Sri APN Swami’s #Shishya Writes #Trending | Kantara, Virat Kohli, Rishi Sunak | Traditional Trending

காந்தாராவும் கண்டாரவமும்

( An extract from an interesting discussion with Sri APN Swami and SARAN Sevak Sri Prasanna on current Trending topics like Kannada Movie Kantara, Virat Kohli, Rishi Sunak from a Traditional Angle)

Traditional Trending என்றாலேயே APN குருஜிதான். நூற்றுக்கணக்கான தலைப்புகளில் அவ்வப்போது உலகியல் நிகழ்வுகளை ஸம்ப்ரதாய விஷயமாகச் சொல்வது அவரின் தனிப் பாணி. ஜிமிக்கி கம்மல், சின்னத்தம்பி கும்கி, பாகுபலி, காஷ்மீர் பைல்ஸ் என trending topics அவரின் Blogகில் (https://apnswami.wordpress.com/blogpages/) மலிந்து கிடக்கின்றன. “இவர் எப்படி எல்லாவற்றையும் ஸம்ப்ரதாயத்துடன் connect செய்கிறார்?” என்று அறிய ஆவல் உண்டானது. ஒருசிலரைப் போன்று இருபத்திநான்கு மணிநேரமும் தோஷத்தையே தேடிப்பிடித்து, அற்ப சந்தோஷம் அடைவது எனது நோக்கமல்ல. ஒரு சாதாரண ரசிகனாக எனது விருப்பத்தை வெளியிட்டேன். அதன் பின்பு எனக்கும், அவருக்கும் நடந்த உரையாடலை என்னால் இயன்ற அளவு பதிவு செய்துள்ளேன். இதில் விடுபட்டவைகள்தான் அதிகம். அவ்வளவு விஷயங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

நான் – குருஜி! இன்றைய trending என்ன தெரியுமா?

குருஜி – விராட் கோலியா, ரிஷி சுனக்கா, காந்தாராவா? எதை ட்ரெண்டிங்-னு சொல்ற?

நான் – (மலைத்து) குருஜி! எனக்குத் தெரிஞ்சதையே நான் நெனச்சேன். ஆனா எல்லாத்தையும் நீங்க கடகடன்னு சொன்னதால் பிரமிச்சிட்டேன். நான் கேக்க வந்தது காந்தாரா பத்தி மட்டும்தான்.

குருஜி – (அவருக்கே உரிய சிரிப்புடன்) ok. no feelings.. உனக்கென்ன தெரியணும்? கேளு..

நான் – உங்களுக்கு சினிமா பாக்கற பழக்கமே இல்லையே? actual-ஆ உங்களுக்கு time-ஏ இல்ல. But எல்லாத்தையும் எப்படி கரெக்ட்டா relate பண்றீங்க? More over, ஒரு படமே direct பண்ணியிருக்கீங்க குருஜி. Simply amazing.

குருஜி – என்னை praise பண்ண வந்தியா இல்ல உன் doubt clarify பண்ண வந்தியா?

நான் – ரெண்டும் தான். சரி காந்தாரா பத்தி ஏதாவது trending சொல்லுங்களேன்.

குருஜி – காந்தாரா பத்தி மட்டும் என்ன? நான் சொன்ன எல்லா topic-ஐயும் relate பண்ணி ஒரு சப்ஜெக்ட் சொல்லவா?

நான் – (அசந்துபோய்) குருஜி is it? நிஜமாவா? முடியுமா?

குருஜி – (சிரிச்சுண்டே) start மீஜிக்! என்றார் (காமெடி sense-ஓட scenes-ஐயும் relate பண்றதுல குருஜிக்கு நிகர் குருஜி தான்)

குருஜி – முதல்ல எனக்கு இத பார்த்தா கைசிக புராண scene தான் மனசுல ஓட்றது. காந்தாரம் என்றால் என்ன? Mysterious forest. அடர்ந்த காடு. இங்க பார் தம்பி, நீ cinema content-அ இங்க fix பண்ணாத. நான் சும்மா just like that அதைப்பத்தி சில விஷயம் சொல்றேன். என்ன ok-வா? இப்ப பாரு. Mysterious forest அப்படின்னா ஸம்ஸார காந்தாரம். ஸம்ஸாரம் எனும் பெரும் காடு. அதுல சுகமாக வாசிக்க என்ன செய்யணும்? ம்ம்ம்?

