Sri #APNSwami #Writes #Trending |#COVID-19|சமய #Sanjivi

Please note that this article is available in both Tamil (written by Sri APN Swami) and English (translation by his sishyas).

     சமய சஞ்ஜீவி!

 

சில விஷயங்களுக்கு ஒப்புமை சொல்ல இயலாது.  உதாரணமாக ஆகாயத்திற்கு எதை ஒப்புமையாக்குவது. அதே போன்று சமுத்ரத்திற்கு வேறெதெயும் ஈடாகக் கூறமுடியாது.  ராமனுக்கும், ராவணனுக்கும் நடைபெற்ற யுத்தம் எவ்வாறு இருந்தது எனில் “ராம, ராவண யுத்தம் போன்று இருந்தது” என்பர் பெரியோர்.  அதே போன்று தான் தற்போது, நம்முடைய வாழ்க்கைப் போராட்டமும் இதுவரை அனுபவித்திராததாகவும் , வேறெதையும் ஒப்புமையிட்டுச் சொல்ல முடியாததாகவும் பயங்கரமாகவுள்ளது. உலகில் ஒலிக்கும் ஒட்டு மொத்த செய்தித் தொகுப்பில் ஒன்று கூட நல்ல செய்தி இல்லை என்னலாம்.  இன்னமும் எத்தனை நாட்கள் நீடிக்குமோ? எனும் அச்சம் அகலவில்லை.  ஒவ்வொரு வினாடியும் பிரார்த்தனை செய்வதும், எளியோர்க்கு நம்மாலியன்ற உதவிகளைச் செய்வதுமே; தற்போதுள்ள நிலையில் இயலும்.

இதன் நடுவே, சில மருந்துகள் ஓரளவு குணமடைய வழிவகுக்கின்றன எனும் ஆறுதலான செய்தியும் காதில் விழுகிறது.  “அமெரிக்காவைப்பார், ஜப்பானைப்பார் , சீனாவைப்பார், சிங்கப்பூரைப்பார்” என்று பிறந்த நாட்டின் (பாரதத்தின்) பெருமை உணராமல் பேசியவர்கள் கூட வாயடைத்துப் போகும்படியான பல முன்னேற்றங்களை நம் தாய்நாடு கண்டுவருகிறது. இக்கட்டான இந்த சூழலில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுவது நம்பிக்கையளிக்கிறது.

குறிப்பாக, “சில நாடுகளுக்கு நம் நாட்டிலிருந்து அவசரகால மருந்துகள் ஏற்றுமதியாகியுள்ளன” என்பதே தற்போதைய Talk of the earth. அதிலும் ப்ரேசில் அதிபரின் வேண்டுகோள் வித்யாசமானது.

ராமாயணம், பாரதம் போன்று தலை சிறந்த இதிகாசங்களையும் அதன் பாத்திரங்களையும் கேலி செய்து, கற்பனை பொய்கள் என்று கொந்தளித்தவர்கள் கூட “தங்கள் காதுகளை நம்ப முடியாமல் நடப்பது நனவா கனவா” என வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.

“அனுமன் சஞ்சீவி மருந்தைக் கொண்டு வந்து தந்தது போன்று, இந்தியாவிலிருந்து மருந்துகளை அனுப்புங்கள்” என்ற ப்ரேசில் அதிபரின் கருத்தே தற்போது உலக அளவில் Trending.

மருந்துகளை அனுப்புவது பெரிய விஷயமில்லை.  “சமய சஞ்ஜீவியாக” என்றதே ஆச்சரியம்.  நேற்று (08/04/2020) அனுமத் ஜயந்தியாக வட தேசத்தில் கொண்டாடப்படும் நாளில், அனுமானின் சாகசத்தை நினைவுறுத்தி, ராமாயணத்தை மேற்கோள் காட்டி, ப்ரேசில் அதிபர் பேசியது தான் ஆச்சர்யத்தின் உச்சக்கட்டம்.

இனி ராமாயணத்தில் அதன் மகத்துவத்தைக் காணலாம். ராம லக்ஷ்மணர்கள் ப்ரம்மாஸ்திரத்தினால் அடியுண்டு வீழ்கின்றனர். ராவணன் , ராம, லக்ஷ்மணர் இறந்ததாக எண்ணி வெற்றி கொண்டாட்டத்தைத் தொடங்கினார். அப்போது ஜாம்பவான் ஆஞ்சநேயனை அழைத்து சஞ்ஜீவி மூலிகைகளைக் கொண்டுவரச் சொல்கிறார்.

