Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | Foreign போன பெரியோர்கள் | Elders who went Abroad

Please note that this article is available in both Tamil (written by Sri APN Swami) and English (translated by his sishyas)

Foreign போன பெரியோர்கள்

பர்த்ருஹரி எனும் மஹாகவி இருந்தார். அவரின் மூன்று நூல்கள் மிகவும் ப்ரசித்தமானவை. சுபாஷிதம் எனும் நீதிநூல், அடுத்தது ச்ருங்காரம் – அதாவது காதல் இன்ப நுகர்ச்சி, மற்றொன்று வைராக்யம் (உலகியல் வெறுப்பு) எனும் மூன்று நூல்களை மொத்தம் முந்நூறு ச்லோகங்களாக்கினார் மஹாகவி.

அதில் நன்னூல் (நீதி சாஸ்த்ரம்) ஆரம்பிக்கும் போதே ஒரு அத்புதமான உலகியல் தத்வத்தைக் கூறுகிறார். “ எதற்காக இப்போது இதனை எழுதுகிறாய்? எங்களுக்குத் தெரியாதது உனக்குத் தெரியுமா? இதென்ன வெட்டித்தனமான காரியம்? நீ என்ன மேதாவியா? உனக்கு மட்டும் தான் எழுதத்தெரியுமா?” என்றெல்லாம் பலர் கேள்வி கேட்பதாக வைத்துக்கொண்டு பதில் உரைக்கிறார்.

மெத்தப்படித்த ஜ்ஞானவான்கள் பெரும்பாலும் பொறாமையிலேயே காலம் கழிப்பர். (தன்னைவிட விஷயம் தெரிந்தவன் எவனுமில்லை. ஒருவேளை மற்றொருவனுக்கு புகழுண்டானால் அதில் காழ்ப்புணர்ச்சி அதிகமாகும்) “சரி அவர்களை விடுவோம். அரசர்களிடம் நல்வார்த்தைகளை எடுத்துச் செல்லலாமே!” என்றால்; “தங்களிடம் யாசகம் பெறும் பண்டிதர்கள் இவர்கள். இவர்களென்ன நமக்கு உபதேசம் செய்வது?” எனும் கர்வத்தால் பாராமுகம் காட்டுவர். அது போகட்டும். எதுவும் அறியாதவர்களுக்காக ஏதாவது நல்லது சொல்லலாமே! என்றால்; இவர்கள் இருவரையும் விட அறிவிலிகளின் நிலை மிகவும் மோசம்.

தங்களுக்கு ஜ்ஞானமே இல்லை, என்பதினை சிறிதும் அறியாமலேயே, அனைத்தையும் அறிந்தவர்கள் போன்று ஆர்பாட்டமாக வீண் ஜம்பத்துடன் பொழுது போக்கிடுவர். ஆதலால் இவர்களை நம்மால் நெருங்கவே முடியாது.

அப்படியானால் எதற்காக இதுபோன்ற விஷயங்களை தொடர்ந்து எழுதுகிறாய்? இதனால் யாருக்கு என்ன பயன்? என்று கேட்பவருக்கு ச்லோகத்தின் முடிவில் அத்புதமான பதில் தருகிறார். “உங்களின் கேள்வி ந்யாயமானதுதான். நான் பல பெரியோர்களைப் பணிந்து நல்விஷயங்களைப் பயின்றேன். அதனை அசைபோடும் போது நல்ல எண்ணங்கள் தோன்றின. எனக்குள்ளேயே அதை சீரணித்துக் கொண்டேன். ஏனெனில் எவரும் ஏற்பவரில்லையே. இருந்தாலும் தான் சுவைத்த பதார்தத்தின் சுவையை, கேட்டாலும், கேட்காவிட்டாலும் மற்றவர்க்கு எடுத்துச் சொல்வது போன்று இந்த சுபாஷிதம் இயற்றுகிறேன். “எனது ஆனந்த அனுபவ வெள்ளத்துக்கு வடிகாலாய் இந்நூலை இயற்றுகிறேன். இது எனக்காக நானே இயற்றினேன் என்றும் கொள்க” என்கிறார்.

இப்படி மஹான்களே பார்த்து பயந்த உலகத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது பேராபத்துதான். என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒருவகையில் இவ்வுலகில் சிலருக்கு இது பயன்தரும் எனும் எண்ணத்தில் எழுதுகிறோம். பல தேசங்களுக்குச் சென்று வந்தவர்கள்மூலம் தொற்றுநோய் பரவுகிறது என்பதை உணர்ந்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பல தேசத்தில் உள்ளவர்களுடன் உறவுகள் தொடர்ந்திட இதுவும் ஒரு வழியாகிறது.

ஏனெனில் நமது பெரும்பாலான உறவுகள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். கண்டம் விட்டு கண்டம் அவர்கள் பரவியுள்ளனர். மிகவும் ஆபத்தான இந்த சூழ்நிலையில் அவர்களின் நிலை குறித்த கவலைவாட்டுகிறது. வெளிநாட்டில் வாழ முடியாத சூழலில் தாய்நாட்டிற்கு திரும்புபவர்களை வீட்டிற்குள்ளாக அனுமதிக்கக் கூடவியலாத நிலைமை. யோசிக்க, யோசிக்க பெரும் பயங்கரமான ஆபத்தில் சிக்கியுள்ளோம் என்றுபுரிகிறது. ஆனால் இந்த நிதர்சனத்தை நம்மனம் ஏற்க மறுக்கின்றது. தனிமையில் சுயபரிசோதனையாக தீய எண்ணங்களைத் தவிர்த்து நல்ல விஷயங்களை நினைக்க முடியாமல் தடுமாறுகிறோம்.

அது சரி இதற்கொரு தீர்வுதான் என்ன? என்னும்போது நமது வெளிநாட்டுப் பெரியோர்களின் வழியை பின்பற்றவேண்டும்.

இதென்ன புதுக்கதை. “ ஒரு வரைமுறை இல்லாமல் மனம் போனபடி பிதற்ற ஆரம்பித்து விட்டாய். குற்றவுணர்ச்சி சிறிதும் இன்றி மேன், மேலும் சாஸ்த்ரவழியை மீறுகிறாய்” என்று தோன்றும். ஆனாலும் வழக்கம் போல் தொடர்ந்து படித்திடுங்கள்.

பாரதப்பண்பாட்டின்படி நடக்கும் பெரியோர் – நமது ஆசார்யர்கள், ஆசார அனுஷ்டானங்கள் மிக்கவர்கள். “ எங்கே தங்களையறியாமல் காம, க்ரோத வசப்படுவோமோ?” என பயந்து எப்போதும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டிருக்குமவர்கள், மேலும் வெளியில் வந்தால் தங்களுக்கு ஆசாரக்குறைவு ஏற்பட்டுவிடுமோ? என்று அஞ்சி எதிலுமே எல்லையை மீறாமலிருப்பவர்கள்.

“ஸம்ப்ரதாய ப்ரவசனம் தவிர்த்து அதிகமான ஸஞ்சாரம் ஆத்மலாபத்திற்கு விரோதி” என உணர்ந்து ஒடுங்கியிருப்பவர்கள். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த நாவல்பாக்கம் ஸ்வாமி போன்ற மஹான்களை இங்கு நினைக்க வேண்டும்.

மேலும் வெளிதேசம் செல்வது சாஸ்த்ர சம்மதம் அன்று எனும் கொள்கையில் நிலைத்தவர். (இன்றைய காலகட்டத்தில்; வெளிதேசத்தில் வசித்தும் நமது தர்மத்தை வளர்க்கும் ஆஸ்தீகர்களைக் காணும்போது ஆனந்தமுண்டாகிறது.) இருப்பினும் ஆசார, அனுஷ்டானங்களின் நிலைத்த மஹான்கள் இன்றுவரை வெளிதேசம் செல்வதைத் தவிர்ப்பது கண்கூடு.

இவ்விதமிருக்க ” foreign போன பெரியோர்கள்” என்று எப்படிச் சொல்லலாம் என்பது தானே கேள்வி. ஸ்வாமி தேசிகன் அளிக்கும் விடை கேன்மின்.

“ நம் ஸம்ப்ரதாய மஹான்களின் பெருமையை வேதமே கொண்டாடுகிறது. பெருமாள், பிராட்டியின் கருணை எனும் கங்கை நதியில் நம்மை குளிப்பாட்டி பரிசுத்தர்களாக்குகின்றனர் பெரியோர். அவர்களின் பெருமைக்குணம் தான் என்ன? என்றால்; “தாம் மெத்தப்படித்தோம் எனும் கர்வம், இதனால் மற்றவர்களை அவமானப்படுத்த முனைவது, முன்னோர்களின் வழியறியாமல் தான் தோன்றித்தனமாகத்திரிவது, பொறாமை, வஞ்சனையுடன் என்றும் நேரம் கழிப்பது.” இது முதலான தீய நடத்தைகளுக்கு (எண்ணங்களுக்கு) வெகு தொலைவில் இருப்பவர்கள் என்கிறார்.

அதாவது “வெளிதேசத்தில் (தூரதேசத்தில்) வசிப்பவர்களின் நடை, உடை, பாவனையில் நாகரிகம் உண்டு” என்பதல்லவா நமது எண்ணம். குறிப்பாக மேல்நாட்டு நாகரீக மோகத்தில்தானே நாம் அலைகிறோம். அந்த தூரதேசத்திலிருந்து (foreign) வந்தவர்களை வாய்பிளந்து அதிசயமாக காண்கிறோம். அவர்களின் வசிப்பிடத்தின் பெருமைகளை, அவர்கள் விவரிக்க, விவரிக்க விழிகள் விரியக் கேட்கிறோம். அவர்களைப் போன்ற நாகரிகம் ( நடை, உடை, பாவனை) நமக்கும் உண்டானால் உலகில் மதிப்பு உண்டாகும் என முயற்சிக்கிறோம் அல்லவா!

அப்படியானால் நாம் யாரை பின்பற்ற (follow) வேண்டும்? நமக்குத் தேவை foreigners கலாசாரம்தானே. அப்படியாகில் விதேசிகள் (foreigners) நமது ஆசார்யர்கள். அவர்களை பின்தொடரவேண்டும்.