நான் – (முழிக்கறேன்)

குருஜி – காந்தாரா last song இன்னிக்கு superhit trending தானே?

நான் – yes குருஜி

குருஜி – அதோட meaning என்ன? “வராஹரூபம் தெய்வவரிஷ்டம்”. தெய்வத்தின் தெய்வம். அயர்வறும் அமரர்கள் அதிபதி. ஆயிரமாயிரம் தெய்வங்களுக்கும் அவனே அதிதேவதை. “தம் ஈச்வராணாம் பரமம் மஹேச்வரம்”. சிவஸம்பூதம் – சிவம் என்றால் மங்களம். சிவம், கல்யாணம், மங்களம் என அனைத்தும் மங்களவாசகம். இந்த அவதாரத்தின் மங்களத்தன்மை காண்பிக்கப்படுகிறது. “கோணாரவை: குர்குரை:” என பகவானின் உறுமல் நம்மை காக்கட்டும்” என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

ஸம்ஸார காந்தாரத்தில் நம்மை ரக்ஷிப்பவன் வராகன். வராக சரமச்லோகத்தை நினைத்துப்பார். அந்த கடைசி trending climax-ல் தன மார்மீது கைவைத்து ரக்ஷகத்வத்தை வெளியிடுவதை கவனித்தாயா? “அஹம் ஸ்மராமி மத்பக்தம்” என்னும் உயர் பொருளை உணர்த்துவதாகக் கருது.

(குருஜி சொல்லச்சொல்ல வியந்துபோய் நான் வாய்பிளந்து நின்றேன். ஒரு திரைப்படத்தின் ஒரு காட்சியை மட்டுமே வைத்துக்கொண்டு இவ்வளவு விஷயங்களை ஸம்ப்ரதாயமாகப் பார்க்கமுடியுமா? ப்ரமிப்பின் உச்சத்தில் நான்.)

குருஜி – நீ கேட்டயே-ன்னு சிலது சொன்னேன். இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு காட்சிலேயும் பொருந்த வேண்டும்-ங்கற நிர்பந்தம் இல்லை. மேலும், திரைப்பட விமர்சனம் என்னோட நோக்கமல்ல. Just like that சொன்னேன். That’s all. இதுக்காகவே காத்துண்டு இருந்து time waste பண்ணி பக்கம் பக்கமா சிலபேர் விமர்சனம் பண்ணப்போறா! My intention is not like that (சிரிக்கிறார்)

நான் – குருஜி, super. semma. எனக்குத் தெரியும் நீங்க full movie பாக்கல. அங்கங்க சில reels அப்பறம் சிலபல விமர்சனம். இத வெச்சுண்டே semma-யா point relate பண்றீங்க Ok. இப்ப second trending விராட் கோலியோட. இத எப்படி connect பண்ணுவீங்க?

குருஜி – Simple. Virat அப்படின்னா விராடஸ்வரூபம். விச்வரூபம். Kholi கோலவராகன் என்கிறார் ஆழ்வார். விச்வரூப வராகன் பூமியை (தேசத்தை) காத்தான். அதாவது “காந்தாரம்” – மனைவியை. காந்தா என்றால் மனைவி. மனைவியான பூமியைக் காத்தான் விராட் கோலன்.

அதே பூமியின் (தேசத்தின்) பெருமையைக் காத்தவன் Virat Kholi. விச்வரூபமெடுத்த விராட் கோலி என்று தானே heading.. so இந்த trending ok-வா?

நான் – ஐயோ குருஜி! இது விராட் கோலி சிக்ஸரை விட Super சிக்ஸர். Super. சரி ரிஷி சுனக் எப்படி இங்க?