அந்த மூலிகையின் பெருமை என்ன? என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்.  1. ம்ருத சஞ்ஜீவினீ – இறந்தவர்களையும் பிழைக்கவைக்கும் மூலிகை.  2. விசல்யகரணீ –  உயிர் வந்த பின்பு உலாவத் தேவையான சக்தி தரும்.  3. ஸந்தான கரணி –  இவ்விதம் வலிகளை நீக்கியும், உடைந்த அவயவங்களை ஒட்டிக் கொள்ளச் செய்தும், புண்களில் தோல் மூடச் செய்வதும்.  4. ஸாவர்ண்ய கரணீ – ஆறின புண்களின் மேல் வடு(தழும்பு)க்கள் மாறி, பழைய நிறத்தைப் பெற வைப்பது தற்போதுள்ள plastic surgery முறை இது தான்.

இத்தகைய அபூர்வ மூலிகை மலையை அனுமன் இருமுறை சுமந்து வருகிறான். யுத்த காண்டத்தில் இதன் விவரணம். இந்த அரிய மூலிகை வகைகளைத் தெரிந்த ஜாம்பவான் போன்ற மருத்துவர்கள் இப்போது யார் உள்ளாரோ தெரியவில்லை. ஆனால் உயிர்காத்திட தக்க சமயத்தில் இவைகள் அனுமனால் கொண்டு வரப்பட்டன என்பது பேருண்மை.

உயர்ந்த இதிகாசத்தின் உண்மைப்பெருமையை இன்று உலகம் உற்றுப்பார்த்து ஆனந்தமடைகிறது. “சரியான சமயத்தில் கிடைக்கும் இந்திய மருந்தால் தங்களின் மக்கள் உயிர் பிழைப்பர்” எனும் காரணத்தால் “சமய சஞ்ஜீவி” என்றார் ப்ரேசில் அதிபர்.

இதிகாச புராணங்களைப் பழித்து ஓயாமல் ஊளையிடுபவர்கள் நடுவே, உலக அரங்கில் உன்னதமாகத் திகழும் நம் தேசத்தின் ஆன்மீக பொக்கிஷங்கள் என்றுமே நமக்கு சமய சஞ்ஜீவி தான்.
ஜய் ஸ்ரீராம்.

-ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

10/04/2020.

English

Timely Medicine

It is hard to find comparisons for some things like the sky and the ocean. Similarly, the war between Rama and Ravana has no comparison and elders often use the phrase “like the Rama-Ravana war.” Our life is like that today. The miseries and suffering that we’re undergoing today have no equal and it is truly unprecedented. And we don’t even know how long this will continue! The only things we can do today are to pray every minute and to help others as much as we can. 

Amid this calamity, a silver lining is a piece of news that some medicines have the potency to cure this disease. Our country is making rapid strides in this war against the disease and has even stumped those who’ve always fancied countries like America, Japan, China, and Singapore, over their motherland. For the common man, the joint efforts by the state and central governments are truly consoling and give hope.

In particular, the Talk of the Earth is that many advanced countries are exporting some important medicines from India as an emergency measure. Even those who ridiculed our Ramayana and Mahabharata epics as fictitious folklore are astounded by these developments. 

The trending news is the request by the Brazilian President who requests India to send emergency medicines just like how Hanuman brought the Sanjeevi mountain as a cure

Sending medicines is not the big deal here, but the use of the word “Samaya Sanjivi” is significant. We celebrated Hanuman Jayanthi on the 8th of April this year in North India and on this day, the Brazilian President’s expression of Hanuman’s greatness by invoking Ramayana is truly the icing on the cake.

Now, let’s look at the greatness of Ramanyana. Rama and Lakshmana fell unconscious when Brahmastram hit them and Ravana began to celebrate thinking that Rama and Lakshmana were dead. At that time, Jambavan called Hanuman and asked to bring the Sanjivi herb. 

So, what’s so special about this herb?