ஆம், பொறாமை, கயமை, பொய்மை, மடமை, முதலிய துர்குணங்கள் உள்ள இடங்களிலிருந்து தூரதேசத்தில் (விதேசத்தில் – foreign) இருப்பவர்கள். அதாவது விலகி (social distance) இருப்பவர்கள் நமது ஆசார்யர்கள். அவர்களே வெளிதேசத்தில் வாழ்பவர்கள் (foreigners). இவர்களின் வழியைத்தொடர்ந்தால் நாம் நினைத்த நன்மதிப்பை உலகில் பெறலாம்.

எல்லா தேசங்களிலும் ஒரே ப்ரார்த்தனை ஒலித்திடும். இந்த சமயத்தில் உள்ளத்தூய்மையுடன் பெரியோர்களைப் போற்றுவோம். அவர்களின் தொல்வழியில் நடப்பதே நமக்கு நல்வழி என்றுணர்வோம்.

-ஸ்ரீஏபிஎன் சுவாமி

29/03/2020

English

The Elders who went to Foreign Lands

Once there lived a great poet called Bhartṛhari. All his three works were very famous and they were Subhashitham (a work on laws and justice), Sringaram (a work on love), and Vairagyam (hatred towards material pleasures). From these works, he had composed about 200 slokas.

Out of these, the book of law opens with a worldly philosophy. He assumes that people ask him questions such as, “Why are you writing this work?Do you think you know more than us?Why this waste of time?Are you so great? Do you think you’re the only person who knows to write?”, and he answers them right at the outset.

A lot of arrogant learned people tend to spend a considerable part of their time being jealous of others. (No one is better than them and when someone gets praised, their rancour towards them increases).  But even if you decide to leave them aside and strive to earn a good name from the kings, you’re likely to get mocked as the kings may think that pandits are those who get payment from him and hence, have no right to give advice. Finally, if you decide to teach someone who doesn’t know anything, it gets even worse!

They won’t even realize that they don’t know anything and will spend all their time in vanity and false pride. That’s why we can never reach them.

If that’s the case, why are you constantly writing about such things? Who gets to benefit from these?He answers those questions at the end with a beautiful sloka. |There is merit in your question. I have had the privileges to learn from scholars and while I think about them at my leisure, I get good thoughts and ideas. I imbibed and want to share this sweetness with the world, even if there is no one to listen to them. That’s the reason behind Subhashitham. This work is a flow of my blissful experience and I’m penning it down just for me”, he said.

Undoubtedly, this is not a good trend for scholars to write as the world is scared to see them or accept their work. Still, they persist in the hope that it will benefit someone someday! This is also a way to connect with people around the world, especially at a time when we hear that COVID19 spreads from people who travel around the world. 

Many of our family members live in  other countries spread across other continents. During these trying times, their state of affairs worries us. Even people who return home from foreign countries have to be in self isolation. The more we think about it, the imminent danger that we are stuck in becomes apparent. But our minds refuse to accept this harsh situation. We are staggering due to our inability to stay positive during these difficult times.

When you think of the solution to this problem, it becomes apparent that we have to follow the ways of our elders in foreign countries. 

What’s this new story now? “You have started rambling and are furthering the deterioration of our sastrams by taking this route!” If you’re thinking like this, read on as usual to know the reason.

Our acharyas follow the path laid down by our Sastras and live their lives according to the culture of our land. “Can lust and anger even creep in without your knowledge?” Driven by these thoughts, they always isolated themselves from unwanted things. Moreover, fearing that their way of life will be affected when they travel too much, they lived within their limits.

They were of the firm belief that besides traveling to propagate our way of life, any other travel was not good for their atma. Here we have to think of great people like Navalpakkam swami who lived towards the end of the 20th century.

He lived in the belief that traveling abroad is against our sastrams (In today’s world, it is happy and heartening to see that all those who are living abroad are playing a big role in propagating our Sanatana Dharma). At the same time, we can see that those who are steeped in acharams refuse to travel abroad.

Now, you might wonder why is this article titled “The Elders who went to Foreign Lands“? Read the answer given by Swami Desikan.

Even Vedas celebrate the greatness of our learned people. Our elders dip us in the Ganga river (the compassion of Perumal and Piratti) to purify us. If you’re wondering what is their greatness, they are the ones who are far away from bad and negative qualities such as arrogance, false pride and shaming others through it, not following the path shown by our elders, jealousy, and hatred. 

Today, we believe that people living in foreign lands are more cultured than us. In fact, we are mesmerized by the Western culture. We gape at foreigners with a wide open mouth and we are completely captivated by all that they say about life in those lands. Hearing this, we also strive to follow the same culture in the belief that our status will also be elevated when we live like that.

In that case, whom should we follow? Since we want to follow foreigners, we should follow our acharyas because they are the real foreigners.

Yes, they are the ones who stay in foreign lands, away from qualities such as jealousy, anger, hatred, and falsehood. They maintain social distance with these qualities. When we follow their footsteps, we can earn the good status and life that we want.

At a time when the same prayer is ringing in the hearts of people around the world, let us cleanse ourselves by talking about the glories of our elders. Let us understand that following their footsteps is the best path for us. 

– Translation by Sri APN Swami’s Sishyas

Links to Articles in this Series

9.Foreign போன பெரியோர்கள்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | Foreign போன பெரியோர்கள் | Elders who went Abroad

8. கட்டையான கடவுள்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | கட்டையான கடவுள்

7. எதிர்மறையே ஏற்றமாகுமா?

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | எதிர்மறையே ஏற்றமாகுமா?

6. சங்கஜித் –  கூட்டத்தை வென்றவன்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | சங்கஜித் – கூட்டத்தை வென்றவன்

5. உள்ளே வெளியே |Inside-Outside

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | உள்ளே வெளியே | Inside-Outside

4. ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

3. நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

Sri #APNSwami #Writes #Trending |#COVID-19 | நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

2. Pandemic in பரமபதம் ( Paramapadam)

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19|Pandemic in பரமபதம் ( Paramapadam)

1. COVID-19 ( Corona logical – Chronological) | Benefits of Self-Quarantine

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |தனிமையில் இனிமை காணலாம் | Corona logical – Chronological| Benefits of Self-Quarantine

 

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | கட்டையான கடவுள்

கட்டையான கடவுள்

ஒரு நொடியில் உலகை அழித்திடுவோம் என்று அச்சுறுத்திய வல்லரசுகள் இன்று உறைந்து போயுள்ளன அச்சத்தில். அழிப்பதற்காக ஆயிரக்கணக்கில் ஆயுதங்களை தயார் செய்து தங்களை வல்லரசுகளாகக் காண்பித்துக் கொண்டவை இன்று மக்களை காக்கும் வழி தெரியாமல் திண்டாடுகின்றன. ஒரே மாதத்தில் இவ்வுலகின் மொத்த இயக்கமும் முற்றிலும் முடங்கி விட்டது எனலாம். அடுத்தடுத்து வரும் செய்திகள் ஒன்று கூட ஆரோக்கியமானதாக இல்லை. எவ்வளவு தான் மனதை திடப்படுத்திக் கொண்டாலும் ஒவ்வொரு நொடியும் “திக் திக்” என்று நகர்வதை தவிர்க்கமுடியவில்லை.

இதன் நடுவே “யார் குற்றவாளி? எவரால் இந்த பெரும் கேடு விளைந்தது?” என்பது குறித்த பரஸ்பர குற்றச்சாட்டுகள். மனம் போனபடி பேசுவது மனித இயல்பு தான் என்றாலும், மரணத்தின் நிழலில் வசிக்கும் போது வார்த்தைகள் இன்னமும் வலிமை பெறுகின்றன.

உலகமகா யுத்தத்தில் நேரெதிராக நடைபோட்ட நாடுகள் நேசக்கரம் நீட்டிக்கொண்டு துயரம் துடைக்க வேண்டுகின்றன. ஈச்வரனின்  இந்த விசித்திரமான லீலா வினோதங்களைக் கண்டு வியப்பதா? அல்லது வாழ்க்கையில் விரக்தியடைவதா? என்பதே தெரியவில்லை. எவ்வளவு கொடியது என்றாலும் ஸம்ஸாரத்தை வெறுக்கும் பக்குவம் ஏற்படவில்லை. நாளை நமது கதி என்ன? என்பது தெரியாத நிலையிலும் கோபதாபங்களையும், விருப்பு வெறுப்புகளையும் துறந்திட துணிவில்லை.  பிறரை வசை பாடியே பழகிய நாக்கு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு பொறுமை காத்திட நினைக்கவில்லை.

மௌனமாக இருப்பதை கோழைத்தனம் என்று எண்ணுபவர்கள் அதிகமுள்ள இவ்வுலகில், எதுதான் நிரந்தரம்?

“சுவாமி! எம்பெருமான் ஏன் இப்படி சோதிக்கிறான்! அவன் என்ன கல்லா?” என்று கேட்பவர்கள் ஏராளம். அவன் கல்லான காரணத்தை சிலர் கவிதையாகப் பாடியுள்ளனர். ஆனால் அவன் கட்டையான காரணத்தை கவிஞர் பாடியதை ஒரு சிலரே அறிந்திடுவர்.

“காவியம் எனும் ஸம்ஸாரத்தில் கவியே பிரமன்” என்பர் பெரியோர். அதனால் அவன் தனக்குள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி பல புதுமைகளை மக்கள் ரசிக்கும் படி படைத்திடுவான்.  “கற்றோரை கற்றோரே காமுறுவர்!” என்பது இங்கு நினைக்கத்தக்கது. ரசனை இல்லை என்றால்  எல்லாமே தோஷமாகத் தான் தெரியும். காமாலை கண்ணுக்கு எல்லாம் மஞ்சள் தானே!

இறைவன் கட்டையான கதை வைகுந்தத்தில் இருந்து தொடங்குகிறது. மறுபடியும் பரமபதமா? என்றால் இதற்கும் பெரியோர்களே ப்ரமாணம்.

சுமார் இருபத்தைந்து  வருடங்களுக்கு முன்பு தி.நகர் வாணி மஹாலில் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் சுவாமியின் உபந்யாசம் நடைபெற்ற சமயம், தினந்தோறும் பங்கேற்கும் பாக்கியம் பெற்றவன் அடியேன். அப்போது அடியேன் எந்த வசதியுமின்றி சொந்தமாகப் பத்திரிகையும் நடத்தி வந்தேன். என் மீது கொண்ட அபரிமித கருணையால் சுவாமியும் “பீஷ்ம ஸ்துதி” தொடர் விரிவுரையை பத்திரிகையில் எழுத இசைந்த சமயம் அது.