குருஜி – நா மொதல்லேயே சொன்ன மாதிரி அங்கங்க touch பண்ணனும். சும்மா எல்லாத்தையும் ரொம்ப ஆராய்ச்சி பண்ணக்கூடாது. Trending topic சுனக் தானே? சுனக் என்பது சௌனகரிஷி என்று பொருள்.  விராட் ரூபனான வராகனின் விச்வரூபத்தை சௌனகர் முதலானவர்களுக்குத்தான்  சூத  பௌராணிகர் பாகவதமாக விவரிக்கிறார். So சும்மா இது ரெண்டையும் connect பண்ணா enjoy பண்ணலாம். Just like that ரசிப்பதற்கு மட்டும்.

நான் – ஐயோ! குருஜி.. பின்றீங்களே!

குருஜி – Wait.. இதுல இன்னொரு சுவாரஸ்யம் சொல்லட்டா?

நான் – Wow. Double ok. Please.. சொல்லுங்க குருஜி.

குருஜி – Wait and see

நான்- குருஜி, குருஜி. Please குருஜி. அது என்ன concept!

குருஜி – நான் மொதல்லேயே clearஆக சொல்லிட்டேன்.  Scene by Scene இதோட connection வராது. but overall என்னோட observation வெச்சு ஒரு trending. அவ்வளவு தான்.


நான் – அதான் தெரியுமே. Suspense தாங்கல. Please மொதல்ல secretஅ open பண்ணுங்க.

குருஜி – இந்த கதையோட main concept என்ன? தெய்வத்துக்கிட்ட கொடுக்கிற வாக்குறுதியை மீறினா! அதன் result unexpected ஆ இருக்கும். அதானே!


நான்- Yes, Yes….

குருஜி – “அஹம் ஸ்மராமி …. நயாமி….” (நான் பக்தனை நினைக்கிறேன். உயர்ந்த நிலையை அடைவிக்கிறேன்.)  என வராகப் பெருமாள் வாக்குறுதி தந்தார். நாமும் அநுகூலனாகவே இருக்கிறேன் (அதாவது தெய்வத்திற்கு விருப்பமில்லாத கார்யத்தைச் செய்ய மாட்டேன்) என வாக்குறுதி அளித்து, அதை மறந்து தவறான செயல்களைச் செய்கிறோமே…. (குருஜியின் கண்  கலங்குகிறது..)


நான்:  (மெளனமாக அவரையே பார்க்கிறேன். சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்ட (குருஜி) தேவதேவனான கோலவராகன் mysterious ஸம்ஸாரத்திலிருந்து நம்மை ரக்ஷிக்க காத்திருப்பதை நாம் உணருவதில்லை.

Another important…… அந்த last scene எல்லார் கையும்  ஒன்னா கோக்கிறது, may be பூமிய காப்பாத்த  – that means இன்னிக்கு ஹிரண்யாக்ஷன் மாதிரி various அழிப்பாளர்கள் இருக்கிறதுனால எல்லோரும் ஒன்னா கைகோக்கணும்னு சொல்லறா மாதிரி எனக்கொரு feel.

இப்ப Kholi-ய எடுத்துப்போம். விளையாட்ல ஜயிச்சதும் தேசத்திற்கு அது பெருமையளித்தது. அதாவது கோலியின் கேளி. கேளின்னா விளையாட்டு. So பெருமாள் கோலியாக கோலவராகமாக அவதரித்து கேளியாக – விளையாட்டாக effortless-ஆ பூமியை காப்பாத்தினானே அதே போல. So இது கோலியின் கேளி (சிரிக்கிறார்).

நான் – குருஜி.. chance-சே இல்ல. What a connection. வெட்டித்தனமாக வெறுப்போட விமர்சனம் பண்றவாள விடுங்கோ. We are all enjoying these interesting connections. But குருஜி ஒரு சின்ன வருத்தம்..

குருஜி – என்ன?

நான் – நீங்க எதா இருந்தாலும் ஸ்வாமி தேசிகனை connect பண்ணுவீங்க. நாங்க அத தான் ரொம்ப enjoy பண்ணுவோம். But இதுல just online தான் சொன்னீங்க. Slight disappointment.