  1. Mrutha sanjivini – It can bring the dead back to life.
  2. Visalyakarani – Gives energy to the body that has just been brought back to life.
  3. Santana Karani – Removes pain, heals the broken parts, and covers the wounds with new skin.
  4. Saavaranya Karani – Removes the wound marks and replaces it with skin. This is similar to the plastic surgery we have today.

Hanuman carried this mountain with such potent herbs twice. Yuddha kandam explains this in detail. Is there anyone today like Jambavan who understands the potency of our ancient herbs? That we don’t know but the fact remains that Hanuman brought this to save lives.

Today, the world understands the real meaning of our itihasas which are nothing but a depiction of the true incidents that happened many centuries ago. The Brazil President rightly calls this gesture “Samaya Sanjivi” because he believes that the timely medicines sent by India would help to save his people. 

The religious texts of our land that continue to guide us and showcase our true wealth to the world, despite the many criticisms heaped on it, are always the “Samaya Sanjivi” for us.

Jai Shriram.

-Translation by Sri APN Swami Sishyas

 

Sri #APNSwami #Writes #Trending | வாயுநந்தனுக்கு தசரதநந்தன் கூறிய அபிநந்தன் | India’s first Surgical Strike

India first surgical Strike.jpeg🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒
ஸ்ரீ:
“வாயுகுமாரன் பெற்ற வாழ்த்து”
(Based on Sri APN Swami – Upanyasam)

தொகுத்தவர்:- ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்

ஸ்ரீமத்ராமாயணத்தில் ராமன், சீதை மற்றும் லக்ஷ்மணர்கள் சித்திரகூடத்தில் இருந்த போது பரதன் மற்றும் நாட்டில் வசிப்போர் அடிக்கடி வந்திட நேரும் என்று அஞ்சினர். அதனால், அவர்கள் மஹரிஷிகளுடன் காட்டில் வாழ முடிவெடுத்து , அடர்ந்த காட்டுப்பகுதியான “தண்டகாரண்யத்திற்கு” சென்றனர். அங்கிருந்த மஹரிஷிகளின் நிலையை பார்த்த ராமன், மிகுந்த வருத்தம் அடைந்தான். “தீவிரவாதத்தை மேற்கொண்ட அரக்கர்களின்” துன்புறுத்தலால் மஹரிஷிகள் துன்ப நிலையில் இருந்தனர். அனைத்து மஹரிஷிகளும் ஒன்று திரண்டு வந்து ராமனிடத்தில் சரணாகதி செய்தனர். அப்பொழுது ராமபிரான் அவர்களை தான் காப்பதாக அபயப் பிரதானம் செய்கிறார். ராக்ஷஸர்களை வதம் செய்து, மஹரிஷிகளை ரக்ஷிப்பதாக ராமன் ப்ரதிஞை செய்தான்.
அரண்யத்தில் ராவணனின் ஆணையின் படி, “வேத பண்டிதர்கள்(Pandits) வாழ்ந்த இடத்தை தீய ராக்ஷஸர்கள் ஆக்ரமித்திருந்தனர்”. அவர்களை வதம் செய்ய தக்க தருணத்தை நோக்கி, அதன் அருகில் “பர்ணசாலை (camp)” அமைத்து ராமன், சீதை, லக்ஷ்மணர்கள் தங்கினர். அப்பொழுது கர தூஷணர்கள் சண்டையிட வந்தார்கள். ஜனஸ்தானத்தில் ரிஷிகள் இடத்தை ஆக்ரமித்த பதினான்காயிர ராக்ஷஸர்களை ராமபிரான் தான் ஒருவனாக வதம் செய்தான். ராமபிரான் “பண்டிதர்கள் வாழ்ந்த இடத்தை காப்பாற்றி”, தீவிரவாத சக்திகளை தன்னந்தனியாக Mass Encounter செய்து ரிஷிகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றினார்.

இவ்வண்ணம் மஹரிஷிகளுக்கு தீய செயல்களையே செய்த இராவணன், பெரும் தவறாக சீதையை தூக்கிச் சென்றான். ராமன் சீதையை தேடும் பொருட்டு ஹனுமனை அனுப்பினான். ஹனுமனும் கடலை ராமனின் அனுகிரஹத்தால் கடந்து, சீதை கண்டுபிடித்து, ராமனின் மோதிரத்தை கொடுத்து, சீதையிடமிருந்து சூடாமணியை பெற்றார்.