ஒரு நாள் உபந்யாசத்தில் புரி ஜகந்நாத எம்பெருமானை வர்ணித்த போது நகைச்சுவையாக ஒரு ச்லோகத்தைக் குறிப்பிட்டார். பகவத் விஷயத்தைக்கூட நகைச்சுவை பாணியில் கையாள்வது ப்ரமாண சரணர்களின் பொழுதுபோக்கு தானே. அதனால் வைகுந்தத்தில் நடந்த இந்த வினோதத்தை ரசிக்கலாம்.

“எனக்கு இரண்டு மனைவியர். ஒருத்தி இயற்கையிலேயே எங்கும் வராதவள் – நகராதவள்(அசலா எனும்  பூமி) . மற்றொருத்தி  ஓரிடத்திலும் நிற்காமல்  ஊர் சுற்றிக்கொண்டேயிருக்கும் சஞ்சலபுத்தியாள்.  (செல்வம் நிரந்தரமற்றது. மஹாலக்ஷ்மி) அது சரி, மனைவிகள் தான் சரியில்லை என்றால் பிள்ளையாவது மனம் மகிழ்ச்சி தருவானா? என்றால் அவன்  பெயர் மன்மதன். சிவனிடம் பட்ட  அபசாரத்தினால் கண்ணுக்குத்  தெரியாதவனாகி விட்டான் ( தகப்பன் கண்ணிலேயே படாதபிள்ளை). படுக்கையான பாம்புக்கும், வாகனமான கருடனுக்கும், இயற்கையாகவே எப்போதும் பகைமை.  ( வைகுண்டத்தில்  நடைபெறும் சம்பவமாக கவி இதனை வர்ணித்திருப்பதை மனதில் கொள்க.) அதனால் அவர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர்  சண்டையிடுகின்றனர். தங்குவதற்கும் தனியாக இடமின்றி மாமனார் வீடான பாற்கடல். இப்படி, திரும்பத்  திரும்ப தனது குடும்ப கஷ்டத்தை  எண்ணி எண்ணி பெருமாள் கட்டையானான்.

அத்புதமான ஹாஸ்ய ரசத்துடன்  முக்கூர் ஸ்வாமி  இக்கதையை விவரித்த போது அரசிகர்கள் ஒருவருமின்றி, ரசிகர்களே நிறைந்திருந்த அந்த சபை ஆர்பரித்துக் களித்தது.  இந்த அழகிய ஸம்ஸ்க்ருத ச்லோகத்தை அறிஞர் பெருமக்கள் பக்கலில் கேட்டறிந்து தெளிவு பெறுக. இதே போன்று பரமசிவனுக்கும் ச்லோகமுண்டு.

அன்றைய உபந்யாசத்தில் ரசித்து எழுதிக் கொண்ட குறிப்பை பலவிடங்களில் பயன்படுத்தும் பாக்யம்  பெற்றேன். ஏதோவொரு வகையில் முக்கூர் சுவாமிகளின் சம்பந்தம் பெற்றவர்களும் உணரும் படியன்றோ இஃதிருப்பது.  இதைத்தான் “காவியங்களிலும், சாஸ்திரங்களிலும் உள்ள சுவாரஸ்யங்களைக் கொண்டு ரசிகரான பெரியோர் நற்போது போக்குகின்றனர். பெரும் ஆபத்து சூழ்ந்துள்ள இவ்வேளையிலும் பிறர் தோஷங்களையே பார்த்து மகிழும் மூர்க்கர்கள் கலகப்பிரியராகப் போது போக்குகின்றனர்.” என்றான் மஹாகவி.

மஹாவித்வான் பெருக்காரணை சுவாமியின் சதாபிஷேக மஹோத்ஸவத்தில் இந்த ச்லோகத்தை உபந்யஸித்த போது மனம் மகிழ்ந்த பெருக்காரணை சுவாமியும் ‌”வைகுந்தத்தில் வந்த நான்முகனையும், ஆறுமுகனையும் ஒன்றாகக் கண்டு, “பத்து தலை ராவணன் இங்கும் வந்தானே!” என்று லக்ஷ்மீ பயந்த கதையை வெகு ஹாஸ்யமாக விவரித்தார்.

கவிகள் தங்களது கற்பனைத் திறனால் சாஸ்திரங்களையும் ஸாஹித்யமாக(literature) வெளியிடுவதின் மேன்மையை எடுத்துரைத்தார்.

இன்றுள்ள பயங்கர சூழலில் ஏதோ நற்போது போக்காக எப்போதும் எம்பெருமான் நினைவு வேண்டுவதைத் தவிர வேறு இல்லை. “ஸம்ஸார விஷ வ்ருக்ஷத்தில் அம்ருதமான பழங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று கேசவ பக்தி. மற்றொன்று அவனடியார் கோஷ்டி. இதுவே என்றும் நிலைத்திருக்க ப்ரார்த்தனை செய்வோம்.

-ஸ்ரீஏபிஎன் சுவாமி

28/03/2020

English

The Lord Who became a Log

Those countries that once claimed that they can destroy the world in a second are now grappling with worry and sorrow. These countries had accumulated many weapons to protect themselves from attacks, but today, they are struggling to save their people. Within just a month, it can be said that all man made creations have become muted. The news that is coming in is not healthy at all and hence we feel scared every minute, despite our best efforts to remain positive.

In the midst of all this, accusations are flying thick and fast as to who is responsible for this state of affairs. Though it is a human trait to exaggerate and talk beyond acceptable levels, this goes to a whole new level when faced with death, Countries that fought with each other earlier directly and indirectly are now seeking each other’s support. Should we feel overwhelmed with this unique leelai of Perumal? Don’t know really.

Regardless of how difficult it is, we still don’t have the maturity to hate this samsaram. What will be our state tomorrow? We don’t know, still we’re unable to transcend our anger, likes, and dislikes. Our tongues are so used to criticism that it is unable to isolate itself and remain patient. What is permanent in this world where people think silence is cowardice?

Many people ask, “Swami, why is Perumal testing us like this? Is he made of stone?” Somehave even written poems on how He became a stone! But only some know how He became a log.

Our elders often say, “In the poetry called samsaram, the poet is Brahma.” That’s why the poet uses his independence and creativity to create new things that can be enjoyed by people. Here, you can recollect this saying, “Kaṟṟōrē kaṟṟōraik kāmuṟuvar” (The learners who loved the learned). When one doesn’t have the ability to enjoy creativity, everything looks like blemishes. After all, everything looks yellow for a person suffering from jaundice. 

Now, the story of how Perumal became a log started in SriVaikuntam. Again, you may wonder! Well, the story described by our elders is the evidence of this. 

About 25 years ago, Sri APN Swami had the privilege to attend a upanyasam series by Mukkur Lakshmi narasimhachariar Swami in Vani Mahal. At that time, APN Swami was running a magazine with no financial support. That was also when Mukkur swami consented to write a series called “Bhishma Stuti” in this magazine.

During that upanyasam, Mukku swami came up with a hilarious sloka while describing Puri jagannath Perumal, After all, isn’t it our past time to enjoy Bhagavad Vishayam in a humorous form! In that sense, let us enjoy this unique incident.

“I have two wives. One of them never moves by nature (achala also called Bhoomi). The other wife is fickle-minded and never stays in one place. She always roams around (wealth is temporary. Mahalakshmi). Ok, even if your wives don’t make you happy, do your children give you happiness? The person who asked this is Manmadhan who became invisible due to a cirse from Lord Shiva (the son who can never be seen by the father). There is a natural enmity between Ananthan, His bed and Garudan, his vehicle. (Keep in mind here about the poet’s description of SriVaikuntam). That’s why they constantly fight with each other. Perumal doesn’t even have a place to stay and lives in His Father-in-law’s place – Paarkadal. Due to this continuous stream of problems, He turned into a log!

When mukkur swami gave this funny explanation, everyone present there enjoyed it without any controversial thoughts. Please understand and enjoy this Sanskrit sloka. Like this, lord Shiva also has a sloka.

Sri APN Swami had the privilege to use the notes he jotted down during this upanyasam at various places. These help everyone to have some form of association with Mukkur swami. This is also how our elders enjoyed the intricate aspects present in our literary and sastraic works. 

In comparison, even during these difficult times, fools spend their time criticizing others, says the great poet. 

During the Sadabhisheka Mahotsavam of Perukaranai swami, APN Swami did a upanyasam on this sloka. Feeling elated, Perukaranai swami elucidated the story of how Lakshmi felt scared seeing the four-headed Brahma and the six-headed Muruga, as She thought that Ravana had come. He further explained how poets explain sastram and literature in a funny way to express their creativity. 

In these trying times, there is no better time pass than thinking about Bhagavan. In the poisonous tree called Samsaram, there are only two fruits. One is Keshava Bhakti and the other is Avan adiyar goshti (being in the group of His servants).

 Let us pray for good times again.

– Translation by Sri APN Swami Sishyas

Links to Articles in this Series

8. கட்டையான கடவுள்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | கட்டையான கடவுள்

7. எதிர்மறையே ஏற்றமாகுமா?

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | எதிர்மறையே ஏற்றமாகுமா?

6. சங்கஜித் –  கூட்டத்தை வென்றவன்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | சங்கஜித் – கூட்டத்தை வென்றவன்

5. உள்ளே வெளியே |Inside-Outside

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | உள்ளே வெளியே | Inside-Outside

4. ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

3. நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

Sri #APNSwami #Writes #Trending |#COVID-19 | நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

2. Pandemic in பரமபதம் ( Paramapadam)

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19|Pandemic in பரமபதம் ( Paramapadam)

1. COVID-19 ( Corona logical – Chronological) | Benefits of Self-Quarantine

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |தனிமையில் இனிமை காணலாம் | Corona logical – Chronological| Benefits of Self-Quarantine

 

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19|Pandemic in பரமபதம் ( Paramapadam)

This article has both the Tamil version written by Sri APN Swami and the English translation done by his sishyas.

Pandemic in பரமபதம் 

Pandemic In Srivaikuntam Sri APN Swami.jpeg

Picture by Sri Keshav

              பரமபதம் அல்லோகல்லோகபட்டுக் கொண்டிருந்தது. நித்யர்கள், முக்தர்கள் என அனைவரும் கூடிக்கூடி பேசிக்கொண்டிருந்தனர். எல்லோரும் முகபாவனையும் மிகவும் சீரியஸாக இருந்தது. அத்திரளின் நடுவில் நடுநாயகமாக கஜாநநன் என்பவர் தென்பட்டார். அவர்தான் ஏதோ செய்தியினைச் சொல்லியுள்ளார் போலும். அதனால் அனைவரும் அவரைச்சுத்தியே இருந்தனர்.

