॥  1.4 यादवाभ्युदयम्

vasudha srotraje tasmin vyase cha hrudayasthite 

anyeapi kavayah kaamam babhUvuranapatrapaah 1.4 Yadavabhyudayam

Numerous other poets have written hymns about the Ramayanam in many different languages based on Valmiki’s story. Sanskrit poet Murari wrote “AnarghaRaghavam” – The untarnished brilliance of Rama. Why do all poets hail Sri Rama as their greatest hero and sing glories to him? These poets don’t think it intriguing to talk about any other heroes. He both asks and responds to the question.

“Oh people!,, the world is full of such magnificent heroes. Do you know why, despite the existence of many other great heroes, so many poets choose to chant exclusively the praises of SriRama? It is not the poets’ fault. Rama’s qualities, or gunas, are to blame. The fundamental reason why poets instinctively praise SriRam as the hero is because He is constantly full of kalyana gunas”, according to Murari.

यदि क्षुण्णं पूर्वैरिति जहति रामस्य चरितं

गुणौरेतावद्भिर्जगति पुनरन्यो जयति कः ।

स्वमात्मानं तत्तद्गुणगरिमगंभीरमधुर-

स्फुरद्वाग्ब्रहमाणः कथमुपकरिष्यन्ति कवयः ॥   1.9 अनर्घ राघवं

Yadhi kshunnam purvairithi jahati raamaysa charitam

gunorethavadbhirjagathi punaranyo jayathi kaha |

svamaathmaanam thaththadgunagarimagambhiramadhura-

supradvaagbrahamaanaah kadhamupararishyanthi kavayah  ||   1.9 Anargharaghavam

Several poets also depicted the stunning nectar of Rama avatar based on their skills.

Even though SriRama is described in the Valmiki Ramayana as the human being with human sentiments and emotions, for the rishis and sages, HE is always an immortal being, or Paramatma. The manner Rama was addressed by Vishwamitra, sages in the Dandakaranya forest, and Mandodari shows it evidently that HE is the paramatma.

Having said that, let us now enjoy how these poets had portrayed their hero

Many slokas, prabhandam (Tamil poetry), and gadyam (prose) about Sri Rama have been bestowed upon us by Swami Desikan. The beauty is that by having read Swami Desikan’s Padhuka Sahasram and Abhayapradhanasaram work, one can comprehend the full meaning of the Ramayana.  One doesn’t need to certify that Mahaveeravaibhavam a.k.a Raghuveeragadyam is a masterpiece.

It is a delight to one’s ears, be it those complex tongue twisters or the essence of a sweetened wine of that gadyam. The gadyam refers to Swami Desikan as “Katora sukumara gumbha gambhiram.” Raghuveera gadyam is the perfect example for the saying “The poetic capability of a poet is in composing a prose or gadyam.

There is a passage or churnika, where it is mentioned as “Kosala suthaakumara bhaava kanchukita kaaranaakaara”. Let us try to understand a bit deeper on this. This phrase has a meaning that is as pure as nectar. Sri Rama is the Jagadkaaranan i.e. HE is the reason for this entire cosmos. It all starts and ends with HIM.

Rama was born as “KauslayaAnandhaVaradhanan”. Valmiki praises him as “Jagannathan” when Kausalya delivers him. 

In dramas and movies, it is customary for the hero to appear in disguise. To distinguish the villains—those who are harming society—they don various outfits. We do appreciate when heroes depict themselves in such a clever manner that they avoid being detected. Those who wear these outfits are known as “Kanchukam“. The correct translation of Jagadkaaranan is Jagad Kaarana Aakaaran, which means that Rama is merely a disguise for the person who is in fact responsible for this world’s creation.

It should be mentioned that whenever the hero performs well, the film finally becomes a hit, and the set decorations, such as the hero’s costumes from the film and other objects like his car, watch etc, are auctioned off. Also, the fans purchase these products by paying a premium for the actor and his exceptional acting abilities. Similar to this, Rama, the son of Kausalya, has donned the kanchukam, indicating that he does not behave like a Paramathma.

The person who is carrying everything in him is in a mother’s womb.

This is mentioned in Kamba Ramayana

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து

அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்

கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்

திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை (5)

(கம்பராமாயணம் பாலகாண்டம் அவதார படலம் – 1 – 27 – 5)

Bhoja Kavi in his work Champu Kavya explains it very aesthetically and mentions it as “Nyagrodha patra samathaam kramachah prayaathaam”

न्यग्रोधपत्रसमतां क्रमशः प्रयाताम्

अङ्गीचकार पुनरप्युदरं कृशाङ्ग्याः ।

जीवातवे दशमुखोरगपीडितानां

गर्भच्छलेन वसता प्रथमेन पुंसा ॥ 27 ॥ चम्पू रामायणम् 1.27

Swami Desikan in his work, Virodhaparihaaram, a sacred secret text, mentions that he is the Upayam, the one who gives the desired fruit/ result, is the son of Dasaratha. To explain further, he uses the sloka of poet Murari as follows

पुत्राथें जगदेक-झांघिक-ययू उद्दामभ्रमत्कीर्तिना

चातुहोंत्र वितीर्ण विश्ववसुधा चक्रेण चक्रे मखः ।

राज्ञापङ्क्क्तिरथेन यत्र सकल स्वर्वासि सर्वातिथो

स स्वेनैव फलप्रदः फलमपि सवेनैव नारायणः ॥

The world’s fastest horse is called Ashwamedha. The person who does ashwamedha yagam with the four vedas will receive the entire universe as a gift. Dasaratha undertook such an ashwamedha yagam in an effort to win the support of his people. Devas from all other planets participated in that yaga, and they were extremely pleased with how Dasaratha handled the proceedings. As a result, Sriman Narayana himself, the one who brings about the desired fruit or result, came as Rama, Dasaratha’s son.  

Fans collecting their favorite heroes’ artifacts are popular these days. Similar to this, poets and devotees extol the virtue of Rama’s kanchuka bhavam, (beautifying himself as a person). Let us also celebrate the birth of Sri Rama by thinking of his glories to this world.

Translation by Shishyas of Sri APN Swami

YouTube University | Sri APN Swami Writes உகப்பும் கசப்பும் – 003

சாந்தர் ஏதோ படித்துக் கொண்டிருக்கிறார்.

(வம்பர் உள்ளே நுழைந்து எட்டிப்பார்த்து)

வம்பர் : “என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்?

சாந்தர்:- நம் புரிசை ஸ்வாமி அருளிய ஆசார்ய வைபவம் புஸ்தகம்.

வம்பர்:- ஆசார்ய வைபவமா? அப்படினா? ஓ….இ..ந்த ராமாநுஜர், தேசிகர் கதையெல்லாம்   சொல்லுவாளே ! அதானே! ஒரே bore ஆ இருக்கும். அத போய் எப்படி படிக்கிறீங்க. youtube ல் ரொம்ப சூப்பரா எவ்ளோபேர் beautiful அ இந்த கதய சொல்றா. அதபோய்  பாக்கலாம்ல. More over Zen கதயல்லாம் எவ்வளவு interesting ஆ இருக்கும் தெரியுமா?

சாந்தர்:- ( அமைதியாக, வியப்புடன்) Oh  youtube ல அவ்ளோ விஷயம் இருக்கா!

வம்பர்:- (உற்சாகமாக) பின்ன இல்லயா ! Technology எங்கயோ போய்ண்ட்ருக்கு சுவாமி.

நீங்க சொல்ற அந்த ஸம்ப்ரதாய விஷயத்த நாங்க easyயா  ChatGPTல கத்துப்போம் தெரியுமா?

என்ன பெரிசா குருபரம்பரய சொல்லப்போறீங்க. ராமாநுஜர் நிந்தார் ,  உக்காந்தார், கோவிலுக்குப் போனார்…இவ்வளவுதானே.

சாந்தர்:- (சிரிப்புடன்) ok இதெல்லாம்  youtubeல இருக்கறதால easyயா நமக்கு புரிஞ்சுடும் இல்லயா?

வம்பர்:- ஆமாம். No doubt

சாந்தர்:- Then no need of any Acharyan i.e. teacher. One question, இப்ப medical,CA,Engineering… விஷயங்கள் social media ல இருக்கு இல்லயா?

வம்பர்:- Why  not. Everything is available.

சாந்தர்:- YouTube  பாத்து medical treatment டாக்டராக முடியுமா?

வம்பர்:- Not possible , because proper channel இல்ல. Moreover ஒரு institution recognize பண்ணணுமே. Medical மட்டுமல்ல any type of education ஒரு proper recognition வேணும். That’s why நிறைய  institutionல இதுக்கு course வெச்சு certificate கொடுக்கறா.

 சாந்தர்:- That means எந்த academic விஷயமா இருந்தாலும் proper approach இருக்கணும். correct

வம்பர்:- (தோளைகுலுக்கி ) certainly…..

சாந்தர்:- ஆனா ஸம்ப்ரதாய விஷயம் தெரிஞ்சுக்க YouTube  பாத்தாபோதும்.   ஒன்னு ரெண்டு உபன்யாஸம் கேட்டாபோதும், authencityயே இல்லாம ஒரு புக்க படிச்சா போதும் . அதுவும் அந்த புக் இங்கிலீஷ்ல இருந்துட்டா  அதுதான் original இல்லயா!

வம்பர்:-   (மௌனம்)

சாந்தர்:-  எந்த educationக்கும் ஒரு proper expectபண்ற நாம, sampradayaம் மட்டும் just like that easyயா எடுத்துக்கறோம். அது தவிர ரொம்ப அலக்ஷியமா அதுபத்தி பேசறோம். அந்த knowledge  எவ்ளோ important ன்னு accept பண்ணவே மாட்டோம்.ஒரு சிறந்த ஆசார்யன் மூலமா விஷயம் தெரிஞ்சுண்டா மட்டும்தான் அது useful. Otherwise that knowledge is fake. இது நிச்சயமா உங்களை உகப்பிக்காது.

அன்புடன்

அனந்தன்

22-3-2023

Virat Parva | Sri APN Swami Writes உகப்பும் கசப்பும் – 002

See these two videos before reading the article to get the context. ( Virat Kohli & Anushka Sharma Video link , Statue of Equality video link)

சாந்தர் அமைதியாக TV யில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறார். வம்பர் உள்ளே நுழைந்துக்கொண்டே.,

வம்பர்: அட! Cricket லாம் நீர் பார்ப்பீரா! உமக்கு interest உண்டா?

சாந்தர்: ஏன்? நான் Cricket பார்க்கக் கூடாதா?

வம்பர்: இல்ல! அது வந்து எப்ப பார்த்தாலும் பெருமாள பத்தியே பேசிண்டிருப்பீர், உமக்கெல்லாம் இதுல interest இருக்காதுன்னு நினைச்சேன்.

சாந்தர்: நீங்க நினைக்கிற so called வைதிகர்களான எங்களுக்கு worldwide knowledge உண்டு. But, எங்கள கலாய்க்க நினைக்கிற உங்களுக்குத்தான் ஸம்ப்ரதாய விஷய ஞானம் துளி கூட கிடையாது.