குருஜி – ஹா… யார் சொன்னா நான் முடிச்சுட்டேன்னு? இப்போ கேளு ஹைலைட்

நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட,

வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை கடந்தபொன்னே!

கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெஃ காவுதுஅம்பூந்

தேனிளஞ் சோலையப் பாலதுஎப் பாலைக்கும் சேமத்ததே. (திருவிருத்தம் 26)

திருவிருத்தத்தில் ஆழ்வாரின் அனுபவம் இது. இந்தப் பாசுரத்தை ஸ்வாமி தேசிகனின் திருவவதாரத்தை குறிப்பிடுமதாகப் பெரியோர்கள் வ்யாக்யானம் செய்துள்ளனர். பொருள் – எங்கும் பரவியுள்ள கிரணங்களை உடையவன் சூரியன். அவன் தனது பரவிய கிரணங்களால் நானிலத்தையும் வாயில்கொண்டு – உறிஞ்சி, அதைக்கடித்து மென்று சுவைத்து பின்னர் கோதை (சக்கையை) உமிழ்ந்தான். அதுவே பாலை – மருகாந்தாரம் ஆனது.

இங்கு பெண்ணைப் பார்த்து (நாயகி) கூறுகிறபடி இப்பாசுரம். பெண்ணே! இனி நீ வெம்மையான இப்பாலையில் திரிந்து அப்பாலையைக் கடந்த பாலையே!

(பாலா – பெண்; பாலை – பாலைநிலம் – மருகாந்தாரம்) இனி விண்ணவரும் மண்ணில் தோயும்படியான வெஃகா எனும் யதோக்தகாரி எம்பெருமானின் க்ஷேத்ரம் இதோ நெருங்கியுள்ளது. அதனருகில் ஹிமவத்வனம் – அதாவது திருத்தண்கா எனும் குளிர்ந்த சோலையில் விளக்கொளி எம்பெருமான் எனும் நாயகனுடன் நீ இனிதே கூடிக்களிக்கலாம். அங்கு ஒளிவீசும் ஜ்ஞான தீபம் எல்லாருக்கும் – பாலைவனம் உட்பட அனைத்துக்கும் க்ஷேமத்தையளிப்பதாகும்.

இதற்கு ஆச்சர்யமான உள்ளுறைப்பொருள் ஒன்றுண்டு. சொல்கிறேன் கேள். “வேதத்திற்கு விருத்தமாகப் பொருள் கூறுமவர்களின் பாலைவனம் போன்ற விரோதங்களையெல்லாம் கடந்த ஆழ்வீரே! இதோ இப்பாலைக்கும் க்ஷேமமளிக்கும் (எப்பாலர்க்கும் – அந்தணர், அந்தியர் என அனைவருக்கும் க்ஷேமமாகிய மோக்ஷமளிக்கும்) திருத்தண்கா வந்துவிட்டது. இங்கு அவதரிக்கப்போகும் தூப்புல் பிள்ளை இச்சரணாகதி சாஸ்திரத்தை விரிவாக ஜ்ஞானதீபமாக விரித்துரைக்கப் போகிறார்” என்று எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி உரைக்கிறானாம்.

(இதன் ஆழ்பொருள்களை ஆசார்யர்களிடம் அறிந்து ரசித்திடுக) இதனால் ஸ்வாமி தேசிகனின் அவதாரம் காண்பிக்கப்படுகிறது.

நான் – ஸ்வாமி, இப்பாசுரத்தின் பொருள் ஆச்சர்யமாகவுள்ளது. ஆனால், what is the relationship? “காந்தாரம்” என்ற word தவிர்த்து but for that வேற ஒன்னும் இல்லையே. Of course தேசிகன் விஷயமான பாசுரம். அது enjoyable. But link?