மெதுவாக விஷயம் புரியவாரம்பித்தது. விஷ்வக்ஸேநர் பரமபதத்திற்கு ஒரு சுற்றரிக்கை அனுப்பியுள்ளார். கஜாநநர் அதுகுறித்து விளக்குவதற்காகத்தான் இங்கு அனைவரும் கூடியுள்ளனர். அதாவது பூலோகத்தில் ஒரு கொடிய வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.  அது விரைவாக பரவுகிறது. Pandemic – அதிவிரைவாக தொற்றிக்கொள்ளும் தீவிரத்தன்மையுள்ளது. அதனால் வைகுண்டத்திற்கு அதிவிரைவில் அது பரவலாம் என்பதால் நித்தியர்கள் பூலோகத்தில் அவதரிக்க பதினைந்து நாட்கள் தடையுத்தரவு. அதைத்தவிர “அர்சிராதி மார்கம் அனைத்தும் பதினைந்து நாட்கள் மூடப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் “நித்யர்கள், முக்தர்கள் கைங்கரியத்திற்காக புதிய தேகங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது”. தற்போது அர்சிராதி மார்கத்தின் வழியாக வந்தவர்களை விரஜைநதி கரையிலேயே தங்கவைத்து,  தனிமைப்படுத்தி, பதினைந்து நாட்கள் தீவிர கண்காணிப்பின் பின்னரே பரமபதத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

மேலும் அர்ச்சிராதி மார்க்கத்தில் இருந்த ஆதிவாஹிக கணங்கள் இவர்களை கைபிடித்தும், சந்தன மாலைகள் பூசியும், சாற்றியும் அழைத்து வந்ததால் ஆதிவாஹிகர்களும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். மருத்துவக்குழு டீம் தந்வந்த்ரி தலைமையில் விரைவான நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அர்சிராதி மார்க்கத்தை மூடுவதா? இது ஸாத்யமா? இதென்ன விசித்ரமான சுற்றரிக்கை” என்று தான் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர்.

அதே சமயம் ஆதிசேஷனும், வைநதேயனும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் அங்குவந்தனர். ஒரு நித்யசூரி அவர்களை அணுகி,  “அரவரசனும், பறவையரசனும் ஏனிப்படி வருத்தத்துடன் உள்ளீர்கள்? என்றார்.

ஆதிசேஷன் –  “ஐயா! பாம்புகளால் தான் இந்நோய் பரவியதாம்.  அதனால் உடனடியாக வைகுண்டத்தை விட்டு நான் வெளியேற வேண்டுமாம். இல்லையெனில் முகக்கவசம் அணிய வேண்டுமாம் ஆயிரம் முகக்கவசம் எப்படி அணிவது? ஒன்றும் புரியவில்லை.

வைநதேயன்– பறவை காய்ச்சல் பீதியும் அதிகமாகிக் கொண்டிருக்கிறதாம். அதனால் நானும் வெளியேற வேண்டுமென விஷ்வக்ஸேநர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ன செய்வது?

[ஒரு கனத்த மௌனம் நிலவியது. சேனைத்தலைவரான விஷ்வக்ஸேநரிடம்  எடுத்துச் சொல்ல எவருக்கும் துணிவில்லை என்ன செய்வது என யோசித்தவர்கள் எம்பெருமானையே சரணடைவது என தீர்மானித்தனர்.]

[அனைவரும் வந்த காரணத்தை அறிந்த பெருமாள் விஷ்வக்ஸேநரை அழைத்தார் ]

பெருமாள்–  சேனை முதலியாரரே! எதற்கிந்த அவசரச்சட்டம்?

விஷ்வக்ஸேநர் – அடியேன்! பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொண்டு இவ்வறிவிப்பை வெளியிட்டேன்.

பெருமாள் –  வைகுண்டத்திற்கு எந்த ஆபத்தும் வராது ஓய்! சரி, சரி நாங்கள் சொன்னால் நீர் ஏற்கமாட்டீர்! ஓய் வேங்கடநாதா! [என தேசிகனை அழைத்து கண்ணாலேயே விஷ்வக்ஸேநருக்கு  விளக்கும்படி சொல்கிறார்.]

தேசிகன் – ஸ்வாமி, தங்களுக்கு எம்பெருமான்பால் உள்ள பரிவு புலனாகிறது. நித்ய, முக்தர்களிடம் தங்களுக்குள்ள கௌரவமும் தெரியும் இரு..ந்…..தாலும் [என இழுக்கிறார்]

விஷ்வக்ஸேநர் – தேசிகரே! தங்களின் கருத்து என்ன? தயங்காமல் கூறும்.

தேசிகன் – எதனால் இந்த தடை?

விஷ்வக்ஸேநர் – அனைத்துலகங்களும் அபாயமான வைரஸால் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் தான்.

தேசிகன் – ஸ்வாமி பாரதத்திலிருந்து அமெரிக்கா! இத்தாலி சென்று வருவது போன்று பத்த ஜீவர்கள் சுவர்கம், நரகம், ப்ரம்மலோகம் போய்வருகின்றனர். உண்மைதானே!

விஷ்வக்ஸேநர்  : ஆம்

தேசிகன் :  அதே போன்று இங்கு அர்சிராதி மார்க்கத்தால்  வைகுந்தம்  வருபவர்க்கு புநராவத்தி ( அதாவது மீண்டும் பிறப்பிற்கு திரும்புதல் ) உண்டா!

விஷ்வக்ஸேநர்  : அதில்லை. ஆனால் தேகத்தின் வழியாகத்தானே கொரோனோ பரவுகிறது.  ப்ரபன்னன் அர்சிராதி மார்கத்தில் பயணிப்பது சூட்சம  தேகத்துடன் தானே! அப்படியாகில் அதற்கு நோய் தொற்று உண்டல்லவா! (இங்குள்ள சாஸ்த்ரார்த்தத்தை பெரியோர்களிடம் கேட்டுத் தெளிக.)

தேசிகன் :  (சிரித்து) அடியேன் கர்மாவினால் உண்டான தேகம் வேறு. அர்சிராதி  வழியில் உபசாரங்களைப் பெறுகைக்கு ப்ரபத்தி மகிமையால் பெறும் சூட்சம தேகம் வேறு. அது அர்சிராதி  அனுபவத்திற்காக மட்டுமே. வேறு ப்ராரப்தம் (பலனளிக்கும் கர்மா ) ஏதுமில்லை.

விஷ்வக்ஸேநர்  : அது வ…ந்…து …

தேசிகன் :  அடியேன் சுவாமி. மற்றோன்றும் கூறுகிறேன். ஸகல கர்ம ( கிருமி) நாசினியான விரஜையில் ஸ்நாநம் செய்து ஜீவன் பரமபதம் வருகிறான் அன்றோ!  இங்கு அவனின் தர்மபூதஜ்ஞானம்  Pandemic (எங்கும் பரவுகிறது). ஆனால் சுத்த ஸத்வமான (ரஜஸ், தமஸ் இல்லாததான) பரமபதத்தில் கர்மாவே இல்லாத போது கொரோனா எப்படி வரும்? ( நித்ய, முக்தர்கள் தேசிகனின் வாதம் கேட்டு கை தட்டி மகிழ்கின்றனர்)

(விஷ்வக்ஸேநர்  தேசிகனை கட்டித் தழுவி)

வேங்கடநாதனே அழகிய உமது வாதத்திறமைகளையும், ஸித்தாந்த தெளிவுகளையும் உலகறியச் செய்ய பெருமாளின் ஸங்கல்பமிது. அனந்தனும், கருடனும் உற்சாகமாகப் பங்கு கொண்டனர். கர்மபூமியான பாரதத்தில், கர்மாக்கள் அழிந்திட ஆசார்ய சம்பந்தம் எனும் கவசம் பூண்டவனுக்கு கர்மாவினாலும் பயமில்லை, க்ருமிகளாலும் பயமில்லை. ஆனால் ஸ்வர்க நரகம் செல்பவனுக்கு கர்ம வினைபயமுண்டு.

(எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம்)

– ஸ்ரீஏபிஎன் சுவாமி

17/03/2020

Pandemic in Paramapadham

Paramapadham was in chaos. Nithyatmas and Muktatmas were congregating in groups and were talking to each other everywhere with a serious look on their faces. In the midst of all these, one could see Gajananan. In fact, it seemed as if he had just conveyed an important piece of information as everyone were standing around him.

Slowly, everyone began to understand the reason for this commotion. Vishwaksenar had sent an important piece of information and Gajanan was explaining it to everyone. It was about a virus that had become a pandemic on earth and Vishwaksenar had sent an order that nithyatmas should not incarnate on earth for the next 15 days to prevent its spread to Paramapadham and should not take on new body forms for kainkaryam (Service to the Divine Couple). The order further stated that Archiradi Margam (the path through which Jeevans travel to attain moksham) will also be closed for 15 days and those who had traveled through it should be kept on the other side of the Viraja river as a quarantine measure. They could enter paramapadham only after they are carefully watched for symptoms for 15 days.

Further, Aadhivahika Kanangal (Travel assistance/guide for a Jeevan during Archiradhi Margam) should not touch the Jeevans who have come through Archiradi Margam and should put no sandalwood or garlands on them. Anyone who fails to follow these instructions will also be quarantined, the order said. Already, a medical team under the leadership of Dhanvantari have started taking actions to mitigate this pandemic, warned the note. 

The Jeevatmas living there were asking each other, “What? How can one close the Archiradi Margam? Is it even possible?” This was the crux of the many discussions that were happening at paramapadham.

At that time, Adiseshan and Vynatheyan came there with a crestfallen face. One Nithyasuri came and asked them, “Why are both of you so worried?”

Adiseshan – “Looks like this pandemic broke out from a snake and I have to leave SriVaikuntam because of it! The other option is that I should wear a mask. Where can I find a 1000 masks? I don’t know what to do!”

Vynatheyan – “Looks like the bird flu is also spreading rapidly. That’s why Vishwaksenar has ordered me also to leave. Don’t know what to do!”

[There was silence everywhere. Nobody had the guts to talk to Vishwaksenar, so they decided to surrender directly to Perumal].