வம்பர்: சரி, சரி, நமக்குள்ள எதுக்கு வம்பு, match பார்க்கிறீரே! உமக்கு பிடிச்ச player யாரு?

சாந்தர்: பொதுவா எல்லாரையும் பிடிக்கும். இன்னிக்கி Virat Kohli யோட batting super.

வம்பர்: ஹை, பரவால்லயே நிறைய விஷயம் தெரிஞ்சுண்டிருக்கீர். சரி, உமக்கு ஒரு trending video (video link) காமிக்கட்டா?

சாந்தர்: ஓ பாக்கறேனே! Virat ம் அனுஷ்காவும் மஹா காளேஸ்வர் கோயில்ல பூஜ பண்ண video தானே காண்பிக்கப்போற.

வம்பர்: (திடுக்கிட்டபடி) எப்படி ஒய்? எல்லாத்திலேயும் top ஆ இருக்கீர்!

சாந்தர்: நான் தான் முதல்லயே சொன்னேனே, லௌகீகர்களான உங்களோட judgement வைதிகர் விஷயத்துல தப்புன்னு. Ok. Let it be. நீ விஷயத்துக்கு வா! இப்ப அந்த video ல என்ன விஷயம்?

வம்பர்: எ..ன்..ன.. விஷயமா! எங்க தல kohli பாத்தியா! எப்படி பய பக்தி யோட வழிபாடு பண்றான். கோவில்ல கும்பிட்டது action, மறுநாள் 180 அடிச்சது reaction …..super la.

சாந்தர்: மௌனமாக குறுகுறுன்னு பார்க்கிறார்

வம்பர்: என்ன ஒய் look, இதுக்கு என்ன சொல்றீர்?

சாந்தர்: நீ கோவிலுக்கு போவியா?

வம்பர்: Why not? Time கிடைக்கச்சே நானும் wife ம் போவோம். Sometimes, office லேந்து நேரா கோவிலுக்குப் போவேன். நான் என்ன நாஸ்திகனா? கோவில் போகாம இருக்க. 

சாந்தர்: office லேந்து நேரா போவேன்னா என்ன அர்த்தம்.

வம்பர்: ஆமா ஒய்! Time ஆயிடும்னு போவேன். அதுக்கு என்ன இப்ப?

சாந்தர்: That means pant, shirt அதானே.

வம்பர்: (எரிச்சலுடன்) இதான் ஒய் பிரச்சன. பக்தி மனசுல இருந்தா போறாதா!

நாங்க pant, shirt போட்டுண்டு போனா பெருமாள் அநுக்ரகம் பண்ண மாட்டாரா! போட்ற dressல என்ன இருக்கு? Moreover, shirt கழட்டிட்டு நிக்கறது ஒரு மாதிரி uneasyயா இருக்கு. பேண்டோ, சுடிதாரோ! எங்களுக்கு எது comfort ஓ அத follow பண்றோம். சும்மா restrict பண்ணாதியும்..

சாந்தர்: (சிரித்தபடி) Super, செம argument. But, நீ காம்ச்ச videoல…உங்க தல அதான் Kohli அழகா கச்சத்தோட, மேல் சட்டை இல்லாம, மனைவியும் புடவையோட எவ்வளவு orthodox traditionalலா worship பண்ணா!

Virat Kohli மாதிரி tatoo பண்ணிக்கணும், Hair coloring பண்ணனும்னு ஆசபட்றவா,  கோயிலுக்குப் போச்சே அதே மாதிரி traditionalஆ போகணும்ன்னு ஏன் நினைக்கறதில்லை.

Kohli யோட worship actionனுக்கு 180 reactionன்னு சொல்றோமே! நம்ம lifeலயும் அது வர வேண்டாமா?

Hyderabad Statue of Equality programல் நம் PM மோடி & மத்த delegates super ra traditional ல, நெத்திக்கு இட்டுண்டு dresscode ல வந்தா.. நீ கூட உன் whatsapp DPயா வெச்சியே ! ஆனா practiceல கொண்டு வர effort எடுத்தியா?

இது சொன்னா உகப்பா இருக்காது, கசப்புதான்.    

வம்பர்: !!!

(Background music அ readers, நீங்களே set பண்ணிக்கோங்க)

அன்புடன்

அனந்தன்

17 / 03 / 2023

Ram Charan worships Ram | Sri APN Swami Writes உகப்பும் கசப்பும் – 001

உகப்பும் கசப்பும்

அடியேன் ஆசார்யன் ஶ்ரீ உ வே புரிசை ஸ்வாமி ஐம்பதாண்டுகள் ஶ்ரீ ந்ருஸிம்ஹப்ரியாவின்  ஸம்பாதகராக (ஆசிரியராக) இருந்ததை அனைவரும் நன்கறிவர். அடியேன் அந்தேவாஸியாக ஸ்வாமியிடம் காலக்ஷேபத்திற்காக சேர்ந்தவுடன் பல ஸ்வாரஸ்யமான அனுபவங்கள் உண்டாயின. குறிப்பாக அடியேன் கேட்கும் சில ஏடாகூடமான கேள்விகளுக்குக் கூட ஸ்வாமி சிரித்துக்கொண்டே பதில் கூறுவார்.

இவ்விதம் அடிக்கடி நடந்த சமயம்; ஸ்வாமி எங்கள் இருவரின் உரையாடலை உள்ளடக்கி “உகப்பும் – கசப்பும்” எனும் தலைப்பில் “நற்போதுபோக்கு” வ்யாஸங்களை எழுத ஆரம்பித்தார்.

ஒரு மஹான் பரம சாந்தர். வைதிக விஷயங்கள் மட்டுமின்றி உலகியல்புகள் அனைத்தையும் நன்கு அறிந்தவர். “வைதிகர்களுக்கு ஒன்றும் தெரியாது” என எண்ணும் லெளகிகர் ஒருவர். இந்த லெளகிகரின் கேள்விகள் பெரும்பாலும் sarcasm பாணியில்தான் இருக்கும். தனக்கு எல்லாம் தெரியும். வைதிகருக்கு எதுவும் தெரியாது எனும் நோக்கிலேயே அவரது வாதங்கள் இருக்கும்.

ஆனால் வைதிகரோ இதற்கெல்லாம் அசரமாட்டார். அமைதியாக அதேசமயம் ஆணித்தரமாக தனது வாதங்களை முன்வைத்து அந்த லெளகிகருக்கு பதில் அளிப்பார். இக்கால ரீதியில் சொல்லவேண்டுமானால் லெளகிகர் bulb வாங்குவார்.

எனவே எங்கள் ஸ்வாமி வைதிகரான அந்தப் பெரியவருக்கு “சாந்தர்” என்று பெயர் வைத்தார். “எல்லாம் தெரியும்” என்றும் இருமாப்புடன் கூடிய லெளகிகருக்கு “வம்பர்” என்று பெயர் வைத்தார். இந்தத் தலைப்பில் உயர்வான பல ஸம்ப்ரதாய விஷயங்கள் கட்டுரைகளாக வெளிவந்தன.

இன்றைய காலகட்டத்தில் அதே போன்று எழுதுவது, எத்தனை பலனளிக்கும் என்பது தெரியவில்லை. நவீன சாதனங்கள் நாளுக்கு நாள் பெருகும் சமயத்தில் படித்து விஷயங்களை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் ஏறத்தாழ காணாமல் போய்க்கொண்டிருக்கிறது எனலாம். மக்கள் பெரும்பாலும் WhatsApp, Twitter, Insta, FB என இவைகளிலேயே போது போக்குகின்றனர். இதில் “நற்போதுபோக்கு” எப்படி முடியும்?

இருப்பினும் வெகுஜனங்களின் அன்றாடத் தேடல்களிலும், அவர்கள் ரசிக்கும் நிகழ்வுகளிலும் நமக்குப் புலப்படும் உகப்பு – கசப்பினை இனி பார்க்கலாம்.

இதற்கும் Traditional Trending article seriesற்கும் என்ன வித்யாஸம்? என கேட்பது புரிகிறது.

Traditional Trending வெறும் கட்டுரைகள் வாசிப்பதற்கு மட்டும். “உகப்பும் – கசப்பும்” என்பது ரசிப்பத்துடன் நின்றுவிடாமல் சற்றே நம்மை சிந்திக்க வைத்தும், ஏதாவது ஒரு வகையில் நம் வாழ்க்கையில் கடைபிடிக்கவும் உதவும் இது உகந்தால் உகப்பு. இல்லையெனில் எப்போதும் போன்று கசப்பு.

அன்புடன் அனந்தன்


உகப்பும் கசப்பும் – 1 Ram Charan Worships Ram

Click the link below to see the related video before reading this article. https://www.youtube.com/watch?v=hjfcyTq1XmE&t=28sRam Charan and his wife doing Puja to Ram Vigraham during travel

2023 மார்ச் 12ம் தேதி RRR திரைப்படத்திற்கும், The Elephant Whisperersயானை வளர்ப்பு பற்றிய குறும்படத்திற்கும் Oscar விருது கிடைத்ததை குதூகலமாக அனைவரும் கொண்டாடி வருகிறோம் அல்லவா. அதுகுறித்த RRR எனும் TT Video https://youtu.be/RkReMKfeS40 (#RRR #Oscar Spl #Trending – Sri APN Swami Speaks 188 – From Archives) ஏற்கனவே வெளியாகியுள்ளது. இப்போது அதில் மற்றொரு சுவாரஸ்யத்தை பார்க்கலாம்.

வம்பர் – (உள்ளே வந்தபடியே) நமோ நம: என்ன சாந்தரே! உலகில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் சாந்தமாக அமர்ந்துள்ளீரே!

சாந்தர் – அப்படியா! என்ன நடக்கிறது?

வம்பர் – நமது தேசத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளதே

சாந்தர் – ஓ அப்படியா! நானும் பார்த்தேன்.

வம்பர் – என்ன ஓய்! இப்படி சுவாரஸ்யம் இல்லாமல் பேசுகிறீர்? உமக்கு தேசபக்தியே இல்ல ஓய்.

சாந்தர் – எனது தேசபக்தி கிடக்கட்டும். அந்த விருதினால் உனக்கென்ன பெருமை?

வம்பர் – நானும் ஒரு பாரத ப்ரஜை தானே? இது நம் ஒவ்வொருவருக்கும் Pride moment தானே. நான் என் group எல்லாத்திலேயும் share பண்ணிட்டேன். என் FB page-ல இது தான் DP. ஒரே likes comments. இன்னிக்கு full trending இதான் தெரியுமா!

சாந்தர் – சிரித்து.. இந்த share, like, comment இதான் உனக்கு ப்ரயோஜனமா?

வம்பர் – (கடுப்புடன்) உங்களுக்கெல்லாம் ரஸனையே இல்ல ஓய். நீங்கள்ளாம் இன்னமும் பழைய பஞ்சாங்கம் தான். சரி! இந்த video பாரும். இத பத்தி என்ன சொல்றீர்?