குருஜி – இப்ப காந்தாரம் subject என்ன? வராகம் (தெய்வம்) தானே.. இங்க பார். திருவிருத்தம் வராகப்பெருமான் விஷயம். ஸ்வாமி தேசிகன் ரஹஸ்யசிகாமணி, உபகார ஸங்க்ரஹம் இதுலல்லாம் வராகப்பெருமாளின் சரமச்லோக ரஹஸ்ய விவரணத்தையும், திருவிருத்தம் பாசுர வ்யாக்யானமும் பண்ணியிருக்கார். பூமியை வராகம் எடுத்தது போன்று பூமியின்று ச்ருதப்ரகாசிகையை காத்ததாலும், ப்ரபத்தி சாஸ்த்ர விளக்கத்தை பூமிக்கு (பூமில இருக்கற நமக்கு) தெளிவுறச் சொன்னதால் ஸ்வாமி தேசிகன் வராக துல்யர்.

அவரென்ன சொல்றார்; மருகாந்தாரத்திலிருந்து – ஸம்ஸார காந்தாரத்திலிருந்து நமக்கு ப்ரபத்தி சாஸ்திரத்தால க்ஷேமம் (திருத்தண்காவில்) அளிக்கிறாரே!

மருகாந்தாரத்திலிருந்து வெளியேற முக்தி மார்க்கத்துக்கு “கண்டாரவம்” அதாவது மணியோசை தேசிகன் தானே..

இங்க பாருப்பா! இதெல்லாம் ஒரு ரசனை. அனுபவிக்கறது அல்லது இகழறது, அவாவா சௌகர்யம்.

நான் – Fantastic fantastic. காந்தாரமும் கண்டாரவமும். Oh Oh super குருஜி super. Oh.. what a link

குருஜி – முன்னெல்லாம் தெருக்கூத்துகள், நாட்டுப்புறக்கலைகள்னு நிறைய நல்ல விஷயங்கள் பயனுள்ள பொழுதுபோக்கா இருந்தது. அதெல்லாம் cinema மோகத்துல நாம neglect பண்ண ஆரம்பிச்சோம். நல்ல விஷயங்கள் நலிவடைய ஆரம்பிச்சது. அப்பறம் cinema hero மோகத்துல தர்மத்தையும் விட ஆரம்பிச்சோம். தெய்வ பக்திக்கு importance கொடுக்கற கதைகள் commercial failure ஆச்சு. So complete-ஆ ஒரு தலைமுறைக்கு subject கோவிந்தா கோவிந்தா. இனி நம்மூர்ல இந்த subject படம் பண்றதெல்லாம் ரொம்பக் கஷ்டம். But இந்த மாதிரி சமயத்துல தெய்வத்தை main hero-வா காமிச்சு ஒரு film வந்திருக்குன்னா அது really பாராட்டவேண்டியது. At least after effects-ஆ இனிமேலாவது இராமாயண, மஹாபாரத கதைகளை விளக்கற, நமது பண்பாட்டை விளக்கற, கலைகள் arts and science focus ஆகணும்.

இந்த தெய்வ ஸாந்நித்யத்த திருக்குறுங்குடி கைசிக மாஹாத்ம்யத்துல (வராஹ பெருமாள் பூமி தேவிக்கு  ( மனைவி காந்தாரத்திற்கு ) உபதேசித்த நம்பாடுவான் ப்ரஹ்ம ரக்ஷஸ் கதயில பார்க்கலாம்.  ம்ஹும் …. நம்ப ஸம்ப்ரதாயத்தோட  பெரும  நமக்கு என்னிக்கு தெரிஞ்சுறுக்கு.  Atleast கைசிக புராணத்தை வர்ற கைசிக ஏகாதசி அன்னிக்காவது தெரிஞ்சுக்க try பண்ணா சரி.

‘‘तस्य यज्ञवराहस्य विष्णोरमिततेजसः ।

प्रणामं येऽपि कुर्वन्ति तेषामपि नमो नमः’’

‘‘தஸ்ய யஜ்ஞவராஹஸ்ய விஷ்ணோரமிததேஜஸ꞉

ப்ரணாமம் யே(அ)பி குர்வந்தி தேஷாமபி நமோ நம꞉’’

ம்ம்.. சரி சரி.. இது போறும். அப்பறம் பாக்கலாம். Time ஆறது. ஸந்த்யாகாலம்.