When everyone went to Perumal, He called for Vishwaksenar as He understood the reason for their worry.

Perumal – “O commander in chief! Why this emergency order?”

Vishwaksenar– “Adiyen! These instructions were sent for the safety of everyone here. “

Perumal – “No harm will befall SriVaikuntam! Still, you’re not going to listen to us. O Venkatanatha! “

Perumal signalled with his eyes to Swami Desikan and asked him to explain it to Vishwaksenar.

Swami Desikan – “Swami, this clearly shows the love and concern you have towards Perumal. We also know the dignity you have with nithyatmas and muktatmas, still…….”

Vishwaksenar– “O Desika! Give your opinion without any hesitation.”

Swami Desikan – “Why these restrictions?”

Vishwaksenar-  – “These restrictions are to counter the effect of a dangerous virus that is spreading really fast everywhere.”

Swami Desikan -“That’s true. It is necessary given that Baddhatmas travel to hell, heaven and Brahmaloka just like how earthlings travel from India to America and Italy!

Vishwaksenar – “Yes!”

Swami Desikan – “Do atmas that come through Archiradi Margam have to go back to earth? That is, do they have to take a rebirth on earth again?”

Vishwaksenar – “No, they don’t have to go back. Still, coronavirus spread rapidly through the body, right?And Prapannans (Those who are waiting for moksham) travel through Archiradi Margam through their sukshmaroopam, right? So, there is a possibility for this body to get infected too. (Learn the inner meanings through sastrams from elders in the proper manner).

Swami Desikan (smiling) – “Adiyen! The body that is created as a result of karmas is different from the sukshma body that is created due to the power of prapatti as the latter is for accepting all the courtesies that are given during the travel via Archiradi Margam. “

Vishwaksenar– “Yes, but….”

Swami Desikan – “Adiyen swami. Adding to it, When a person takes a dip in Viraja river, he loses all his germs (karmas). When Mukthan enters SriVaikuntam, his Dharma bhuta jnanam (attributive consciousness) spreads everywhere like a pandemic. But, SriVaikuntam is a Sudhasatvam (devoid of rajas and tamas), so karmas have no place here. In that case, how can corona spread here?|”

(Hearing Swami Desikan’s arguments, Nithyatmas and Muktatmas clapped in glee and Vishwaksenar hugged him with happiness.)

Venkatanatha! Perumal wished to showcase your knowledge of Sastras and clarity of thoughts to the world. Ananthan and Garudan also participated in this drama enthusiastically. 

Those who have association with an Acharya as their protection, don’t have to worry about any karmas or germs in India. This fear is only for those who travel to heaven or hell!

(Everyone was happy again). 

– English translation by Sri APN Swami Sishyas

 

Sri APNSwami’s Shishya Writes | ஸ்ரீவைகுண்டத்தில் கண்டாவதாரம் – வைகுண்டவாசிகளின் விமர்சனம்

ஸ்ரீ:

ஸ்ரீவைகுண்டத்தில் கண்டாவதாரம் – வைகுண்டவாசிகளின் விமர்சனம்  –Special Review by நித்ய முக்தர்கள்

இக்கட்டுரையின் முதற்பகுதி – https://apnswami.wordpress.com/2020/02/11/ghantavatharam-screening-at-srivaikuntam/

மஹாவிஷ்ணுவின் விருப்பத்தின்படி, ஸ்ரீவைகுண்டத்தில்,  திருமாமணிமண்டபத்தில்,  மதி நிறைந்த நன்னாளில், விண்ணகரம் முழுக்க தேசிய கீதத்துடனும், தேசிக கீதமான கண்டாநாதம் முழங்க, கண்டாவதாரம்  திரையீடு SARAN சேவகர்களினால் இனிதே நடந்தது.

கௌஷீதிகி உபநிஷத், ஆழ்வார் ஆசார்யர்  ஸ்ரீஸூக்திகளிலும், கத்யத்ரயத்திலும்,  சுவாமி தேசிகனின் ஸ்ரீஸூக்திகளிலும் வர்ணிக்கப்பட்டபடி வைகுண்டத்தின் பெருமையைக் கண்ட SARAN சேவகர்கள் ஆச்சர்யப்பட்டார்கள், ஆனந்தத்தப்பட்டார்கள்.  APN சுவாமி காலக்ஷேபத்தில் சாதித்ததை அவ்வப்போது நினைவு கொண்டும், அங்கே அவர் மூலமாகவும் விளக்கம் பெற்றும், ஸ்ரீ புரிசை சுவாமி உட்பட வைகுண்டத்திலிருந்த அனைத்து ஆசார்யர்களை ஸேவித்தும், பாக்கியமடைந்தனர்.

திருமாமணி மண்டபத்திலிருந்த நித்ய முக்தர்களை  SARAN சேவகர்கள்  பேட்டி எடுத்தனர்.

முதலில் பேச ஆரம்பித்த அனந்தன், “திரைக்கதையைச்  சொல்வதா?  சதீஷின்  இன்னிசையில் லயித்தத்தை விவரிப்பதா? சுதர்சனின் Cinematographyயைச்  சொல்வதா? ஜித்துவின் Editing நுணுக்கங்களைப்  பற்றி விவரிப்பதா?   அழகாக பாடியவர்களை புகழ்வதா?  திருமால் கவிச்செல்வர் ரகுவீரபட்டாசார்யரும் APNனும் இயற்றிய அழகிய தமிழ் பாடல்களைப் பாராட்டுவதா? Art Directionனை  வர்ணிப்பதா? திரையில் நடித்துள்ளவர்களைப் பற்றி பாராட்டுவதா? இல்லை திரைக்குப் பின்னால் பங்காற்றியவர்களைப் பற்றிப்  புகழ்வதா? வியாபார நோக்கமற்ற இலவச திரையீட்டைப் பாராட்டுவதா? எங்கு ஆரம்பிப்பது என்றே தெரியவில்லையே!” என்று திண்டாடியவர்….

“எனக்கு ஆயிரம் நாக்குகள் இருந்து என்ன ப்ரயோஜனம்? நம் திருமணியின் ஒரு நாக்கு அனைத்து லோகத்திலும் கண்டாநாதமாக ஒலிக்கிறதைக் கண்டு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது…”  என்று திருமணி ஆழ்வாரின் தோளில் கை போட்டுக்கொண்டே அழகாக அனந்தன் பேட்டிக் கொடுத்தார்.

அவருடைய அந்த கருத்தை ஏற்பது போல் திருமணி ஆழ்வானும்  மெலிதாக “டிங்..” என்று  நாதம் செய்தார்.

“இப்படி ஒரு எண்ணம் APNனுக்கு எப்படி வந்தது? இது மிகவும் போற்றத்தக்கதே!” என்று ஆரம்பித்த பெரிய திருவடியாம் கருடன்  தொடர்ந்து,  “நான் பெருமாளுடன் பல அவதாரங்கள் எடுத்துள்ளேன்.  எப்பொழுதும் அவசரம், ஆர்ப்பாட்டம் தான்.  நான் அவரை சுமக்கிறேனா? இல்லை அவர் என்னை சுமக்கிறாரா? என்று  புரிவதற்குள் அந்த அவதாரமே முடிந்துவிடும்.  ஆனால் கண்டாவதாரத்தில்  மூன்று முறை வெவ்வேறு ரூபத்தில் அவதாரம்.  நிஜ ரூபத்துடன் வேங்கடநாதனுக்கு அருள் புரிய  திருவயிந்தையிலும்,  , பறவையாக தேசிகனைக்  காப்பாற்றியதும், பகவானை சுமந்து பழகியவனை அற்புதமாக எழுத்தாணி சுமந்து நிஜமாகிய நிழலாக ஒரு ஜாமத்தில் கவிஸிம்ஹம் பாடிய பாதுகா ஸஹஸ்ரத்தை  பட்டோலைப்படுத்தவும் ……..  Wow… அங்கு தான் Director APN நிற்கிறான். “  என்று கூறிய படியே அடுத்த வேலைக்குப் பறந்து விட்டார்.

அவரைத் தொடர்ந்து,  “நித்ய மண்டலத்தில் உள்ளோமா? இல்லை பூலோகத்தில், கலியுகத்தில்  திராவிட தேசத்தில் அவதரித்துள்ளோமா?” என்ற ஐயத்துடன்  பேச ஆரம்பித்தார் நித்ய சூரிகளின் தலைவன் சேனைமுதலியார்.

“அற்புதம்! அற்புதம்!  எனக்கு, அந்த காலத்து உத்சவ காலங்களில்,  வீதி சோதனைக்குச் செல்லும் ஞாபகம்தான்  வந்தது.  கிராமங்களே காணாமல் போன நிலையில்,  750 வருடத்திற்கு முன்னர் இருந்த கிராமங்களில் வாழ்ந்தது போல்,  தத்ரூபமாகப் படமெடுத்துள்ளீர்களே!  Mobile Phone Tower, Wires, குழாய்கள், Electric light கம்பம்,posters என இக்காலத்து பொருட்கள் எதுவும் தென்படவில்லையே!  ராஜபாட்டை(highway) போன்ற சுத்தமான  பெரிய வீதிகள், அன்றிருந்தது போல் இருந்ததைக்  கண்ட என் ஆனந்தத்திற்கு அளவே இல்லை!  Great Choice of Locations…  கிராமங்கள்தோறும் கண்டாவதாரம் முழங்க வாழ்த்துக்கள்…….”   என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்தபடி ஆசி வழங்கினார்.

அனந்த, கருட,விஷ்வக்சேனர்களைத் தொடர்ந்து,  “தூப்புல் வந்துதித்த புனிதன் அவன் …” என்று அம்ருதவர்ஷிணி  ராகத்தில் பாடிய படி வந்தனர் சுதர்சன பாஞ்சஜன்யர்கள்.   “உடல், திருச்சின்னம் மட்டுமே வாத்யங்களாக  கொண்ட ‘அத்திகிரி அருளாளப் பெருமாள் …’ பாடலைக் கேட்க, அத்திவரதன் மீண்டும் வந்தாலும் ஆச்சர்யமில்லை! உள்ளத்தை உருக்கும் வாத்தியமன்றோ!“ என்றனர்.