சாந்தர் – (Just பார்த்துவிட்டு) ஓ இதுவா RRR நாயகன் ராம்சரண் video தானே!

வம்பர் – (வித்யாசமாகப் பார்த்தபடி) இ…து….வு..ம். உமக்கு தெரியுமா?

சாந்தர் – சிரித்தபடியே சரி.. உன் பாணியிலேயே சொல்கிறேன். இப்ப இந்த video பார்த்து excite ஆனயோல்லியோ அந்த அளவுக்கு excite ஆக அதில் என்ன இருக்கு?

வம்பர் – என்..ன.. இ..ரு..க்கா…..

ஓய் எவ்வளவு பெரிய hero. தான் எங்க போனாலும் even foreign போனாலும் ஒரு room-ல குட்டியா விக்ரகம் வெச்சு wifeவோட சேர்ந்து பூஜை பண்ணுவேன்னு போட்டிருக்கே #ProudHindu

இன்னிக்கு இது தான் super trending தெரியுமா? என்ன ஓய்! ஒரு actor daily பூஜை பண்றேன்னு சொல்றது நம்ம Hinduism-க்கு proud இல்லயா?

சாந்தர் – உண்மைதான். I fully agree with you. இப்ப ஒரு Hero, mass காட்டினா அவனோட style follow பண்றீங்க இல்லயா? Hairstyle, dress, shoes இப்படி body language எல்லாம் hero பாணி தானே.

வம்பர் – ஆமாம் (எரிச்சலுடன்) அதுக்கென்ன இப்போ

சாந்தர் இப்ப அந்த hero daily wifeவோட சேர்ந்து பூஜை பண்ணுவேன்னு சொல்றானே! அது உங்கள inspire பண்ணலயா? நாங்க daily திருவாராதனம் பண்ண சொன்னா உங்களுக்குப் பிடிக்கலயே! Ok நாங்க சொன்னா பிடிக்காது. But உங்க hero, world famous. அவர் கூட தனது பூஜையை miss பண்றதில்லைன்னு சொல்றாரே.

என்னிக்காவது நாம, ஆத்துப் பெருமாளை இப்படி கொண்டாடியிருப்போமா? Message-யும் video-வையும் forward பண்றதில இருக்கற ஆர்வம் practice பண்றதிலயும் இருக்கணும்பா! நான் ராம்சரணை மதிக்கறேன். ஆனா இத வெறும் message-ஆ பாக்கற ஆர்ப்பாட்டம் பண்ற கூட்டத்தை வெறுக்கறேன். இத சொன்னா நான் advice  பண்றேன்னு எம்பேர்ல கோபம் தான் வரும். Time இருந்தா யோசிச்சுப் பாரு.

ராம் சரண் தன் மனைவியுடன் பூஜை செய்ததை trendingஆக பார்க்கும் நமக்கு, ராமபிரான் தன் மனைவி சீதையுடன் ரங்கநாதனை ஆராதித்தான் என்று வால்மீகி ராமாயணம் விளக்கியதை Trending ஆக பார்க்கத் தெரியவில்லையே !

ஹும்……. இருக்கட்டும்…..

ராம் சரணமே (Charaname) சரணம் (Sharanam) !

(வம்பரின் background-ல் தில்வாலே புச்டேலியா song ஒலிக்கிறது)

அன்புடன் அனந்தன்

16-March-2023

குடந்தையில் காட்சி தரும் கொன்றைப் பூ லக்ஷ்மணன் | கும்பகோணம் | Sri APN Swami Writes | Thedi Thozhutha Thiruththalangal 01

Note : Scroll down to read the English translation of the article

அழகிய காவிரிக்கரையில் அமைந்துள்ள அத்புத நகரம் குடந்தை நகரம். கோவில் நகரம் கும்பகோணம் என்று இதற்குப் பெயருண்டு. சைவமும் வைணவமும் தழைத்தோங்கும் புண்யபூமி. சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர் திருக்குடந்தை என்கிறார் நம்மாழ்வார். அதாவது, காவிரித்தாயின் கருணையினால் செழித்து வளர்ந்த நெற்பயிர்கள், பெருமாளுக்கு சாமரம் வீசுகின்றதாம். சோழவளநாட்டின் செழுமை மகத்தானது.

கோவில் நகரமான குடந்தையில், திரும்பிய பக்கமெல்லாம் திருக்கோவில்களைக் காணலாம். ஒருமாதம் முழுதும் இந்நகரத்தில் தங்கியிருந்தாலும், மொத்த கோவில்களையும் முழுதாக தரிசித்துவிட முடியாது. இறையுணர்வு, கலையுணர்வு என இரண்டையும் நமக்களிக்கும் பொக்கிஷங்கள் இக்கோவில்கள்.

அன்னிய படையெடுப்புகள், அணை மீறிய வெள்ளங்கள் என பல ஏற்பட்டாலும்,  காலத்தால் அழியாதவையாக, கம்பீரமான தெய்வத்தின் சன்னிதானங்கள், குடந்தையில் நிறைந்துள்ளன. இந்த வாரம் நாம் தரிசிக்கவிருப்பது, கும்பகோணம் தோப்புத் தெரு கோபாலன். கோபாலன் என்றாலேயே கொள்ளையழகு என்பதற்கேற்ப, தோப்பின் நடுவில், தெய்வீக அருள்புரிகிறான் கோபாலன்.

தோப்புத்தெரு

கும்பகோணத்தில் எவரைக் கேட்டாலும், தோப்புத் தெருவிற்கு எளிதாக வழிகூறுவர். ஒரு காலத்தில் அடர்ந்த தென்னை மரங்கள் இங்கு அதிகமாக நிறைந்திருந்தன. பெரிய பெரிய தென்னந்தோப்புகள் நடுவே, பெருமாளுக்குத் தனியாக ஆலயம் அமைக்கப்பட்டது. கண்ணன் என்பவன் காட்டில் வாழும் தெய்வம்தானே!

ப்ருந்தாவனத்திலும் கோகுலத்திலும் வசித்தபோதுகூட கண்ணன் பெரும்பாலான நேரத்தை காட்டிலேயே செலவிட்டான். இதனை சுவாமி வேதாந்த தேசிகன் ரசமாக வர்ணிக்கிறார் – ஆரண்யம் என்றால், காடு என்றும்  வேதம் என்றும் பொருள். வேதத்தின் தலைவன் கண்ணன், ஆரண்யத்தில் – காட்டில் வசித்திட விரும்புகிறானாம்“. அதனால்தான் இங்கும் தோப்பின் நடுவே குடியிருக்கிறான்.

ப்ருந்தாவனத்தில் யமுனா நதி. இங்கு அரிசிலாறு. இவ்வாற்றின் கரையில்தான் அழகிய ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் எப்போதும் வேதவொலியும், விழாவொலியும் நிறைந்திருக்குமாம். வாஜபேயம், பௌண்டரீகம் முதலிய பெரிய யாகங்களை மஹான்கள் இத்தலத்தில் செய்துவந்துள்ளனர்.

கோகுலத்தின் அருகில் அந்தணர்கள் நிறைந்த ஒரு அழகிய அக்ரஹாரம் இருந்ததாம். அங்கு பெரியோர்கள் எப்போதும் யாகம் செய்து வந்தனராம். கண்ணனும் அவனது தோழர்களும் வனத்தில் திரிந்து, களைத்து, பசித்திருந்தால், அவர்கள் யாகம் செய்யும் இடத்திற்கு வந்து, அங்குள்ள பெண்கள் அளிக்கும் ஆகாரத்தை உண்டு பசியாறிடுவார்களாம்.

அதேபோன்றுதான், அரிசிலாற்றின் கரையில் தோப்புத் தெருவில் கோபாலன் சன்னிதிக்கு நேர் எதிராக அழகிய அக்ரஹாரம் ஒன்றுள்ளது. தனது பழம் பெருமையை அது இழந்திருந்தாலும், பெரியோர்கள் பல யாகங்களைச் செய்து வந்ததின் சக்தியை நாம் இன்றும் உணருகிறோம்.

கோபாலனின் கோவில்

தெருவினில் நுழைந்தவுடனேயே நம்மை ஆட்கொண்ட தெய்வீக உணர்வுடன் திருக்கோவிலுக்குள்ளே நுழைகிறோம். கோவில் சிறியதுதான். ஆனால் இறைவனின் கீர்த்தியோ மிகமிகப் பெரியது.  இக்கோவிலில் ஒரு வித்யாசமான சிறப்புண்டு. அதாவது மூலவர் ராமர் நின்ற திருக்கோலத்துடன்; உற்சவர் கோபாலன். ஆனாலும்,  இக்கோவில், தோப்புத்தெரு கோபாலன் சன்னிதி என்றே வழங்கப்படுகிறது.

ராமனை, காட்டில் திரியும் அழகன் (வந சுந்தரன்) என்கிறார் வால்மீகி முனிவர். அதாவது, தண்டகாரண்யம், பஞ்சவடி முதலிய காடுகளில் அலைந்து திரிந்தபோது, காட்டிலிருந்த மஹரிஷிகள் அவனின் அழகைக் கண்டு மனம் மயங்கினார்களாம். ராமாவதாரம், க்ருஷ்ணாவதாரம் எனும் இரண்டு அவதாரங்களிலுமே காட்டில் திரிந்தபடியால், இங்கு தோப்புத் தெருவில், மூலவர் ராமனும் உற்சவர் கோபாலனும் காட்சியளிக்கின்றனர் போலும்.

வாயிற்படிக்கு நேராகவமைந்த கருவரையில் ஒரே பீடத்தில் ராமனும், சீதையும் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். ஒரே பீடத்தில் தம்பதிகள் நிற்பது திருமண கோலத்தில்தானே! உலகைக் காப்பாற்றும் இந்தத் திவ்யதம்பதிகள், மணக்கோலத்தில் சேவை தந்து, மக்களுக்கு மனக்குறையையும், திருமணத்தடங்கல்களையும் தீர்க்கின்றனர். ஒரே பீடத்தில் நின்று சேவை சாதிக்கும் ராமனையும், சீதையையும் சேவிப்பவர்கள், திருமணத்தடைகள் நீங்கப் பெறுகின்றனர்.

லக்ஷ்மணனின் லக்ஷணம்

வலதுபுறம் சீதையென்றால், ராமனின் இடதுபுறம் லக்ஷ்மணன்தானே! இவர்களுக்கு, எக்காலத்திலும் எல்லா நிலைகளிலும் உடனிருந்து கைங்கர்யம் செய்யும் பாக்யம் பெற்றவன் லக்ஷ்மணன். சீதையைப் பிரிந்ததைவிட லக்ஷ்மணனைப் பிரிந்த ராமன் அதிகம் துயரமுற்றாராம். வேறெந்த திருக்கோவிலிலும் சேவிக்க முடியாத அற்புத உருவ அமைப்பில், இங்கு லக்ஷ்மணன் அருகில் நிற்கிறார். அதை அறியும்போதே நமக்கு மெய் சிலிர்க்கிறது!