திரும்ப செல்லும் முன்னர் ராக்ஷஸர்களிடம் ஹனுமான் தானாகவே பிடி பட்டார். பிடி பட்ட போது தன்னிடம் இருந்த “ஆவணங்களை (சீதையின் சூடாமணியை) யாரும் பார்க்கா வண்ணம் மறைத்தார்”. இந்திரஜித் வலிமை வாய்ந்த அஸ்திரமான ப்ரஹ்மாஸ்திரத்தை ப்ரயோகம் செய்த போது, அந்த அஸ்திரம் ஹனுமனை ஒன்றும் செய்யவில்லை. ஆனாலும் ஹனுமன் கட்டுப்பட்டது போல் இருந்தார். மேலும் தான் “ராம தூதன்” என்றும் வேண்டிய தகவலை மட்டுமே அளித்தான்.

ப்ரஹ்மாஸ்திரம் ஹனுமனை ஒன்றும் செய்யவில்லை என்றறிந்த இராவணன் மிகவும் அதிர்ச்சி அடைந்தான். “வலிமை வாய்ந்த ப்ரஹ்மாஸ்திரமே வேலை செய்யாததால் என்ன செய்வது என்று திகைத்தான் இராவணன்”. மேலும், அருமை பெருமை அறியாமல் உயர்ந்த அஸ்திரமான ப்ரஹ்மாஸ்திரத்தை அவசரப்பட்டு உபயோகப்படுத்தியதால் அந்த அஸ்திரத்தை அளித்த ப்ரஹ்மதேவனுக்கு தங்கள் மேல் கோபம் ஏற்படும் என்று அறிந்தான். மறுபடியும் ப்ரஹ்மாஸ்திரம் வேண்டி தவமிருந்தால் கூட ப்ரஹ்மா அளிப்பாரா என்பதும் கேள்விக்குறியானது. இந்த தோல்வியானது, ஏனைய நாட்டு அரசர்களும், தேவர்களும் சுலபமாக ராவணனுக்கு நெருக்கடி அளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

அந்த சமயம் “தன் வீரத்துக்கு இழுக்கும், லங்கைக்கு ஆபத்தும் வந்துவிடக்கூடாது” என்பதே இராவணனின் ஒரே நோக்காக இருந்தது. இதனால் “விபீஷணன் கூறிய அறிவுரையை வேறு வழியின்றி” ஏற்று, ஹனுமனை விடுதலை செய்ய ஆணையிட்டான் இராவணன்.

ஹனுமன் கிளம்பும் பொழுது, அங்கிருந்த நல்லவர்களான(civilians) அப்சரஸ் ஸ்த்ரிகள் மற்றும் அசோக வனத்திற்கும் ஆபத்து நேராவண்ணமும், “தீயவர்களை மட்டும் பாதிக்கும் வண்ணம் இலங்கையை கொளுத்தினான்“.
சீதையை கண்டுபிடித்து, வலிமை வாய்ந்த ப்ரஹ்மாஸ்திரத்தை வென்று, எதிரிகளிடமிருந்து திரும்பி வந்த “வாயுநந்தனை“, மிகவும் சந்தோஷமடைந்த ராமன் “அபிநந்தன்” / “வாழ்த்துக்கள்” என்று இறுக தழுவிக்கொண்டார்.

இதுவே “வாயுநந்தனுக்கு தசரதநந்தன் கூறிய அபிநந்தன் / வாழ்த்துக்கள்.”

#MassEncounter #Surgicalstrike #Civilian #Brahmasthiram #Hanuman #Ravanan #CrossBorderAttack #Terrorist  #Abhinandan
Sri #APNSwami #TheedhilaNallorThiral
🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒

Sri #APNSwami #Writes #Trending | நாமத்தின் மேன்மை விளக்கும் நாமக்கல்

நாமத்தின் மேன்மை விளக்கும் நாமக்கல்

சமீபத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் சன்னிதியில், பூஜையின் போது, ஒரு அர்ச்சகர் உயரத்திலிருந்து தவறி விழுந்து இறந்ததை நாம் அனைவரும் அறிவோம். ஆலயத்தில் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர்களும், உயிரைப் பணயம் வைத்துத்தான் செய்கின்றனர் என்பதை இவ்வுலகம் இனியாவது உணரட்டும். நூற்றியறுபது ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு, வார, மாத விடுமுறைகள் இன்றியும், ஓய்வூதியம், வைப்புநிதி இன்றியும் பணியாற்றும் அர்ச்சகர்களின் நிலையினை இந்த உலகம் பார்க்கட்டும்!!