அப்பொழுது “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெத்திலை எல்லாம் கண்ணன்” என்றிருந்த நம்மாழ்வார்,  அந்த மாயக் கண்ணனையும் மறந்து, கண்டாவதாரத்தினால்  மூர்ச்சை அடைந்திருந்தார்.  எப்பொழுதும் போல், மதுரகவியாழ்வார்  அவரை தெளிய வைத்தபின், கண்களில் நீர் பெருக பேட்டி கொடுத்தார் நம்மாழ்வார் – “எதை சொல்வது, எதை விடுவது?  இருப்பினும்…. ஜடாயுவிற்கு ராமன் மோக்ஷம் அளித்தது போல்,  தேசிகன் அரங்கனுக்காக கட தீபம் ஏந்தி நர்த்தகிக்கு சரணாகதி செய்து வைத்து மோக்ஷம் அளித்தானே!  அதுவன்றோ நம் ஸ்ரீஸம்ப்ரதாயம்! இந்த சரணாகதி தத்துவத்தை கற்றுக் கொடுக்கவே கலியுகத்தில் நாம் நாதனுக்குக் காட்சியளித்தோம்.   என் உள்ளத்திலிருந்த அவா நிறைவேறும் என்பதில் ஐய்யமில்லை.  சரணாகதியின் பெருமையினால் “வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!”  என்பது உறுதி.”  என்று சந்தோஷமடைந்தார்.

அங்கிருந்த கடைக்குட்டி திருமங்கையாழ்வார் “’ஆடல் மா’ என்னும்  என் குதிரை மீதேறி நான் திவ்யதேச யாத்திரை செய்ததுண்டு.  இன்று கண்டாவதாரத்தினால் பல திவ்யதேசங்சங்களின் அர்ச்சா எம்பெருமான்களைக்  காணும் பாக்கியம் பெற்றேன். ” என்று கூறியவுடன்,

“கலியனே! தேவரீர்  பூவுலகத்திலிருந்து விடைபெற்ற போது திவ்ய தேச எம்பெருமான்களைப்  பற்றிப் பாடியது போன்றே, கலியன் உரை குடி கொண்ட கருத்துடையோனான தேசிகன் வைகுந்தம் செல்வதும் மிகவும் ரசிக்கத் தக்கதாக இருந்தது.” என்று நாதமுனிகள் கூற, அங்கிருந்த ஆழ்வார்களும்  ஆசார்யர்களும் “ஆம்.” என்று கொண்டாடினார்கள்.

“அது மட்டுமல்ல, கலியன் ஆரம்பித்த  அத்யயன உத்சவம், வெகு சிறப்பாக நடக்கத் தொடங்கியதைக்  கண்டு மிகவும் ஆனந்தமடைந்தேன்.  ஹும்! திருவரங்கத்தில்   அத்யயன உத்சவம்  இன்றும் நடக்கிறதே! …………………….” (ஏதோ மனக்குறையை நாதமுனிகள் கொண்டுள்ளார் போல் தோன்றுகிறது!)  

அப்பொழுது, அங்கு எம்பெருமானின் ஐந்து தேவிகளும் வந்து, பேட்டியில் கலந்துகொண்டனர்..

பாதுகா தேவி: “தயா தேவியே! உலகோர் நம் இருவரையும் இன்று வரை நினைத்துக் கொண்டுள்ளனர் என்றால் அதற்கு ஒரே காரணம், நம்மை பற்றிப் பாடிய நம் தூப்புல் வேங்கடநாதன் தான்.  கண்டாவதாரத்தில் நம் இருவரையும் கதாபாத்திரமாக பார்க்கும் போது, மக்கள் நெகிழ்ந்து தான் போகிறார்கள்!”

தயா தேவி: “பாதுகா ஸஹஸ்ர உத்ஸவத்தின்  மூலமாக பாரெங்கும் பாதுகா ஸஹஸ்ரத்தை பரவச் செய்த APN, தற்பொழுது கண்டாவதாரத்தில் பாதுகா தேவியின் படைப்பைப்  பாரெங்கும் பரவச்செய்தது மிகவும் பாராட்டுக்குரியது.”

நீளா தேவி:  “பூமி தேவியே! தாங்கள் தான் பொறுமையின் ஒரே இருப்பிடம் என்று நினைத்தேன். ஆனால் தேசிகனின் தேவிகளைக் கண்டவுடன் பொறுமையின் மற்றொரு வடிவையும் அறிந்தேன்.”

பூமி தேவி:   “ஆம் நீளை. நீ சொல்வது சரி தான்.  நானும் கோதா தேவியான உன்னுடைய ஸர்வ மங்களத் தன்மையும் திருமங்கையிடம்  கண்டேனே! ஆன்மீகத்துடன் கூடிய ஆரோக்யமான வாழ்வுக்கு, இம்மாதரசியின் வாழ்க்கையே எடுத்துக்காட்டு. ”

ஸ்ரீதேவியும்  அவர்களுடன் சேர்ந்து,  ” ஆம்! இந்த வருடம் வைகுண்டத்தில் நடக்கும் மகளிர் தின விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராகத்  திருமங்கா தேவியை அழைத்து, கௌரவிப்பதாகத் தீர்மானித்துள்ளோம்.” என்று ஒரே குரலில் ஐவரும் கூறினார்கள்.

ஐந்து தேவிகளின் தீர்மானத்தைக் கேட்ட ஸ்ரீநிவாசன்  “நான் தான் திருவேங்கடமுடையானாக அவதரித்தேன். அதை மறந்து விட்டுப் பேசாதீர்கள்!” என்று கூறினார்.

அப்பொழுது அங்கிருந்த ஒரு முக்தர், “லட்சியம்னா இது தாண்டா லட்சியம் …….”  என்று  கண்டாவதார Punch Practice செய்து காண்பித்தார்.  கார்ய வைகுண்டமே சிரிப்பில் ஆழ்ந்தது.

அதனை ரசித்த பெருமாளும் பிராட்டியும் பேட்டியைத் தொடர்ந்தனர்.

பெருமாள்:  கஞ்சத் திருமங்கையே! Ladies First  என்றார்.

பிராட்டி : “பிரபோ!  கடினமான வேலை என்றால் என்னை முதலில் அனுப்புவது உங்கள் வழக்கமாகிவிட்டது .  தேசிகனைப்  புகழ்வதே  கடினம்.   தேசிகனின் கண்டாவதாரத்தைப் புகழ்வது  எளிதல்லவே!”

பெருமாள் : ஆம் தேவி…. நீ சொல்வது சரி தான்.  நீ அளித்த பொற்காசுகளைப் புழுவாகத் தள்ளியதை என்னவென்று புகழ்வது?  நடிகர்கள் கண்களிலேயே வைராக்கியத்தைக் காட்டினர்.  நடித்தார்களா? வாழ்ந்தார்களா? வியக்க வைக்கும் காட்சி அது!!.

பிராட்டி :  ஆம் பிரபோ! பூலோகத்தில் இந்தக் காட்சியைக் கண்ட பல இளம் சிறுவர்களும், சிறுமியர்களும், தாங்கள் வைராக்யத்துடன் Materialistic life இல்லாமல் வாழ வேண்டும் என்று resolution எடுத்துள்ளனராம்.

பெருமாள் : கலியுகத்தில் இப்படி ஒரு நல்ல செய்தியா?

பிராட்டி: “ஹயக்ரீவன், ந்ருஸிம்ஹன், வேங்கடவன், தேவநாதன், வரதன், செல்லப்பிள்ளை, அரங்கன் என தங்களின் பல அவதாரங்ளை, தாங்கள் ரசித்ததை அடியாளும் ரசித்தேன் சுவாமி”

பெருமாள் :  ( சிரித்தபடி)  ஓ! கவனித்து விட்டாயா?

பிராட்டி:  “அன்று ராமாவதாரத்தில் ராமனாக, சூர்ய குலத்தின் மூர்த்தியான ரங்கநாதனை,  நீங்கள் ரசித்துத் திருவாராதனம் செய்ததை அடியாள் சீதையாக ரசித்தேன்.  கண்டாவதாரத்தில் இவ்வளவு அர்ச்சாவதார எம்பெருமான்கள் தோன்றும் போது ரசித்துப் பார்த்தீர்கள். நான் அதை கண்டு ரசிக்காமல் இருப்பேனா?.”

பெருமாள் : “ஆம் தேவி.  இருந்தாலும், எங்கே இந்த அர்ச்சாவதாரப் பெருமான்கள், தேசிகனை பூலோகத்திலேயே தங்க வைத்துவிடுவார்களோ! என்ற அச்சம் கூட இருந்தது. “

பிராட்டி : “போதும் போதும்……இது நித்யவிபூதி வந்தடைந்த தேசிகனின் சரிதம் என்று மறந்தீர்களா?  Cricket highlights பார்ப்பது போன்று நீங்களும்…………….. ”

பெருமாள்: “ஆமாம்! மறந்தே போனேன்!”  என்று அசட்டுத் தனமாக ஸர்வஞன் சிரித்தான்.

திவ்ய தம்பதிகள் ரசித்ததை ரசித்த, நாதமுனிகள், ஆளவந்தார், ஸ்ரீபாஷ்யகாரர் மற்றும் அனைத்து ஆசார்யர்களும் “தேசிகனை வளர்த்ததனால் பயன் பெற்றோம்” என்று ஆனந்தம் அடைந்தனர்.

சுவாமி ராமானுஜர் தேசிகனுக்கு நான் வாழ்ந்த காலத்தில் வாழவில்லை என்ற குறை இருந்தது.  அதை அனைத்தையும் இந்த கண்டாவதாரம் தீர்த்தது. “

ஆளவந்தார்: “இளையாழ்வாராக, என் மூன்று ஆசையை நிறைவேற்றிய, உன் ஆசையும் கண்டாவதாரம் மூலம் நீங்கியது என்று சொல். ”

ராமானுஜர்: “ஆம் சுவாமி!”  என்று அவரை அடிபணிய,

ஆளவந்தார்: ” ஸ்ரீபாஷ்யக்காரரே! உமக்குப் பிறகு நம் சம்பிரதாயத்திற்கு ஆணிவேராக இருந்து, அரங்கனுக்குக் கல் திரை எழுப்பி,  நீ எழுதிய ஸ்ரீபாஷ்யத்தின் விளக்கமான  ச்ருதப்ரகாசிகாவை, பிணக் குவியல்களுக்கு நடுவில் சிரமம்பட்டு காப்பாற்றி, ஸத்யாகாலத்தில் தவம் புரிந்த, நம் கவி தார்க்கிக சிங்கமான தேசிகனின் அந்த செயல்களைக் கண்டு மெய் சிலிர்த்து விட்டது. அரங்கத்திற்கு அன்று ஸ்ரீரங்கஸ்ரீயை தேசிகன் மூலம் பெற்றுக்கொடுத்த ஸர்வேச்வரன், இன்று அரங்கம்  மீண்டும் பொலிவு பெற விரைவில் ஸங்கல்பிக்க வேண்டும் என்பதே இப்பொழுது அடியேனுக்கு இருக்கும் ஒரே விண்ணப்பம்!” என்று நா தழுதழுக்க உரைத்தார்.