ராமன் சாக்ஷாத் மகாவிஷ்ணுவின் அவதாரம். சீதையோ மஹாலக்ஷ்மீ. ராம நாமத்தின் பெருமையை நன்குணர்ந்தவர் சாக்ஷாத் அந்த பரமேச்வரனே ஆவார். எனவேதான் இறக்கும் தருவாயிலுள்ள ஜீவன்களின் வலது காதில், ராம நாமத்தை,  காசியில் பரமேச்வரன் உபதேசம் செய்கிறார் என்கிறார் ஆதிசங்கரர். அத்தகைய பரமசிவனிடம், பார்வதிதேவி, ஸ்ரீராமபிரானின் பெருமைகளைக் கேட்கிறாள்.

அப்போது ஸ்ரீராமசந்த்ரமூர்த்தியின் பெருமைகளை விளக்கும் பரமசிவன், லக்ஷ்மணன் போன்று தானும் ராமபிரானுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அது எப்படி முடியும்?” என பார்வதி கேட்கிறாள். கண்ணை மூடி ராமபிரானையும் சீதாதேவியையும் ப்ரார்த்தனை செய்து, கண்ணைத் திறந்து பார்  என்கிறார் பரமசிவன்.

என்ன ஆச்சர்யம்!! சீதா ராமர்கள் அருகிலிருக்கும் லக்ஷ்மணன், சடைமுடியுடனும், பிறை சந்த்ரனுடனும், தலையில் கொன்றைப்பூவுடனும் காட்சியளித்தார். ஒருகணம் பார்வதியின் உடல் சிலிர்த்தது. உதடுகள் அவளையறியாமல், ராம! ராம! என்று உச்சரித்தன. கண்ணைக் கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தபோது, சீதா-ராம-லக்ஷ்மணர்களே சேவை தந்தனர்; சடை, கொன்றைப்பூ, பிறைசந்த்ரன் என ஏதும் தெரியவில்லை.

வேறெங்குமே தரிசிக்க முடியாத, பார்வதி தரிசித்த, இந்த அதிசய கோலத்தை இன்றும் இங்குள்ள லக்ஷ்மணன் திருமேனியில் சேவிக்கலாம். ஒருமுறை நமக்கும் சிலிர்ப்பு உண்டாகிறது. ராமபிரானின் பெருமைதான் என்னே!!! தஞ்சை சரபோஜி மன்னரின் அனுபவம் இது – என்பர் பெரியோர்.

உற்சவர் கோபாலன்

இப்படி மூலவரை தரிசித்த பின்னர், உற்சவர் கோபாலனை தரிசிக்கலாம். மதிளழகுமிக்க மன்னார்குடி ராஜகோபாலனின் வடிவழகு என்னவோ, அது அனைத்தையும் குடந்தை கோபாலனிடம் சேவிக்கலாம். ருக்மிணி, ஸத்யபாமை எனும் இருதேவிகள் இருபுறமும் திகழ, ஒய்யாரமாக, மாடு மேய்க்கும் கண்ணனாக கையில் சாட்டையுடன், நின்ற திருக்கோலத்தில் கொள்ளை அழகுடன் காட்சி கொடுக்கிறான். எங்கள் கண் த்ருஷ்டி உன்மீது படக்கூடாது கண்ணா என்று வேண்டிக்கொண்டே, கண்ணை மூடாமல் கோபாலனை தரிசிக்கிறோம். மூல ஸ்தானத்திலேயே சந்தான க்ருஷ்ணனும் சேவையாகிறார். புத்திரபாக்யம் இல்லாதவர்கள் இவரை சேவித்து மக்கட்பேறு அடைகின்றனர்.

ராமன் உண்டு என்றால், அனுமான் இல்லாமலா! வாயு குமாரனாகிய அனுமனை பரமசிவன் அம்சம் என்பர் பெரியோர். அழகிய குடுமியுடன், மார்பில் பூணூலுடன் திகழும் அனுமனும்,  கையில் கொன்றைப் பூவினை ஏந்தி நிற்பது, அனுபவித்து சேவிக்கத் தக்கது. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள், கோபாலனையும் ரகுவீரனான ராமனையும் பாடிய வேதாந்த தேசிகர் முதலானோரும் இக்கோவிலில் காட்சியளிக்கின்றனர்.

குடந்தை நகரினுள்ளேயே அமைந்துள்ள தோப்புத்தெரு கோபாலன் சன்னிதிக்கு ஒருமுறை சென்று சேவித்து வாருங்கள். உங்களின் உள்ளத்தில் நல்ல தெளிவு உண்டாகும்.

நகரத்தின் எங்கிருந்தும் ஆட்டோ முதலிய வசதிகள் உண்டு. 

தொடர்புக்கு சுதர்சன பட்டர்99406 55506.

Lakshman with Cassia Flowers in Kudanthai

As the name “Temple city” suggests, one will come across a temple almost everywhere throughout this city.  In fact, one cannot complete visiting all the temples, even if you spend a full month here.  These temples are the treasures that bestow on us the Godliness and Artistic sense.   Though the foreign invasionsThe wonderful town of Kudanthai is situated on the banks of the beautiful river Cauvery.   It’s also known as the “Temple city Kumbakonam” as both Saivism and Vaishnavism flourished together in this sacred place.  Namazhvar says சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர் திருக்குடந்தை”, which means that with the blessings of mother Cauvery, the paddy crops here grow well and fan Perumal.  This speaks of the prosperity of the Chola Kingdom. and the rampant floods have caused many to perish, the prevalence of time tested temples that stand majestically in Kudanthai is an ancient testimony of our Sanatana Dharmam.

This week, we are going to visit Kumbakonam’s Thoppu Theru Gopalan temple.   The very word “Gopalan” means mystic beauty.  Lord Gopalan blesses all of us from the middle of the thoppu (grove) here.

Thoppu Theru:

Ask anybody in Kumbakonam, they will easily show you the way to Thoppu street.  Once, there existed an extensive coconut grove with magnificent coconut trees and the temple was built exclusively for Perumal in the middle of the grove.  After all, Lord Krishna always spent his time in the forest.

Even during His days in Brindavan and Gokulam, Kannan spent most of His time in the forest only.  Swami Sri Vedanta Desikan very beautifully describes “Aranyam” as “Forest” as well as “Veda”. The head of Vedas, Kannan, loves to spend His time in the forest. That’s the reason He stays here too, in the middle of the grove (thoppu).

Just like River Yamuna in Brindavan, here it is the Harisal River. On the banks of this Harisal river, this wonderful temple is built. This place always enjoys the sound of Vedas and the many festivals that adorn it.  In the past, great scholars performed many Yagams such as Vajapeyam and Poundareekam in their homes around this temple.

Near Gokulam, there used to be a beautiful Agraharam with lots of brahmins. There, the elders always performed the Yaagams.  Lord Krishna along with his friends used to roam in the forest.  Whenever they got tired and hungry, they would visit this place where Yagams were performed.  The women from these homes would feed Sri Krishna and his friends sumptuously.

Just like that, here on the banks of the Harisal river, opposite to the Gopalan temple, there was a beautiful Agraharam. Though it has lost the ancient pride of elders performing the Yagams and  Yagnams, one can feel its power even now.  

Gopalan Temple:

As we enter the thoppu street, with the blissful feeling engrossing us, we enter the Gopalan Temple.  The temple is small, yet Perumal’s glory is infinite.  The speciality of this temple is that the presiding deity is Sri Raman in standing posture while the utsavar is Sri Gopalan.  However, this temple is addressed as Thoppu Theru Gopalan Sannadhi.

Sage Valmiki calls Lord Rama as “Vana Sundaran”, which means the “Handsome one roaming in the woods”. Especially, while Lord Rama was roaming in the forests like Dhandakaranyam and Panchvati, the Rishis around were smitten by the beauty of Rama and fell in love with him.  As HE roamed the forests in both Ramavatharam & Krishnaavataham, here in this temple, HE gives us the darshan as Raman – the presiding deity and Gopalan – the Utsavar.

Straight from the entrance, we get to see the Sanctum Sanctorum in which Rama and Sita are in a standing posture on a single pedestal as bride and groom. The very darshan of this Divya Dampathi alleviates all the problems of the people as well as the hurdles that impede their marriage.

Lakshmana’s attribute:

On the right side of Lord Rama is Sita and to His left stands Lakshmana, who is destined to be in their service at all times. This is very unique aspect to this temple, where the amazing  Lakshmana stands close to Rama and gives darshan to us.  The very thought of this creates goosebumps in us.

Lord Sri Rama is Sri Mahavishnu’s avatar and Sita is Mahalakshmi.  Lord Paramasivan is the one who has completely understood the greatness of “Rama Nama”.  That is the reason, Lord Shiva chants Rama Nama in the right ear of all the Jeevathma’s, at their death bed in Kashi – says Adi Shankara.   

Parvathi once requested Shiva to explain the greatness of Lord Rama.  At that time, Shiva, while explaining the greatness of Sri Ramachandramoorthi, expresses his desire to serve Lord Rama like Lakshmana.  How is it possible? asks Parvathi.  Shiva says, ‘Close your eyes and bring in your vison on both Lord Rama & Sita. Worship them and open your eyes and see’.

What a surprise, Lakshmana standing near Lord Rama & Sita was seen transformed with tangled hair, crescent moon and cassia(kondrai)  flowers on his head.  For a moment, Parvathi experienced wonder.  Without her knowledge her lips started murmuring Rama… Rama….  As she looked back again, the Sita-Rama-Lakshmana gave darshan as before; the tangled hair, crescent moon and cassia(kondrai) flowers were gone.

This miracle experienced by Parvathi can be felt by us even today on Lakshman’s statue.  This gives a feeling of wonder to us too.  Such is the greatness of Lord Rama. Elders say, this is also the experience of Tanjore King Saraboji.

Utsavar Gopalan:

After worshiping the presiding deity, we move to the darshan of Utsavar Gopalan.  We will experience the entire beauty of Mannargudi Rajagopalan in Kudanthai Gopalan.  Kannan gives us His wonderful darshan in standing posture flanked by Rukmini and Satyabhama on both sides, and holding a whip in His hand, as if, He was managing the grazing cows.  Though we pray that our drishti (evil eye) should not affect Him, we continue to gaze at Him.  Santhana Krishnan also gives His darshan from the Sanctum sanctorum.  By worshipping Santhana Krishnan, those who do not have children are sure to be blessed with Putra bhagyam (to bear Children).

Where Lord Rama is, there is Hanuman too.  The elders say Vayu Putra Hanuman is the incarnation of Paramasivan.  Here, Hanuman gives darshan with a beautiful tuft, a sacred thread in the chest, holding a cassia(kondrai) flower in hand, and is a feast to watch and worship.  Acharyas including Sri Vendantha Desikan who has composed hymns on both Rama and Krishna and Choodi Kodutha sudarkodi Aandal also give darshan in this temple.

Please visit Thoppu Theru Gopalan Sannadhi, which is well within the city of Kudanthai and worship this Perumal.   You are sure to get great clarity in your mind.

Autos and other facilities are available from anywhere in the city.