ஆலய அர்ச்சகர் பணிக்கு ஆசைப்படும் அரசியல்வாதிகள், குறைந்தபட்சம் இந்நிகழ்வுக்கு வருத்தமாவது தெரிவித்தனரா? இதில் அரசியல் ஆதாயத்திற்கான வாய்ப்புகள் எதுவும் அவர்களுக்கு இல்லையன்றோ!!

அதுபோகட்டும்… இனி சொல்லப்போகும் விஷயத்தையாவது கொஞ்சம் உணர்ச்சிபூர்வமாகப் படியுங்கள். ஏனென்றால், உணர்வுகள் மரத்துப்போனவர்களுக்கு உண்மை உறைக்காதுதான்!!!

இந்த அர்ச்சகரின் சிகிச்சைக்காக, சமூக வலைத்தளங்கள் மூலமாக பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. உடனடியாக பல லக்ஷம் ரூபாய்கள் வாங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டன. கருணையுள்ளம் கொண்ட பலர், இந்த கைங்கர்யத்தில் ஈடுபட்டனர். ஆனால் என்னவாயிற்று? அந்த ஆத்மா உடலைவிட்டுப் பிரிவதை எவராலும் தடுக்க முடியவில்லை. இது எம்பெருமானின் சங்கல்பம். ஆஞ்சநேயரின் திருவடிகளில் அவர் சேர்ந்துவிட்டார்.

அர்ச்சகரின் குடும்பத்தினர் ஓர் அறிக்கை விட்டனர்; “சமூக வலைத்தளங்கள் வாயிலாக, நிதியளிக்கும்படி நாங்கள் எவரையும் கேட்கவில்லை. அதனால், பணம் எதுவும் அனுப்ப வேண்டாம். இதெல்லாம் பகவத் சங்கல்பம்” என்று சொன்ன அந்த குடும்பத்தினர், மேலும் ஓர் அதிரடியை மொழிந்தனர். இதுவரை, அவர்கள் அறியாமலும், கேட்காமலும், உதவி செய்தவர்களுக்கு, அந்த வங்கியின் மூலமாகவே அனைத்தையும் திரும்ப அளிப்பதாகவும் கூறியுள்ளனர்!!!!

அன்பர்களே! நாமம் போட்டால் ஏமாற்றுவது என படுகேவலமாக இந்துக்களை இழிவுபடுத்தும் இந்த காலகட்டத்தில், நாமம் போடுவது நேர்மையின் உச்சகட்டம் என்பதை நாமக்கல் சம்பவம் உணர்த்துகிறது. பார்ப்பானைப் பார்த்து பொறாமைபடுபவர்களும், நாமம் போட்டு ஏமாற்றுகிறார் எனப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் இனியாவது உள்ளம் திருந்தட்டும்.

முதலில், நமக்கு நாமமே அடையாளம் என்பதை நாம் உணர வேண்டும். கட்டுப்பாடாக நெற்றிக்கு இட்டுக்கொண்டு செல்வதை, நமது தர்மம் என நிரூபிக்க வேண்டும்.

ஆதிசங்கரர், வேதாந்த தேசிகர் போன்ற மகான்கள், தங்களின் பக்தியின் மேன்மையால், தங்கக் காசு மழை பொழிவித்தனர். அதில் ஒரு சிறு துளி கூட அவர்கள் கைக்கொள்ளவில்லை!! நாமம் போட்ட பார்ப்பான்கள் பிழைக்கத் தெரியாதவர்கள்! பிறரை ஏமாற்றத் தெரியாதவர்கள்! நாமம் போட்ட நாமக்கல் குடும்பம் நம் சமூகத்தின் நெஞ்சுரத்தை பறைசாற்றுகிறது.

“நமக்கு நாமமே அடையாளம்”. 

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி

Sri APN Swami.

 

Sri #APNSwami #Writes #Article | அனுமானுக்கு வடை மாலை / வெற்றிலை மாலை ஏன்?

அனுமானுக்கு வடை மாலை  /  வெற்றிலை மாலை ஏன்?

