Sri #APNSwami #Writes #Tweets | திருப்பாவை துளிகள் |Tweets on Thiruppavai

This is a compilation of all the tweets that were posted on Twitter during the month of Margazhi in Vilambi year ( Dec 2018 – Jan 2019).

16/12/2018
1. ஏரார்ந்த கண்ணி யசோதை…
கண்ணனைப் பெற்று அவனது இளவயது குறும்புகளை ரசிக்க முடியாத தேவகீ ஏமாந்த கண்ணியானாள்.
கண்ணனின் குறும்புகள் கண்டுவியந்த யசோதை ஏரார்ந்த கண்ணியானாள்.

17/12/2018
2. உய்யுமாறு…
இந்த விரதத்தால் நாங்கள் உய்யுமாறும், இந்த வையகம் உய்யுமாறும், எங்களை அடைந்ததால் அக்கண்ணன் உய்யுமாறும் உகந்திடுவோம்.

18/12/2018
3. நீங்காத செல்வம்…
காசு, பணம், வீடு, வாகனம், மனைவி, மக்கள், உற்றார், உறவினர் நீங்கும் செல்வம்
கண்ணன் ஒருவனே எங்களைவிட்டு நீங்காத செல்வம்.

19/12/2018
4. சார்ங்கம் உதைத்த சரமழை……
சத்ருக்கள் உதிர்த்த சரமழை உலகை நாசமாக்கியது.
சார்ங்கம் உதைத்த சரமழை உலகை வாழ்வித்தது.

20/12/18
5. மாயனை….
கறுத்த நிறமுடைய யமுனை கண்ணன் குளித்ததால் தூயபெரு நீர் யமுனையானது.

21/12/18
6. புள்ளும்…
வேதமனைத்திற்கும் வித்தான திருப்பாவையில் துயிலமர்ந்த வித்தினைப் பாடுகிறாள்.

22/12/18
7. கீசு கீசு…
கேசவனைப்பாட தேசமுடையாளை நேசமுடன் அழைக்கிறாள்.

23/12/18
8. கீழ்வானம்…
கண்ணன் பிறந்த ஆயர்பாடி கீழ்வானமாய் வெளுத்தது.
மேல்வானமான பரமபதம் கறுத்தது.

24/12/18
9. கற்று…
க்ருஷ்ணபக்தி தவிர்த்து ஏனைய அவதாரங்களில் பக்தியில்லாத குற்றமற்ற கோவலர்.

24/12/18.
10. நோற்று…
சுவர்கம் புக நோன்பு நோற்றவள் தேற்றமாக வந்து திறக்கிறாள்.

26/12/18
11. கனைத்திளம்…
பால்சோறு உண்பவர் இன்று பால் சேற்றில் நிற்கிறார்.

27/12/18
12. புள்ளின்…
புள்ளின், கிள்ளின், பிள்ளை, வெள்ளி, புள்ளும், குள்ள, பள்ளி, கள்ளம் – இதுவே ஆண்டாள் உள்ளம்.

28/12/18
13. உங்கள்…
வெண்பவல் தவத்தவர் – வன் பற்று அற்றவர்.

29/12/18
14. உங்கள்…
வெண்பல் தவத்தவர் – வன் பற்று அற்றவர்.

30/12/18
15. எல்லே…
இளங்கிளியின் பாடல் இதயத்தை வருடும்.

31/12/18
16. நாயகன்…
அசுரர் உள்புகா வண்ணம் தடுக்கும் நிலைக்கதவு.
பக்தர்களுக்கு பரிவுடன் உள்வாங்கித் திறக்கும் நேசமிக்க கதவு.

01/01/19
17. அம்பரம்…
அம்பரமாகிய எம்பெருமானிடம் நாம் பரத்தை சமர்ப்பித்தால் நீங்காத செல்வம் நிலைத்திடும்.

02/01/19
18. உந்து…
நந்தன் மருமகளே உந்தன் மணாளனை எந்தமக்குத்தந்தருள்.

03/01/19
19. குத்து…
மைத்தடங்கண்ணியின் மைவண்ண நறுங்குஞ்சியில் மனம் மயங்குகிறான் மாதவன்.

04/01/19
20. முப்பத்து…
கலியின் துயர் கெட
கலியே துயிலெழாய் என்கிறாள்.

05/01/19
21. ஏற்ற…
ஆற்றாது வந்து போற்றுகிறோம்
மாற்றாது அருள் புரிவாய்.

06/01/19
22. அங்கண்…
பாபத்தினால் சாபத்தில் இழிந்த நாங்கள் உன் பார்வையினால் அருள் பெற்றோமே.

07/01/19
23. மாரி…
சிங்கத்தின் சீற்றம் சிறுநரிகளின் ஓட்டம். மாறினது மனோபாவம். மரித்தது நம்துக்கம்.

08/01/19
24. அன்று…
அழகுத்தமிழில் அருமையாக அர்ச்சனை செய்கிறாள் ஆண்டாள்;
வேதமனைத்துக்கும் வித்தான திருப்பாவையில் போற்றி, போற்றி என்று.

09/01/12
25. ஒருத்தி மகன்…
ஒருத்திக்குப் பிறந்து, ஒருத்தியிடம் வளர்ந்தவனிடம், வருத்தம் தீர்த்து திருத்தக்க செல்வம் வேண்டுகிறாள்.

10/01/19
26. மாலே…
All in – வையமேழம் உண்டவனே.
இலையாய் – ஒப்பாரும் மிக்காரும் இலையாயவனே! என்கிறாள்.

11/01/19
27. கூடாரை…
கூடாரை வெல்பவன்,
கூடியவர்க்கு தோற்பவன்.

12/01/19
28. கறவைகள்…
ஹரியே யாதவனாய் பிறந்தும்,
நாங்கள் அவனை அறியாதவர்கள் என்கிறாள்.

13/01/19
29. சிற்றம்…
நம்முள் மாற்றங்கள் நிகழ, நம் காமங்களை மாற்ற வேண்டுகிறாள்.

14/01/19
30. வங்கம்…
எங்கும் திருவருள் பெற்று இன்புற செங்கண் திருமுகத்துச் செல்வத்திருமால் அருள் புரிகிறான்.

For more such interesting tweets, follow @apnswamy on Twitter.