Contact Sudarshana Bhattar – 99406 55506

மாசி மகம் கொண்டாடும் மகா விஷ்ணு |மாசிக்கடலாடி மகிழ்ந்து வரும் மகா விஷ்ணு | Sri APN Swami Writes | Thedi Thozhutha Thiruththalangal 05

Note : Scroll down to read the English translation of the article

மகாத்மா போற்றிய மாசிமகம் | Masi Magam Special |

      த்ரிபுராசுரர்கள் எனும் மூவர் இவ்வுலகிற்கு பெரும் துன்பங்களை அளித்து வந்தனர். அவர்கள் செய்த அடாத செயல்களினால் மூவுலகும் அஞ்சி நடுங்கியது. மிகவும் பயந்த தேவர்கள், சிவபெருமானை சரணடைந்தனர். உலகினைக் காப்பதற்காக ஏற்கனவே ஒருமுறை ஆலகால விஷமருந்தினார் பரமசிவன். அதேபோன்று, தற்போது மறுபடியும் ஆபத்து சூழ்ந்துள்ளது என்பதால், மீண்டும் தேவர்கள் அவரிடம் முறையிட்டனர்.

      ஆலகால விஷத்தைத், தான் உண்டதற்கு ஆதிநாயகன் விஷ்ணுவே காரணம் என்பதை தேவர்களுக்கு அறிவித்த பரமசிவனும், நாராயணன் துணையிருந்தால் நிச்சயம் நமக்கு ஜயம் என்று அறிவித்தார். அதன்படி ப்ரம்மா, விஷ்ணு இவர்களின் துணை வேண்டியிருந்தார். பரமசிவனுக்குத் தான் தேரோட்டுவதாக ப்ரம்மா இசைந்தார்.

      வர பலத்தினால் செருக்குற்ற த்ரிபுராசுரர்களை, சாதாரண ஆயுதத்தால் கொல்ல முடியாது. நாராயண அஸ்த்ரத்தினால் மட்டுமே அவர்களை மாய்க்க முடியும் என்பதால், நாராயணனை சரணடைந்தனர். த்ரிபுராசுர வதத்தில் கூர்மையான அம்பின் நுனியில், தானே அமர்வதாக நாராயணன் அபயம் அளித்தார். அதன்படி, அவரின் துணையுடன், பரமசிவன் அசுரர்களைக் கொன்று உலகினைக் காத்தார்.

      பின்னர் சற்று காலம் ஓய்வெடுக்க நாராயணன் சோலைகள் சூழ்ந்த ரம்மியமான இடத்தைத் தேடினார். ப்ரம்ம தேவனின் ப்ரார்த்தனையால் ஒரு அழகிய க்ஷேத்திரத்தில் வந்து அமர்ந்தார். தனது அந்தரங்க பணியாளர்களான கருடன் மற்றும் அனந்தனிடம் (ஆதிசேஷனிடம்) தாகமாக உள்ளது. தண்ணீர் வேண்டும் என்றார் நாராயணன்.

      அவ்வளவுதான்; வாயுவேகம், மனோவேகம், கருடவேகம் என்பார்களே அதுபோன்று வேகமெடுத்த கருடன், அருகிலிருந்த மலையில் ஒரு முனிவரைக் கண்டு தண்ணீர் கேட்டான் தவத்தில் ஆழ்ந்திருந்த அம்முனிவர் கருடனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சினந்த கருடன் அவரது கமண்டலுவைத் தட்டிவிட்டன். அது ஒரு நதியாக ப்ரவகிக்கத் தொடங்கியது.

      எம்பெருமான் இருக்கும் பூஞ்சோலைக்கு ஓடோடி வந்தான் கருடன் அந்நதிப் பெருக்குடன். ஆனால், அதற்குள் ஆதிசேஷன் பாதாளம் வரையிலும் நுழைந்து சுவையான தண்ணீர் கொண்டதொரு கிணற்றை நிர்மாணித்து பெருமாளின் தாகத்தை தீர்த்தான். அகமகிழ்ந்த மகாவிஷ்ணுவும் இனி இந்த தீர்த்தமே தனக்கு நித்ய ஆராதனத்திற்குரியது என்றும், ஆதிசேஷன் விரைந்து செயல்பட்டதால் இத்தலம் அஹீந்திரபுரம் என்றழைக்கப்படும் என்றும் (அஹீ என்றால் பாம்பு அவன் வழிப்பட்ட தலமாதலால் அஹீந்திரபுரம்), தமிழில் திருஅயிந்தை என்றும் அழைக்கப்படும் என்றார்.

      அதேசமயம் கருடனின் பக்தியையும் மெச்சிய பகவான் தனக்கு தீர்த்தவாரி கருடநதியில் நடைபெறும் என்றும் வரமளித்தார்.

      நூற்றியெட்டு வைணவத் தலங்களில், நடுநாட்டுத் திருப்பதிகள் இரண்டு. ஒன்று திருக்கோவிலூர். மற்றொன்று திருவயிந்திரபுரம் எனும் இத்தலம். கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகும்.

      தேவநாதன், தேவநாயகன், தேவதேவன் என்றெல்லாம் இப்பெருமாள் அழைக்கப்பட்டாலும் அவனும் அடியார்களும் விரும்பும் அழகிய திருநாமம் ஒன்றுண்டு. அது அடியவர்க்கு மெய்யன் என்பதாகும். அழகுத்தமிழில் பெருமாளின் இந்த திவ்யநாமத்தைச் சொல்லும் போதே நமது நாவினில் அமுதம் பெருகுவது போன்றதொரு ஆனந்தம் உண்டாகிறது.

      அடியவர் என்றால் பக்தர்கள். அவர்கள் இவனிடம் மெய்யான அன்பு பூண்டவர்கள் ஆதலால் அவர்களை காப்பதில் இவனும் மெய்யன்புடன் விரதம் கொண்டுள்ளானாம்.

மகரிஷிகளின் தபோவனம்

இப்பெருமாளின் மீது பேரன்பு கொண்டு அடியார்கள் ஆனந்தமடைகின்றனர். ப்ரம்மதேவரே தவம் செய்து சித்தியடைந்த இடம் இத்திருத்தலம். ஆதலால் ப்ருகு, மார்கண்டேயர் முதலிய மகரிஷிகளுக்கும் இது தபோவனமாயிற்று. ப்ருகு முனிவர் தவமியிற்றினதால் அவருக்கு ஒரு அழகிய பெண்மகவு வாய்த்தது. திருப்பாற்கடலில் அவதரித்த திருமகள் போன்ற அவருக்கு,  தரங்கமுக நந்தினீ எனப் பெயரிட்டார் முனிவர். தரங்கம் – என்றால் அலைகள் என்று பொருள். கடலினுள் பிறந்த மகாலக்ஷ்மீ எனும் பொருளில் பெயர் வைத்தார். அதுதான் உண்மை. அவள் சாட்சத் மகாலட்சுமியேதான்.

      தேவநாதன் கரம்பிடித்த ஹேமாம்புஜம் – பொற்றாமரையாள், இந்த தரங்கமுக நந்தினியாவாள். வரப்ரசாதியான இந்தத் தாயாரின் சன்னிதியில் நெய்யினால் மெழுகி, சர்க்கரையினால் கோலமிட்டால் நினைத்த காரியம் கைகூடுகிறது. ப்ருகு, மார்கண்டேயர் முதலிய பல மகரிஷிகள் தவம் செய்தது இத்தலத்தில்தான்; பின்னாளில் வேதாந்த தேசிகரும் இங்கே தான் தவம் செய்தார்.

தேசிக தபோவனம்

பகவத் ராமானுஜருக்குப் பின்பு இந்த வைணவத்தை வளர்த்த மகான் வேதாந்த தேசிகனாவார். அவரது அரும்பெருமைகள் நமது வார்த்தைகளில் அடங்காது. அத்தகைய மகான், இளவயதில் தனது மாமாவான அப்புள்ளார் எனும் பெரியவரிடம் கருடமந்திர உபதேசம் பெற்றார். ஐந்தெழுத்து கொண்ட அந்த மகாமந்திரத்தை இத்தலத்தில் ஔஷதகிரி எனும் மலை மீது அமர்ந்து ஜபம் செய்தார்.

      கருடநதி, லக்ஷ்மீ அவதரித்த திவ்ய புஷ்கரிணி, ஆதிசேஷ தீர்த்தம், தேவநாயகன் சன்னிதி என முழுவதுமான தெய்வீக சூழலில் அவர் செய்த தவம், விரைவில் பலித்தது. கருடன்  அவரின் முன்பாகத் தோன்றி ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்து, ஒரு யோக ஹயக்ரீவ விக்ரகத்தையும் அருளினார்.

      பின்னர் மீண்டும் ஹயக்ரீவனைக் குறித்து வேதாந்த தேசிகன் தவமியற்றினார். அனைத்திற்கும் ஆதாரமாயுள்ள ஹயக்ரீவன் அவருக்குக் காட்சியளித்து, தனது தெய்வீகத்தன்மை அனைத்தையும் அவருக்கு வழங்கினார்.

      இன்றும் மலை மீது தேசிகன் தவம் செய்த அந்த தபோமண்டபம் அமைந்துள்ளதைக் காணலாம். ஒரு ஐந்து நிமிடங்களாவது அங்கு அமர்ந்து, ஹயக்ரீவ ஸ்தோத்ரமோ அல்லது கோவிந்த நாமமோ சொல்லுபவர்களுக்கு மன அமைதி மட்டுமின்றி எண்ணியது ஈடேறி வருவது கண்கூடு.

      அதனால்தான் வேதாந்த தேசிகரை வழிபடுவதால், நாம் ஹயக்ரீவனின் பரிபூரண அனுக்ரகத்தைப் பெறலாம் என்பர் நமது முன்னோர். ஹயக்ரீவனே வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்பதையும் ப்ரமாணங்கள் கூறுகின்றன.

      பல ஆண்டுகள் இத்தலத்தில் வேதாந்த தேசிகனார் எழுந்தருளியிருந்து பல நூல்களையும், துதி பாடல்களையும் தேவநாதன் விஷயமாகப் பாடியுள்ளார். மேலும் அவரின் திருக்கையால் கட்டியுள்ள வற்றாத நீர் சுரக்கும் கிணற்றையும், அவராலேயே வடிவமைக்கப்பட்ட அவரின் தெய்வீக திருஉருவ விக்ரகத்தையும் இங்கு சேவிக்கலாம்.

மாசிமகத்தின் மகிமை

      இக்கோவிலில் வருடந்தோறும் பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. இவை அனைத்திலும் வேதாந்த தேசிகருக்கே முன்னுரிமை அளிக்கபப்டுகிறது. தெய்வமே ஒரு மகானைக் கொண்டாடுகிறது என்றால் அவரின் மகிமையை நாம் தனியாகக் கூற வேண்டுமா என்ன?!!

      இந்த உற்சவங்களில் மாசி மக உற்சவம் மிக மிக ஏற்றம் பெற்றது. ஏனென்றால், தேவநாதப் பெருமாள் திருவயிந்திரபுரத்திலிருந்து புறப்பட்டு தேவனாம்பட்டினத்திற்கு சமுத்திர ஸ்நானத்திற்கு வருகிறார். இதுவொரு பெரிய உற்சவம்.