     இது குறித்து பலரும் என்னிடம் கேள்விகள் கேட்பதுண்டு.   சில சமயம் வேடிக்கையாகவும் வினோதமாகவும் பதில் சொன்னாலும், இது குறித்து முக்யமான தகவலை இங்கு பரிமாறிக் கொள்கிறேன்.   ஸ்ரீமத் வால்மீகி ராமாயண மாகாத்மியம், ஸ்காந்த உப புராணத்தில் சொல்லப்படுகிறது.

    ஒவ்வொரு விதமான பலன்களை விரும்புபவர்க்கு, ராமாயணத்தின் ஒவ்வொருவிதமான பாராயண முறைகள் சொல்லப்படுகின்றன ஜோதிட சாத்திரத்தின்படியும் தசாபுத்திகளுக்கு இந்நூலில் பாராயணமுறை காண்பிக்கப்படுகிறது.   இதற்குரிய அட்டவணையும் தரப்படுகிறது.   ஒரு மாத பாராயணம், இருபத்தியேழு நாட்களில் பாராயணம், ஒரு வாரத்தில் பாராயணம் என பலவிதமான பாராயண முறைகள் இந்நூலில் உள்ளன.

Note : How to do Ramayana Paarayanam refer “Srimadh Ramayana Paarayana Kramam” supplement published in SriNrusimhaPriya by Sri APN Swami. 

    அதுதவிர, ஒவ்வொரு கட்டம் (நிகழ்வு) படிக்கப்படும்போதும், என்னென்ன நிவேதனம் செய்ய வேண்டும் என்பது குறித்துக் குறிப்புகளும் உண்டு. அதில்தான் வடை, வெற்றிலை குறித்து விளக்கங்கள் உள்ளன.

     கிஷ்கிந்தா காண்டத்தில் மூன்றாவது ஸர்கம் பம்பா நதிக்கரையில் அனுமான் ராமபிரானைக் காண்கிறார்.   இதொரு ஆச்சர்யமான ஸர்கம். அனுமன் ராமனைப் போற்றுவதும், ராமன் அனுமனைப் போற்றுவதையும் இங்கு காணலாம். இந்த ஸர்கம் பாராயணம் செய்தால் நெய்யில் பொரித்த அறுபத்திநான்கு வடைகளை நிவேதனம் செய்ய வேண்டுமாம்.

பம்பாதீரே ஹநூமதா ராகவஸ்ய ஸமாகமே |

மாஷா பூபாந் க்ருதே பக்வாந் சது:ஶஷ்டிம் நிவேதயேத் ||

     அதேபோன்று, சுந்தரகாண்டத்தில், அனுமான் சீதையைக் காணும் சமயம் (15ம் ஸர்கம்), புளியோதரையுடன் தாம்பூலத்தை நிவேதனம் செய்து சம்ர்ப்பிக்க வேண்டும்.

ஹநூமஸ்து ஜாநக்யா தர்சநே ஸோபதம்சகம் |

ஆன்னம் அம்ல ரஸோபேதம் தாம்பூலம் ச நிவேதயேத் ||

என்றுள்ளது.  ஸ்ரீராமசந்த்ரமூர்த்திக்கு இவைகளை நிவேதனம் செய்யச் சொன்னாலும், ப்ரதான நாயகனாகிய அனுமானுக்கு ஸமர்ப்பிப்பது வழக்கத்தில் வந்துள்ளதாகத் தெரிகிறது.

      இதுதவிர ப்ரமாணங்களின் அடிப்படையில் வேறு கதைகள் இருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன்.

     “சீதை வெற்றிலைக் கொடியிலிருந்து வெற்றிலை பறித்து அனுமானுக்கு மாலையிட்டாள்” என்பதை சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.  ஏனெனில் வ்யாபாரிகளைத் தவிர மற்றவர்கள் கொடியிலிருந்து நேரடியாக வெற்றிலை பறித்தால் தோஷம் என்பது சாஸ்திரம்.   தனக்கும், அனுமனுக்கும் தோஷம் விளைவிக்கும் இச்செயலை சாஸ்திரமறிந்த சீதை செய்திருக்க முடியாது.

     இதிலும் பெரியோர்கள் இசைந்த ப்ரமாணம் இருப்பின் தெரிவித்திட வேண்டுகிறேன்.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

Sri APN Swami.