Sri APN Swami’s #Shishya Writes #Trending | ஸ்வதந்திர தின அம்ருதோற்சவம் | Trending Article

Azadi ka Amrit Mahotsav – ஸ்வதந்திர தின அம்ருதோற்சவம் – आजादी का अमृत महोत्सव – 75th Indian Independence Day Special Article –  ஸ்ரீ APN ஸ்வாமியின்  கருட வைபவம்  மற்றும் சுதந்திர தின  உபந்யாசத்தின் படி எழுதியது.

கச்யப ப்ரஜாபதிக்கு கத்ரு, விநதை என்று இரண்டு மனைவியர் இருந்தனர். அதில் கத்ருவுக்கு பாம்புகள் பிள்ளைகளாகப்  பிறந்தனர். விநதைக்கு ஊனமுற்று பிறந்த பிள்ளையான அருணன், பிறந்தவுடனேயே சூரியனுக்கு ஸாரதியாகச் சென்று விட்டான்.

கத்ரு விநதைக்குள்ளே அடிக்கடி சர்ச்சைகள் உண்டாகும். ஒரு சமயம், இந்திரனுடைய குதிரையான உச்சைச் சிரவஸின் நிறம் குறித்து இவர்களுக்குளே விவாதம் மூண்டது.   உச்சைச் சிரவஸ் முழுவதும் வெண்மை என்று விநதை கூறினாள். உச்சைச் சிரவஸ் உடலில் கருமை நிறமும் உள்ளது என்று கத்ரு வாதித்தாள். மறுநாள் குதிரையை முழுவதுமாகப் பார்த்த பின் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர். பந்தயத்தில் தோற்றவர்கள் வென்றவர்களுக்கு ஆயுள் முழுவதும் அடிமையாக இருக்க வேண்டும் என்று பந்தயமும் வைத்துக்கொண்டனர்.

கத்ரு தன் பாம்பு பிள்ளைகளில் ஒருவனான கருத்த கார்கோடகனை அழைத்து, உச்சைச் சிரவஸ் வால் பகுதியில் சுற்றிக்கொள்ளும் படி சொன்னாள்.

மறுநாள் விநதையும் கத்ருவும் தூரத்திலிருந்து பார்த்த போது, குதிரையின் வால் பகுதி கருமை நிறமாக தோற்றமளித்தது. கொடிய குணம் கொண்டவளான கத்ரு, வஞ்சனையினால் வென்றாள்.  ஒப்பந்தப்படி தோற்ற விநதை, கத்ருவிற்கும் அவள் பிள்ளைகளுக்கும் அடிமையானாள்.

காலம் கனிந்தது. விநதைக்குப் பிறந்தவனான வைநதேயன்(கருடன்), தன் தாயை அடிமை தன்மையிலிருந்து மீட்க விரும்பினான். அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற என்ன செய்ய வேண்டும் என்று கத்ருவிடம் கருடன் வினவினான்.

பேராசை கொண்ட கத்ருவும் அவள் பிள்ளைகளான பாம்புகளும் தேவலோகத்து அம்ருதத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் விடுதலை தரலாம் என்றனர்.

தாயின் ஆசி பெற்று, தேவலோகம் சென்ற கருடன் தடைகளைத் தகர்ந்து எரிந்து அம்ருத கலசத்தை தேவர்களிடமிருந்து கை பற்றினான்.

கருடனிடம் தோல்வியுற்ற தேவர்கள், கொடிய பாம்புகள் அம்ருதத்தை உண்டு சாகா வரம் பெற்றதென்றால், மனித குலத்திற்கு ஆபத்து நேரிடும் என்பதை கருடனுக்குப் புரியவைத்தனர். அவர்கள் ஆலோசனை படி  ஒரு நாழிகை மட்டும் அம்ருத கலசத்தை பூலோகத்தில் வைத்துக்கொள்ள கருடன் ஸம்மதித்தான்.

கருடனால் கொண்டுவரப்பட்டு குளத்தின் கரையில் வைக்கைப்பட்ட அம்ருத கலசத்தை கண்டவுடன், பாம்புகள் அக மகிழ்ந்து, குளத்தில் குளித்து விட்டு உண்ண தலைப்பட்டன. ஒப்பந்தப்படி அம்ருத கலசம் கொண்டு வந்ததினால் கருடனும் விநதையும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டனர்.