      பொதுவாகவே மாசி மகத்தன்று சைவ, விஷ்ணு ஆலயங்களில் புறப்பாடுகள் நடைபெறும். கடற்கரை கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். மாசிமாதம் பௌர்ணமியன்று மகம் எனும் நட்சத்திரம் கூடி வருவதினால் அதற்கு மாசி மகம் என்பது பெயர்.

      மகத்தில் தீர்த்தாமாடுபவர்கள் ஜகத்தில் பெருமை பெறுவர் என்று மூதுரையும் உண்டு. ஏனென்றால், ஒரு வருடத்தில் நாம் செய்யும் பாபங்களுக்குப் பரிகாரமாக மாசி மகத்தன்று கடலில் நீராடுவது சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் தெய்வங்களின் சன்னிதியில் நாம் நீராடுவது கோடி ஜன்ம தேஷங்களைப் போக்குமாம்.

      ஸ்ரீரங்கம் முதலிய திருத்தலங்களில், பெருமாள், நதிக்கு எழுந்தருளுவார். கும்பகோணத்தில் மாமாங்க குளத்தில் தெய்வங்கள் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். திருவயிந்திரபுரத்தில் தேவநாதன் நேரிடையாக சமுத்ரத்திற்கே வந்து அலைகளில் குதித்து எழுந்தருவதைக் காண கண் கோடி வேண்டும்.

மாசிக்கடலாடி மகிழ்ந்து வருவான்

பாற்கடலின் மகள் மகாலட்சுமியான தரங்கமுக நந்தினிதானே! எனவே கடலரசன் தேவநாதனின் மாமனாரன்றோ! ப்ரியமான மருமகனை வரவேற்கக், கடலரசன் தனது அலைகளாகிற கைகளை ஆட்டி ஆட்டி ஆர்ப்பரிக்கிறான்.

      மாமனாரின் வரவேற்பை மகிழ்ந்து ஏற்கும் அடியவர்க்கு மெய்யன், ஒய்யாரமான பல்லாக்குடன் அசைந்து, அசைந்து ஆடிக்களித்து ஆனந்தமடைகிறான்.

      இந்த உத்ஸவத்தை சேவித்த வேதாந்த தேசிகர் “மாசிக் கடலாடி மகிழ்ந்து வருவான்” என்று மங்களாசாஸனம் செய்கிறார் (துதிக்கிறார்). எழுநூறு வருடங்களுக்கு முன்பு அந்த மகான் பாடியபடியே இன்றும் இது நடைபெறுவது குறிப்பிடத்தக்கது,.

பிச்சுவா பெறும் பாக்கியம்

      தேவர்களுக்கெல்லாம் மேலான தெய்வமான பெருமாளை பல அரசர்கள் அடிபணிந்துள்ளனர். அவர்களுள் ஒருவர் இவ்வூர் பாளையக்கார மரபில் வந்த ஒரு அரசன்.  சிறந்த பக்திமான். பல கைங்கர்யங்களைப் பெருமாளுக்குச் செய்துள்ளார். பெருமாள் புறப்பாடு கண்டருளும் சமயங்களிலெல்லாம், அவருக்கு உறுதுணையாக, பாதுகாப்பாக, இவ்வரசன்  கையில் கத்தியுடன் வருவாராம்.

      ஸ்ரீரங்கத்தில் பிள்ளையுறங்காவில்லி தாசர் எனும் பக்தர், பெருமாளுக்கு முன்பாகக் கையில் கத்தியுடன் சென்றதாக ஒரு சரித்ரத்தை ராமானுஜர் வாழ்க்கையில் காணலாம். அதேபோன்று திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி, கடற்கரையில் ஆராட்டு விழாவிற்குச் செல்லும்போது, இன்றும் அரச மரபில் வந்தவர்கள் கையில் கத்தியுடன் முன் செல்கின்றனர்.

      அதேபோன்று இந்தப் பாளையக்காரரும் பெருமாளுடன் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நாளடைவில் அவர் இறந்தார். அவரின் வழித்தோன்றல்கள் பெரும் பாக்யமான இக்கைங்கர்யத்தைச் செய்யவில்லை. இருந்தும் பெருமாள் அதை மறக்கவில்லை!!

      மாசிமகத்திற்குச் செல்லும் போதெல்லாம் முதலில் அந்த பாளையக்காரர் இருப்பிடத்திற்குச் சென்று, ஞாபகர்த்தமாக, அவரின் பிச்சுவா கத்திக்கு மாலையிட்டு மரியாதை  செய்கிறார். ப்ருந்தாவனத்தில், தான் ஒளிந்து கொண்ட ஒரு பானைக்குக், கண்ணன் முக்தியளித்தானாம். அது புராணம். ஆனால் இன்றும் மாசிமகத்தன்று பிச்சுவா பெறும் பாக்கியம் கண்கூடு. இப்பெருமானின் கருணைக்கு வேறென்ன சான்று!!

 மாசி மகம் அன்று அதிகாலை அலையரசன் தேவநாதனைத் தாலாட்டுவதை சேவிக்க, தேசிகனுடன் நாமும் கூடலாம் வாருங்கள்.

குறிப்பு

இதேபோன்று, திருக்கோவிலூர் ஆயனார், ஸ்ரீமுஷ்ணம் பூவராஹ பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மற்றும் மாமல்லை ஸ்தலசயனப் பெருமாள் ஆகியோரும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர்.

சொல்ல வேண்டிய ச்லோகம்

தரங்காத்: ஸமுத்தர்தும் தரங்கமுக நந்திநீ |

அந்தரங்க: பவாத் தேவ: தரங்கம் அபிகச்சதி ||

.பி.என் சுவாமி

(ஸம்ஸாரம் எனும் பெரும் அலைகளிலிருந்து நம்மைக் காப்பாற்ற, அலையரசன் மகளான மகாலட்சுமியின் நாயகனான தேவநாதன், அலைகளில் இறங்குகிறான்)

Note : This article was published in Kumudham Jothidam : வாரம் 5 : மாசி மகம் கொண்டாடும் மகா விஷ்ணு / மாசிக்கடலாடி மகிழ்ந்து வரும் மகா விஷ்ணு
ஸ்ரீ #APNSwamiயின் எழுத்தில் “தேடித் தொழுத திருத்தலங்கள்” #தேடித்தொழுததிருத்தலங்கள்
22-02-2019 #குமுதம்ஜோதிடம் இதழில் வெளியாகியுள்ளது.

#Thiruvahindrapuram #மாசி #மகம் #திருவஹிந்திரபுரம் #குமுதம்ஜோதிடம் #ஏபிஎன்சுவாமி #Kumudamjothidam #APNSwami

Masi Magam & MahaVishnu

Once upon a time THRIPURAASURAR (Three Asuraas) were creating havoc in all the three worlds. The people and Devas were harassed very badly. The Devas went to Lord Shiva and surrendered to him. Shiva had helped them in distress previously, by consuming HAALA HAALA poison on their request. With this in mind, the Devas went to Shiva to solve their problem. 

Shiva informed the Devas – Maha Vishnu (HEAD of the Universe) had helped him in the consumption of HAALA HAALA poison. He also said we can win only with Sriman Narayanan’s help. Sriman Narayana and Brahma were ready to help Shiva and Brahma  drove the chariot for Shiva. 

The Three Asuras (THRIUPURAASURAR) surrendered to Sriman Narayanan, as they had got a boon by which  NARAYANA ASTHRAM is the only weapon that can kill them. This  had made them very haughty. Finally Sriman Narayanan sat on the arrow shot by Shiva and killed them.

On Brahma’s request, after completing this, Sriman Narayana took rest in a serene place. Narayana requested water from his personal help Garuda and Anathan (Adhiseshan). Garuda flew at top speed (Garuda Vegam, Vayu Vegam, Mano Vegam, etc.,). Seeing a sage doing penance and deeply engrossed in it,  on top of a hill , he stopped and requested him for water. As the sage did not hear, Garuda got angry and toppled the pot containing water. This turned into a river (GARUDA NADHI), Garuda came rushing back to Sriman Narayana. Ananthan had already got water from a well that he constructed in PATHALA LOKAM. Maha Vishnu was very happy using this water,and ordered the use of this for his daily THIRU AARADHANAM. Because Ananthan acted very swiftly, this place was called AHINDIRAPURAM  by Narayanan. (AHI means Snake and he is worshipped here) 

As Sriman Narayana was pleased with Garuda’s bhakthi, he informed that his THEERTHAVAARI will be done in Garuda Nadhi. Of the 108 Dviya Desams,this place is one of two Divya Desams in NADU NATTU TIRUPATHI. The other is THIRUKOVALOOR. Thirumangai Alwar has sung in praise of this Kshetram. 

The presiding deity of this Kshetram is DEVANAYAKAN, DEVANATHAN, DEVADEVAN, etc. But, Perumal and his bhakthaas like the name – ADIYAVARUKKU MEIYAN in Tamil much more. The chanting of this name is like drinking nectar. ADIYAAR means Bhaktas. These bhaktas are truly devoted to him and so he takes more care of them.

MAHARISHI’S TAPOVANAM 

Brahma found this place to be very enchanting and did long penance and got SIDDHI. Many Rishis like Brighu, Markandeya, etc. have also done penance here. Sage Brighu, after his penance, had a daughter. She was named as THARANGAMUKHA NANDHINI. THARANGAM means waves. His daughter resembled Sri Mahalakshmi very much ,who resides in THIRUPAARKKADAL, and this is the truth also.

The presiding deity Devanathan married Tharangamukha Nandhini, who is also called HEMAMBUJAM. She is very auspicious, giver of all wealth and she relieves everyone of their burden. It is a tradition here – one who applies Ghee and draws a KOLAM  with sugar on this Thayar’s sannidhi has his prayers  answered.   Swami Vedanta Desikan also did his penance here.

DESIKA TAPOVANAM

It was Vedanta Desikan who reaffirmed and established the greatness of Sri Vaishnavism after Swami Ramanuja. It is not easy to surmise the qualities of Desikan by us. He was initiated to the Garuda Mantra by his maternal uncle Sri Appular. He did Japam of this 5 lettered Garuda Mantra here at OUSHADAGIRI a small hillock. With Garuda Nadhi, the pushkarani, where Sri Lakshmi was found, Adhisesha Theetham and Sri Devanathan’s temple surrounding this place, Desikan’s Japam achieved the results. Garuda came down to Desikan and initiated him into Sri Hayagreeva Mantra and also handed over an idol of Sri Yoga Hayagreeva. 

Desikan started to do penance to Sri Hayagreeva. Pleased with this, Sri Hayagreeva descended and gave all his auspicious qualities to Desikan. 

This auspicious place is seen even today. If one sits and chants Sri Hayagreeva Stotram or chants GOVINDA NAMA here, he can feel mental peace and his noble thoughts bear fruit. That is why our elders always tell us that if we pray to Vedanta Desikan it is like praying to Sri Hayagreevan. There are records to show that Sri Hayagreeva was born as Vedanta Desikan. 