அப்பொழுது SARAN சேவகர்கள், ஆசார்யர்களை அனுகிரஹபாஷணத்திற்காகப் ப்ரார்த்தித்தனர். அனைத்து ஆசார்யர்களும் ஒரே குரலில்  “எங்கள் அனைவரின் அனுகிரஹமும் வடிவெடுத்து வந்த வேங்கடநாதனே உங்களுக்கு அருளாசி வழங்குவார்.” என்று கூறினர்.

திவ்யதேசங்கள் அனைத்திலும் தனித்தனியாக தேசிகனின்  அர்ச்சாவதாரத்தை ரசித்து ஸேவித்துள்ள APN சுவாமியும், SARAN சேவகர்களும், தேசிகனின்  அனைத்து அர்ச்சா மூர்த்திகளின் அழகு ஒன்று திரண்டு இருந்தது போல் விளங்கிய தேசிகனின் திவ்ய தேஜஸில் தங்களையே மறந்தனர்.  அதுவரை கண்டாநாதம் ஒலித்த அந்த திருமாமணிமண்டபத்தில் ஒரே அமைதி.

சுவாமி தேசிகன் ஆசார்யர்களின் நியமனத்தை ஏற்று, அவர்களைப்  பார்த்து கை குவித்துப்  பேசத் தொடங்கினார்.

தேசிகன்:  “ஸம்ப்ரதாய, அனுஷ்டாந,  ரக்ஷண, அபிமானம் உடைய சரன் ( SARAN – Sampradaya Anushtana Rakshana AbhimaN ) சேவகர்களே!  உங்களின் இந்தத் தன்னலமற்றத்  தொண்டைக் கண்டு அடியேனுக்கு மிகவும் மகிழ்ச்சி.  ஆனால், ‘இது வெறும் ஆரம்பமே!’ என்று நீங்கள் புரிந்து செயல்பட வேண்டும்.  நம்முடைய சரணாகதி சாஸ்திரம் மக்களிடையே இன்னும் பிரபலமாகவில்லை. ப்ரபத்தியைக்  கண்டு பயப்படுபவர்களே அதிகமாக உள்ளனர். அவர்களைத்  தெளிவு படுத்தவும்,  சாஸ்திரத்தின் பெருமையை பிரச்சாரம் செய்யவும், சாஸ்திரத்தின் வழியில் Digital Media போன்ற நவீன யுக்திகள் துணை கொண்டு நீங்கள் முயற்சிக்க வேண்டும்.  பெருமாளிடம் சரணாகதி செய்யும் அனைவருக்கும் மோக்ஷம் என்னும் உயர்ந்த கொள்கையை, உலகோரிடம்  எடுத்துச் செல்வதே உங்களின் தலையாய பணியாகும்.  ஆசார்யர்னிடம்  ஸம்பிரதாய நுணுக்கங்களை அறிந்து, அதை பாமரனும் அறியும் வண்ணம் கிராமங்கள் தோறும், பாரெங்கும் பல மொழிகளில்  எடுத்துச் செல்ல வேண்டும். மதம் மாற்றும் கும்பலான  கொடிய அரக்கர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் தண்டகாரண்ய மஹரிஷிகளைப் போன்ற சாதுக்களான மக்களை ரக்ஷிக்க, ராம பாணமாக SARAN சேவகர்கள்  நீங்கள் செயல்பட வேண்டும். மேன்மேலும் வளர்க உங்கள் தன்னலமற்ற கைங்கர்யம்.”  என்று  அனுகிரஹித்தார்.

அப்பொழுது, ஏனைய ஆசார்யர்களும் “ஆமாம்.” என்று ஆமோதித்தனர்.

தேசிகனின் நியமனத்தை ஏற்ற  APN சுவாமியும், SARAN சேவகர்களும், தொண்டர் உகக்கும் …..” என்று தமிழில் பல்லாண்டு பாடி அனைத்து ஆசார்யர்களிடமும் விடைபெற்றனர்.

அங்கிருந்த நித்ய முக்தர்கள் மீண்டும் கண்டாவதாரம் பார்க்கும் ஆவலைத் தெரிவிக்க, அதற்கு சுதர்சன பாஞ்சஜன்யர்கள் “கவலையே வேண்டாம்…  பூலோகம் போல் இங்கும் Repeat audience அதிகம் இருப்பதினாலேயே நமக்கு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த திரைப்படத்தைக்  கண்டு களிக்கலாம். என்ன சரி தானே!” என்று கூற, SARAN சேவகர்கள் பவ்யமாக தலையசைத்தார்கள்.

அதன் பின் நித்ய முக்தர்கள் அனைவரும் SARAN சேவகர்களுக்குப்  பிரியா விடையளித்தார்கள்.  நாரதரும் ஸ்ரீநாரஸிம்ஹா, ஸ்ரீநாரஸிம்ஹா……”  என்று கண்டாவதார styleலில் நாமஸங்கீர்த்தனத்தைத் தொடர்ந்தார்………பூலோகம் வந்த APN சுவாமியும், SARAN சேவகர்களும்  தேசிகனின் நியமனப்படி, அடுத்த Sampradaya Project வேலைகளில் busyயானார்கள்.

பிழைகள் இருப்பின் க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

இப்படிக்கு,
அடியேன்
ஸ்ரீரஞ்ஜனி  ஜகந்நாதன்
SARAN Sevak & Sri APN Swami’s Kalakshepa Shishyai
21-பிப்ரவரி-2020 BSD ( Bhuloka Standard Date)

Sri APNSwami’s Shishya Writes | ஸ்ரீவைகுண்டத்தில் கண்டாவதாரம்

ஸ்ரீ:

ஸ்ரீவைகுண்டத்தில் கண்டாவதாரம்

நாரதர் பாடிக்கொண்டே வேதம் என்னும் கூட்டில் வாழும் வைநதேவனே!……..” என்றவர் பெருமாளைக்  கண்டதும் நிறுத்துகிறார்.

பெருமாள்:  என்ன நாரதா? ஸ்ரீவைகுண்டலோகம் பக்கம் உன்னைக் கண்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது ? எங்கு சென்றாய்? அதென்ன புதியதான ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறாய் ?

நாரதர்:  அது வ…ந்…து… அ…து… வ…ந்து…. (என தயங்குகிறார்.)

பெருமாள்:  என்ன தயக்கம்? ஏன் இந்த தடுமாற்றம்? தயங்காமல் சொல்.

நாரதர்:  பூலோகத்திற்கு கண்டாவதாரம் காணச் சென்றிருந்தேன்.  ஆஹா ! ஆஹா! அற்புதம்! மஹா  அற்புதம்! அதிலிருந்து ஒரு பாடலைத்தான் பாடினேன்.

பெருமாள்: ( திகைப்புடன்) தசாவதாரம், அம்சாவதாரம், ஆசார்யாவதாரம் என இதெல்லாம் தெரியும்.  அதென்ன கண்டாவதாரம் ?

நாரதர்:  ஸர்வஜ்ஞனே! இது தெரியாதா உனக்கு. பூலோகம் ஒரே அல்லோலப்பட்டுக்  கொண்டிருக்கிறது.

(அதற்குள் ஸ்ரீதேவி உள் நுழைந்து,  அலுப்புடன்)

நானும் ஒரு வாரமாக இவரிடம் (பெருமாளைக் காண்பித்து) இது குறித்து பேச வேண்டும் என்று இருந்தேன்.  என்ன செய்வது? எப்போது பார்த்தாலும் லோக அலுவல்கள்.  அதாவது பதினான்கு லோகங்களின்  பரிபாலனமே,  சரியாக உள்ளதால்,  மாய்ந்து, மாய்ந்து அனைவரிடமும் பேசும்  உங்கள் சுவாமிக்கு என்னிடம் மனம் விட்டுப் பேச நேரம் தான் ஏது?  ஏதாவது கேட்டால் சிரித்துக் கொண்டே சென்று விடுகிறார். ( அலுத்துக் கொள்கிறார்).

பெருமாள்: (பதறிக்கொண்டே…) நாரதா! இவள் வேறு அலுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டாள். நீயும் சேர்ந்து கொண்டால்……….. ஐயோ! என் நிலைமை மோசமாகிவிடும்.  முதலில் அதென்ன கண்டாவதாரம்.  அதைச்  சொல்.

பிராட்டி:  நம் தூப்புல்  குலமணியின் அவதாரமே “வேதாந்த தேசிகனின்  கண்டாவதாரம்” என நகைக்கிறாள்.

பெருமாள்: (ரோஷத்துடன் ) என்ன விளையாட்டு  இது? தேசிகன் தான் கண்டாவதாரம் என்பது எனக்குத் தெரியாதா? திருவேங்கடமுடையானாகிய எனக்கே லட்டா!

நாரதர்:  சாந்தம், சாந்தம் வாசுதேவா! இதோ விண்ணப்பிக்கிறேன்.  தேசிகனின் திவ்ய சரித்திரம் தற்பொழுது தமிழில் முழுநீளத்  திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, உலகமெங்கும் வெற்றி நடைபோடுகிறது. அந்த திரைப்படத்தின் பெயர் தான் “வேதாந்த தேசிகன் கண்டாவதாரம்.

கருத்மானும், ஆதிசேஷனும் வந்துகொண்டே ……

என்ன மாதிரியான காட்சி அமைப்புகள், என்ன மாதிரியான இசை அமைப்பு, ஒளிப்பதிவு, பாடல்கள், ஒப்பனை, ஆஹா!  ஆஹா!  இதெல்லாம் Super Super என புகழ்கின்றனர்.

ஆதிசேஷன்:  வைநதேயா!  நீ கூறுவது முற்றிலும் உண்மை.  எனது ஆயிரம் தலைகளையும் படமெடுத்து, விரித்து ஆஹா! ஆஹா! என்று எத்தனை முறை ஆட்டினாலும் எனக்கு ஆனந்தம் தீரவில்லை.