பேட்டி With Sri APN Swami by

ப்ரஸன்னா

சரன் சேவக் (SARAN Sevak / Shishya of Sri APN Swami)

26-October-2022

#Kantara #KannadaMovie #RishiSunak #UKPM #ViratKohli

Sri APN Swami’s #Shishya Writes #Trending | ஸ்வதந்திர தின அம்ருதோற்சவம் | Trending Article

Azadi ka Amrit Mahotsav – ஸ்வதந்திர தின அம்ருதோற்சவம் – आजादी का अमृत महोत्सव – 75th Indian Independence Day Special Article –  ஸ்ரீ APN ஸ்வாமியின்  கருட வைபவம்  மற்றும் சுதந்திர தின  உபந்யாசத்தின் படி எழுதியது.

கச்யப ப்ரஜாபதிக்கு கத்ரு, விநதை என்று இரண்டு மனைவியர் இருந்தனர். அதில் கத்ருவுக்கு பாம்புகள் பிள்ளைகளாகப்  பிறந்தனர். விநதைக்கு ஊனமுற்று பிறந்த பிள்ளையான அருணன், பிறந்தவுடனேயே சூரியனுக்கு ஸாரதியாகச் சென்று விட்டான்.

கத்ரு விநதைக்குள்ளே அடிக்கடி சர்ச்சைகள் உண்டாகும். ஒரு சமயம், இந்திரனுடைய குதிரையான உச்சைச் சிரவஸின் நிறம் குறித்து இவர்களுக்குளே விவாதம் மூண்டது.   உச்சைச் சிரவஸ் முழுவதும் வெண்மை என்று விநதை கூறினாள். உச்சைச் சிரவஸ் உடலில் கருமை நிறமும் உள்ளது என்று கத்ரு வாதித்தாள். மறுநாள் குதிரையை முழுவதுமாகப் பார்த்த பின் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர். பந்தயத்தில் தோற்றவர்கள் வென்றவர்களுக்கு ஆயுள் முழுவதும் அடிமையாக இருக்க வேண்டும் என்று பந்தயமும் வைத்துக்கொண்டனர்.

கத்ரு தன் பாம்பு பிள்ளைகளில் ஒருவனான கருத்த கார்கோடகனை அழைத்து, உச்சைச் சிரவஸ் வால் பகுதியில் சுற்றிக்கொள்ளும் படி சொன்னாள்.

மறுநாள் விநதையும் கத்ருவும் தூரத்திலிருந்து பார்த்த போது, குதிரையின் வால் பகுதி கருமை நிறமாக தோற்றமளித்தது. கொடிய குணம் கொண்டவளான கத்ரு, வஞ்சனையினால் வென்றாள்.  ஒப்பந்தப்படி தோற்ற விநதை, கத்ருவிற்கும் அவள் பிள்ளைகளுக்கும் அடிமையானாள்.

காலம் கனிந்தது. விநதைக்குப் பிறந்தவனான வைநதேயன்(கருடன்), தன் தாயை அடிமை தன்மையிலிருந்து மீட்க விரும்பினான். அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற என்ன செய்ய வேண்டும் என்று கத்ருவிடம் கருடன் வினவினான்.

பேராசை கொண்ட கத்ருவும் அவள் பிள்ளைகளான பாம்புகளும் தேவலோகத்து அம்ருதத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் விடுதலை தரலாம் என்றனர்.

தாயின் ஆசி பெற்று, தேவலோகம் சென்ற கருடன் தடைகளைத் தகர்ந்து எரிந்து அம்ருத கலசத்தை தேவர்களிடமிருந்து கை பற்றினான்.

கருடனிடம் தோல்வியுற்ற தேவர்கள், கொடிய பாம்புகள் அம்ருதத்தை உண்டு சாகா வரம் பெற்றதென்றால், மனித குலத்திற்கு ஆபத்து நேரிடும் என்பதை கருடனுக்குப் புரியவைத்தனர். அவர்கள் ஆலோசனை படி  ஒரு நாழிகை மட்டும் அம்ருத கலசத்தை பூலோகத்தில் வைத்துக்கொள்ள கருடன் ஸம்மதித்தான்.