Vedanta Desikan stayed here for many years, wrote many scriptures and sang in praise of Sri Devanathan. A holy well built by Swami Desikan here has perennial water and never gets dry and an idol sculptured by Desikan of his own image which has all auspicious qualities is here even today. 

MASI MAGAM

There are many festivals conducted in this temple every year. In all these, Swami Desikan is given the first priority. This speaks about the greatness of Desikan as even  Sri Devanathan, the presiding deity, gives up his first right to Swami Desikan. 

MASI MAGAM is very famous and one of the most prominent festivals here. On this occasion, Sri Devanatha Perumal goes to the sea at Devanapattinam which around 12 kms from the temple. 

This is celebrated in a very big way, and thousands of people from all over  come and 

participate 

Generally, during Masi Magam, the deities of temples go to the nearby sea or river as the case maybe for THEERTHAVARI. This happens on a POORNIMA combined with the star ,Magam, during the month of Masi. 

Those who take a holy bath on this MASI MAGAM are greatly appreciated. The sins committed during the year are cleared on this occasion. If one takes the holy bath on Masi Magam with Sri Devanathan, then he is cleansed of sins committed over eons. 

In Sri Rangam, Perumal goes to the Kaveri.In Kumbakonam, Perumal goes to Maha Magam Tank. 

MASI KADALADI MAZHIVARE

Tharangamukha Nandini, daughter of THIRUPAARKADAL.  Is considered to be  Mahalalakshmi .When Sri Devanathan then, comes to the sea, for theerthavari, – SAMUDRA RAJA ((his Father–in–law) is very happy seeing his favourite son-in-law: the waves are very happy and this can be seen every time this happens. We can personally see this and experience this.

Perumal is also happy on receiving the special reception from his father-in-law – SAMUDRARAJA. 

Vedanta Desikan witnessing this utsavam says ‘MAASI KADALADI MAGZHINDU VARUVAAN’ in his prabhandam about 700 years ago. This utsavam is held even today with very great enthusiasm and fanfare by the people.

THE SWORD GETS A REWARD 

Narayanan, who is the Supreme leader of all Devas, has many followers and this includes many kings. One of them is a King from the PALAYAKARA tribe from this place. He was a great devotee of Perumal and has done many kainkayams(service). This king would always carry a Sword in his hand as a weapon to protect Sri Devanathan, from attack during his VEEDHI PURRAPADU.(procession)

Pillai Urangavillidasar used to carry a Sword whenever Sri Rangannathan came out in Sri Rangam. In Thiruvannathapuram, even to this day, a member of the royal family would carry a Sword and walk in front of Sri Annathapadmanabha Swami every time he goes to sea for ARRATU Utsavam. 

After the passing away of PALAYAKARA king, this kainkaryam was stopped by his people. Sri Devanathan has not forgotten this kainkaryam. Every year during Maasi Magam Utsavam, Sri Devanthan goes to the place where this king lived and garlands the Sword used by the King. This is continuing even today. In Vrindavan, Sri Krishna gave Mukthi to the POT in which he hid. This shows the KARUNA roopam of Sriman Narayana.

PLEASE NOTE:

Sri Ayyanar of Thirukoviloor, Sri Bhuvarahan of Sri mooshnam, Sri Parthasarathy of Triplicane and Sri Stahalasayana perumal of Mamallapuram go to sea during MAASI MAGAM utsavam for THEERTHAVAARI.

SLOKAM  

THARANGAATH NAH SAMUDHARTHUM THANRANGAMUKHA NANDHINI !

ANDHARANGA: BAVAATH DEVA: THARANGAM ABHIGACHATHI !! 

Note : English Translation by Shishyas of Sri APN Swami

தனிமையில் இனிமை காண முடியுமா? ஏகாகி ந ரமேத | A thought provoking article by Sri U.Ve K. B. Devarajan Swami | Published by Sri APN Swami

தனிமையில் இனிமை காண முடியுமாஏகாகி ந ரமேத

எண்ணமும் எழுத்தும் ஆக்கமும் : ஸ்ரீ உ.வே K.B. தேவராஜன் ஸ்வாமிகள்
ரசித்து வெளியிடுபவர் : ஸ்ரீ APN ஸ்வாமி

A thought provoking article on Senior citizen township & today’s state of temples in villages

தற்காலத்தில் முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன. ஒரு புறம் பணம் மறுபுறம் முதியோர் இல்லங்கள் மிகுதியாக காணப்படுகிறது. அதே சமயத்தில் கிராமங்களில் உள்ள கோயில்கள் பெருமையிழந்து வருகின்றன. இதனை ஸ்ரீ உ.வே K.B. தேவராஜன் ஸ்வாமிகள் ஸ்ரீ APN ஸ்வாமிகளிடம் பகிர்ந்து கொண்டுள்ளதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

சுகம்” முதியோர் இல்லம் அன்று மிகவும் பரபரப்பாக இருந்தது.

பல முதியோர் அங்கு தங்கள் மக்கள்களால்(பிள்ளைகளால்) சேர்க்கப்பட்டு வசித்து வருகின்றனர். அனைவருக்கும் காலை காபி, எட்டு மணிக்கு சிற்றுண்டி, பன்னிரண்டு மணிக்கு சாத்வீக உணவு. மாலை மூன்றரை மணிக்கு சுண்டல் மற்றும் டீ, இரவு ஏழரை மணிக்கு சப்பாத்தி மற்றும் ஒன்பது மணிக்கு பால் வழங்கப்படுகிறது. வாரம் மூன்று முறை மருத்துவர் வருவார். கழிவறை வசதியுடன் கூடிய இருவர் தங்குமளவு ஒரு விசாலமான அறை. அறைக்கு அறை டிவி. மாதம் ஒரு முறை outing. பல அறைகளில் முதிய கணவன் மனைவியர் இருந்தனர் . சிற்சில அறைகளில் தனித்த ஆணோ பெண்ணோ இருந்தனர். கூப்பிட்ட குரலுக்கு வந்து உதவ ஒரு ஆண் ஆளும் பெண் ஆயாவும் உண்டு. யாருடைய முகத்திலும் மகிழ்ச்சி இல்லை. காரணம் வெளி நாடுகளிலும் வெளி ஊர்களிலும் உள்ள அவர்கள் குழந்தைகள் ஏதோ ஒரு காரணம் கூறிக்கொண்டு பெற்றோர்களை வந்து பார்ப்பதில்லை.

திடீரென்று பரபரப்பு உண்டாகக் காரணம், பற்பல கிராமங்களிலிருந்து எம்பெருமான்கள் பலர் தாயார்களுடன் அம்முதியோர்களை சந்திக்கின்றனர். ஒரு பெருமாள் நல்ல பட்டு பீதாம்பரம் சாத்தி நன்கு அலங்கரிக்கப் பட்ட தாயாருடன் வந்தார். ஒருவர் தடித்த ஆளுயர மாலை சாத்தி வந்தார். ஒருவர் ஒற்றைச் சரத்துடன் வெள்ளை வேட்டி உடுத்து வந்தார். ஒருவர் கவசத்துடன் வந்தார். ஒருவர் எண்ணெய் படிந்த வஸ்த்ரத்துடன் வந்தார். ஒருவருடைய வஸ்த்ரம் ஆகங்கு சிறு சிறு துளைகளுடன் இருந்தது. ஒருவர் பளபளத்த art jewellery சாத்தி வந்தார். ஒருவர் சாலக்ராம மாலை சாத்தி வந்தார். ஒருத்தர் வெள்ளிக் கவசம் சாத்தி வந்தார். ஒரு ஊரிலிருந்து உத்சவர் மூலவர் இருவரும் வந்திருந்தனர்.

எல்லா பெருமாளும் ஒவ்வொரு அறைக்குச் சென்று முதியவர்களிடம் பேசத் துவங்கினர்.

முதல் அறையில்.

பெருமாள் : என்ன ராமசாமி. எப்படி இருக்கீங்க? பங்கஜம் எப்படி இருக்கா?

முதியவர்: ஓ எங்க பெர்சொல்லி கூப்பிடுகிறீரே? நீர் யாரு? தெரியலையே.

பெருமாள்: என்னூரைச் சேர்ந்தவன் நீ. உன்னைத் தெரியாதா? நினைவு உள்ளதா? எட்டு வயசுல தாத்தா கையைப் பிடிச்சு அழைத்து வருவாயே. பொங்கல் கொஞ்சமாகக் கொடுத்தான்னு ஓ என்று அழுவாயே.

முதியவர்: ஆ தேனூர் ஶ்ரீ நிவாசப் பெருமாளா? என்ன பாக்யம். சேவித்து 25 வருஷம் ஆச்சு. மறந்து போச்சு.

பெருமாள்: சௌக்யம் தானே? நாங்கள் உன்னை மறக்கவில்லை.

மற்றொரு முதியவர்: ஆஹா எங்க வரதராஜப் பெருமாள்! எங்களைப் பார்க்க வந்திருக்கார். என்ன பாக்யம்!

மற்றொரு முதியவர்: எம்பெருமானே வேளைக்கு சாப்பாடு எல்லாம் கிடைக்கிறது. Walking போகிறோம். பேப்பர் படிக்கிறோம். பார்க்கில் பேசுகிறோம். மாஸம் ஒருமுறை outing. எல்லாம் உண்டு. ஆனால் இதெல்லாம் இருந்தால் போதுமா பெருமாளே?

பெருமாள்: இதுக்கு மேல என்ன வேணும்?

முதியவர்: நான் பெத்து வளத்து ஆளாக்கிய என் பசங்கள் ஒருத்தனும் வந்து என்னைப் பார்க்கரதில்லை. மூன்று வருஷத்துக்கு முன்னால இங்க கொண்டு வந்து சேர்த்தது தான். அதுக்குப் பிறகு எட்டிக்கூட பார்க்கல. கேட்டால் பசங்களுக்கு ஸ்கூலாம் ஆஃபீஸ் work பிசியாம்.

என்ன தான் இங்க நன்னா கவனித்துக் கொண்டாலும் உடம்புண்ணு வந்துட்டால் நம்மைச் சேர்ந்தவா வந்து பார்த்தால் தானே ஒரு ஆப்யாயம்.

பாட்டி: (கம்மிய குரலோடு) பேரக் குழந்தைகளக் கண்ணுல கூடக் காட்டல அந்தக் கிராதகி மட்டுப்பொண்ணு. யாருக்கும் ஒரு பாவமும் செய்யல நாங்கள். எங்களுக்கு ஏன் இந்த கஷ்டம் ஶ்ரீநிவசா ?

