ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி ஸமேத வைகுண்டநாதனுக்கு நித்ய கைங்கர்யம் செய்யும் நம் வடுவூர் சுவாமி கருத்து – APN சுவாமி, வடிவம் – Artist Keshav
அஹோபிலமடத்து ஆராதகராக இருந்த ஸம்ப்ரதாய பிதாமஹர், ஞான அனுஷ்டான சீலர், வடுவூர் ஸ்ரீ உ.வே.நரசிம்மாசார்யார் ஸ்வாமி சார்வரி ஆனி 6 / 20-ஜூன்-2020 ஆசார்யன் திருவடிகளை அடைந்தார்.
42ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் வடுவூர் ஸ்வாமிக்கு ஸமாச்ரேயணம் செய்து வைத்த ஆசார்யன் ஆவார். 42 ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் தொடங்கி 46ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் வரை கைங்கர்யம் செய்த மஹான் வடுவூர் ஸ்வாமி. இப்படி அழகிய சிங்கர்களின் பரிபூரண க்ருபையை பெற்ற மஹான் வடுவூர் ஸ்வாமி.
நம் APN சுவாமியின் காலக்ஷேபத்தில் வடுவூர் சுவாமியின் வைபவத்தை பல முறை அனுபவிப்பது அடியோங்கள் பாக்கியம். நம் ப்ராசார்யன் புரிசை சுவாமியின் வைபவத்தை, நம் APN சுவாமி சாதிக்கும்போதெல்லாம் அவரை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அடியேனுக்கு வருவதுண்டு. வடுவூர் சுவாமியை ஸேவித்ததை நினைக்கும் போது, அடியேனுக்கு சிறுது ஆறுதலாக இருக்கும்.
பூலோகத்தில் அபராஜிதா என்னும் அயோத்தில் ஓடும் சரயு நதி, பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் காவேரி, நைமிசாரண்யத்தில் கோமதி, புனிதமான கங்கை, காவேரி என அனைத்து புண்ணிய நதிகளிலும் நம் அழகிய சிங்கர்களாம் ஆசார்யர்களுடன் அனுஷ்டானங்களை செய்த வடுவூர் ஸ்வாமி, இப்பொழுது விரஜை கடந்து, ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி ஸமேத பரவாசுதேவனுக்கு நித்ய கைங்கர்யம் செய்கிறார். ஆம் வைகுண்டம் வாழ்ந்து விட்டது !
தன்னை அனுபவித்து, ரசித்து ஆராதனம் செய்த வடுவூர் ஸ்வாமியை பிரிந்து இன்று மாலோலனும் தவிக்கிறான். அவனை தேற்ற முடியாமல் மஹாலக்ஷ்மியும் தவிக்கிறாள். மாலோலனுக்கே இந்த நிலை என்றால் பாகவதர்களின் நிலையை என்ன என்று கூறுவது !
அந்த நிலையின் வெளிப்பாட்டை இந்த அற்புத சித்திரமாக நம் கண் முன் இன்று விருந்தாக அளித்திருக்கின்றனர் நம் APN சுவாமியும், Artist ஸ்ரீ Keshav அவர்களும்.
என் சொல்வது? அற்புதம் ! அற்புதம் ! அற்புதம் !
நிழலானது நிஜம்,
ஆனால் இன்று நம் கண் முன் …
நிஜம் நிழலாக !!
கண்டோம் கண்டோம் வைகுண்டம் கண்டோம் !!
அடியோங்கள் பாக்கியம்.
அடியேன்
ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்
SARAN Sevak
7-July-2020