பிராட்டி: (சிரித்துக்கொண்டே)  அனந்தன் எடுத்த படத்திற்காக, அனந்தன் நீ ஆயிரம் படம் எடுக்கிறாய்.   (அனைவரும் சிரிக்கின்றனர்.)

பெருமாள்:  (பொறுமையிழந்து) ஸர்வஜ்ஞநான   என்னைத்  தவிர்த்து எல்லோரும், எல்லாவற்றையும் அறிந்து வைத்துள்ளீர்கள்.  அது என்ன தான் படம்? விளக்குங்களேன்.

(என அழுத்திச் சொல்கிறார்)

(நாரதர் படத்தின் அனைத்து செய்திகளையும் விரிவாக கூற கூற பெருமாளின் திருக்கண்கள் மேலும் வளர்ந்து, விரிந்து ,அகன்று, ஆனந்தம் அடைகின்றன.)

பெருமாள்: ஆஹா! ஆஹா!  இஃதன்றோ ஸம்ப்ரதாய கைங்கர்யம்.  திரைப்படம் படைத்தவனுக்குப் பாராட்டுக்கள்.

வைநதேயன்:  இது தனி ஒருவனின் தவம் அல்ல.  தன்னலமற்றத் தொண்டு புரியும் சரன்(SARAN) சேவகர்களின் தன்னிகரற்ற கைங்கர்யம்.

பெருமாள்: அது என்ன சரன் சேவகர்கள்?

நாரதர்ஸம்ப்ரதாய, அனுஷ்டாந,  ரக்ஷண, அபிமானம் உடையவர்கள் சரன்(SARAN – Sampradaya Anushtana Rakshana AbhimaN) சேவகர்கள்.

பெருமாள்: பலே! இப்படியும் ஒரு சபை சத்தமில்லாமல் இயங்குகிறதா?

ஆதிசேஷன்:  அதை வழி நடத்துபவன் அனந்தன் – அனந்தபத்மநாபன்.

வைநதேயன்: ஏ.பி.என் என்று கூறும்.

பெருமாள்: அதென்ன ஏ.பி.என்?

பிராட்டி:  வேறென்ன அனந்தபத்மநாபனது பெயரைச்  சுருக்கி மக்கள் அன்போடு அழைப்பது தான் ஏ.பி .என்.

 (பெருமாள் ஒரு முறை உச்சரித்து பார்க்கிறார். ஏ. பி .என் என்று.)

 பெருமாள்: நன்றாகத் தான் இருக்கிறது. (ரசிக்கிறார்…….)

நாரதர்:  பாஞ்சஜன்யம் ட்ரஸ்ட் இதனை ஒரு வியாபார நோக்கமற்ற திரைப்படமாக தயாரித்துள்ளது. இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில், நூற்றுக்கணக்கான திரையீடுகள் நடைபெற்றுள்ளன.  எல்லா இடங்களிலும் Blockbuster தான் இப்படம்.  நான் இதுவரை ஐந்து  முறை பார்த்தேன். பார்த்தேன் என்பதைவிட மூழ்கித்  திளைத்தேன்.

பெருமாள்:  என்ன! எல்லா நகரங்களிலும்,  Non-Commercial  சினிமாவா!

பிராட்டி :  ஆம் ப்ரபோ! தேசிக பக்தியே  சிறந்த செல்வம் என உணர்ந்த SARAN சேவகர்கள்,  APNனின் செயல் திட்டத்திற்கு வடிவம் கொடுக்கின்றனர்.  அவர்களின் தன்னலமற்ற மனோநிலையைப் புரிந்துகொள்ள ஹ்ருஷீகேசனான உன்னாலும் தான் முடியாது! (என நகைக்கிறாள்)

வைநதேயன்: நானும், ஆதிசேஷனும், சுதர்சன, பாஞ்சஜன்யர்கள்  கூட இதுவரை பலமுறை அத்திரைப்படம் பார்த்தோம்.  அலுப்பு தட்டவே இல்லை.  அடடா! அடடா! என்ன ஒரு Super படம்.

பெருமாள்:  ஒரு சாமானிய உபன்யாசகன்  படம் எடுப்பதா ? அதுவும் non-commercial.  சரி,  இது குறித்து எந்த செய்தியும் NEWSல் வரவில்லையே!

நாரதர்:  அது எப்படி வரும்? அவர்கள் தான் பெரிய நடிகர்களின் ரெய்டிலும், தோல்வி அடைந்த படத்தின் விமர்சனத்திலேயே  காலம் கழிக்கின்றனரே!   ஸம்ப்ரதாய படத்தை குறித்து விமர்சித்து பாராட்ட அவர்களுக்கு ஏது நேரம்?

ஆதிசேஷன்:  சீனிவாசன், கருடன், ஹயக்ரீவன், ந்ருஸிம்ஹன் ப்ரத்யக்ஷம் முதலான Scenes…. Super Scenes. அதிலும் சதீஷின் Music,  நம்ப சரன் சேவகர்கள் நடிப்பு ப்ரமாதம்.  பழமையான காலத்திற்கேற்ப ஒலிப்பதிவு Super o Super.

நாரதர்: “ஸ்ரீரங்கநாதா…. சரணம்… சரணம்….” எனப் பாடுகிறார். (அனைவரும் மெய்மறந்து ரசிக்கின்றனர்.)

பெருமாள்:  எல்லாரும் பார்த்தாகிவிட்டது. நான் மட்டும் தான் இன்னும் பார்க்கலை. (சோகமாக)

பிராட்டி:  ஏன் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் தான் என்னை எங்குமே அழைத்துச் செல்வது இல்லையே.  (அலுப்புடன்)

பெருமாள்: சரி. சரி. நம் தேசிகனின் பெருமைகளைக்  காண எனக்கு மட்டும் ஆசை இல்லையா? என்ன நாம் மறுபடியும் பூலோகம் செல்லலாமா?

வைநதேயன்:   ப்ரபோ! அதற்கு பதில் இங்கே வைகுண்டத்தில் அப்படத்தை திரையிட்டால், நித்ய சூரி,  முக்தர் ஆழ்வார், ஆசார்யர் என அனைவரும் சேர்ந்து கலகலவென்று பார்க்கலாமா?

பிராட்டி:  Very Good Idea. கடல் கடந்து பயணிக்கும் கண்டாவதாரம்  விரஜை கடந்து வரட்டுமே ! 

பெருமாள்:  நாரதா! அதற்குரிய Screening Process தான்  என்ன ?

நாரதர்:  பெருமாளே! SARAN சேவகர்களைத்  தொடர்பு கொண்டால் அவர்களே வைகுந்தம் வந்து Screening போடுவார்கள்.  வைநதேயனே  Projector , ஆதிசேஷனே Wide Screen (அகன்ற திரை).  இனி என்ன கவலை!

பெருமாள்:  SARAN சேவகர்கள் வைகுந்தம் வருவதா! இவ்வுலகம் அதை ஏற்குமா?  அச்சோன்யமாகப்  பார்ப்பரே!

ஆதிசேஷன்: ( சிரித்துக் கொண்டே)  நாராயணா! ஏன் இந்தக் கவலை? விரோசனன் வைகுந்தம் வந்து போகவில்லையா?  இதோ நான் வரவில்லையா?  கிருஷ்ணாவதாரத்தில் வைதிகன் பிள்ளைகளை மீட்க நீ அர்ஜுனனை அழைத்து வந்து மறுபடியும் பூலோகம் செல்லவில்லையா? அர்ச்சிராதி மார்க்கத்தில் வந்தால்தானே மீண்டும் பூலோகம் செல்ல முடியாது! SARAN சேவகர்களை நாம் வேறு வழியாக அழைத்து வரலாமே!

பெருமாள்: அற்புதமான யோசனை. விரைந்து செயல்படுங்கள். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் Inform செய்யுங்கள். விண்ணகரம் முழுக்க கண்டாநாதம் முழங்க வேண்டும். இந்த Special Showவிற்கு ஏ.பி.என் and SARAN சேவகர்கள்  அனைவரையும் அழைத்து வந்து கௌரவியுங்கள்.

பிராட்டி: பிரபோ! இன்னும் ஒரு உயர்ந்த காரியத்தையும் அவர்கள் செய்ய முனைந்துள்ளனர். கிராமங்கள்தோறும் கண்டாவதாரம்” என ஆயிரம் கிராமங்களுக்குப்  பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

பெருமாள்: “சபாஷ் SARAN சேவகர்கள் சாமான்யமானவர்கள்  அல்ல.  அவர்களின் பெருமைக்குத் தக்கதொரு பெருவிழாவினை இவ்வைகுண்டம் நடத்தட்டும்.  எதற்கெடுத்தாலும் வியாபாரம் செய்யும் இவ்வுலகில்,  விளம்பரமற்றவர்களை நாம் பூரணமாக அனுக்கிரஹம் செய்யலாம்.  ஸநாதன தர்ம ப்ரசாரத்தில் இவர்கள் இளைய தலைமுறையின் Role Modelகள்.  லக்ஷ்மி!  நீ ஏற்பாடுகளை கவனி.

நாரதர்:  நான் சென்று Poster, Banner ready செய்கிறேன். (என்று கூறிய படி SARAN சேவகர்களை தொடர்பு கொள்கிறார்.) 

SARAN Sevak ராஜாராம் சுவாமி  உடனடியாக ரெடியாக உள்ள template கொண்டு Invitation ரெடி செய்து, “கண்டாவதார கைங்கர்யம்” WhatsAPP Groupபில்  சுவாமி மற்றும் SARAN சேவகர்கள் review செய்ய அனுப்ப….

Slide4

இதுவன்றோ நாடு புகழும் பரிசென்று,

Invitationனை   review செய்த படி கண்விழிக்கும் ………………..

அடியேன்

சுபத்ரா  ராகவன்

SARAN Sevak & Sri APN Swami’s Kalakshepa Shishyai

(10-பிப்ரவரி-2020)

கண்டாவதாரம் குறித்த “வைகுண்டவாசிகளின் விமர்சனம்

விரைவில்……………..

 

அதன் தொடர்ச்சியாக “ஸ்ரீவைகுண்டத்தில் கண்டாவதாரம் – வைகுண்டவாசிகளின் விமர்சனம் – Special Review by நித்ய முக்தர்கள்” 

https://apnswami.wordpress.com/2020/02/21/ghantavatharam-screening-at-srivaikuntam-review-by-vaikuntavaasigal/