மற்றொரு பாட்டி: (கண்ணில் நீர்கசிய) என் சம்பந்தி இருக்காளே அவ்வளோ நல்லவ. என்னையும் என் பிள்ளையையும் plan panni பிரிச்சுட்டா. நன்னா இருக்கட்டும். பெத்த எங்கள வந்து பாக்கர்துக்கு நேரமில்லை. மாமியார் மாமனார் பிறந்த நாளுக்கும் கல்யாண நாளுக்கும் பிரதி வருஷம் wish பண்ண flight பிடித்துக் கொண்டு ஓடரான் பொண்டாட்டி பசங்களோட. மச்சினி ஆஸ்திரேலியவிலேந்து வந்தாளாம் 15 நாள் லீவு போட்டு எல்லாரும் குலு மணாலி எல்லாம் சென்று வந்தாளாம். நேத்து வந்த என் நாத்தனார் மாப்ள சொன்னார்

பெருமாள்: நீங்க சொல்றது எல்லாம் எங்களுக்குத் தெரியும்.நாங்க பல ஊர்லேந்து பெருமாள்கள் வந்திருக்கோம். இங்க இருக்கற எல்லோரிடமும் நாங்க பேசணும். வாங்கோ பார்க்குக்கு போவோம்.

பார்க்கில் விதவிதமாய் பெருமாள்களும் தாயார்களும் ஒருபக்கம் பரிதாபமாய் நிற்கிறார்கள். எதிரில் பக்திப் பரவசத்தில் முதியோர்கள் கண்ணீர் மல்க நிற்கிறார்கள்.

எங்க பெருமாள். எங்க பெருமாள் என்று பல குரல்கள். நாராயணா வாசுதேவா கேசவா, வரதா, ரங்கா, வேங்கட ரமணா, ராமா, கிருஷ்ணா, வேணுகோபால், சுந்தர ராஜா, ஜகன்னாதா பத்மாவதி, ஆதிகேசவா ஜனார்தனா யதிராஜவல்லி, சுந்தரவல்லி, என தழு தழுத்த பல குரல்கள்.

ஒவ்வொருவராக தங்கள் தங்கள் பெருமாளுடன் selfie எடுத்துக் கொள்கிறார்கள். Photo session முடிந்தது.

பங்கஜம் மாமி: ஏன்னா… நம்ப ஊர் பெருமாளோட எடுத்த selfieயை atlantaல இருக்கிற நம்ப அனந்துக்கு அனுப்புங்கோ. அவன் அதை DP/ Statusல வெச்சுப்பான். ரொம்ப சந்தோசப்படுவான்.

தன் குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக்கொண்ட வரை smile செய்த பெருமாள் அனைவரும் திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுகிறார்கள்.

சற்று நேரம் பேரமைதி.

எல்லாரும் சுதாரித்துக் கொள்கின்றனர்.

பின் பெருமாள்கள் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினர்.

குழந்தைகளே, எல்லாருக்கும் எங்கள் அனுகிரகம் என்னைக்கும் உண்டு. உங்களைத் தனிமை எவ்வளவு வாட்டுகிறது என்று எங்களுக்கு நன்கு தெரிகிறது.

நாங்களும் அதைத் தானே அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.

எங்களுக்கும் நீங்கள் பண்ணியுள்ள ஏற்பாட்டின்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக எல்லாம் நடக்கிறது.

காலை விஸ்வரூபத்துக்கு பசும்பால். திருவராதனம் பொங்கல் புளியோதரை சக்கரைப் பொங்கல் எல்லாம் உண்டு. அப்பப்போ திருமஞ்சனம் புது வாஸ்த்ரம் கூட.

மாலை திருமால் வடை சுண்டல் கூட.

இத்தனைக்கும் கூட இருப்பவர் அந்த 20000 ரூபா சம்பளக் கார அர்ச்சகர் மட்டும் தான்.

அவர் என்ன எப்பவும் கூட இருக்காரா? நாலைந்து கோவில் பண்ணுகிறார். ஒரு நாள் காலை 7 மணிக்கு ஒருநாள் பகல் 11 மணிக்கு என்று அவர் இஷ்டம் தான்.

தனுர் மாசம் மாரிமலை பாசுரத்தன்று பகல் 12.30க்கு தனுர் மாசம். அவர் புரோஹித்யம் வேறு வெச்சின்றுக்கார். அன்னைக்கு ஒரு ஆயுஷ் ஓமமாம்

ஏதோ இந்த மட்டாவது ஒரு வாய் அன்னம் கிடைக்கறதே.

குழந்தைகள் உங்களப் பார்க்க முடியலை. அப்பறம் அந்த பொங்கலும் புளியோரையும் சக்கரப் பொங்கலும் எங்க ரசிக்கறது?

நீங்க நேர வந்து என்னப் பாத்து சௌக்யமான்னு என்னைக்காவது விசாரித்தீங்களா?

வந்து ரெண்டு வாழைப்பழம் அமுது செய்ய பண்ணினாலும் போரும் எங்களுக்கு எவ்வளவு திருப்தி தெரியுமா?

நீங்க அடிக்கடி என்ன வந்து பார்த்து இருந்தால் உங்களுக்கு இந்த தனிமையும் முதியோர் இல்ல வாசமும் இருந்திருக்காது.

எங்க ஊர் பெருதனக்காரர் சீனுவின் பேரன் சுதர்சனா தை திருவோணம் உன் பிறந்த நாளன்று நீ வருவேன்னு ராத்திரி கோயில் கதவை சாத்தர வரைக்கும் எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். தாயாரை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்த காலை நாலு மணி ஆகி விட்டது. அது வரை ரெண்டு பேருக்கும் தூக்கமில்லை. அன்றைக்கு எங்களுக்கு வைகுண்ட ஏகாதசி தான்.

நீங்கள் என்னை வந்து பார்த்திருந்தால் உங்கள் பிள்ளைகள் உங்களை வந்து பார்ப்பர். என் தனிமை உங்களுக்குத் தனிமை உண்டாக்கிவிட்டது.

இப்போதும் ஒண்ணும் கெட்டுப்போகவில்லை. ஒன்று செய்யலாம்.

அந்தந்த ஊர்க்காரர்கள் உங்களைப் போன்ற முதியோர் மொத்தமாக ஒரு கட்டடம் கட்டி ஒன்றாக share பண்ணிக்கொண்டு கிராமங்களில் வாழலாம். தளிகை வேலைக்கு ஒரு ஆளும் போக்கு வரத்து வசதிக்கு ஒரு vehicle மற்றும் டிரைவர் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

முதியோர்: இதற்கெல்லாம் எங்கள்வூர்க்காரர்கள் சம்மதிக்க மாட்டார்கள் கேசவ.

பெருமாள்: அப்போ குறைந்த செலவில் ஒரு பொதுவான இடம் வசதிகளுடன் அமைத்துக்கொண்டு உங்களுக்குள் டர்ன் போட்டுக்கொண்டு அவ்வப்போது வந்து என்னுடன் ஓரிரு நாள்கள் தங்கி அளவளாவி(கைங்கரியம்–பரிசாரகம் தெரிந்த அருளிச்செயல், புருஷ சூக்தம், புஷ்பம் கைங்கர்யம் இத்யாதிகள் செய்து) போகலாமே.

முதியவர்கள்: இரண்டுமே நன்றாக உள்ளது. ஏதேனும் நிச்சயம் சேர்ந்து பேசி பண்ணுகிறோம் பெருமாள்களே.

பெருமாள் : சரி implement பண்ணறா மாதிரி ஒரு practical ஐடியா கொடுக்கட்டுமா? நீங்க எல்லாரும் இங்க முதியோர் இல்லத்தில் இருப்பதற்கு பதில், இந்த முதியோர் இல்லங்களை கிராமங்களில் construct செய்யலாமே!

முதியவர்கள்: எங்க ஸ்வாமி பங்காளிகள் இதுக்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டேங்கிறா, கண்டிப்பா ஒத்துழைக்க மாட்டா.

பெருமாள் : உங்க பங்காளிகள் கிட்ட ஏன் போகணும். இந்த முதியோர் இல்லத்தில் உள்ள எல்லோரும் இடம் வாங்கி சேர்ந்து ஒன்றாக இருக்கலாமே. உங்க எல்லோருக்கும் தான் நல்ல வசதி, காசு பணம் இருக்கே. அனைவரும் சேர்ந்து வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு என்னுடன் நிம்மதியாக வாழலாமே.

பங்கஜம் மாமி : அது வந்து அது வந்து,,,

பெருமாள்: பங்கஜம் புலம்பர்துல இருக்கிற ஜோர் உனக்கு கிராமத்தில் வசிக்கிறதில் இல்லைனு தெரியறது. சரி, usually நீங்க தான் என்கிட்ட application போடுவேல், for a change நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கிறேன். தயவு செய்து கிராமத்துல இருக்கிற எனக்கு புதுசா திருவாபரணம் பண்ணறேன், ராஜகோபுரம் காட்டறேன், தெப்பக்குளம் கட்டறேன் விக்ரஹங்களை ப்ரதிஷ்டை பண்ணறேன் னு please don’t waste your energy and money. உங்க முதியோர் இல்லத்தில் அதிகமாக ஆள் வரா மாதிரி, புது புது விக்ரஹங்கள் ஆபரணங்கள் எங்கள் கோவில் ல சேர்ந்து போறது. ஸேவார்த்திகள் இல்லாமல் யாருக்கு இவற்றை காண்பிக்கிறது.
நீங்க வாங்கோ அனுபவிங்கோ. நீங்க ஒரு வேளை கூட வசிக்க தயாராக இல்லாத அந்த இடத்தில் புதுசு புதிசாக project ஆரம்பிக்காதீங்கோ. உங்க பைசா எங்களுக்கு வேண்டாம். சரியா.

முதியவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் குற்ற உணர்ச்சியில் நின்றனர்.

பெருமாள்: சரி சரி விடுங்கோ. selfie யுடன் படித்ததில் பிடித்தது என்று நாம் பேசியதை facebook,twitter, instagram என்று social mediaவில் போட்டு like வாங்கி, viral post ஆக்குவீர்கள். அவ்வளவு தானே! அதுக்கப்புறம் வழக்கம் போல் எங்களை மறந்து தான் போகப்போகிறீர்கள். புராதனமான கோவில்கள் பாழானாலும், அக்ரஹாரம் அழிந்தாலும் கவலையில்லை. ஹும் ……

முதியவர்கள் கண்களில் தாரை தாரையாக நீர் வழிய அங்கு மௌனம் நிலவியது.

பெருமாள்: சரி எங்களுக்கு time ஆயிடுத்து.நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு. முடிவு உங்கள் கையில். நல்லது நடந்தால் சரி. நாம் எல்லாம் இன்பமாக கூட்டுக்குடும்பமாக இருக்கலாம். என் பிள்ளைகளான நீங்க என்னிடம் வந்தால், உங்கள் பிள்ளைகள் கட்டாயம் உங்களை பார்க்க தானே வருவார்கள். இந்த photo selfieயை DPல வெச்சு அழகு பார்க்கறது மட்டும் இல்லாமல் எங்க கோரிக்கையை deepபாக யோசிங்கோ! நாங்கள் வருகிறோம்.

30-Jan-2023
_________
We hope that this article would have kindled your thought process for sure.
Do not forget to Like, Comment & Share so that there is a change in the way we worship which will change the way we live.

– SARAN Sevaks / Shishyas of Sri APN Swami