பாம்புகள் குளித்துவிட்டு வருவதற்குள் ஒரு நாழிகை ஆன காரணத்தால், அம்ருத கலசம் மறைந்து விட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று பாம்புகள் வருத்தம் அடைந்தன.

அம்ருத கலசம் சுத்தமாக வைக்கப்பட்டிருந்த தர்பை புல்லின் மீது அமுதத் துளிகள் சிந்தியிருக்குமோ என்று நினைத்த பாம்புகள்,  அங்கிருந்த தர்பை புல்லை தங்கள் நாவினால் நக்கின. அந்த தர்பை புல் பாம்புகளின் நாக்குகளை இரு பிளவாகியது. இதனால் தான், பாம்புகளுக்கு இரண்டு நாக்குகள் என்று புராணங்கள் கூறுகின்றன. 

ஏமார்ந்து போன ஸர்ப்பங்கள், சீரிய படி சென்றன. மேலே, கருடனின் வைபவம் அத்யாச்சர்யமாக வர்ணிக்கப்படுகிறது.

அன்னையை அடிமைதளத்திலிருந்து கருடன் மீட்ட இந்தக் கதையை “அம்ருதோற்சவம்” என்று ஸ்வாமி தேசிகன்  கருட பஞ்சாசத் என்னும் ஸ்தோத்திர நூலில் கொண்டாடுகிறார்.

இதே போல் நம் பாரதத்தாயை அடிமைத்தனத்திலிருந்து அவளின் தவப்புதல்வர்கள் மீட்டனர். பாம்புகளைப் போன்ற   கொடிய எண்ணம் படைத்தவர்கள், பாரத அன்னையை விடுவிக்க  பல விதமான எதிர்பார்ப்புகளைத் தெரிவித்தார்கள்.  ஆனால் கருடன் போன்ற பராக்ரமம் கொண்ட நமது விடுதலை வீரர்கள், எவரும் நினைத்துப் பார்க்கமுடியாத பல செயற்கரியச் செயல்களைச் செய்து ஸ்வதந்திர அம்ருதத்தை நமக்களித்து பாரத அன்னையை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்துள்ளனர். எதிர்த்தவர்கள் பாம்பு நாக்கு போல் பிளவுபட்டது கண்கூடு.

இன்று (15-ஆகஸ்ட்-2022) நம் பாரத நாட்டின்  75வது ஸ்வதந்திர தினத்தை அம்ருதோற்சவமாகும் கொண்டாடுகிறோம்.

நம் நாட்டில் ஸகல ஸம்பத்து  பெறுகவும், துஷ்டர்கள் விலகவும்,  அம்ருதம் எடுத்து வந்து, அன்னைக்கு ஸ்வதந்திரம் பெற்றுத் தந்த கருடனை, ஸ்வதந்திர அம்ருதோற்சவ நன்னாளில் வணங்குவோம். தியாகிகளையும் நினைவுகூருவோம்.

குறிப்பு : இந்த வ்யாஸம் ஸ்ரீ APN ஸ்வாமியின்  கருட வைபவம்  மற்றும் சுதந்திர தின  உபந்யாசத்தின்படி எழுதியது. 

இப்படிக்கு
அடியேன்

ஸ்ரீ APN ஸ்வாமியின் காலக்ஷேப சிஷ்யை & SARAN Sevak 

ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்

#HarGharTiranga #HarGharTirangaCampaign #AzadiKaAmritMahotsav #HappyIndependanceday #Indiaat75 Sri#APNSwami

Click here to watch SARAN – Traditional Trending Independence Day Upanyasam by Sri APN Swami

To learn Sampradayam in an interesting manner and for more such interesting trending videos/articles do regularly watch Sri APN Swami’s YouTube Channel and his blog website.

One thought on “Sri APN Swami’s #Shishya Writes #Trending | ஸ்வதந்திர தின அம்ருதோற்சவம் | Trending Article

  1. Venkatesh Sarangan August 16, 2022 / 9:59 am

    Thanks for the article and really appreciate the thought process of APN Swami.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    It’s truly a wonderful comparison of the events.

    Looking forward to more such articles 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    Like

Leave a comment