கருடனால் கொண்டுவரப்பட்டு குளத்தின் கரையில் வைக்கைப்பட்ட அம்ருத கலசத்தை கண்டவுடன், பாம்புகள் அக மகிழ்ந்து, குளத்தில் குளித்து விட்டு உண்ண தலைப்பட்டன. ஒப்பந்தப்படி அம்ருத கலசம் கொண்டு வந்ததினால் கருடனும் விநதையும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டனர்.

பாம்புகள் குளித்துவிட்டு வருவதற்குள் ஒரு நாழிகை ஆன காரணத்தால், அம்ருத கலசம் மறைந்து விட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று பாம்புகள் வருத்தம் அடைந்தன.

அம்ருத கலசம் சுத்தமாக வைக்கப்பட்டிருந்த தர்பை புல்லின் மீது அமுதத் துளிகள் சிந்தியிருக்குமோ என்று நினைத்த பாம்புகள்,  அங்கிருந்த தர்பை புல்லை தங்கள் நாவினால் நக்கின. அந்த தர்பை புல் பாம்புகளின் நாக்குகளை இரு பிளவாகியது. இதனால் தான், பாம்புகளுக்கு இரண்டு நாக்குகள் என்று புராணங்கள் கூறுகின்றன. 

ஏமார்ந்து போன ஸர்ப்பங்கள், சீரிய படி சென்றன. மேலே, கருடனின் வைபவம் அத்யாச்சர்யமாக வர்ணிக்கப்படுகிறது.

அன்னையை அடிமைதளத்திலிருந்து கருடன் மீட்ட இந்தக் கதையை “அம்ருதோற்சவம்” என்று ஸ்வாமி தேசிகன்  கருட பஞ்சாசத் என்னும் ஸ்தோத்திர நூலில் கொண்டாடுகிறார்.

இதே போல் நம் பாரதத்தாயை அடிமைத்தனத்திலிருந்து அவளின் தவப்புதல்வர்கள் மீட்டனர். பாம்புகளைப் போன்ற   கொடிய எண்ணம் படைத்தவர்கள், பாரத அன்னையை விடுவிக்க  பல விதமான எதிர்பார்ப்புகளைத் தெரிவித்தார்கள்.  ஆனால் கருடன் போன்ற பராக்ரமம் கொண்ட நமது விடுதலை வீரர்கள், எவரும் நினைத்துப் பார்க்கமுடியாத பல செயற்கரியச் செயல்களைச் செய்து ஸ்வதந்திர அம்ருதத்தை நமக்களித்து பாரத அன்னையை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்துள்ளனர். எதிர்த்தவர்கள் பாம்பு நாக்கு போல் பிளவுபட்டது கண்கூடு.

இன்று (15-ஆகஸ்ட்-2022) நம் பாரத நாட்டின்  75வது ஸ்வதந்திர தினத்தை அம்ருதோற்சவமாகும் கொண்டாடுகிறோம்.

நம் நாட்டில் ஸகல ஸம்பத்து  பெறுகவும், துஷ்டர்கள் விலகவும்,  அம்ருதம் எடுத்து வந்து, அன்னைக்கு ஸ்வதந்திரம் பெற்றுத் தந்த கருடனை, ஸ்வதந்திர அம்ருதோற்சவ நன்னாளில் வணங்குவோம். தியாகிகளையும் நினைவுகூருவோம்.

குறிப்பு : இந்த வ்யாஸம் ஸ்ரீ APN ஸ்வாமியின்  கருட வைபவம்  மற்றும் சுதந்திர தின  உபந்யாசத்தின்படி எழுதியது. 

இப்படிக்கு
அடியேன்

ஸ்ரீ APN ஸ்வாமியின் காலக்ஷேப சிஷ்யை & SARAN Sevak 

ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்

#HarGharTiranga #HarGharTirangaCampaign #AzadiKaAmritMahotsav #HappyIndependanceday #Indiaat75 Sri#APNSwami

Click here to watch SARAN – Traditional Trending Independence Day Upanyasam by Sri APN Swami

To learn Sampradayam in an interesting manner and for more such interesting trending videos/articles do regularly watch Sri APN Swami’s YouTube Channel and his blog website.